Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்தத்தின் நிலை கவலையளிக்கிறது: ‘இரத்த ஆறு ஓடும்’ என்ற தேரர்களின் கருத்து குறித்து சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தத்தின் நிலை கவலையளிக்கிறது: ‘இரத்த ஆறு ஓடும்’ என்ற தேரர்களின் கருத்து குறித்து சுமந்திரன்

 

 

 

  by : Litharsan

சமாதானத்தின் உச்ச நிலையாக உள்ள பௌத்த சமயத் துறவிகள் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று கூறியுள்ளதன் மூலம் நாட்டில் பௌத்தம் எந்த நிலைக்குப் போய்விட்டது என்பதை எண்ணி கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் ‘இரத்த ஆறு ஓடும்’ என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு எனத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்கள், அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள எம்.ஏ.சுமந்திரன், “நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. இந்தக் கருத்துக்கள் தேவையற்றவை.

பௌத்த சமயம் சமாதானத்தின் உச்ச நிலையயை அடையும் சமயமாகத்தான் நாங்கம் அறிந்திருக்கிறோம். அதனைப் போற்றுகின்றோம். ஒரு உயிரைக்கூட கொல்லுவது தவறு என்றும் அது பூச்சி, புளுவாக இருந்தாலும் கொல்லக்கூடாது எனவும் கூறுகின்ற சமயம்.

அதைப் பின்பற்றுகின்றவர்களாக, துறவிகளாக இருக்கின்றவர்கள் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று எச்சரிக்கிற அளவில் இருக்கின்றதென்றால் இந்த நாட்டில் பௌத்தம் எந்த நிலைக்குப் போய்விட்டது என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/பௌத்தத்தின்-நிலை-கவலையளி/

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில்.... முதன் முறையாக, கவலைப் பட்ட சுமந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசமா இவருக்கு மொட்டையடிச்சு காவி போட்டு விடுங்கோ. போய் அவங்களுக்கு பாடம் எடுக்கட்டும்.. பெளத்தம் பற்றி. அதுதான் இவருக்குச் சரி.. சிங்களத்துடன் வாழப் பெருமைப் பட்ட பெருமான் இவருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா! இலங்கையில் பவுத்த மதம்  அழிந்து, அதர்மம் தலையெடுத்து ஆண்டுகள் பல ஓடி மறைத்து விட்டது. இது கூட தெரியாமல் கொழும்பில் சிங்களவருடன் வாழ்வது பெரும்பேறு என புகழ்ந்தீர். இப்போ கவலைப்படுகிறீர். எதற்கு இந்தக் கவலை? பிக்குகளே இவ்வாறு சவால் விட்டால் சாதாரண பவுத்த மக்களின் மனநிலையை சொல்லத் தேவையில்லை. உமக்கு எல்லாம் ஒன்றுதான். சும்மா முதலைக் கண்ணீர் சிந்தாதேயும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆகக் குறைந்தது ஒரு தமிழ் அரசியல்வாதியாவது தனது திருவாயைத் திறந்தாரே என்று திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  ☹️

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே காரை எடுத்துக்கொண்டு கொழும்புக்கு வந்தால் இதே வாய்  சிங்கள தொலைக்காட்சிகளில்:

‘’புல் பூண்டை மிதிப்பது ,பூச்சி புழுவைகூட  கொல்வது பாவம் என்று சொல்லும்  பெளத்தமத துறவிகள் வாயிலிருந்து, இரத்த ஆறு ஓடும் என்று பொறுமையை இழந்து அவர்கள் கூறுமளவிற்கு அன்று விடுதலை புலிகளும் இன்று  விக்னேஸ்வரன் போன்றவர்களும் எந்த அளவிற்கு இந்த நாட்டில் பிரிவினையை தூண்டியிருக்கிறார்கள்  என்பதை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம்’’

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

பேசமா இவருக்கு மொட்டையடிச்சு காவி போட்டு விடுங்கோ. போய் அவங்களுக்கு பாடம் எடுக்கட்டும்.. பெளத்தம் பற்றி. அதுதான் இவருக்குச் சரி.. சிங்களத்துடன் வாழப் பெருமைப் பட்ட பெருமான் இவருக்கு. 

Image may contain: 1 person

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

வாழ்க்கையில்.... முதன் முறையாக, கவலைப் பட்ட சுமந்திரன்.

லெக்சனுக்காக கவலைப்பட்டிருப்பார்.😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

லெக்சனுக்காக கவலைப்பட்டிருப்பார்.😁

இந்த முறை... பின் கதவால்,  வர முடியாதா? :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.