Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு விடயத்தில் டக்ளஸ் விடாப்பிடி - ஜனாதிபதியுடனான கூட்டத்திலும் பிரதிபலிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு விடயத்தில் டக்ளஸ் விடாப்பிடி - ஜனாதிபதியுடனான கூட்டத்திலும் பிரதிபலிப்பு

கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் வடக்கு மாகாணததின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

spacer.png

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று(07.06.2021) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே, 50,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக குறைந்தது ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தடுப்பூசிகளாவது அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். 

அதேபோன்று, வவுனியா மாவட்டத்திற்கு குறைந்தது ஒரு இலட்சம் தடுப்பூசிகளையும், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு குறைந்தது தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளையாவது  விரைவாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, கிடைக்கின்ற தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பாதிப்புக்களின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்கனவே அமைச்சரவையில் உறுதியளிக்கப்பட்டது போன்று யாழ்ப்பாணத்திற்கான இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தினை புரிந்து கொள்வதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, விரைவில் அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/107155

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

விடாப்பிடி

சிரிப்புத்தான் வருது 😁

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சிரிப்புத்தான் வருது 😁

உங்களுக்கு இப்போது  சிரிப்பு வருகின்றது
அடுத்த தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஒரு பா. உ. கூட வரப்போகின்றது
அப்போது அவருக்கும் சிரிப்பு வரும்

சில விடயங்களில் ஒருவர் எதிரியாக இருந்தாலும் அவர் செய்யும் செயலைப் பாராட்டப் பழகிக் கொள்ளவேண்டும்.
இல்லையேல் கடந்து சென்றுவிட வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, வாத்தியார் said:

உங்களுக்கு இப்போது  சிரிப்பு வருகின்றது
அடுத்த தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஒரு பா. உ. கூட வரப்போகின்றது
அப்போது அவருக்கும் சிரிப்பு வரும்

சில விடயங்களில் ஒருவர் எதிரியாக இருந்தாலும் அவர் செய்யும் செயலைப் பாராட்டப் பழகிக் கொள்ளவேண்டும்.
இல்லையேல் கடந்து சென்றுவிட வேண்டும்

நீங்கள் பாராட்டினீர்களா? இல்லையே ஏன் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கின்றீர்கள்?

உரிமை இருக்கும் போது எதற்கு விடாப்பிடி என்பதை விளங்கிக்கொண்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் பாராட்டினீர்களா? இல்லையே ஏன் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கின்றீர்கள்?

உரிமை இருக்கும் போது எதற்கு விடாப்பிடி என்பதை விளங்கிக்கொண்டீர்களா?

நான் பாராட்டவும் இல்லை ..... சிரிக்கவும் இல்லை.

பழக்க தோஷம் நாய் வேஷம் போட்டால் குரைக்கத்தானே வேண்டும்.

இன்னொரு இனத்தினருக்கு அடிமையாகத்தான் வாழ்வோம்..... என்ற நிலையில் வாழும் மனிதர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, வாத்தியார் said:

நான் பாராட்டவும் இல்லை ..... சிரிக்கவும் இல்லை.

பழக்க தோஷம் நாய் வேஷம் போட்டால் குரைக்கத்தானே வேண்டும்.

இன்னொரு இனத்தினருக்கு அடிமையாகத்தான் வாழ்வோம்..... என்ற நிலையில் வாழும் மனிதர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது.

ஆளும் கட்சியில் இருந்து கொண்டு ஆலவட்டங்கள் பிடித்தும் தனக்கு வேண்டியதை பெறுவதற்கு விடாப்பிடி அரசியல் தேவை என்றால் பேசாமல் மாடு மேய்க்க போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

ஆளும் கட்சியில் இருந்து கொண்டு ஆலவட்டங்கள் பிடித்தும் தனக்கு வேண்டியதை பெறுவதற்கு விடாப்பிடி அரசியல் தேவை என்றால் பேசாமல் மாடு மேய்க்க போகலாம்.

கவிழ்ந்து விடும் நிலையில் இருந்த ஐ தே க விற்கு முட்டுக்கு கொடுத்து ஒன்றுமே பெற்றுக் கொடுக்காமல்   ... மந்தைகளாக மக்களை வழி நடத்தும் த. தே.  கூ.  விட....

அவசர காலத்தில் விடாப்பிடியாக நிற்பது மேல்
அவர் உள்ளே இருந்தால் என்ன வெளியே

அவர் தனது அரசியலைத்தான் செய்கின்றார்
இருந்தாலும் நாலு அப்பாவிகளின் உயிர் அதனால் காப்பாற்றப்படுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

 

 

எனது நாட்டிலும் வேலை செய்பவர்களின் யூனியன்கள்  வேலை செய்பவர்களின் நலன்கள் சார்ந்த  வேண்டுகோள்களில் விடாப்பிடியாக  நின்று நிறைவேற்றி கொடுக்கின்றன.

 

 

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, வாத்தியார் said:

கவிழ்ந்து விடும் நிலையில் இருந்த ஐ தே க விற்கு முட்டுக்கு கொடுத்து ஒன்றுமே பெற்றுக் கொடுக்காமல்   ... மந்தைகளாக மக்களை வழி நடத்தும் த. தே.  கூ.  விட....

அவசர காலத்தில் விடாப்பிடியாக நிற்பது மேல்
அவர் உள்ளே இருந்தால் என்ன வெளியே

அவர் தனது அரசியலைத்தான் செய்கின்றார்
இருந்தாலும் நாலு அப்பாவிகளின் உயிர் அதனால் காப்பாற்றப்படுகின்றது. 

இந்த தகவலை கூத்தமைப்பு ஊழியர்களுக்கு சொல்லுங்கள்.
நான் அவர்களுக்கு சார்பானவன் இல்லை.

உங்கள் டக்ளஸ் ஐயா ஈழத்தமிழர்களுக்கு  செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் இருக்கு. அதில் இதுவும் ஒன்று. அதற்கு விடாப்பிடி தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

உங்களுக்கு இப்போது  சிரிப்பு வருகின்றது
அடுத்த தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஒரு பா. உ. கூட வரப்போகின்றது
அப்போது அவருக்கும் சிரிப்பு வரும்

சில விடயங்களில் ஒருவர் எதிரியாக இருந்தாலும் அவர் செய்யும் செயலைப் பாராட்டப் பழகிக் கொள்ளவேண்டும்.
இல்லையேல் கடந்து சென்றுவிட வேண்டும்

அரருமையாக சொன்னீர்கள்.. தக்கன பிழைக்கும் என்பார்கள்... பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னம் வாழ்ந்த பல உயிரினங்கள் இன்று பூமியில் இருந்த சுவடே இல்லாமல் அழிந்துவிட்டன.. மனிதன் உட்பட தட்ப வெட்ப நில அமைவுகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொண்ட உயிரினங்கள் இன்றும் பூமியில் தொடர்கின்றன.. ஈழத்தமிழன் என்ற ஒரு இனமே இருந்த தடமே இல்லாமல் போகும் வகையில் நாமும் நம் சொந்தங்களும் புலம்பெயர்ந்து எம் சந்ததியை இந்த நாடுகளின் குடிமக்களாக மாற்றி ஒருபக்கம் தமிழினத்தை அழிப்பதுடன் எந்த ஒரு சக்திகளின் ஆதரவும் இல்லாத பலம் இல்லாத நிலையில் ஊரில் இருப்பவர்களையும் மல்லுக்கு நிக்கவச்சு அழிக்க நினைப்பதா நல்லது அல்லது அவர்களாவது தம்மை அந்த நிலத்தில் கிடைக்கும் வழிகளை எல்லாம் பற்றிப்பிடித்து தம்மை தக்கவைத்து எம் இனத்தை பெருக்கி அவர்களிடம் அடுத்த கட்டத்தை ஒப்படைத்து விட்டு செல்வதா நல்லது என்பதை நீண்ட கால நோக்கில் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து நாம் சிந்தித்து பார்க்கவேண்டும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, வாத்தியார் said:

கவிழ்ந்து விடும் நிலையில் இருந்த ஐ தே க விற்கு முட்டுக்கு கொடுத்து ஒன்றுமே பெற்றுக் கொடுக்காமல்   ... மந்தைகளாக மக்களை வழி நடத்தும் த. தே.  கூ.  விட....

அவசர காலத்தில் விடாப்பிடியாக நிற்பது மேல்
அவர் உள்ளே இருந்தால் என்ன வெளியே

அவர் தனது அரசியலைத்தான் செய்கின்றார்
இருந்தாலும் நாலு அப்பாவிகளின் உயிர் அதனால் காப்பாற்றப்படுகின்றது. 

குசா டக்லஸை ஒன்றும் கூறவில்லையே. வீரகேசரியின் "விடாப் பிடி"யையெல்லோ சீண்டியிருக்கிறார். இதில் டக்கியர் எங்கே வந்தார் ? 

காமாளைக் கண்ணணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதாக உங்கள் கருத்து இருப்பது ஏற்புடையதாகாது. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அரருமையாக சொன்னீர்கள்.. தக்கன பிழைக்கும் என்பார்கள்... பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னம் வாழ்ந்த பல உயிரினங்கள் இன்று பூமியில் இருந்த சுவடே இல்லாமல் அழிந்துவிட்டன.. மனிதன் உட்பட தட்ப வெட்ப நில அமைவுகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொண்ட உயிரினங்கள் இன்றும் பூமியில் தொடர்கின்றன.. ஈழத்தமிழன் என்ற ஒரு இனமே இருந்த தடமே இல்லாமல் போகும் வகையில் நாமும் நம் சொந்தங்களும் புலம்பெயர்ந்து எம் சந்ததியை இந்த நாடுகளின் குடிமக்களாக மாற்றி ஒருபக்கம் தமிழினத்தை அழிப்பதுடன் எந்த ஒரு சக்திகளின் ஆதரவும் இல்லாத பலம் இல்லாத நிலையில் ஊரில் இருப்பவர்களையும் மல்லுக்கு நிக்கவச்சு அழிக்க நினைப்பதா நல்லது அல்லது அவர்களாவது தம்மை அந்த நிலத்தில் கிடைக்கும் வழிகளை எல்லாம் பற்றிப்பிடித்து தம்மை தக்கவைத்து எம் இனத்தை பெருக்கி அவர்களிடம் அடுத்த கட்டத்தை ஒப்படைத்து விட்டு செல்வதா நல்லது என்பதை நீண்ட கால நோக்கில் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து நாம் சிந்தித்து பார்க்கவேண்டும்..

யாரப்பா அந்த ஊரில் உள்ளவர்களை மல்லுக்கட்ட வைச்சு அழிக்க நினைப்பது ? 

கொஞ்சம் தெளிவாய்ச் சொன்னால் புண்ணியமாப் போம் ஓணாண்டியாரே. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அரருமையாக சொன்னீர்கள்.. தக்கன பிழைக்கும் என்பார்கள்... பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னம் வாழ்ந்த பல உயிரினங்கள் இன்று பூமியில் இருந்த சுவடே இல்லாமல் அழிந்துவிட்டன.. மனிதன் உட்பட தட்ப வெட்ப நில அமைவுகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொண்ட உயிரினங்கள் இன்றும் பூமியில் தொடர்கின்றன.. ஈழத்தமிழன் என்ற ஒரு இனமே இருந்த தடமே இல்லாமல் போகும் வகையில் நாமும் நம் சொந்தங்களும் புலம்பெயர்ந்து எம் சந்ததியை இந்த நாடுகளின் குடிமக்களாக மாற்றி ஒருபக்கம் தமிழினத்தை அழிப்பதுடன் எந்த ஒரு சக்திகளின் ஆதரவும் இல்லாத பலம் இல்லாத நிலையில் ஊரில் இருப்பவர்களையும் மல்லுக்கு நிக்கவச்சு அழிக்க நினைப்பதா நல்லது அல்லது அவர்களாவது தம்மை அந்த நிலத்தில் கிடைக்கும் வழிகளை எல்லாம் பற்றிப்பிடித்து தம்மை தக்கவைத்து எம் இனத்தை பெருக்கி அவர்களிடம் அடுத்த கட்டத்தை ஒப்படைத்து விட்டு செல்வதா நல்லது என்பதை நீண்ட கால நோக்கில் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து நாம் சிந்தித்து பார்க்கவேண்டும்..

தக்கன பிழைக்கும்.

2009க்கு முன் சிங்களம் சொன்னதை செய்திருந்தால் நானோ நீங்களோ  இங்கே விவாதிக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.

நான் சரோஜாதேவி நீங்கள் சிம்ரன் என ஒரு வகுப்புவாதம் களைகட்டியிருக்கும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

யாரப்பா அந்த ஊரில் உள்ளவர்களை மல்லுக்கட்ட வைச்சு அழிக்க நினைப்பது ? 

கொஞ்சம் தெளிவாய்ச் சொன்னால் புண்ணியமாப் போம் ஓணாண்டியாரே. 

 

மெயினா தங்கட ஓட்டு வங்கிக்கு உசுப்பேத்துர தமிழ்க்கட்சிகள் பத்திரிகை எழுத்தாளர்கள் வெளிநாட்டில் 2009 க்கு முந்தின நினைப்பில் தோய்ந்திருக்கும் என்ன மாதிரி ஆக்கள்... அதுக்குரிய காலம் இதுவல்ல.. அதுக்கொரு காலம் இருந்தது எம் துரதிஸ்டம் அது கனவு மாதிரி முடிந்து போய்விட்டது.. இது அடைகாக்கும் காலம்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறவன் சரியாய் இருந்தால் அழகு கலைஞன்  சரியாய் அழகு செய்வான். எங்கே போய்விட்டார்கள் தமிழரின் பேசு சக்திகள்? தேர்தல் இல்லாமல்  மக்கள் நலன்சார்ந்து உழைக்கும் கட்சி, காயம் பட்ட தன்மந்தைக்கு கட்டுப்போடாமல், தேற்றாமல், திசை மாறிப்போனவர்களுக்கு வழிகாட்டாமல், அலைந்த    மந்தையை  ஓநாய்கள் இழுத்துகொண்டுபோனபின் ஒப்பாரி வைக்க வருவினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் விடாப்பிடியாக கேட்டிருந்தால் தடுப்பூசிகளை உடனே அனுப்ப அறிவுறுத்தல்களை கோத்தா கொடுத்திருக்கவேண்டுமே. அவர் கோரிக்கையை புரிந்துகொள்கின்றேன் என்றல்லவா சொல்லியிருக்கின்றார்! 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தமிழரின் ஜனாதிபதியும் தானே பிறகு ஏன் இவர் விடாபிடியா இருக்கவேணும்...

ஜனாதிபதி தமிழரின் ஜனாதிபதியும் தானே பிறகு ஏன் இவர் விடாபிடியா இருக்கவேணும்...
வடக்குமாகாணசபை ஒன்று இருக்கு என ஈழத்து எம்.ஜி.ஆர் ஜனாதிபதிக்கு நினைவு படுத்துகிறார் போல ...டக்கிளஸின் அரசியல் சாணாக்கியம் தொடங்கி விட்டது ...பிரிச்சு மேயப்போறான் சிங்கன்.....இருந்து பாருங்கோ அடுத்த தேர்தலில் சிங்கன் வடமாகாணத்தில் ஆறு எம்.பி எடுத்து சிங்க நடை போட்டு சிகரத்தை தொட்டு ....அவருடைய கட்சி வடமாகாணசபையை கைப்பற்றி இந்தியாவுக்கு சவால் விடுவார் ,....இதை நீங்கள் பார்க்கத்தான் போறீயள்.....

சில சமயம் புலம்பெயர் பிரதேசத்திலிருந்து போனவர்கள் அவருடைய மாகாணசபையில் பெயரை பதிந்து சோசல் எடுக்க வேண்டிய நிலை வந்தாலும் வரும் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.