Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாநகர சபையைக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்ல! - இரா.சம்பந்தன்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர சபையைக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்ல! - இரா.சம்பந்தன்.!

Screenshot-2020-12-31-10-59-29-839-com-a

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயருக்கான வேட்பாளர் பரிந்துரை தொடர்பில் இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அதனால் இந்த விடயம் தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. யாழ். மாநகர சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்லன்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற யாழ். மாநகர சபையின் புதிய மேயர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் விருப்பத்துக்கு அமைவாக மிகவும் பக்குவமாகவும் பொறுப்பாகவும் செயற்படுமாறு கட்சியின் தலைவரின் (மாவை சேனாதிராஜா) கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தேன். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது.

புதிய மேயருக்கான வேட்பாளர் பரிந்துரை தொடர்பில் இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து எனக்கு அறிவிக்கப்படவில்லை. அதனால் இந்த விடயம் தொடர்பில் நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.

யாழ். மாநகர சபையை இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்லன்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/12/31/21003/

டிஸ்கி :

வாழ்த்துக்கள் ஐயா.! இப்படியே எல்லா பொறுப்புகளில் இருந்தும் படிப்படியாக தாங்கள் மற்றும் அவரும் ( மாவை ) விடுவித்து கொள்வது தங்கள் மூப்பின் அடிப்படையில் நலன் ..👌

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் விருப்பத்துக்கு அமைவாக மிகவும் பக்குவமாகவும் பொறுப்பாகவும் செயற்படுமாறு கட்சியின் தலைவரின் (மாவை சேனாதிராஜா) கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தேன். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது.

ஐயோ.... ஐயோ! இதுவே சிங்களத்தைப்பற்றி ஏதாவது குறை  கூறியிருக்க வேண்டும் ஐயாவுக்கு வாற கோபத்தைப்பார்க்க வேண்டுமே. இவருக்கு ஒன்றும் தெரியாது இவரெல்லாம்  தலீவர். சுமந்திரனை ஊட்டி வளர்ப்பதே தன் அயோக்கியத்தனத்தை மறைப்பதற்காகத்தான். எல்லோரும் சேர்ந்து மாவைக்கு குழிபறிக்கினம். அப்புவுக்கு தெரியும் தான் போதியளவு தமிழரை மொட்டையடித்துவிட்டேன் மிச்சம் மீதி  வைக்கவில்லையே... இனி யார் எப்பாடுபட்டாலும் அலட்டிகொள்ளத் தேவையில்லையென்று ஹாயாக இருக்கிறார்.  இதுகளுக்கெல்லாம் மனச்சாட்சி என்று ஒன்று இருக்கிறதா?  

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் ஒரு தலைமைக்குள்ள தகுதி.. 😂😂

இந்தத் தலைமையை நம்பி.... 😤

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ். மாநகர சபையைக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்ல! - இரா.சம்பந்தன்.!

தமிழின தலைவராம். பொறுப்பு கூற முடியாதாம்.....ஐயோ ஐயோ நீங்கள் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன😎

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பொறுப்பு.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடிப்பது.. சொறீலங்கா சிங்கள சுதந்திர தினத்தில் குந்தி இருந்து கொட்டாவி விடுவது.. போர்வெற்றி நிகழ்வில் கலந்து கொள்வது.. அதாவது சிங்கள எஜமானர்களுக்கு விசுவாசமுள்ள செயல்களைச் செய்வதே எங்களின் பொறுப்பு...!

இதுகளை நம்பி.. தமிழர்களும்.. தமிழர்களின் உரிமைகளும்..??! இதுகளால்.. தமிழர்களுக்கு கேடு நேருமே தவிர நன்மை இல்லை. இவர்கள் இப்போ அரசியல் செல்லாக்காசுகள். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழும்போது செய்யவில்லை இனி மாழும்போது......

 

19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ். மாநகர சபையை இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்தமைக்கு நான் பொறுப்பு அல்லன்"

இன்னும் ஐயாவுக்கு உயிர் இருக்கு. சத்தம் கேட்க்குதெல்லே போதும். அப்பப்ப கொடுக்கும் சத்தத்தை வைத்து  நிட்சயப்படுத்திக்கொள்ளுங்கோ.  

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரனை கட்சிக்குள் கொண்டு வந்து அவருக்கு முழுச்சுதந்திரமும் காடுத்து கட்சியை உடைத்து சின்னாபின்னாமாக்கியதுக்கு முழுப்பொறுப்பும் சம்பந்தனையே சேரும்.கூட்டமைப்புக்குள்ளும் சொந்தக்கட்சிக்குள்ளும் குத்து வெட்டுகள் நடைபெறும் பொழுது அதற்கு நான் பொறுப்பல்ல என்று நழுவுவது  ஒரு தலைமைக்கு அழகா? ஒரு முதிர்ந்த அரசியல்வாதி என்று மதிப்புக் கொடுத்த படியால்தான் கட்சி இன்று ஓரளவுக்காவது இருக்கிறது.இப்படி ஓரு பொறுப்பற்ற அரசியல் தலைவரை உலகத்தில் காண முடியாது.இவர்களுக்கு வாக்களித்த மக்களை முட்டாள்கள் ஆக்கியிருக்கிறார். இவர் எப்படி தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்?இப்டிபாழுதும் மறைமுகமகமாக சுமத்திரன் அணியை ஆதரித்து இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புலவர் said:

இப்டிபாழுதும் மறைமுகமகமாக சுமத்திரன் அணியை ஆதரித்து இருக்கிறார்.

ஐயா வாங்க வேண்டியதெல்லாம் சுமந்திரன் சுமக்கிறார். எல்லாம் ஒரு நன்றிக்கடன்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.