Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல் - என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தல் - என்ன நடந்தது?

 
தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் பெரியார் சிலைக்கு அவமரியாதை

தமிழகத்தில் கோவை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது என்ற புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலூர் அருகே கீழையூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தவர்களை கண்டறிந்து கைது செய்யவேண்டும் என பெரியாரிய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில், போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருண்கிருஷ்ணன் என்பவர், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் பெரியார் சிலைக்கு அவமரியாதை

பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பெரியார் அமைப்பினர், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அரசியல்கட்சி தலைவர்கள் ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ''என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்.சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்,'' என தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை அவமரியாதை குறித்து, ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

 

 

https://www.bbc.com/tamil/india-53447969

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் பெரியார் சிலைக்கு அவமரியாதை

பெரியார் தானே.... கடவுள் சிலையை, கும்பிடாதீர்கள்...
அது,  வெறும் கருங் கல், என்றவர்.

இந்தப் பெரியார் சிலை... கல்லு இல்லையா?
அதை... அவமதித்தால், ஏன் கோபம் வருகின்றது.

திராவிடத்தின்,  சூழ்ச்சியை... இப்பதான், தமிழன் புரிய ஆரம்பித்திருக்கின்றான்.

-நேற்று ஒரு காணொளியில் பார்த்து, ரசித்த வரிகள் இவை.-  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பெரியார் இல்லாட்டில் தமிழ்நாடு எப்பிடி இருந்திருக்கும்.
எனக்கு பெரியாரை பிடிக்காது. 😎

15 hours ago, தமிழ் சிறி said:

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் பெரியார் சிலைக்கு அவமரியாதை

பெரியார் தானே.... கடவுள் சிலையை, கும்பிடாதீர்கள்...
அது,  வெறும் கருங் கல், என்றவர்.

இந்தப் பெரியார் சிலை... கல்லு இல்லையா?
அதை... அவமதித்தால், ஏன் கோபம் வருகின்றது.

திராவிடத்தின்,  சூழ்ச்சியை... இப்பதான், தமிழன் புரிய ஆரம்பித்திருக்கின்றான்.

-நேற்று ஒரு காணொளியில் பார்த்து, ரசித்த வரிகள் இவை.-  :)

 

12 hours ago, குமாரசாமி said:

உந்த பெரியார் இல்லாட்டில் தமிழ்நாடு எப்பிடி இருந்திருக்கும்.
எனக்கு பெரியாரை பிடிக்காது. 😎

தயவு செய்து பெரியார் என்று குறிப்பிட வேண்டாம். ஈ.வே. ராமசாமி என குறிப்பிடவும். இவர் ஒரு தமிழர் இல்லை. தமிழ் இனத்தை அழிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தான் திராவிடம். தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் இனத்தை இழிவு படுத்க்த்தியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

 

தயவு செய்து பெரியார் என்று குறிப்பிட வேண்டாம். ஈ.வே. ராமசாமி என குறிப்பிடவும். இவர் ஒரு தெலுங்கர் தமிழர் இல்லை. தமிழ் இனத்தை அழிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தான் திராவிடம். தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் இனத்தை இழிவு படுத்க்த்தியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

ஆமா இனிமேல் இவரை ராமசாமி என்றுதான் கூப்பிடனும், தமிழ் கலாச்சாரத்தை திட்டமிட்டே அழிக்க ஒரு கூட்டமிருக்கு, பகுதறிவு என்ற போர்வைக்குள் புகுந்து, இவர்கள் தமிழர்கள் தானா என்ற கேள்வி வருகின்றது, எங்களின் கலாச்சாரத்தை அழிக்க துணைபோகும் இந்த கபட வேடதாரிகள் நினைக்கவே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Dash said:

 

தயவு செய்து பெரியார் என்று குறிப்பிட வேண்டாம். ஈ.வே. ராமசாமி என குறிப்பிடவும். இவர் ஒரு தமிழர் இல்லை. தமிழ் இனத்தை அழிக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதம் தான் திராவிடம். தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ் இனத்தை இழிவு படுத்க்த்தியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

உள்ளதை சொல்லுறன்......முதல்லை மூத்- சட்டி எண்டுதான் எழுத யோசிச்சனான்.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் சிலை அவமதிப்பு : ராகுல் காந்தி கண்டனம்!

spacer.png

 

கோவையில் நேற்று பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது  நேற்று காலை, அடையாளம் தெரியாத நபரால் காவி சாயம் ஊற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த திராவிடர் கழகத்தினர் உட்பட பல்வேறு கட்சியினரும் சிலை முன் திரண்டனர்.  பெரியார் சிலை மீது காவி நிற சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் தண்ணீர் ஊற்றி கழுவி சிலை தூய்மையாக்கப்பட்டது.

 

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று மாலை பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன்(21) இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதனிடையே, திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூரில் இருக்கும் பெரியார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதும் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 18) கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப் படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://minnambalam.com/politics/2020/07/18/33/congress-leader-Rahul-Gandhi-Condemns-periyar-statue-defacing

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் சிலையல்ல அது  வெறும் கல்  என்றவருக்கு

கல்லில் சிலை  வைத்து மாலை அணிவித்து

மரியாதை  செய்கிறார்கள்

இப்போ யார் முட்டாள் யாரு வெங்காயம்????

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

கடவுள் சிலையல்ல அது  வெறும் கல்  என்றவருக்கு

கல்லில் சிலை  வைத்து மாலை அணிவித்து

மரியாதை  செய்கிறார்கள்

இப்போ யார் முட்டாள் யாரு வெங்காயம்????

கூகிளில் தேடினால் இப்படி விளக்கம் வருகின்றது..

 

தந்தை பெரியாருக்கு 17.9.1967 அன்று முதல் முதலில் திருச்சியில் சிலை வைத்து பெருமைப்படுத்தினார் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.

திருச்சி, சிறுகனூர் என்ற இடத்தில் ‘பெரியார் உலகம்’ அமைக்கப்படுகிறது அங்கு பெரியாருக்கு 140 அடியில் சிலை வானுயர எழுப்பப்படவிருக்கிறது.

கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கு பெரியாரின் மார்பளவு சிலைகள் வைக்கப்பட்டன.

“பெரியாருக்கு ஏன் சிலை வைக்கப்படுகிறது?''

“பெரியார் சிலையை ஏன் வணங்குகிறீர்கள்?

பெரியார் சிலைக்கு ஏன் மாலை போடுகிறீர்கள்?'' மடவாதிகளின் ரிப்பீடேட் கொஸ்டின்.

பெரியார் சிலையை பகுத்தறிவாளர்கள் வணங்குவதில்லை. பெரியாரின் பிறந்தநாளிலோ மறைந்த நாளிலோ அந்த நாளை மக்களுக்கு நினைவுபடுத்தி பிரச்சாரம் செய்யும் நோக்கில் பெரியார் சிலைக்கு மாலை போடுவது என்பது சிலையை 'ஹைலைட்' செய்வது. மதவாத மூடர்களுக்குப் பலமுறை சொல்லியாயிற்று.ஆனாலும் அவர்கள் திருந்தியபாடில்லை.

தந்தை பெரியார் சிந்தனையில் உருவான கருத்துகளும் அவற்றை நடைமுறைப்படுத்த கைக்கொள்ளப்படும் அணுகுமுறைச் சிறப்புகளும் தனித்துவம் கொண்டவை. உலகில் தோன்றிய மற்ற புரட்சியாளர்களிடமிருந்து மாறுபட்டு, பொது வாழ்வில் பங்கேற்று சிந்தித்து, யாரும் தொட்டுப் பார்க்காத, தட்டிக் கேட்காத சமூக அவலங்களைத் துணிச்சலாக நேர்கொண்டு வெற்றி கண்டவர் பெரியார். அந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும் எனும் நோக்கத்தில் இயக்கம் கண்டு, அதற்குரிய தலைமையினை அடையாளம் காட்டி தனது வாழ்வினையே வரலாறாக விட்டுச் சென்று, வழித்தடம் அமைத்தவர் தந்தை பெரியார்.

பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதன் ஒரு அணுகுமுறையாக அவருக்கு சிலை அமைத்திடும் செயல் தந்தை பெரியாரது காலத்தே தொடங்கியதுதான்.

தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது அவருக்கு ஆராதனை செய்து, வழிபடுவதற்காக அல்ல; சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு ஆதிக்க ஆன்மீகச் சுரண்டலுக்கு வழி வகுத்திடவும் அல்ல; தந்தை பெரியாருக்கு சிலை வைத்திடுவது அவருக்கு அடையாள மரியாதை செய்திடவே; அவருடைய பகுத்தறிவுக்கொள்கையினை,சிலையைப் பார்வையிடுபவர்களுக்கு உணர்த்திடவே. தனக்கு சிலை வைத்திட தந்தை பெரியார் அனுமதித்தபோது அவர் விதித்த நிபந்தனை இதுதான்; ''என் உருவம் சிலை வடிவத்தில் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்; சிலை வடிவத்தினை விட நான் பிரச்சாரம் செய்த பகுத்தறிவுக் கருத்துகள் சிலை பீடத்தில் பொறிக்கப்பட வேண்டும். எந்த கருத்துகளை நான் எடுத்துச் சொன்னேனோ அந்தக் கருத்துகள் சிலையை பார்ப்பவரிடம் சென்றடைய வேண்டும்'' என்று கூறி சிலை வைக்க அனுமதி அளித்தார்.

 

http://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-apr19/37137-2019-04-30-08-26-27

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு எப்பவுமே தன்ர இனத்துப் பெருமைகள் தெரியாது. ஈ வே ராமசாமி என்ற கன்னடனை பெரியாராக்கி.. சிலை வைச்சு.. அதுக்குள் ஒரு பகுத்தறிவு என்ற போர்வையில்.. திராவிட.. சாதிய.. பகுத்தரிவு சிந்தனைகளை புகுத்தினதே.. இந்தக் கன்னடன் செய்த வேலை.

இதுவும் ஒரு வகை தமிழின அழிப்பே ஆகும். அடுத்தவன் எடுத்தவன் எல்லாம் தமிழனுக்கு தலைவன் வழிகாட்டி ஆன படியால் தான் தமிழன்.. இன்று அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.

தமிழா நீ தமிழனாக இரு. அதுதான் உன் இன இருப்புக்கு முக்கியம். முதலில் இந்தச் சிலைகளை தமிழ் நாட்டில்.. இல்லாது ஒழிக்க வேண்டும். தமிழ் மன்னர்களின்.. தமிழ் பாட்டன்களின்.. பாட்டிகளின் சிலை மட்டுமே கருத்துருவாக்கிகளாக எழுந்து நிற்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

 

இவர் உண்மையில் ஈழதமிழரா?பேச்சு நடை அப்படி இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இவர் உண்மையில் ஈழதமிழரா?பேச்சு நடை அப்படி இல்லையே

ஆம். இவர் ஈழத்தமிழர் தான். யாழ் இந்துவின் மைந்தன். 

  • கருத்துக்கள உறவுகள்

109670648_975506696207293_70063039972709

                ----(பொதுமக்கள்)---- ☺️

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.