Jump to content

லடாக்கின் சிக்கீம் பகுதியில் இந்திய சீன துருப்பக்களிடையே மீண்டும் மோதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லடாக்கின் சிக்கீம் பகுதியில் இந்திய சீன துருப்பக்களிடையே மீண்டும் மோதல்

India-China clash at Sikkim

கடந்த 20 ஆம் திகதி, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையிலான இந்தியாவின் சிக்கீம் பகுதியில் சீனாவுடனான எல்லையில் மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.

Map

வடக்கு சிக்கீமின் நாகு லா எனும் இந்திய எல்லைப்பகுதியூடாக ஊடுருவ முயன்ற சீனத் துருப்புக்களுக்கும் இந்தியத் துருப்புக்களுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 20 சீன மக்கள ராணுவத்தின் வீரர்களை தாம் காயப்படுத்தியுள்ளதாகவும், தமது தரப்பில் நான்கு வீரர்கள் காயமடைந்ததாகவும் இந்தியா தெரிவித்திருக்கிறது.

File image of the border area in north Sikkim

கடுமையான காலநிலையிலும்கூட சீன ஆக்கிரமிப்பினை தமது வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்து அவர்களை விரட்டியடித்துவிட்டதாகக் கூறும் இந்தியா, மேலும் மோதல்கள் தொடர்வதினை இருபக்க அதிகாரிகளும் களத்தில் நடத்திய பேச்சுவார்த்தையொன்றின் ஊடாக தடுத்துவிட்டதாகவும்  கூறுகிறது.

மோதல் தணிந்துவிட்டாலும் கூட மிகவும் பதட்டமான சூழ்நிலை இப்பகுதியில் நிலவுவதாகவும், இப்பகுதியில் இருபக்கத்திலும் குறைந்தது ஒரு லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், பாரிய போர் ஒன்றிற்கு ஆயத்தமான நிலையிலேயே இரு தரப்பும் இங்கு காணப்படுவதாகவும் இந்தியா டுடே கூறுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே சொறிஞ்சு கொன்டிராமல் ஒரு முடிவுக்கு வாங்கோ.இந்தியாவா கொக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரளவுக்கு தான்... பொறுமை காக்கும்.

சீனா... நெடுக நொட்டிக் கொண்டிருந்தால்,   நடக்கிறதே வேறை. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ஒருங்கிணைந்த பிரதேசமான நாகு லா வில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/1/2021 at 10:03, சுவைப்பிரியன் said:

இப்படியே சொறிஞ்சு கொன்டிராமல் ஒரு முடிவுக்கு வாங்கோ.இந்தியாவா கொக்கா.

நானும் இதைத்தான் சொல்ல வாறன், சீக்கிரமாக தொடங்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/1/2021 at 11:03, சுவைப்பிரியன் said:

இப்படியே சொறிஞ்சு கொன்டிராமல் ஒரு முடிவுக்கு வாங்கோ.இந்தியாவா கொக்கா.

On 25/1/2021 at 12:24, தமிழ் சிறி said:

இந்தியா ஒரளவுக்கு தான்... பொறுமை காக்கும்.

சீனா... நெடுக நொட்டிக் கொண்டிருந்தால்,   நடக்கிறதே வேறை. 😁

On 25/1/2021 at 12:56, Kapithan said:

சீனாவின் ஒருங்கிணைந்த பிரதேசமான நாகு லா வில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

☹️

சீனாவும் இந்தியாவும் நிண்டு அடிபடுறதுக்கு  சிறிலங்கா நல்ல இடமெண்டு கதைக்கிறாங்கள். கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானிலை ரஸ்யாவும் அமெரிக்காவும் புடுங்கி எடுத்தமாதிரி...... இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்? 😁

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

சீனாவும் இந்தியாவும் நிண்டு அடிபடுறதுக்கு  சிறிலங்கா நல்ல இடமெண்டு கதைக்கிறாங்கள். கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானிலை ரஸ்யாவும் அமெரிக்காவும் புடுங்கி எடுத்தமாதிரி...... இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்? 😁

 

 

நெடுந்தீவுக்கு போறவன் கச்சதீவுக்கும் போவான்தானே..😀

பிறகென்னத்த நான் நினைக்கிறது.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

நெடுந்தீவுக்கு போறவன் கச்சதீவுக்கும் போவான்தானே..😀

பிறகென்னத்த நான் நினைக்கிறது.. 😂

கச்சதீவுக்கு போறவன் பொழுது போகேல்லை எண்டுட்டு மெட்றாசுக்கு போய் மாஸ்டர் படம் பாக்க போகமாட்டான் எண்டதிலை என்ன சந்தேகம்?😂  

அதைவிட வேறை மெட்ராஸ் பிரபலங்களுக்கு  சைனிஸ் பூட் வெறி லைக்காம்...😎

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.