Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர்!

கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர்!

 

வவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ்

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ் பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ´கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்´ மற்றுமொரு கட்டம் இன்று (08) வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசமின்றி கலந்து கொண்டிருந்தார்.

வரவேற்பு நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசம் அணியாதிருப்பதினை ஊடகங்கள் புகைப்படம் , காணொளி எடுத்தமையினையடுத்து அவர் உடனடியாக அவரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தரை வர வழைத்து முகக்கவசம் எடுத்து வருவமாறு பணித்து அதன் பின்னர் முகக்கவசத்தினை அணித்திருந்தார்.

வடமாகாணத்தில் கொரோனா பாதுகாப்பிற்காக பல்வேறு உத்தரவினை பிறப்பித்தமையும் மிகப்பெரிய பதவினை வசிக்கும் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் கொரோனா பாதுகாப்பு முகக்கவசத்தினை அணியாது நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை அங்கிருந்தவர்களுகிடையே கேள்விக்குறியினை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய வடக்கு மாகாண ஆளுநரே இவ்வாறு நடந்து கொண்டிருந்தமை கவலைக்குறிய விடயமே.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=136252

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய வடக்கு மாகாண ஆளுநரே இவ்வாறு நடந்து கொண்டிருந்தமை கவலைக்குறிய விடயமே.

இதைத்தான் சொல்வது விசுகோத்துக்கு படித்த கூட்டம் என்று படிக்க என்று பள்ளிக்கூடம் போனால் அறிவை வளர்ப்பதை விட்டு ஓசி விசுக்கோத்த்தை திண்டு உடம்பை வளர்த்தது தான் மிச்சம் இவதானே  அறிக்கை விட்டவ  9 ஆயிரம் தமிழ் இளையோர்களை  ராணுவத்தில் சேர்ப்பதாக .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது இப்படியான விசுக்கோத்துக்களிடம் எம்மை மாதிரி வெளிநாட்டுக்கு வர முடியாத மக்கள் மாட்டிக் கொன்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தையெல்லாம் ஒரு செய்தியாக போடுவதற்குப் பதிலாக வேறு அதிக முக்கியத்துவம் மிக்க விடயங்களை பிரசுரித்திருக்கலாம் ☹️☹️

  • கருத்துக்கள உறவுகள்

அவவுக்கு சுவாச பிரச்சனைகள் இருக்கலாம் அல்லது மற்றவர்கள் எல்லாரும் போட்டு இருக்கினம் தான் போட தேவையில்லை என்ற அலட்சியம் காரணமாய் இருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையார் பதவியை தக்க வைக்க தமிழ் இளையோரை சிங்களப் படையில் இணைத்து இரையாக்குவார்.. இதில் கொரோனாவை வென்றுவிட்டதாக இனம் காட்டக் கூட இப்படிச் செய்திருக்கலாம்.

இவரின் மகிந்த - கோத்தா ஆட்சிக்கால காட்சிகள் சமீப காலமாக அவ்வளவு நல்லவே இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

அவவுக்கு சுவாச பிரச்சனைகள் இருக்கலாம் அல்லது மற்றவர்கள் எல்லாரும் போட்டு இருக்கினம் தான் போட தேவையில்லை என்ற அலட்சியம் காரணமாய் இருக்கலாம் 

நீங்கள் ஒரு வாங்காளத்து நட்சத்திரம். 😎

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் வசந்தம் ஒரு அறிக்கை விட்டுது கண்டியளே! அதை இவ மலையென நம்பியதால் வந்த வினை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.