Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது – ஆனந்த சங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது – ஆனந்த சங்கரி

 

 

    by : Dhackshala

http://athavannews.com/wp-content/uploads/2020/12/20201208_121303_mfnr-720x450.jpg

நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “சம்பந்தரும் சேனாதிராஜாவும் வன்னியில் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவர்கள்.

அவர்கள் நினைத்திருந்தால் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தை நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் யுத்தத்தை நிறுத்த விரும்பவில்லை.

யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை அனுபவித்தவர்கள். எனவே அவர்களின் தலைமையைக் கொண்ட தமிழரசுக் கட்சியுடன் எந்த காலத்திலும் இணைவதற்கு அனுமதிக்க மாட்டேன்.

ஆனால் இணைப்பதற்கு அவர்கள் தற்போது முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள். எனினும் நான் உயிருடன் இருக்கும் வரை அந்த முயற்சியை கைகூடாது சம்பந்தரும் சேனாதிராஜாவும் தங்களுடைய பதவிகளை துறக்க வேண்டும்.

ஏனெனில் தமிழ் மக்களுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளார்கள். தமிழ் மக்கள் இன்றைய நிலையில் இருப்பதற்கு காரணம் அவர்கள்தான்” என அவர் மேலும் தெரிவித்தார்.

 

நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது – ஆனந்த சங்கரி | Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

இனி... வயசுக்கு வந்துதான் என்ன? வராட்டிதான் என்ன? 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, தமிழ் சிறி said:

இனி... வயசுக்கு வந்துதான் என்ன? வராட்டிதான் என்ன? 🤣

தமிழினத்தை பொறுத்தவரை அந்த இந்த கிழவன்கள் உயிரோடை இருந்தும் பிரயோசனம் இல்லை :mellow:

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

இனி... வயசுக்கு வந்துதான் என்ன? வராட்டிதான் என்ன? 🤣

கொசு தொல்லை தாங்க முடியவில்லை 😀

இவரை இணையும்படி யாரவது கேடடார்களா? எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சிகளும் இவரது கருத்துக்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்கியத்தை ஒரு நாளும் பார்த்ததில்லை. இப்போது அவர்களது கட்சிகளுக்குள்ளேயே பிரச்சினை உருவாகி, இது அவரது தனிப்படட கருத்து என்று கணடனத்துடன்  அறிக்கையும் விட்டிருக்கிறார்கள். பாவம் மனுஷன்.

  • கருத்துக்கள உறவுகள்

காடு வா வா என்குது, வீடு போ..போ... என்குது.... ☹️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

காடு வா வா என்குது, வீடு போ..போ... என்குது.... ☹️

கிளிநொச்சியில் உடும்புகள் இருக்கும்வரை ஆனந்தசங்கரியருக்கு மரணமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

கிளிநொச்சியில் உடும்புகள் இருக்கும்வரை ஆனந்தசங்கரியருக்கு மரணமில்லை.

ஐயா! இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்?  கொஞ்சம் விளக்கமாய் சொன்னியளெண்டால்......  😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

கிளிநொச்சியில் உடும்புகள் இருக்கும்வரை ஆனந்தசங்கரியருக்கு மரணமில்லை.

 

5 hours ago, குமாரசாமி said:

ஐயா! இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்?  கொஞ்சம் விளக்கமாய் சொன்னியளெண்டால்......  😀

ஆனந்த சங்கரியையும், கிளிநொச்சி  உடும்புக் கறியையையும்...  
பாலசிங்கம் அண்ணா... நகைச் சுவையாக குறிப்பிட்டதை,
பாஞ்ச் அண்ணர் நினைவில் வைத்திருக்கிறார்   என நினைக்கின்றேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

ஆனந்த சங்கரியையும், கிளிநொச்சி  உடும்புக் கறியையையும்...  
பாலசிங்கம் அண்ணா... நகைச் சுவையாக குறிப்பிட்டதை,
பாஞ்ச் அண்ணர் நினைவில் வைத்திருக்கிறார்   என நினைக்கின்றேன். :grin:

முக்காலும் உண்மை😇

9 hours ago, குமாரசாமி said:

ஐயா! இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்?  கொஞ்சம் விளக்கமாய் சொன்னியளெண்டால்......  😀

விளக்கமாகச் சொல்வதற்கு OIP.jpg அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இம்மாதம் 14ம் திகதி வருகிறது, அன்று யாழைத் திறவுங்கள் கொஞ்சமென்ன நிறையவே விளக்கமாக யாழ்உறவுகளிம் கேட்கலாம், பார்க்கலாம்.:100_pray:  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஐயா! இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்?  கொஞ்சம் விளக்கமாய் சொன்னியளெண்டால்......  😀

இவருக்கு எல்லாம் விளக்கமாய் சொல்ல வேண்டுமாம் ...தங்கச்சியிடம் சொல்லி ரெண்டு திட்டு எக்ஸ்ராவா குடுக்க சொல்ல வேண்டும்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

இவருக்கு எல்லாம் விளக்கமாய் சொல்ல வேண்டுமாம் ...தங்கச்சியிடம் சொல்லி ரெண்டு திட்டு எக்ஸ்ராவா குடுக்க சொல்ல வேண்டும்.....!  😁

பாவம் உங்கள் தங்கச்சி, கிழவருக்கா கட்டிக்கொடுத்தீர்கள்...... 😭

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-12-09-14-32-49-995-org-m

எல்லோருக்கும் ஓய்வு பெறும் வயது நிர்ணயம் செய்வது போல் இவயளுக்கும் செய்ய வேண்டும்..😢

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.