Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


மாலதி அதிகாலை  விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள், அடுப்பை பற்ற வைத்து  , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கைக்காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்கு போகவேனும்.  ......வரும்போது இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள். சம்மதம் சொன்ன மாலதி உடுப்பு மாற்றி வெளிக்கிட  தயாரானாள் 


நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் இவளது குழந்தைகள். அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறப் பட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும்  முடித்து கொண்டவள்.ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளை களையும்  அமைதிபடுத்தி "விளையாட்டு பொருட்கள்  வாங்கி வர வேணும் அம்மா" என்னும் வேண்டுதல்  வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . பஸ்  வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது.................

தன் பெற்றவரை  மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி.இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள். மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த  நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதாரண  விவசாயக்  குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்ப் புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர்  இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் பலத்த முயற்சியின்  பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் .

வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான்.  மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக  தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியாருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும்  கொஞ்சம் கட்டவேண்டும்.........

வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் மீதியில்  தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது..வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு, தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்."அம்மா" என்று அழைத்துக்கொண்டு என் மருமகள்  வருவாள் என்று  பசியோடு வாசலை பார்த்து கொண்டிருப்பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது .

ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை  தீர்க்க வந்த  இன்னொரு)  மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள்.  மாமி மருமகள் என்றாலும்  வேற்றுமை பாராட்டுவதில்லை .  .....மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா.....
 
சில குடும்பங்களில் பெண்ணுக்கு  பெண்களால்  தான் எதிரி . எதிலும் குறை சொல்வது . பிழை பிடிப்பது  மச்சாள் ( நாத்தனார் ) இருந்துவிடடால்  போதும்  தனது  செல்வாக்கை கைப்பற்ற வந்த எதிரி என்றே எண்ணுவார்கள். 

அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும்.
..
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிலாமதி said:

ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை  தீர்க்க வந்த  இன்னொரு)  மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள்.  மாமி மருமகள் என்றாலும்  வேற்றுமை பாராட்டுவதில்லை .  .....மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா.....

நிலாமதி எனது தாயாரும் மனைவியும் எங்கும் சேர்ந்தே திரிவார்கள்.
தெரியாத ஆட்கள் யார் என்று கேட்டால் மகள் என்றே கூறுவார்.

எனது பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள்.
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்றி பகிர்வுக்கு, இப்படி எல்லா பெண்களும் மருமகளை மகளாக நடத்தினால், எத்தனையோ பிரச்சனைகள் தவிர்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கதை நிலாக்கா!

பொதுவாக எல்லோருக்கும் மாலதி போல...மாமியார்கள் கிடைத்து விடுவதில்லை!

பெண்கள், பெண்களைப் புரிந்து கொண்டாலே....பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து போ விடுமென்பது தான் யதார்த்தம்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சகோதரி.........!  👍

 

பி.கு:  மாலதியும் மாமியாரும் தாயும் மகளுமாகவே இருக்கட்டும் ஆனால் ஒரு சண்டை கூட போடாமல் இருப்பது ரொம்ப அநியாயம்.....தாய் தந்தை வேண்டாமென்று ஓடி வந்த மாலதி அம்மாவுடன் எவ்வளவு சண்டை பிடித்திருப்பாள்......!   😥

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2021 at 23:21, நிலாமதி said:

மாமி மருமகள் என்றாலும்  வேற்றுமை பாராட்டுவதில்லை

இப்படியான புதினமான வாழ்க்கை அருமையிலும் அருமை! இந்தியா மாதிரி இலங்கையில் மாமியார் கொடுமை இல்லை. ஏனென்றால் மாப்பிள்ளை பொம்பிளை வீட்டில்தானே குடியிருக்கப்போவார்!😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

இப்படியான புதினமான வாழ்க்கை அருமையிலும் அருமை! இந்தியா மாதிரி இலங்கையில் மாமியார் கொடுமை இல்லை. ஏனென்றால் மாப்பிள்ளை பொம்பிளை வீட்டில்தானே குடியிருக்கப்போவார்!😀

பொம்புளை வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு போன புருசன்மாரின்ரை சோகக்கதை பெரிய கதை.
அதுவும் வடமராட்சியாளுக்கு வாழ்க்கைப்பட்டு போனால்.........போனவர் ஏழேழு ஜென்மத்திலையும் பஞ்சமாபாதகம் செய்தவர் எண்ட கோட்பாட்டுக்குள்லை வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் பெண்களை புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும்...கதை சிறப்பு

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2021 at 21:29, putthan said:

பெண்கள் பெண்களை புரிந்து நடந்தால் நன்றாக இருக்கும்...கதை சிறப்பு

புத்த‌ன் மாமாவை நீண்ட‌ நாட்க‌ளுக்கு பிற‌க்கு க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவைப்போல ஒரு மாமியார் கிடைப்பது
மிக மிக அரிது

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2021 at 22:41, வாத்தியார் said:

அம்மாவைப்போல ஒரு மாமியார் கிடைப்பது
மிக மிக அரிது

ஆம் இந்தக் கதையில் கதாசிரியர் மாமி மருமகள் உறவை மிகைப்படுத்தாமல் மிக அழகாக சொல்லியுள்ளார்......!   👍

Edited by suvy
எ .பிழை திருத்தம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.