Jump to content

இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா

இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்ட இளையராஜா

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.

இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார். 

 

இசைவாணி

 

இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே” மற்றும் “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களை பாடிக் காண்பித்திருக்கிறார் இசைவாணி. மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார் இசைஞானி.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/04154827/2126291/Tamil-Cinema-Ilayaraja-appreciate-isaivani.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார் இசைஞானி.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/12/04154827/2126291/Tamil-Cinema-Ilayaraja-appreciate-isaivani.vpf

மலையாளிகளுக்கும்  தெலுங்கர்களுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்புக்கொடுத்து வளர்த்துவிட்ட நீங்கள் எத்தனை தமிழர்களை வளர்த்துவிட்டிருக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாலி said:

மலையாளிகளுக்கும்  தெலுங்கர்களுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்புக்கொடுத்து வளர்த்துவிட்ட நீங்கள் எத்தனை தமிழர்களை வளர்த்துவிட்டிருக்கிறீர்கள்? 

நல்ல தொரு கேள்வி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாலி said:

மலையாளிகளுக்கும்  தெலுங்கர்களுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்புக்கொடுத்து வளர்த்துவிட்ட நீங்கள் எத்தனை தமிழர்களை வளர்த்துவிட்டிருக்கிறீர்கள்? 

வாலி இந்தக் கேள்வி நீண்ட நாட்களாக எனக்குள்ளும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வாலி இந்தக் கேள்வி நீண்ட நாட்களாக எனக்குள்ளும் இருக்கிறது.

இதை பாடியவர் திருச்சி யை சேர்ந்தவர் என்ற தகவலே இருக்கு  இந்த படமும் வெளிவரவில்லை இந்த பாட்டை  யார் பாடியது என்ன பெயர்   என்றும் தெரியவில்லை ?

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2020 at 02:40, பெருமாள் said:

இதை பாடியவர் திருச்சி யை சேர்ந்தவர் என்ற தகவலே இருக்கு  இந்த படமும் வெளிவரவில்லை இந்த பாட்டை  யார் பாடியது என்ன பெயர்   என்றும் தெரியவில்லை ?

 

நல்ல பாடல், எதனை முறை கேட்டாலும் சலிக்காது. கூகிளில் தட்டி பார்த்ததில் 
படம்: பொம்பிளை மனசு 
பாடியவர்: தியாகராஜன் 

இணைப்பிக்கு நன்றி பெருமாள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.