Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பவித்ரா ருசிபார்த்த மருந்தை பெற கேகாலையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
IMG-20201208-WA0013.jpg?189db0&189db0

கேகாலையில் ஆயுர்வேத வைத்தியரால் கொரோனாவுக்காக கண்டுபிடித்ததாக கூறப்படும் மருந்தை பெற்றுக்கொள்ள இன்றைய தினம் (08) ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியது என கூறப்படும் இந்த மருந்தை தம்மிக்க பண்டார என்ற ஆயுர்வேத வைத்தியரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அண்மையில் பரிசோதனை முயற்சியாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அருந்தி பரிசோதித்து இருந்தார்.

இந்நிலையிலேயே இன்று இதனை பெற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், 5 ஆயிரம் பேர் இந்த மருந்தை பெற்று சென்றுள்ளனர்.

குறித்த மருந்தினை பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் சென்று பெற்றதை அவதானிக்க முடிந்தது.

” ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கை விளக்கம் வழங்கிய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உணர்வுசார்ந்த – போரில் தம்முயிரை தியாகம் செய்த பிள்ளைகளை நினைவேந்தும் உரிமையை கொரோனா சட்டத்தைக்காட்டி நீதிமன்றம் ஊடாக தடுத்திருந்தது. ஆனால் இன்று ஆயுர்வேத திணைக்கள அனுமதி வழங்கப்படாத மருந்தை வழங்கும் நிகழ்வை அநாவசியமாக 10 ஆயிரம் பேரை கலந்துகொள்ளச் செய்து பாதுகாப்பு தரப்பின் ஆதரவுடன் நடத்த அனுமதித்துள்ளது. ” என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

பவித்ரா ருசிபார்த்த......

பவித்திரா ருசி பாத்த எண்டவுடனை எல்லாரும் விழுந்தடிச்சு ஓடியிருக்குதுகள்.....:grin:

35 minutes ago, பிழம்பு said:

” ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கை விளக்கம் வழங்கிய அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உணர்வுசார்ந்த – போரில் தம்முயிரை தியாகம் செய்த பிள்ளைகளை நினைவேந்தும் உரிமையை கொரோனா சட்டத்தைக்காட்டி நீதிமன்றம் ஊடாக தடுத்திருந்தது. ஆனால் இன்று ஆயுர்வேத திணைக்கள அனுமதி வழங்கப்படாத மருந்தை வழங்கும் நிகழ்வை அநாவசியமாக 10 ஆயிரம் பேரை கலந்துகொள்ளச் செய்து பாதுகாப்பு தரப்பின் ஆதரவுடன் நடத்த அனுமதித்துள்ளது. ” என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதான் சிறிலங்கா.

இனவாத சிறிலங்காவுக்காக வக்காளத்து வாங்குவோம். சாகும் வரை வக்காளத்து வாங்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சருக்கு நல்ல கொமிசன் கிடைக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பவித்திரா ருசி பாத்த எண்டவுடனை எல்லாரும் விழுந்தடிச்சு ஓடியிருக்குதுகள்

பவித்திரா ருசித்த மருந்தை அள்ளி

தீர்த்தம் என்றே நாம் குடிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை ஒழிக்கும் மருந்து – வைத்தியரின் வீட்டைச் சூழ்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்

சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான மருந்தினைப் பெற்றுக்கொள்ள அதிகமானோர் படையெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியில் அமைந்துள்ள வைத்தியரின் வீட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குறித்த மருந்துகளை கொள்வனவு செய்ய குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்ட நிலையில் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 120 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசினை குணப்படுத்த கூடிய ஆயுர்வேத மருந்து தன்னிடமுள்ளதாக கடந்த வாரம் சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டார தெரிவித்திருந்ததுடன்,  சுகாதார அமைச்சர் மருத்துவரின் வீட்டிற்கு சென்று மருந்தினை பயன்படுத்தி பார்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை ஒழிக்கும் மருந்து – வைத்தியரின் வீட்டைச் சூழ்ந்த 15 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள்!! - வெளிப்படை

http://athavannews.com/கொரோனாவை-ஒழிக்கும்-ஔடதங்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேகாலை ஆயுர்வேத மருந்து விநியோகிக்க தடை!

கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுர்வேத மருந்தை பெற்றுக் கொள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மீறி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடியதால் குறித்த மருந்தை விநியோகிப்பது கேகாலை மாவட்ட செயலாளரால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று இடம்பெற்ற மருந்து வழங்கும் நிகழ்வு தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தால் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை கோரப்பட்டுள்ளது.

 

டிஸ்கி
நான் வீரகேசரியில் முதலில்   'பவித்ராவை ருசிபார்க்க கேகாலையில் திரண்ட மக்கள் வெள்ளம்! என்று மாறி வாசித்து விட்டேன்.

கேகாலை ஆயுர்வேத மருந்து விநியோகிக்க தடை! | NewUthayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பிழம்பு said:

டிஸ்கி
நான் வீரகேசரியில் முதலில்   'பவித்ராவை ருசிபார்க்க கேகாலையில் திரண்ட மக்கள் வெள்ளம்! என்று மாறி வாசித்து விட்டேன்.

இவர் ஆரெண்டு தெரியுமோ?

மகிந்தவை கட்டுப்படுத்த மைத்திரி அதிரடி! கடும் கோபத்தில் மகிந்த!! - IBCTamil

  • கருத்துக்கள உறவுகள்

கேகாலையில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் அரச அதிகாரிகளால் இடைநிறுத்தம்- விசாரணைகள் ஆரம்பம்

 

கேகாலையில் வைத்தியர் ஒருவர் கொரோனாவை கட்டுப்படுத்தும் என தெரிவித்து விற்பனை செய்த மருந்தினை விநியோகிப்பதற்கு பிரதேச செயலாளர் தடை விதித்துள்ளார்.
குறிப்பிட்ட மருந்தினை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் சமூகவிலக்கல்களை விதிமுறைகளையும் மீறி கேகாலையின் ஹெட்டிமுல்ல பகுதியில் காணப்பட்டதால் கொரோனா பரவல் ஆபத்து குறித்து சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே பிரதேச செயலாளர் மருந்தினை விநியோகிப்பதற்கு தடை விதித்துள்ளார்.

ayul-do1-1-225x300.jpg
தன்னை மருத்துவர் என அழைத்துக்கொள்ளும் தம்மிக பண்டார என்பவர் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து தன்னிடமுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து அதனை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் ஹெட்டி முல்ல பகுதிக்கு இன்று சென்றனர்.
இன்று மருந்து என தெரிவிக்கப்படுவதனை அவர் இலவசமாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
பெருமளவு மக்கள் அப்பகுதிக்கு செல்லத்தொடங்கியதால் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் அங்கு அனுப்பப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் இது குறித்த படங்களும் கடும் விமர்சனங்களும் வெளியானதுடன் பொதுசுகாதார பணியாளர்களும் இதனால் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்துள்ளது என எச்சரித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் மருந்து வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளார்.

 

https://thinakkural.lk/article/96367

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தம்மிக்கவிடம் ஆயுள்வேத மருந்து வாங்க சென்ற மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Uue.jpg

தம்மிக்க பண்டாரவின் கொரோனா மருந்து வாங்குவதற்காக சென்றிருந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கேகாலையில் மருத்துவர் தம்மிக்க பண்டாரவினால்அறிமுகம் செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு பாணத்தைப் வாங்கச் சென்றவர்களில்,

மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

5 வயது குழந்தையும், அந்தக் குழந்தையின் தாய் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் வறக்காப்பொல மற்றும் கேகாலையைச் சேர்ந்தவர்கள்.இதேவேளை தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்புப் பாணத்தைப் பெறுவதற்காக

வரிசையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் அளவில் நின்றவர்களின் நிலைமை குறித்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப்பணிப்பாளர் Dr.ஹரித்த அலுத்கே

கருத்து வெளியிட்டுள்ளார். அவர்களில் பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

https://jaffnazone.com/news/22412

டிஸ்கி :

லெகியத்துல சின்ன கொன்பிகிரெசன் மிஸ்ரேக் ..

Screenshot-2020-12-30-11-19-02-071-org-m

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவர்களில் பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

அதுதான் மருந்து இருக்கின்றது எனும்  துணிவில் விதிமுறைகளை மீறி மக்கள் திரண்டு, எதை மாற்ற போனார்களோ அதையே வாங்கி வந்திருக்கிறார்கள். தம்மிக்க பண்டாரவுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.