Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வர ஆலய காணி ‘மாதோட்ட’ விகாரையின் பிக்குவால் அபகரிப்பு – சாள்ஸ் எம்.பி. அதிரடி விஜயம்

 

மன்னார் நிருபர்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று செவ்வாய்க் கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

DSC04130-1024x576.jpgமன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர் குறித்த காணி திருக்கேதீச்சர ஆலயத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவ்விடத்தில் அமைக்கப்பட் விகாரை ஆலய காணியிலும் தனியார் காணியிலும் அமைக்கப்பட்டிருந்தது.

மிகுதி காணி ஆலய நிர்வாகத்தின் பராமரிப்பில் இருந்து. இன் நிலையில் கடந்த தினங்களாக விகாரையில் பிக்கு மிகுதி காணியை அபகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்வில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

DSC04128-1024x576.jpgஇன்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.

இதன் போது மன்னார் பொலிஸார், ஆலய நிர்வாகத்தினர், ஆலய பிரதம குரு ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://thinakkural.lk/article/101750

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீச்சரம் வளைவு கட்டினதுக்கும்,  இடிச்சதுக்கும் போராடின ஆட்களெல்லோரும் இந்த கள்ளக் காணி பிடித்தல் விவகாரத்தில் ஏன் கள்ள மெளன காத்தவயள்.. 😡

தமிழர் நாம் எல்லோரும் நண்டுகள் என்பதற்கு சிறந்த உதாரணம் இது... ☹️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

திருக்கேதீச்சரம் வளைவு கட்டினதுக்கும்,  இடிச்சதுக்கும் போராடின ஆட்களெல்லோரும் இந்த கள்ளக் காணி பிடித்தல் விவகாரத்தில் ஏன் கள்ள மெளன காத்தவயள்.. 😡

தமிழர் நாம் எல்லோரும் நண்டுகள் என்பதற்கு சிறந்த உதாரணம் இது... ☹️

இதுக்கெல்லாம் வரமாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் எல்லோரும் மூடிக்கொண்டு பேசவேண்டியுள்ளது. திறந்தவெளியில் பேசும்போதே திரிவு படுத்தப்படுகிறது. இதில மூடிக்கொண்டு "கொண்டு வா" என்று சொல்ல "கொன்றுவா" என்று விளங்கி ஏடாகூடமாய்ப் போய்விடும் என்று எல்லோரும் மூடிக்கொண்டே இருக்கிறார்கள். அவனும் சமயம் பார்த்துத்தான் காய் நகர்த்துகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கேள்வி கேட்டால் பிரச்சனையை இதோட  முடிக்கலாம் ஆனால் நாலு ஐந்து வருடத்துக்கு இந்த பிரச்சனையை  முற்ற விட்டு கடைசியில் நம்ம சுத்து மாத்து கதாநாயகன் சுமத்திரன் வாதாடி வென்று 32 பல்லும் தெரிய போட்டொவுக்கு போஸ்  கொடுப்பார் இது நடக்கும் பிறகு ஐந்து வருடத்துக்கு மேல் பிக்குவிடம் அந்த பகுதி இருந்தபடியால் பிக்குவுக்கும் ஒரு பகுதி கொடுக்கப்படும் அதில் பெரியதொரு புத்தர் அதை காவல் காக்கா ராணுவம் என்று அந்தப்பகுதி அதகளப்படும்  கடைசியில் வெல்வது பிக்குதான் ஆனால் நம்ம ஆள் .வென்றுவிட்டேன் என்று கையில் புத்தக கட்டுடன் How Pakistan's economic future now depends on donkeys, eggs and funny  reporters

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கொரோனாவால் எல்லோரும் மூடிக்கொண்டு பேசவேண்டியுள்ளது. திறந்தவெளியில் பேசும்போதே திரிவு படுத்தப்படுகிறது. இதில மூடிக்கொண்டு "கொண்டு வா" என்று சொல்ல "கொன்றுவா" என்று விளங்கி ஏடாகூடமாய்ப் போய்விடும் என்று எல்லோரும் மூடிக்கொண்டே இருக்கிறார்கள். அவனும் சமயம் பார்த்துத்தான் காய் நகர்த்துகிறான்.

இது சஉவ சமயத்தவருக்கு மாத்திரமல்ல மன்னார்க் கிறீத்துவர்களுக்கும் ஆபத்தானது.

முதலில் ஒரு அரசமரம். பின்னர் அதன் கீழ் சிறிய புத்தர். பின்னர் அதற்கு ஒரு காவலரண். அதற்கு பிரித் ஓத ஒரு பிக்குவும் அவருக்கு ஒரு இருப்பிடம். பின்னர் அங்கு ஒரு விகாரை, அதனையண்டி சிறு இளநீர்க் கடை, அவருக்கு ஒரு கொட்டில், அவரின் குடும்பம். பின்னர் அவருக்கு எதிர்க் கடை ஒன்று அதற்கென வியாபாரியும் குடும்பமும்.... இப்படியே அவர்களின் பிள்ளைகளுக்கு சிங்களப் பாடசாலை. அங்கு படிப்பிற்க ஆசிரியர்கள். அவர்களுக்கு இருப்பிடம்....

இறுதியில் மன்னார்.... மன்னாரகம...வாக மாறியிருக்கும்.

ஊர் ஒரண்டுபட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம்... ☹️

எம்மவர்களின் சுயநலத்திற்கு நாங்கள் கொடுக்கும் விலை... 😭

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

இது சஉவ சமயத்தவருக்கு மாத்திரமல்ல மன்னார்க் கிறீத்துவர்களுக்கும் ஆபத்தானது.

முதலில் ஒரு அரசமரம். பின்னர் அதன் கீழ் சிறிய புத்தர். பின்னர் அதற்கு ஒரு காவலரண். அதற்கு பிரித் ஓத ஒரு பிக்குவும் அவருக்கு ஒரு இருப்பிடம். பின்னர் அங்கு ஒரு விகாரை, அதனையண்டி சிறு இளநீர்க் கடை, அவருக்கு ஒரு கொட்டில், அவரின் குடும்பம். பின்னர் அவருக்கு எதிர்க் கடை ஒன்று அதற்கென வியாபாரியும் குடும்பமும்.... இப்படியே அவர்களின் பிள்ளைகளுக்கு சிங்களப் பாடசாலை. அங்கு படிப்பிற்க ஆசிரியர்கள். அவர்களுக்கு இருப்பிடம்....

இறுதியில் மன்னார்.... மன்னாரகம...வாக மாறியிருக்கும்.

ஊர் ஒரண்டுபட்டால் கூத்தாடிக்குத்தானே கொண்டாட்டம்... ☹️

எம்மவர்களின் சுயநலத்திற்கு நாங்கள் கொடுக்கும் விலை... 😭

 இங்கு ஒரு கருத்து வந்தது நாம் சிங்களவராக மாறினாலே இலங்கையில் வாழ முடியும், இன்னோரு கருத்து சிங்களமாவது உறுதி யாராலும் மாற்ற முடியாது. நாம் கடந்த காலத்தை கைகாட்டிக்கொண்டும், குத்திக்காட்டிக்கொண்டும் காலத்தைக் கழிப்போம்.

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுக்கெல்லாம் வரமாட்டார்கள் .

வந்தாலும் பிரயோசனம் இல்லை எண்டு தெரியும். நமக்கு எதுக்கு சாமி வம்பு எண்டு இருந்துவிடார்களாகும். இருந்தாலும் இனி என்ன, நிறைய பவுத்த சின்னங்கள் அங்கிருந்து வெளிவரப்போகின்றது. அது மட்டும் நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

 இங்கு ஒரு கருத்து வந்தது நாம் சிங்களவராக மாறினாலே இலங்கையில் வாழ முடியும், இன்னோரு கருத்து சிங்களமாவது உறுதி யாராலும் மாற்ற முடியாது. நாம் கடந்த காலத்தை கைகாட்டிக்கொண்டும், குத்திக்காட்டிக்கொண்டும் காலத்தைக் கழிப்போம்.

👏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.