Jump to content

ஸ்டாலின் வெற்றிபெற்றதற்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

girl.jpg

 

 

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக பெண் ஒருவர் வேண்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட கூடுதல் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றிருப்பதால் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் வெற்றி பெற்று வரும் 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32) இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார்.

அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

https://www.news7tamil.liv

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்... இப்பிடியான விசர் கூட்டம், நம்ம ஊரிலை இல்லை. 👍🏼 🙂

Link to comment
Share on other sites

52 minutes ago, தமிழ் சிறி said:

நல்ல காலம்... இப்பிடியான விசர் கூட்டம், நம்ம ஊரிலை இல்லை. 👍🏼🙂

உருவாகக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகி வருகிறது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுடா - நகைச்சுவைக்  கலைஞர் விவேக்

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். கோவில் திறக்காததால் நாக்கினை வாசல்படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

பெரியார் விசுவாசிகளுக்கு ஏது உண்டியல்? ஏது அம்மன் கோவில்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மறுப்பாளர்களின் உண்மை முகம் இதுதான்.

ஆனால் இது வெளிப்பார்வைக்கு மடமையாக தெரிந்தாலும் தமிழகத்தின் குணாதிசயங்களில் இந்த மட்டற்ற பேரன்பும் விசுவாசமும் ஒன்று.

கொண்ட கொள்கை, தலைவருக்காக உயிரை கொடுப்பது எமது மண்ணில் சர்வசாதாரணம். 

அண்ணன் சீமான் கூட மேதகு மீது இப்படி ஒரு விசுவாசத்தை கொண்டிருந்தமைதான் அவரை இத்துணை துன்பங்களையும் சகித்துகொண்டு சமரசமின்றி கொள்கை சமராட வைக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பேசாம தலையை அறுத்து போட்டுஇருக்கலாம்...

கூறுகெட்ட  முண்டம் என்ற பட்டமாவது கிடைத்திருக்கும்  🤨

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கேரளா திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி( பா ஜ க ) வெற்றி 
    • இந்திய மக்களவை தேர்தல் 2024 – பாஜவிற்கு அதிக வெற்றி வாய்ப்பு! இந்தியாவில் நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய தேர்தல் முடிவுகள் குறித்தான கருத்து கணிப்புக்களின்படி, 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க பெற்ற ஆசனங்களை விட இம்முறை அதிக ஆசனங்களை பெறும் என எதிர்பாக்கப்படுகின்றது. இந்திய மக்களை தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. அதன்படி, 7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மொத்தம் 64 கோடியே 20 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர். மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி, தெரிவுசெய்யப்பட்டால், அட்டல் பிஹாரி வாஜ்பாய்க்கு பின்னர் இந்தியாவின் மூன்றாவது முறையாக தெரிவுசெய்யப்பட்ட இரண்டாவது பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி தனதாக்கிக்கொள்வார். https://athavannews.com/2024/1385913
    • எல்லா மாமியாரும்... மருமகன் முன்னுக்கு வர வேண்டும் என்றுதான் நினைக்கிறவை. ஆனால் அதுக்கு உரிய தகுதி எரப்பனும், சரத்குமாரிட்டை இல்லையே.....
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.