Jump to content

விடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு

 
IGLA-Missiles-696x522.jpg
 100 Views

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்குமிடையில் போர் உக்கிரமாக இடம்பெற்ற 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவினால் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்ட 54 இக்லா வகை தரையில் இருந்து வானுக்கு செலுத்தும் ஏவுகணைகளின் ஆயுட்காலத்தை இந்திய அதிகாரிகள் பரிசோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வு நேற்று (16) இடம்பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு போர் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகளின் வான்படை பிரிவு கொழும்பு கட்டுநாயக்கா மற்றும் பலாலி விமானத்தளங்கள் மீது வான்தாக்குதல்களை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தனர்.

சிறீலங்கா வான்படையினரால் விடுதலைப்புலிகளின் வான்படை விமானங்களை தாக்கியழிக்க முடியாத நிலையில் இந்தியா ராடார் மற்றும் ஏவுகணைகளை சிறீலங்காவுக்கு வழங்கியிருந்தது.

இந்தியாவின் ராடார்கள் வவுனியா வான்படைத்தளத்திலும் நிறுவப்பட்டிருந்தது.

IGLA-S_MANPADS_at_IDELF-2008-300x186.jpgதற்போது சிறீலங்காவுக்கு வந்துள்ள இந்திய வான்படை பொறியியலாளர்கள் ஏவுகணைகளை பரிசோதித்துள்ளதுடன், சிறீலங்கா படையினருக்கு பயிற்சிகளையும் வழங்கியுள்ளனர். இந்த உதவியை இந்தியா வருடம்தோறும் சிறீலங்காவுக்கு வழங்கி வருகின்றது. அதற்கான செலவுகளையும் இந்தியாவே பொறுப்பெடுத்துள்ளது.

அண்மையில் சிறீலங்கா வந்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சிறீலங்கா, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் இணைந்த கடற்பாதுகாப்பு உடன்பாடு குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

 

https://www.ilakku.org/?p=39621

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  ஏவுகணையால்.... புலிகளின் ஒரு விமானத்தையும் சுட்டு விழுத்தவில்லையே...

அதின்ரை திறத்தில... என்ன பரிசோதனை வேண்டிக் கிடக்கு. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இந்த  ஏவுகணையால்.... புலிகளின் ஒரு விமானத்தையும் சுட்டு விழுத்தவில்லையே...

அதின்ரை திறத்தில... என்ன பரிசோதனை வேண்டிக் கிடக்கு. 😁

யாரும் சாப்பாட்டு கடை வைத்திருப்பவர்களிடம் கொடுத்தால் 
குறைந்த நேரத்தில் அதிக அளவான புட்டு அவிக்கலாமா?
என்றாவது பரிசோதனை செய்து பார்ப்பார்கள் 

யாருக்கும் பிரியோசனம் இல்லாமல் சும்மா கிடக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைட வீரமெல்லாம்.. விடுதலைப்புலிகளோடு தான். அங்கால சீனா.. பாகிஸ்தானோடு மோதலாமே. அதுக்கு வக்கில்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, உடையார் said:

விடுதலைப்புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஏவுகணைகள் பரிசோதிப்பு

 
IGLA-Missiles-696x522.jpg

முள்ளிவாய்க்கால்லை போட குடுத்த கெமிக்கல் குண்டுகளையும் ஒருக்கால் சிங்கள கிராமங்களுக்கை போட்டு பரிசோதிச்சு பாக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

இந்த  ஏவுகணையால்.... புலிகளின் ஒரு விமானத்தையும் சுட்டு விழுத்தவில்லையே...

அதின்ரை திறத்தில... என்ன பரிசோதனை வேண்டிக் கிடக்கு. 😁

இன்னும் தாங்கள் கொடுத்த கொண்டிசனிலதான் கிடக்கோ அல்லாட்டி இவங்கள் அதை தட்டி நிமித்தி வேலை செய்ய வச்சிட்டாங்களோ என்ற “பரிசோதனை” அண்ணை🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களால்த் தான்  விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்தது என பரிசோதனை செய்து சத்தியம் செய்யினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

யாரும் சாப்பாட்டு கடை வைத்திருப்பவர்களிடம் கொடுத்தால் 
குறைந்த நேரத்தில் அதிக அளவான புட்டு அவிக்கலாமா?
என்றாவது பரிசோதனை செய்து பார்ப்பார்கள் 

யாருக்கும் பிரியோசனம் இல்லாமல் சும்மா கிடக்கு 

 

9 hours ago, nedukkalapoovan said:

இவைட வீரமெல்லாம்.. விடுதலைப்புலிகளோடு தான். அங்கால சீனா.. பாகிஸ்தானோடு மோதலாமே. அதுக்கு வக்கில்ல. 

 

6 hours ago, குமாரசாமி said:

முள்ளிவாய்க்கால்லை போட குடுத்த கெமிக்கல் குண்டுகளையும் ஒருக்கால் சிங்கள கிராமங்களுக்கை போட்டு பரிசோதிச்சு பாக்கிறது..

 

6 hours ago, goshan_che said:

இன்னும் தாங்கள் கொடுத்த கொண்டிசனிலதான் கிடக்கோ அல்லாட்டி இவங்கள் அதை தட்டி நிமித்தி வேலை செய்ய வச்சிட்டாங்களோ என்ற “பரிசோதனை” அண்ணை🤣

 

6 hours ago, satan said:

தங்களால்த் தான்  விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்தது என பரிசோதனை செய்து சத்தியம் செய்யினம்.

தானமாக  கிடைத்த பசுமாட்டிற்கு,  எத்தனை வயது என்று....
பல்லைப்  பிடித்து பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். :grin:

சும்மா இந்தியா கொடுத்த... ஏவுகணையை, பத்து வருசத்துக்குப் பிறகு, 
ஸ்ரீலங்கா சோத்தித்து பார்க்குது என்றால்...
இந்தியா... தங்களை, "பேய்க்காட்டிப்" போட்டுது என்று....
சந்தேகப் படுகிறார்கள் போலுள்ளது. 😂

அல்லது... இந்தியாவின் ஏவுகணை எல்லாம்...
"சிவகாசி... ஈக்கில் வாண  வேடிக்கை" காட்டுகின்ற  அளவில் தான்....
அதன் தரம் உள்ளது போலுள்ளது. 🤣

ஒன்றை.... சீனாக்காரனிடம், கொடுத்தால்,
பிரித்து மேய்ந்து... அதன் தராதரத்தை, உடனே சொல்லி விடுவானே.... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அண்ணை பேரிச்சம் பழம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு.."

x480

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சும்மா இருந்த‌ சாமி தாத்தாவை சீண்டி பார்த்து விட்டீங்க‌ள் இனி ம‌னுஷ‌ன் இர‌வு பூரா இதுக்கை இருந்து எழுத‌க் கூடும்    சிறுத்தையை சீண்டி பார்ப்ப‌தில் உங்க‌ளுக்கு ஏதோ ஒரு இன்ப‌ம் ஹா ஹா🤣😁😂.............................................................
    • 👍....... நான் தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷைத் தான் தெரிவு செய்தனான். என் வீட்டு எறும்புக்கு கிரிக்கட் கொஞ்சம் தெரிந்திருக்குது. அது ஏதோ சும்மா ஓடுது என்று தான் நான் அப்ப நினைத்தனான்..........🤣 
    • அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ? முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் . கொஞ்சநாள் வராவிட்டால்  தொடங்கிடுவான்கள் மதமாற்றம் .  
    • அவர் எத்தனையாம் மனைவி என்று ஒருவரின தனிப்பட்ட வாழ்வை ஏன் எட்டிப் பார்பான்? உலகறிய சட்டப்படி திருமணம் செய்து வாழ்கின்றனர். அரசியல் என்று வரும் போது, இருவருக்கும் கொள்கை என்ற ஒன்று அறவே இல்லை. தாம் எந்தக் கூட்டணியில் இருக்கின்றோம் என்று கூட சரியாக தெரியாமல் உளறிக் கொட்டியவர்கள்.  
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 28     புத்தமதம் விஜயன் வந்து கிட்ட தட்ட 240 ஆண்டுகளின் பின் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், சிங்கள மொழி, விஜயன் வந்து ஆயிரம் ஆண்டுகளிற்குப் பின்பு தான், அதிகமாக 6ஆம் 7ஆம் நூறாண்டில் தான் ஓரளவு வளர்ச்சி அடைந்த மொழியாக தோற்றம் பெற்றது. இலங்கையில் விஜயன் வரும் முன்பே நாகர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் அதனால் அதை நாக நாடு அல்லது நாக தீபம் [‘Naga Land’ and ‘Naga Deep’] என்று பண்டைய காலத்தில் அழைத்தனர் எனவும் அறிகிறோம். தீபவம்சம், மகாவம்சம் கதையின் படி, புத்தர் [Lord Buddha] தனது இரண்டாவது வருகையாக கி மு 528 ஆண்டில் இலங்கையின் இரு வெவ்வேறு வட பகுதில் ஆட்சி செய்த இரு இரத்த உறவு கொண்ட நாக அரசர்களின் இடையில் ஏற்பட்ட சர்ச்சைகளை தீர்த்து வைத்தார் என்கிறது.   ஆனால் அதே கதையை தமிழ் மணிமேகலையிலும் காண்கிறோம். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றான, சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த, அதிகமாக மஹாயான பௌத்த காப்பியமான, சாத்தனாரின் மணிமேகலையும், அதற்கு முந்திய இளங்கோவின் சிலப்பதிகாரமும், கி. பி. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்று பொதுவாக கருதினாலும் இக் கதையை கி பி 2ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்றே பலர் வாதாடுகின்றனர். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால் மகாவம்சம் கூறும் விஜயனின் வருகை குறித்த எந்தக் கதையும் மணிமேகலையிலோ, அல்லது இதர இந்திய பௌத்த நூல்களிலோ காணப்பட வில்லை. மணிமேகலை 8 [மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை] , வரி 54 - 63 இல் :     "கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி 55 எமதுஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் இருஞ்செரு ஒழிமின் எமதுஈது என்றே 60 பெருந்தவ முனிவன் இருந்துஅறம் உரைக்கும் பொருஅறு சிறப்பில் புரையோர் ஏத்தும் தரும பீடிகை தோன்றியது ஆங்கு என்."     அதாவது, நாக நாட்டை ஆளும் இரு வேறு மன்னர்கள் "இது என்னுடையது" என்று சொல்லிக்கொண்டு அந்தப் பீடிகைக்கு உரிமை கொண்டாடினர். அவர்களால் அதனை எடுக்க முடியவில்லை. தம் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து உரிமைக்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர். அப்போது பெருந் தவமுனிவன் தோன்றி இது என்னுடையது என்று சொல்லி அதன்மீது ஏறி அமர்ந்துகொண்டு "போரைக் கைவிடுக" என்று அறநெறி உரைத்தான், மேன்மக்கள் போற்றும் அந்தப் பீடிகை [பீடம் / seat, stool] மணிமேகலை முன் தோன்றியது என்கிறது.   ஒரே ஒரு வித்தியாசம் தான், இங்கு புத்தரிற்குப் பதிலாக, துறவி ("பெருந்தவ முனிவன்") என கூறப் பட்டுள்ளது. அவ்வளவுதான்.   மணிமேகலையில், இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள மகாவம்சம் / பத்தொன்பதாவது அத்தியாயம் போதி விருட்சம் வருகையில், 'மகா தேரருடைய சக்தியால் அரசன் தன் பரிவாரங்களுடனும், இதர தேவர்களுடனும் போதி மரம் கொண்டு அதே தினத்தில் ஜம்பு கோலத்துக்கு வந்து சேர்ந்தான் என்றும் கூறப்படுகிறது. இன்று மணிபல்லவமும் ஜம்பு கோல் பட்டினமும் ஒரே இடம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலே தான் இந்த மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்ததாகிறது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை இதை கூறுகிறது. இது நாக நாட்டைச் சேர்ந்தது என்றும் மணிமேகலை 8 ஆம் காதை கூறுகிறது. நாக நாடு என்பது இலங்கைத் தீவின் வட பகுதிக்கு பண்டைக் காலத்தில் வழங்கப்பட்ட பெயர் ஆகும். மகாவம்சமும், இந்தப் பகுதியை நாக தீபம் என்று கூறுகிறது.   சிலப்பதிகாரத்திம், புகார் நகரை , நாக நாட்டில் உள்ள நீண்ட நாக பட்டணத்துடன் ஒப்பிடுகிறது. உதாரணமாக   "அதனால், நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு போகம் நீள்புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில்" இதன் கருத்து, அதனால் போகம் துய்க்கும் புகழுடன் புகார் நகரம் விளங்கியது. அது நாக மரங்கள் ஓங்கியிருந்த நகருடன் கூடிய நாகநாடு வரையில் விரிந்திருந்தது என்கிறது. இலங்கை காப்பியம் அவர்களை மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட அல்லது அரைவாசி பாம்பு, அரைவாசி மனித உயிரினம் என்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 29 தொடரும்      
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.