Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

phone.jpg

தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது.

கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார்.

இதன்போதே  அவரது  மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர்  வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு  எந்ததொரு நோயும் இருக்கவில்லை.

கடந்த 29ஆம் திகதி, இரவு 9  மணியளவில், கையடக்கத் தொலைபேசியில், எனது கணவன் கேம் விளையாடிகொண்டிருந்ததை அவதானித்தேன்.

எனவே அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்  அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரெனச் சத்தம் கேட்டு எழும்பிச் சென்று பார்த்தேன். அவர் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்தப்போது, உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் 5 மணி நேரத்துக்கும் மேலதிகமாக  தொலைபேசியை பயன்படுத்தியதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/தொலைபேசியில்-வீடியோ-கேம்/

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு கிருபனின் பதில் என்ன???? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

இதற்கு கிருபனின் பதில் என்ன???? 

இறந்தவருக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் இருந்திருக்கலாம். அது மனைவி கேம் விளையாடுவதை நிறுத்துமாறு கூறியபோது இன்னமும் கூடியிருக்கலாம். இப்படிப் பல காரணங்கள் இருக்க தொலைபேசியில் கேம் விளையாடியதால் இறந்தார் என்று எளிமையாகச் சொல்லமுடியாது. 

ஒருபேச்சுக்கு இறந்தவர் யாழில் நடக்கும் கருத்தாடல்களை வாசித்து இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு இறந்திருந்தால் யாழ்தான் காரணம் என்றும் சொல்லலாம் என்றிருக்கின்றது இந்த வாதம்!

மேலும் இந்தச் செய்தியில் வைத்திய அறிக்கை எதுவுமே ஆதாரமாகத் தரப்படவில்லை. இறந்தவரின் மனைவி சொன்னார் என்றுதான் செய்தியிலேயே உள்ளது.

Quote

அத்துடன் 5 மணி நேரத்துக்கும் மேலதிகமாக  தொலைபேசியை பயன்படுத்தியதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என அவர் கூறியுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

 

ஒருபேச்சுக்கு இறந்தவர் யாழில் நடக்கும் கருத்தாடல்களை வாசித்து இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு இறந்திருந்தால் யாழ்தான் காரணம் என்றும் சொல்லலாம் என்றிருக்கின்றது இந்த வாதம்!

மேலும் இந்தச் செய்தியில் வைத்திய அறிக்கை எதுவுமே ஆதாரமாகத் தரப்படவில்லை. இறந்தவரின் மனைவி சொன்னார் என்றுதான் செய்தியிலேயே உள்ளது.

 

இதற்குள் ஏன் யாழ்களத்தை இழுக்கின்றீர்கள். இது முழுக்க முழுக்க உங்களை பின் தொடருபவர்களின் முடிவு, உங்கள் பதிவுகளை பார்த்து. கிருபன் சொன்னார் விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்படவில்லை என, எனவே அவர்கள் உங்கள் கருத்தை வேத வாக்காக எடுத்து பின் தொடர்கின்றார்கள் உங்கள் கருத்தின் படி😎 , எங்களுக்கு இப்படி ஒரு கூட்டமில்லையே🤔

மனைவி சொல்வது கூட உண்மையில்லை என்றால் வேறு யார் கூறுவது உண்மை😡, இதையும் விஞ்ஞான ரீதியாக நிருபிக்க வேண்டுமா?

 பிள்ளைகள் மனைவிமாரின் அன்புகளையும் விஞ்ஞான ரீதியாக நிருபித்துவிட்டுதான் அவர்கள் உங்களில் அன்பு செலுத்துகின்றார்கள் என ஏற்பீர்களா? 🙃

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் சாமியோ. எல்லாத்துக்கும் விஞ்ஞான ரீதியாகதான் நிருபிக்க வேண்டுமா? அத்துடன் கலாச்சாரமே அற்றவர்களைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மூக்கு வாயில் இரத்தம் என்றால் அனேகமாக உயர் குருதி அழுத்தத்தினால் ஏற்பட்ட அறி குறி தான்! ஆனால், கேம் விளையாடியதால் ஏற்பட்டதா எனக் கூற முடியாது! அப்படியெல்லாம் மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிட மாட்டார்கள் என நினைக்கிறேன்! 

மேலே வேறெதுவோ விவாதம் போய் கொண்டிருக்குப் போல! விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் படும் விடயங்கள் தான் அதிகம் மனிதர்களுக்குப் பயன்படுகின்றன! இந்த கொரனாவைரஸ் பரவும் காலத்திலும் விஞ்ஞான தரவுக்கும் வெற்று நம்பிக்கைகளுக்கும் இடையேயான வேறு பாட்டை விளங்க முடியாவிட்டால், இனி எப்போதுமே விளங்காது என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில், இங்கிலாந்தின் மத்திய பகுதியில், கடந்த நூறாண்டில் ஒருவர், மிகசிறந்த முறையில் காட்ஸ் விளையாடுவார். இவர் பந்தயம் கட்டி விளையாடினால், நிச்சயம் வெல்லுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. 

ஆனால், அவர் எப்படி வெல்கிறார் என்பதனை கணிக்க முடியவில்லை. அவர் ஏதோ ஒரு கணித பொறிமுறை வைத்துள்ளார், அதனை பயன்படுத்தி வெல்லுகிறார்.... ஆனால் அதனை யாருக்கும் சொல்லித்தர மறுக்கிறார் என்று எல்லோரும் கருதினர்.

அவர் விளையாடும் போது, பக்கத்தில் பீர் கிளாசும், பொரித்த கோழி கால்களும் இருக்கும். 

ஒரு நாள் அவர் விளையாடிக் கொண்டிருந்த போது, பெரும் மாரடைப்பு வந்து இறந்து போனார், அவருடன் அவரது நிபுணத்துவ ரகசியமும் புதைந்து போனது.

பிபிசி இந்து குறித்து ஒரு டாக்குமெண்டரி போட்டிருந்தது. 

அதிலே இன்னுமொரு நிபுணரை கருத்துக்கூற கேட்க, அவர் சொன்னார். நான் அவர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன், நான் பிறப்பதற்கு முன்னரே வாழ்ந்து, இறந்துவிட்டார்.. எனக்கு தோன்றுவது என்னவென்றால், இவர் தினமும் வந்து விளையாட, அவரினால் அந்த பப் பெரும் இழப்பினை சந்தித்துக் கொண்டிருந்தது. தனது வெற்றி ரகசியத்தினை வேறு சொல்ல மறுத்துக் கொண்டிருந்தார். ஆகவே, அவரது மரணம், வியாபாரத்துடன் தொடர்பானதாக (கொலை) இருக்கலாம், யாருக்கு தெரியும், என்றார்.

ஒவொரு விசித்திர மரணத்தின் பின்னாலும் ஏதாவது காரணம் இருக்கலாம். போலீஸ்க்காரரின் வேலைப்பளுவின், ஊழலின் காரணமாக, தப்பிய கொலைகளும் அதிகம்.

அதுக்காக இதுவும் அந்த வகை என்று சொல்லவில்லை. ஆனால், இதுவும் ஒரு option என்கிறேன்.
  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

இதற்குள் ஏன் யாழ்களத்தை இழுக்கின்றீர்கள். இது முழுக்க முழுக்க உங்களை பின் தொடருபவர்களின் முடிவு, உங்கள் பதிவுகளை பார்த்து. கிருபன் சொன்னார் விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்படவில்லை என, எனவே அவர்கள் உங்கள் கருத்தை வேத வாக்காக எடுத்து பின் தொடர்கின்றார்கள் உங்கள் கருத்தின் படி😎 , எங்களுக்கு இப்படி ஒரு கூட்டமில்லையே🤔

மனைவி சொல்வது கூட உண்மையில்லை என்றால் வேறு யார் கூறுவது உண்மை😡, இதையும் விஞ்ஞான ரீதியாக நிருபிக்க வேண்டுமா?

 பிள்ளைகள் மனைவிமாரின் அன்புகளையும் விஞ்ஞான ரீதியாக நிருபித்துவிட்டுதான் அவர்கள் உங்களில் அன்பு செலுத்துகின்றார்கள் என ஏற்பீர்களா? 🙃

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் சாமியோ. எல்லாத்துக்கும் விஞ்ஞான ரீதியாகதான் நிருபிக்க வேண்டுமா? அத்துடன் கலாச்சாரமே அற்றவர்களைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

 

 

என்னை யாரும் பின்தொடர்வதை நான் விரும்புவதில்லை, அழகான பெண்களைத் தவிர😍

மரண விசாரணை அறிக்கை இல்லாமல், மரணத்தின் காரணத்தை coroners report இல்லாமல் மனைவி சொன்னதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கண்மூடித்தனமாக  உண்மையென்று நம்புவதற்கு நான் தயாரில்லை. இப்படித்தான் புனைவுச் செய்திகள் பரவுகின்றன. மரண விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் காட்டினால் நம்பலாம். அவ்வளவுதான்.

மனைவியே கணவனைத் தீர்த்துக்கட்டும் காலத்தில் அன்பு, பாசம் என்பதற்குள் ஒளிந்துகொண்டால், நம்பும் அளவிற்கு நான் சின்னத்திரை பார்க்கும் ஆளல்ல😊

மேலும் கலாச்சாரம் அற்றவர்களைப் பற்றிக் கருத்துக் கேட்டிருந்தீர்கள். அவர்கள் கட்டாயம் காட்டுமிராண்டிகள்தான். ஏனெனில் சமூகத்துடன் சேர்ந்து சமூகத்தை முன்நோக்கி செலுத்த சிந்திக்கும் சுயபுத்தி உள்ள எவரும் கலாச்சாரம் ஒன்றை எதுவித விட்டுக்கொடுப்புமில்லாமல் பின்பற்றுவார்கள். காட்டுமிராண்டிகளுக்கு கலாச்சாரம் என்றாலே என்னவென்று தெரியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

என்னை யாரும் பின்தொடர்வதை நான் விரும்புவதில்லை, அழகான பெண்களைத் தவிர😍

மரண விசாரணை அறிக்கை இல்லாமல், மரணத்தின் காரணத்தை coroners report இல்லாமல் மனைவி சொன்னதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கண்மூடித்தனமாக  உண்மையென்று நம்புவதற்கு நான் தயாரில்லை. இப்படித்தான் புனைவுச் செய்திகள் பரவுகின்றன. மரண விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் காட்டினால் நம்பலாம். அவ்வளவுதான்.

மனைவியே கணவனைத் தீர்த்துக்கட்டும் காலத்தில் அன்பு, பாசம் என்பதற்குள் ஒளிந்துகொண்டால், நம்பும் அளவிற்கு நான் சின்னத்திரை பார்க்கும் ஆளல்ல😊

மேலும் கலாச்சாரம் அற்றவர்களைப் பற்றிக் கருத்துக் கேட்டிருந்தீர்கள். அவர்கள் கட்டாயம் காட்டுமிராண்டிகள்தான். ஏனெனில் சமூகத்துடன் சேர்ந்து சமூகத்தை முன்நோக்கி செலுத்த சிந்திக்கும் சுயபுத்தி உள்ள எவரும் கலாச்சாரம் ஒன்றை எதுவித விட்டுக்கொடுப்புமில்லாமல் பின்பற்றுவார்கள். காட்டுமிராண்டிகளுக்கு கலாச்சாரம் என்றாலே என்னவென்று தெரியாது.

 

ஆகா உங்கள் போலி வாழ்கையை அப்படியே உரித்துவைத்துவிட்டீர்கள்.👏

கலாச்சாரமற்றவர்களுக்கு உங்கள் பதில்👍

12 hours ago, Justin said:

மூக்கு வாயில் இரத்தம் என்றால் அனேகமாக உயர் குருதி அழுத்தத்தினால் ஏற்பட்ட அறி குறி தான்! ஆனால், கேம் விளையாடியதால் ஏற்பட்டதா எனக் கூற முடியாது! அப்படியெல்லாம் மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிட மாட்டார்கள் என நினைக்கிறேன்! 

மேலே வேறெதுவோ விவாதம் போய் கொண்டிருக்குப் போல! விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் படும் விடயங்கள் தான் அதிகம் மனிதர்களுக்குப் பயன்படுகின்றன! இந்த கொரனாவைரஸ் பரவும் காலத்திலும் விஞ்ஞான தரவுக்கும் வெற்று நம்பிக்கைகளுக்கும் இடையேயான வேறு பாட்டை விளங்க முடியாவிட்டால், இனி எப்போதுமே விளங்காது என நினைக்கிறேன்!

அட ட டா கொரோணா வந்து விஞ்ஞானத்தை நம்ப சொல்லிவிட்டுது, கிழிச்சுது போ, இன்னுமே மருந்தே கண்டுபிடிக்க முடியலை அதுக்க வந்து  விஞ்ஞானத்தை நம்பு என்று.  போய் மருந்தை கண்டு பிடிக்க பாருங்க. 

விஞ்ஞானத்தால்தான் இந்த உலகமே அழித்துகொண்டிருக்கு. எங்க போய் முடியுமோ தெரியவில்லை.

நீங்க அதி மேதாவி, நல்லா விளங்கிடுவீர்கள்  விஞ்ஞான நம்பிகைகளுடன், இந்த அற்பனுக்கு கலாச்சார நம்பிக்கைதான் முக்கியம் நிம்மதியா வாழ

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

ஆகா உங்கள் போலி வாழ்கையை அப்படியே உரித்துவைத்துவிட்டீர்கள்.👏

கலாச்சாரமற்றவர்களுக்கு உங்கள் பதில்👍

அட ட டா கொரோணா வந்து விஞ்ஞானத்தை நம்ப சொல்லிவிட்டுது, கிழிச்சுது போ, இன்னுமே மருந்தே கண்டுபிடிக்க முடியலை அதுக்க வந்து  விஞ்ஞானத்தை நம்பு என்று.  போய் மருந்தை கண்டு பிடிக்க பாருங்க. 

விஞ்ஞானத்தால்தான் இந்த உலகமே அழித்துகொண்டிருக்கு. எங்க போய் முடியுமோ தெரியவில்லை.

நீங்க அதி மேதாவி, நல்லா விளங்கிடுவீர்கள்  விஞ்ஞான நம்பிகைகளுடன், இந்த அற்பனுக்கு கலாச்சார நம்பிக்கைதான் முக்கியம் நிம்மதியா வாழ

உடையார்,

விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁

எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண்டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள்.

டொட்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

உடையார்,

விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁

எனது வாழ்க்கை போலி என்று என்னைத் தெரியாமலேயே எழுதுவதும், ஜஸ்ரினை அதிமேதாவி என்று நையாண்டி செய்வதும் தனிமனித தாக்குதல்தான். அதுதான் உங்களின் கலாச்சார நம்பிக்கை என்றால், நீங்கள் அப்படியே தொடருங்கள்.

டொட்.

 

 

16 hours ago, Justin said:

...... , இனி எப்போதுமே விளங்காது என நினைக்கிறேன்!

கணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல. இது தனிமனித தாக்குதலாக தெரியவில்லை, அப்படியிருந்தால் மன்னித்துவிடுங்கள் கிருபன். 🙏

மற்றவர்களுக்கு விளங்காது என்று சொல்பவர் நன்றாக விளங்கிய அதிமேதாவிதான் - இதில் என்ன தனிமனித தாக்குதல் விளங்கவில்லை. 

13 minutes ago, கிருபன் said:

விவாதிக்க எதுவும் இல்லையென்றால் இப்படித்தான் கலாச்சாரம், பண்பாடு என்று சும்மா எதையாவது இடையில் செருகிவிடுவது இப்போது யாழில் அடிக்கடி பார்ப்பதுதானே.😁

சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:

கணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல

இப்படி இந்தத் திரியில் அன்பை விஞ்ஞான ரீதியில் நிரூபித்தால்தான் நம்புவேன் என்று யார் சொன்னது? நீங்கள்தான் கருத்துக்களை குழப்பிக்கொள்கின்றீர்கள்.

ஒரு மரணத்திற்கான காரணத்தை இயற்கை மரணமா இல்லையா என்று இலங்கையில்கூட ஆராய்ந்துதான் இறப்பு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கின்றார்கள். சொந்தங்களின் கூற்றை வைத்தியர்கள், போலிசார் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தச் செய்தியே மரணமடைந்தவரின் மனைவி சொன்னதை வைத்து மட்டும்தான் உள்ளது என்பதால் அப்படியே நம்பமுடியாது. அவர் அன்பானவராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லாத விடயம். ஆனால் மரணத்திற்குக் காரணம் ஃபோனில் கேம் விளையாடியது என்று எந்த அறிக்கையிலும் வராது. உயர் இரத்த அழுத்தம்/கொதிப்பு என்று இயற்கையாக நடந்த மரணம் என்று வரலாம். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, உடையார் said:

 

சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏

 

ஒரு திரியின் இடையே கலாச்சாரம் என்று சம்பந்தமில்லாமல் திணிப்பதற்கும், கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கவே திறக்கப்பட்ட திரிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும் உடையார்.😁

நான் சொன்னமாதிரி விவாதிக்க எதுவுமில்லாததால் இந்தத் திரியின் இடையில் கொண்டு கலாச்சாரத்தைச் செருகியுள்ளீர்கள். மாட்டை மரத்தில் கட்டியாயிற்று. 😆 இனி மரத்தைப் பற்றிக் கதைக்க மற்றவர்களுக்கு வழிவிடுகின்றேன்😀

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

ஒரு திரியின் இடையே கலாச்சாரம் என்று சம்பந்தமில்லாமல் திணிப்பதற்கும், கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கவே திறக்கப்பட்ட திரிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும் உடையார்.😁

நான் சொன்னமாதிரி விவாதிக்க எதுவுமில்லாததால் இந்தத் திரியின் இடையில் கொண்டு கலாச்சாரத்தைச் செருகியுள்ளீர்கள். மாட்டை மரத்தில் கட்டியாயிற்று. 😆 இனி மரத்தைப் பற்றிக் கதைக்க மற்றவர்களுக்கு வழிவிடுகின்றேன்😀

மாட்டையும் மரத்தையும் கதைக்கதானே பலர் இருக்கின்றார்கள் 

சொன்னதை மாற்றி பல்டி அடிப்பதில் வல்லவர்

29 minutes ago, கிருபன் said:

இப்படி இந்தத் திரியில் அன்பை விஞ்ஞான ரீதியில் நிரூபித்தால்தான் நம்புவேன் என்று யார் சொன்னது? நீங்கள்தான் கருத்துக்களை குழப்பிக்கொள்கின்றீர்கள்.

ஒரு மரணத்திற்கான காரணத்தை இயற்கை மரணமா இல்லையா என்று இலங்கையில்கூட ஆராய்ந்துதான் இறப்பு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கின்றார்கள். சொந்தங்களின் கூற்றை வைத்தியர்கள், போலிசார் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தச் செய்தியே மரணமடைந்தவரின் மனைவி சொன்னதை வைத்து மட்டும்தான் உள்ளது என்பதால் அப்படியே நம்பமுடியாது. அவர் அன்பானவராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லாத விடயம். ஆனால் மரணத்திற்குக் காரணம் ஃபோனில் கேம் விளையாடியது என்று எந்த அறிக்கையிலும் வராது. உயர் இரத்த அழுத்தம்/கொதிப்பு என்று இயற்கையாக நடந்த மரணம் என்று வரலாம். 

 

 

 

 

மரண சன்றிதழில் எப்படிவருமென்று எல்லோருக்கும் தெரியும். மனைவி அவர் என்ன செய்தார் என்று சொன்னதை கூட உங்களால்  நம்ப முடியவில்லையென்றால் நீங்கள் .....

  • கருத்துக்கள உறவுகள்

Emotional symptoms

  • Restlessness: the addict may find it impossible to remain still and calm for any length of time whilst not gaming; fidgeting, pacing, constantly getting up and down, and being unable to participate in any task for more than a few minutes may all indicate frustration at not being able to game.
  • Irritability: an addict may be quick to lose their temper and/or to snap at others if they are kept away from gaming for a protracted period – or if they are in a bad mood from a recent unsuccessful gaming bout.
  • Preoccupation with thoughts of previous or next gaming activity: gaming may entirely capture the addict’s thought processes, leaving them unable to think about anything else and possibly visibly distracted from important activities.
  • Lying about the amount of time spent playing: many gaming addicts feel shame at the amount of time they spend feeding their addictions, and/or recognise that in many people’s eyes they are engaging in an unhealthy activity, and so deceive others about how long they actually spend gaming.
  • Isolation from others to spend more time gaming: as noted above, withdrawing from social circles and previously enjoyed activities is a very common sign that something is wrong.

Physical symptoms of video game addiction

  • Fatigue: many people play computer games for very long periods of time – indeed, as noted above gaming-related fatigue has been a factor in numerous deaths in recent years – and often sacrifice sleep for the sake of continuing to play. This is especially common amongst those who work or attend college or university and who are therefore unable to play during working hours.
  • Migraines: prolonged gaming has been known to spark off migraines even in those who have previously not suffered from them.
  • Carpal tunnel syndrome: repeated, very protracted bouts of gaming using manual controls such as drawing pads, keyboards or mice can lead to the wrist condition known as carpal tunnel syndrome, causing pain and tingling in the fingers and hands.
  • Poor personal hygiene: some gamers allow their levels of hygiene to slip significantly as a result of their protracted gaming – and/or because their isolation leaves them feeling that they do not need to make any effort in this regard. Some e-sports competitions have been obliged to post notices warning that gamers exhibiting poor levels of hygiene will be disqualified and removed from the venue.

https://www.uk-rehab.com/behavioural-addictions/gaming/

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, உடையார் said:

ஆகா உங்கள் போலி வாழ்கையை அப்படியே உரித்துவைத்துவிட்டீர்கள்.👏

கலாச்சாரமற்றவர்களுக்கு உங்கள் பதில்👍

அட ட டா கொரோணா வந்து விஞ்ஞானத்தை நம்ப சொல்லிவிட்டுது, கிழிச்சுது போ, இன்னுமே மருந்தே கண்டுபிடிக்க முடியலை அதுக்க வந்து  விஞ்ஞானத்தை நம்பு என்று.  போய் மருந்தை கண்டு பிடிக்க பாருங்க. 

விஞ்ஞானத்தால்தான் இந்த உலகமே அழித்துகொண்டிருக்கு. எங்க போய் முடியுமோ தெரியவில்லை.

நீங்க அதி மேதாவி, நல்லா விளங்கிடுவீர்கள்  விஞ்ஞான நம்பிகைகளுடன், இந்த அற்பனுக்கு கலாச்சார நம்பிக்கைதான் முக்கியம் நிம்மதியா வாழ

உங்கள் ஏனைய பதிவுகளைப் பார்த்த பின்னும் உங்களுக்கு விஞ்ஞானத்தின் பயன்பாடுகளை எடுத்துச் சொல்ல முனைந்தமைக்காக என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்!

கொரனாவுக்கு வேலை செய்யக் கூடிய மருந்தைக் கண்டு பிடிக்கத் தான் காலம் செல்லும்! நீங்கள் தாராளமாக மஞ்சள் வேப்பிலை கோமியம் என்று "உடனே பயன் தரும்" தீர்வுகளைப் பின்பற்றிப் பயன் பெற வேண்டும்!😎 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Justin said:

உங்கள் ஏனைய பதிவுகளைப் பார்த்த பின்னும் உங்களுக்கு விஞ்ஞானத்தின் பயன்பாடுகளை எடுத்துச் சொல்ல முனைந்தமைக்காக என்னை நானே செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும்!

கொரனாவுக்கு வேலை செய்யக் கூடிய மருந்தைக் கண்டு பிடிக்கத் தான் காலம் செல்லும்! நீங்கள் தாராளமாக மஞ்சள் வேப்பிலை கோமியம் என்று "உடனே பயன் தரும்" தீர்வுகளைப் பின்பற்றிப் பயன் பெற வேண்டும்!😎 

ஜஸ்டின் சார்! எயிட்சுக்கு மருந்து கண்டு பிடிச்சாச்சா சார்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஜஸ்டின் சார்! எயிட்சுக்கு மருந்து கண்டு பிடிச்சாச்சா சார்? :cool:

கண்டு பிடித்தாயிற்று அண்ணை! எங்கை, குகைக்கேயே இருந்தனீங்கள் இவ்வளவு நாளும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Justin said:

கண்டு பிடித்தாயிற்று அண்ணை! எங்கை, குகைக்கேயே இருந்தனீங்கள் இவ்வளவு நாளும்?

சத்தியமாய் தெரியாத படியாத்தான் கேட்டனான்.
குகைக்கை மனிசன் போவானே.ஒரே வௌவால் கூட்டமாய் கிடக்கு

ஆங்கில மருந்துகள்  நோயை மறைத்து வைக்குமே தவிர மாற்றாது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

சத்தியமாய் தெரியாத படியாத்தான் கேட்டனான்.
குகைக்கை மனிசன் போவானே.ஒரே வௌவால் கூட்டமாய் கிடக்கு

ஆங்கில மருந்துகள்  நோயை மறைத்து வைக்குமே தவிர மாற்றாது.

"குணமாக்குதல்" என்பது பல நோய்களைப் பொறுத்தவரை நோயை ஒரு "ஷொட்டோடு" ஒழிப்பது அல்ல! அது உடலை மேவிவிடாமல் அடக்கி வைத்திருப்பது தான்! எச்.ஐ.வி, மூட்டு வாதம், தொய்வு, நீரிழிவு..இப்படி எல்லா நோய்களுக்கும் இது தான் ஆங்கில மருந்தின் குணமாக்கல், அதனால் தான் மக்கள் சாகாமல் வாழ்கின்றனர்!

இதைப் பல தடவை உங்களுக்கு விளக்கியாகி விட்டது! 

உங்கள் கருத்தில் ஏனைய மருந்துகள் ஆங்கில மருந்துகள் போலல்லாமல் ஒரே அடியில் நோயை இல்லாமல் செய்யக் கூடியவை என்ற தொனி இருக்கிறது! அது உங்கள் நீண்ட கால நம்பிக்கை! என்ன, அந்த நம்பிக்கைக்கு ஆதாரங்கள்  யூரியூப் வீடியோக்கள் தவிர வேறு இடங்களில் காணக் கிடைப்பதில்லை!
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Justin said:

"குணமாக்குதல்" என்பது பல நோய்களைப் பொறுத்தவரை நோயை ஒரு "ஷொட்டோடு" ஒழிப்பது அல்ல! அது உடலை மேவிவிடாமல் அடக்கி வைத்திருப்பது தான்! எச்.ஐ.வி, மூட்டு வாதம், தொய்வு, நீரிழிவு..இப்படி எல்லா நோய்களுக்கும் இது தான் ஆங்கில மருந்தின் குணமாக்கல், அதனால் தான் மக்கள் சாகாமல் வாழ்கின்றனர்!

இதைப் பல தடவை உங்களுக்கு விளக்கியாகி விட்டது! 

உங்கள் கருத்தில் ஏனைய மருந்துகள் ஆங்கில மருந்துகள் போலல்லாமல் ஒரே அடியில் நோயை இல்லாமல் செய்யக் கூடியவை என்ற தொனி இருக்கிறது! அது உங்கள் நீண்ட கால நம்பிக்கை! என்ன, அந்த நம்பிக்கைக்கு ஆதாரங்கள்  யூரியூப் வீடியோக்கள் தவிர வேறு இடங்களில் காணக் கிடைப்பதில்லை!
 

நான் தெரியாத விடயங்களைப்பற்றி அலசுவதில்லை. தெரிந்தால் மட்டுமே யாழகளத்திலும் சரி பொது இடங்களிலும் சரி மூக்கை நுழைப்பது.மற்றும் படி யூரியூப்பில் வருவபவை பற்றியும் எனக்கு முழு நம்பிக்கை இல்லை.

எனக்கு சிறு வயதில் பீனிசம் இருந்தது.கைதடி ஆயுர்வேதத்தில் மருந்த எடுத்த பின்னரே முற்றுமுழுதாக மாறியது. பீனச விடயத்தில் ஆங்கில மருந்து சிறிது காலம் நிறுத்தி வைத்ததே தவிர முற்று முழுதாக மாற்றவில்லை. இது எனது சொந்த அனுபவம்.
இதுவும் யூரியூப்பில் வந்ததுதான். நாக்கில் உப்பு வைப்பது பற்றி....... செய்து பார்த்தேன் பலன் உண்டு.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, Justin said:

"குணமாக்குதல்" என்பது பல நோய்களைப் பொறுத்தவரை நோயை ஒரு "ஷொட்டோடு" ஒழிப்பது அல்ல! அது உடலை மேவிவிடாமல் அடக்கி வைத்திருப்பது தான்! எச்.ஐ.வி, மூட்டு வாதம், தொய்வு, நீரிழிவு..இப்படி எல்லா நோய்களுக்கும் இது தான் ஆங்கில மருந்தின் குணமாக்கல், அதனால் தான் மக்கள் சாகாமல் வாழ்கின்றனர்!

எனது இரத்த அழுத்த வருத்தத்திற்கு முதலில் ஒரு குளிசை தான் எடுத்தேன். அதன் பக்க விளைவு  தசை உளைச்சல். தசை உளைச்சல் வலிக்கு இன்னொரு குளிசை. அந்த இன்னொரு குளிசையால் மலம் இறுக்கப்படுகின்றது.மலம் இலகுவாக போவதற்கு வேறு ஒரு குளிசை.அந்த மலம் இளக்கி குளிசையால் கண்ணெரிவு........ 
இப்படியே  ஆங்கில மருந்துகள் ஒரு தொடர்கதை.
100 வயது வரைக்கும் வலி வன்மத்துடன் வாழ்வதை விட 50 வயதில் வருத்தம் ஏதும் இல்லாமலும் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும்/செலவுகள் கொடுக்காமலும் நிம்மதியாய் சாகலாம் ஜஸ்டின் சார்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்க‌ட‌ முன்னோர்க‌ள் 90 , 97 வ‌ய‌து வ‌ர‌ வாழ்ந்த‌வை , கார‌ண‌ம்  அப்போது சாப்பாட்டுக்குள் கிமிக்க‌ள் இல்ல‌ , இய‌ற்கை வ‌யித்திய‌ம் கைய‌ பிடித்து என்ன‌ நோய் இருக்கு என்று க‌ண்டு பிடிக்கும் திற‌மை வாய்ந்த‌வ‌ர்க‌ள் தான் எம் முன்னோர்க‌ள் 👏💪

Edited by பையன்26

22 minutes ago, பையன்26 said:

எங்க‌ட‌ முன்னோர்க‌ள் 90 , 97 வ‌ய‌து வ‌ர‌ வாழ்ந்த‌வை , கார‌ண‌ம்  அப்போது சாப்பாட்டுக்குள் கிமிக்க‌ள் இல்ல‌ , இய‌ற்கை வ‌யித்திய‌ம் கைய‌ பிடித்து என்ன‌ நோய் இருக்கு என்று க‌ண்டு பிடிக்கும் திற‌மை வாய்ந்த‌வ‌ர்க‌ள் தான் எம் முன்னோர்க‌ள் 👏💪

இலங்கையின் சராசரி வாழ்ககை காலம்

1950 ல. 54.5 வருடங்கள். 

2018 ல்  76.6 வருடங்கள். 

ஆனால் இலங்கையின் வாழ்ககைகாலம் போன நூற்றாண்டில் 94  வருடஙகள் என்று  நீங்கள் தாராளமாக இங்கு  புளுகலாம்.  ஏனென்றால் அதை நம்ப இங்கு சிலர்  உண்டு. இந்த சந்தோசத்தில் ஏதாவது   டெனிஸ் வலைத்தளங்களில்  போய் இப்படி புளுகிடாதேங்க. உங்களை பத்தி தப்பா நினைப்பாங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இலங்கையின் சராசரி வாழ்ககை காலம்

1950 ல. 54.5 வருடங்கள். 

2018 ல்  76.6 வருடங்கள். 

ஆனால் இலங்கையின் வாழ்ககைகாலம் போன நூற்றாண்டில் 94  வருடஙகள் என்று  நீங்கள் தாராளமாக இங்கு  புளுகலாம்.  ஏனென்றால் அதை நம்ப இங்கு சிலர்  உண்டு. இந்த சந்தோசத்தில் ஏதாவது   டெனிஸ் வலைத்தளங்களில்  போய் இப்படி புளுகிடாதேங்க. உங்களை பத்தி தப்பா நினைப்பாங்க. 

ஹா ஹா , நீங்க‌ள் இப்ப‌ தான் நித்திரைய‌ விட்டு எழும்பி இருக்கிறீங்க‌ள் , இங்கை யாரும் புழுகுற‌துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை , அப்ப‌டி நீங்க‌ள் ஒதுக்கினா நீங்க‌ள் தான் ம‌கா பெரிய‌ புழுக‌ன் , 

என்ர‌ 
ஆச்சி இற‌க்கும் போது 97 வ‌ய‌து
அம்ம‌ம்மா இற‌க்கும் போது 88வ‌ய‌து ,
அப்பாட‌ பெரிய‌ம்மா 90 வ‌ய‌து ,

அப்பாட‌ அப்பா 70 வ‌ய‌து 

அப்ப‌ம்மா 80 வ‌ய‌து , எங்க‌ட‌ ஊரில் வாழ்ந்த‌ முன்னோர்க‌ள் 70வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்க‌ள் ,, 

இட‌ம் பெய‌ர்ந்து த‌மிழீழத்தில் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இருக்கிறேன் எத்த‌னையோ முன்னோர்க‌ள பார்த்து இருக்கிறேன் ,

கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப் ப‌ட‌ங்க‌ள் இருக்கு எம் முன்னோர்க‌ளுடைய‌ , அத‌ இந்த‌ பொது வெளியில் இணைக்க‌ விரும்ப‌ல‌ , எந்த‌ புத்துக்க‌ எந்த‌ பாம்பு  ‌ இருக்கும் என்று தெரியாத‌ உல‌கில் நாம் வாழுகிறோம் 

2 hours ago, பையன்26 said:

ஹா ஹா , நீங்க‌ள் இப்ப‌ தான் நித்திரைய‌ விட்டு எழும்பி இருக்கிறீங்க‌ள் , இங்கை யாரும் புழுகுற‌துக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை , அப்ப‌டி நீங்க‌ள் ஒதுக்கினா நீங்க‌ள் தான் ம‌கா பெரிய‌ புழுக‌ன் , 

என்ர‌ 
ஆச்சி இற‌க்கும் போது 97 வ‌ய‌து
அம்ம‌ம்மா இற‌க்கும் போது 88வ‌ய‌து ,
அப்பாட‌ பெரிய‌ம்மா 90 வ‌ய‌து ,

அப்பாட‌ அப்பா 70 வ‌ய‌து 

அப்ப‌ம்மா 80 வ‌ய‌து , எங்க‌ட‌ ஊரில் வாழ்ந்த‌ முன்னோர்க‌ள் 70வ‌ய‌த‌ தாண்டின‌வ‌ர்க‌ள் , 

இட‌ம் பெய‌ர்ந்து த‌மிழீழத்தில் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இருக்கிறேன் எத்த‌னையோ முன்னோர்க‌ள பார்த்து இருக்கிறேன் ,

கைவ‌ச‌ம் நிறைய‌ புகைப் ப‌ட‌ங்க‌ள் இருக்கு எம் முன்னோர்க‌ளுடைய‌ , அத‌ இந்த‌ பொது வெளியில் இணைக்க‌ விரும்ப‌ல‌ , எந்த‌ புத்துக்க‌ எந்த‌ எப்ப‌ இருக்கும் என்று தெரியாத‌ உல‌கில் நாம் வாழுகிறோம்

எமது முன்னோர்கள்  என்று பொதுவாக உரையாடும்போது  பொது தளங்களில் உத்தியோகபூர்வ  புள்ளிவிபரங்களை தான் நம்ப முடியும். அதன் அடிப்படையில் தான்  உரையாடவோ விவாதம் புரியவோ முடியும். எங்க அப்பா, அம்மம்பா, தாத்தா என்று கதை விடுவதை எல்லாம்  நம்பமுடியாது. 

இலங்கையின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை இணையுங்கள். அது மட்டும் தான் நம்பிக்கைக்குரியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.