Jump to content

கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
 
கொடுங்கையூரில் தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
 
கொடுங்கையூரில் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடாததால் மனமுடைந்த தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பதிவு: ஜூன் 09,  2021 06:52 AM
பெரம்பூர்,

கொடுங்கையூர் அடுத்த எருக்கஞ்சேரி மேற்கு இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா (வயது 43). இவர் தி.மு.க. கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி நதியா (35). இந்த தம்பதிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு ஏஞ்சல் பாரதி, ஜெனிபர் பாரதி ஆகிய 2 மகளும், தமிழ் நிரன் என்ற 1 வயது மகனும் உள்ளனர்.
 



இந்த நிலையில் நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கணவர் பிரசன்னாவிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

அதற்கு தமிழன் பிரசன்னா தான் கட்சி பொறுப்பில் இருப்பதால், ஊரடங்கு நேரத்தில் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.

தூக்கிட்டு தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நதியா நேற்று காலை கணவர் குளியல் அறைக்கு சென்ற நிலையில், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது புடவையால் தூக்கிட்டுள்ளார்.

இந்த நிலையில் குளியல் அறையில் இருந்து வெளியே வந்ததும், நதியா தூக்கில் தொங்கி துடிதுடிப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரசன்னா அவரை மீட்டு, காரில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அப்போது அங்கு நதியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

https://www.dailythanthi.com/News/Districts/2021/06/09065253/DMK-in-Kodungaiyur-Administrators-wife-commits-suicide.vpf

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:
இந்த நிலையில் நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கணவர் பிரசன்னாவிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

மூன்று பிள்ளையின், தாய்... 
ஆடம்பரமாக பிறந்தநாள் கொண்டாட  வேண்டும் என்று  கேட்டிருப்பாரா?
அந்த ஒரு காரணத்துக்காக... தூக்கில் தொங்கியிருப்பாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

அவர் குறித்த வில்லங்கமான வீடியோ ஒன்று வந்தது. அதுவும் காரணமாக இருக்கலாம். 

திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், அவருக்கு பிரச்சனை இல்லை.

 

*** மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அவர் குறித்த வில்லங்கமான வீடியோ ஒன்று வந்தது. அதுவும் காரணமாக இருக்கலாம். 

திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், அவருக்கு பிரச்சனை இல்லை.

மர்ம கொலைகள்  இனி சர்வ சாதாரணமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திருமண தினத்தில் வாழ்த்தினேனே: தமிழன் பிரச்சன்னா மனைவி மறைவிற்கு சீமான் இரங்கல்
 
திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா என்பவர் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழன் பிரசன்னாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அரசியல்வாதிகள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்
 
தமிழன் பிரசன்னாவிற்கு திருமணத்தை நடத்தி வைத்த சீமான் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது மனைவி நதியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியின் திருமணநிகழ்வில் பங்கெடுத்து, இருவரையும் வாழ்த்திய நினைவுகளை எண்ணும்போது பெரும்மனவலியை கூட்டுகிறது.
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழன் பிரசன்னா பல நேரங்களில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்பதும் இருப்பினும் அவரது குடும்பத்திற்கு ஒரு சோகம் நிகழ்ந்தபோது சீமான் கருத்து வேறுபாடுகளை மறந்து தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

திருமண தினத்தில் வாழ்த்தினேனே: தமிழன் பிரச்சன்னா மனைவி மறைவிற்கு சீமான் இரங்கல்

என்னடா வெட்டி ஒட்டாத சொக்கத்தங்கம் வெட்டி ஒட்டுதே என பார்த்தேன். அங்கேயும் சீமான் தான். எல்லாம் நல்லதுக்கே...👍🏽
தொடருங்கள் செல்ல கோஷான் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

என்னடா வெட்டி ஒட்டாத சொக்கத்தங்கம் வெட்டி ஒட்டுதே என பார்த்தேன். அங்கேயும் சீமான் தான். எல்லாம் நல்லதுக்கே...👍🏽
தொடருங்கள் செல்ல கோஷான் 🤣

ஒரு செய்தியை பகிர்ந்தேன் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஒரு செய்தியை பகிர்ந்தேன் 😎

நீங்கள் ஒரு செய்தியை இணைத்தால் பகிர்வு. இதையே மற்றவன் செய்தால் வெட்டி ஒட்டுபவர்கள். வெட்டி ஒட்டி பச்சை புள்ளி வாங்குபவர்கள்.:)
அது சரி எத்தனையோ செய்திகள் இருக்க இதை மட்டும் பகிர்வதன் மர்மம் என்னவோ? எல்லாம் வர்ம/வக்கிர குணம் தானே? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

என்னடா வெட்டி ஒட்டாத சொக்கத்தங்கம் வெட்டி ஒட்டுதே என பார்த்தேன். அங்கேயும் சீமான் தான். எல்லாம் நல்லதுக்கே...👍🏽
தொடருங்கள் செல்ல கோஷான் 🤣

உடான்சு சாமியார், சொக்கத்தங்கம் நல்லா கதை விட்டுக்கொண்டு திரியுறார்....

ராவே, விழுந்து, விழுந்து சிரிக்கும்.... நம்மளையும் ஒருத்தர் சீரியஸ் ஆ நம்புறாரே என்று. 🤣

பகிடி எண்டு நினைச்சேன்...ஆள் வலு சீரியஸ் ஆ விடுறார். வரேக்கையே மல்ட்டி பரலோடை வெடி போட்டுகொண்டு வந்தவர்....

இப்ப சும்மா, கிபிர் அடிக்கிறார். இன்னும் இரண்டு, மூண்டு மணித்தியாலம் கிபிர் நிண்டு சுழலும்.

நம்ம மருதருக்கு... சிரிச்சே மண்டை வெடிச்சிருக்கும்... 😁

சரி படுக்கப்போறன். வாறன் தல. நாளைக்கு சந்திப்போம். 🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஒரு செய்தியை இணைத்தால் பகிர்வு. இதையே மற்றவன் செய்தால் வெட்டி ஒட்டுபவர்கள். வெட்டி ஒட்டி பச்சை புள்ளி வாங்குபவர்கள்.:)
அது சரி எத்தனையோ செய்திகள் இருக்க இதை மட்டும் பகிர்வதன் மர்மம் என்னவோ? எல்லாம் வர்ம/வக்கிர குணம் தானே? 🤣

அண்ணை பின்னால ஒருத்தர் வந்து எங்கள கொழுவிடப்பாக்கிறாராம்🤣. ஐயோ … ஐயா 🤣.

இதை நான் இணைச்ச காரணம் - இங்கே கருத்தாளகள் சிலர் இது கொலையோ என்ற கோணத்தில் சிந்திப்பதாக பட்டது.

அவர்களுக்கு சீமான் இதில் இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்கவே. வேறு நோக்கம் இல்லை.

6 minutes ago, Nathamuni said:

உடான்சு சாமியார், சொக்கத்தங்கம் நல்லா கதை விட்டுக்கொண்டு திரியுறார்....

ராவே, விழுந்து, விழுந்து சிரிக்கும்.... நம்மளையும் ஒருத்தர் சீரியஸ் ஆ நம்புறாரே என்று. 🤣

பகிடி எண்டு நினைச்சேன்...ஆள் வலு சீரியஸ் ஆ விடுறார். வரேக்கையே மல்ட்டி பரலோடை வெடி போட்டுகொண்டு வந்தவர்....

இப்ப சும்மா, கிபிர் அடிக்கிறார். இன்னும் இரண்டு, மூண்டு மணித்தியாலம் கிபிர் நிண்டு சுழலும்.

நம்ம மருதருக்கு... சிரிச்சே மண்டை வெடிச்சிருக்கும்... 😁

சரி படுக்கப்போறன். வாறன் தல. நாளைக்கு சந்திப்போம். 🤗

சுப ராத்திரியக் வேவா நாதம் மஹாத்தயா🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சுப ராத்திரியக் வேவா நாதம் மஹாத்தயா🙏🏾.

சீமான் ஒரு நிலைப்பாடு எடுக்கேலயே தலை. மறைவுக்கு இரங்கல் தானே தெரிவிச்சு இருக்கிறார்.

எல்லாம் ராவின் மாஸ்டர் பிளான் தான் எண்டு நினைக்கிறன்.... நீங்களும் அப்படி தான் நினைப்பியள், என்ன?

இதுக்கு மேல.... முடியாது. படுக்கத்தான் போறன்.... 

ஆ.... சுப ராத்திரி... தெலுங்கில எப்படி சொல்லுறது எண்டு பார்த்து வையுங்கோ.... நாளை சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

சீமான் ஒரு நிலைப்பாடு எடுக்கேலயே தலை. மறைவுக்கு இரங்கல் தானே தெரிவிச்சு இருக்கிறார்.

எல்லாம் ராவின் மாஸ்டர் பிளான் தான் எண்டு நினைக்கிறன்.... நீங்களும் அப்படி தான் நினைப்பியள், என்ன?

இதுக்கு மேல.... முடியாது. படுக்கத்தான் போறன்.... 

ஆ.... சுப ராத்திரி... தெலுங்கில எப்படி சொல்லுறது எண்டு பார்த்து வையுங்கோ.... நாளை சந்திப்போம்.

எசேம வேவா நாதம் மஹாத்தயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்ணை பின்னால ஒருத்தர் வந்து எங்கள கொழுவிடப்பாக்கிறாராம்🤣. ஐயோ … ஐயா 🤣.

இதை நான் இணைச்ச காரணம் - இங்கே கருத்தாளகள் சிலர் இது கொலையோ என்ற கோணத்தில் சிந்திப்பதாக பட்டது.

அவர்களுக்கு சீமான் இதில் இப்படி ஒரு நிலையை எடுத்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்கவே. வேறு நோக்கம் இல்லை.

சுப ராத்திரியக் வேவா நாதம் மஹாத்தயா🙏🏾.

சில முன்னைய விடயங்களை பார்க்கும்போது இது கொலை மாதிரியே எனக்கு 
தெரிகிறது.

இவரின் நிர்வாண வீடியோ ஒன்றும்  சுற்றியது 

உங்கள் உள்ள மனதில் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

கொடுங்கையூரில் பிறந்த நாளை " ஆடம்பரமாக " கொண்டாடாததால் மனமுடைந்த தி.மு.க. நிர்வாகியின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

சுற்றி வளைக்காமல் நேரடியாக விடயத்திற்கு வருவம்.

தீப்பொறி ஆறுமுகம் 

வெற்றிக்கொண்டான்

ராதாரவி

எஸ்.எஸ் சந்திரன் 

ரி. ராஜெந்தர் 

இன்னும் பல லிஸ்ற்.. 

உந்த மேடை பேச்சாளர்களை , நவீன யுகத்தில் ரீவியில் நாடி நரம்பு புடைக்க கத்துபவர்கள் , தூசனம் பொழிபவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை ,  "வருமானத்தை"   தீம்கா வழங்குவதில்லை .

மேடை/விவாத "பேட்டா , அலவன்ஸ் - சோடு சரி ; தம்பி தமிழன் பிரசன்னா இனிமேலாவது வேறு கட்சிக்கு பிழைக்கும் வழியை பார்க்க வேணும் . 👍 அல்லது அதே கட்சியில் தலைமை நிலைய பொறுப்பாளர் கே.என் நேருவிடம் கதைத்து வேறு பொறுப்புகளுக்கு மாறுவது தொழில்முறை அரசியலுக்கு நல்லது. கையில் நாலு காசு பார்க்க மிடியும்..👌

Link to comment
Share on other sites

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சுற்றி வளைக்காமல் நேரடியாக விடயத்திற்கு வருவம்.

தீப்பொறி ஆறுமுகம் 

வெற்றிக்கொண்டான்

ராதாரவி

எஸ்.எஸ் சந்திரன் 

ரி. ராஜெந்தர் 

இன்னும் பல லிஸ்ற்.. 

உந்த மேடை பேச்சாளர்களை , நவீன யுகத்தில் ரீவியில் நாடி நரம்பு புடைக்க கத்துபவர்கள் , தூசனம் பொழிபவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை ,  "வருமானத்தை"   தீம்கா வழங்குவதில்லை .

மேடை/விவாத "பேட்டா , அலவன்ஸ் - சோடு சரி ; தம்பி தமிழன் பிரசன்னா இனிமேலாவது வேறு கட்சிக்கு பிழைக்கும் வழியை பார்க்க வேணும் . 👍 அல்லது அதே கட்சியில் தலைமை நிலைய பொறுப்பாளர் கே.என் நேருவிடம் கதைத்து வேறு பொறுப்புகளுக்கு மாறுவது தொழில்முறை அரசியலுக்கு நல்லது. கையில் நாலு காசு பார்க்க மிடியும்..👌

பதவி வாங்கினால் தானே இன்னும் பல தில்லாலங்கடி வேலைகள் செய்ய முடியும். 

11 hours ago, குமாரசாமி said:

மர்ம கொலைகள்  இனி சர்வ சாதாரணமாக இருக்கும்.

அதை கொண்டாட பல கூட்டம் இருக்கு. (இங்கும் ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ தூசண பிரசன்னாவின் மனைவியா ...?
ஒன்று  RAW இன் சதியாகதான் இருக்கும், இல்லாட்டில் திராவிட ஸ்டாக் சீமானை மாட்டிவிட செய்திருக்கும் உள்ளடி சித்துவேலையாக இருக்கலாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

சில முன்னைய விடயங்களை பார்க்கும்போது இது கொலை மாதிரியே எனக்கு 
தெரிகிறது.

இவரின் நிர்வாண வீடியோ ஒன்றும்  சுற்றியது 

உங்கள் உள்ள மனதில் உண்மையில் என்ன நினைக்கிறீர்கள்? 

தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் பொது வெளியில் சீமானை தூசணத்தால் திட்டினார். ஆகவே நல்ல அபிப்பிராயம் இல்லை.

உண்மையில் இது கொலையா தற்கொலையா என என் மனதில் தெளிவில்லை.

சில மனிதர்கள் கொலை செய்துவிட்டு அதை தற்கொலையாக சோடிக்க வல்லவர்கள்.

சில மனிதர்கள் குறிப்பாக ஏறகனவே மன அழுத்தம் உள்ளவர்கள், ஒரு சின்ன விசயத்தால் trigger ஆகி தற்கொலை செய்வதும் உண்டு.

இப்போதைக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

ஆனால் நிச்சயம் துருவ வேண்டிய விசயம் இது. திமுககாரன் - பொலீஸ் துருவுவது சந்தேகம்தான். 

 

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் பொது வெளியில் சீமானை தூசணத்தால் திட்டினார். ஆகவே நல்ல அபிப்பிராயம் இல்லை.

உண்மையில் இது கொலையா தற்கொலையா என என் மனதில் தெளிவில்லை.

சில மனிதர்கள் கொலை செய்துவிட்டு அதை தற்கொலையாக சோடிக்க வல்லவர்கள்.

சில மனிதர்கள் குறிப்பாக ஏறகனவே மன அழுத்தம் உள்ளவர்கள், ஒரு சின்ன விசயத்தால் trigger ஆகி தற்கொலை செய்வதும் உண்டு.

இப்போதைக்கு எதுவும் சொல்ல தெரியவில்லை.

ஆனால் நிச்சயம் துருவ வேண்டிய விசயம் இது. திமுககாரன் - பொலீஸ் துருவுவது சந்தேகம்தான். 

 

தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது . 

என்ன பாஸ் இவரை தெரியவில்லை என்று கூறி விட்டீர்கள். இவர் தானே எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாத்திலும் திமுக. (இது எல்லாம் தெரியாது ஓ உங்களுக்கு றோ வை தான் தெரியும்) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, appan said:

தமிழன் பிரசன்னா பற்றி எனக்கு அதிகம் தெரியாது . 

என்ன பாஸ் இவரை தெரியவில்லை என்று கூறி விட்டீர்கள். இவர் தானே எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாத்திலும் திமுக. (இது எல்லாம் தெரியாது ஓ உங்களுக்கு றோ வை தான் தெரியும்) 

மன்னிக்கவேண்டும் நான் தமிழ்நாட்டு டிவி விவாதங்களை அதிகம் பார்ப்பதில்லை. சீமான் போல ஜனரஞ்சகமாக பேச கூடியவர்கள் பேச்சை, பேச்சாற்றலுக்கா விரும்பி கேட்பேன்.

திமுகவில் ஆ ராசா தரவுகள் வைத்து பேசுவார் அது பிடிக்கும்.

முன்பு ஒரு பெண்ணாக ஜெயின் கம்பீர பேச்சு பிடிக்கும்.

கருணாநிதி - எனோ தெரியவில்லை அவர் பேச்சும் தமிழும் என்னை ஒரு போதும் கவர்ந்ததில்லை.

இவர் எதோ வக்கீல் என்றார்கள். ஆனால் மேலே புரட்சி சொன்ன மாரி நான் பார்த்த அளவில் இவர் ஒரு நாலம்தர பேச்சாளர். அதற்கு மேல் இவரில் மினகெடவில்லை.

பிகு

நான் ஒரு திரியில் சீமான் றோ ஏஜெண்ட் என்ற எனது சந்தேகத்தை வெளிபடுத்தி விட்டு அந்த திரியோடு விட்டு விட்டேன்.

ஆனால் அதை சம்பந்தமில்லாத திரிகளில் காவி வந்து நீங்கள், அக்னி போன்றவர்கள் அதை வாசகர் மனதில் ஆழமாக பதிய வைக்க, மீள மீள நினைவு படுத்த எடுக்கும் முயற்சிக்கு நான் என்றும் நன்றியுடையவானக இருப்பேன்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

மன்னிக்கவேண்டும் நான் தமிழ்நாட்டு டிவி விவாதங்களை அதிகம் பார்ப்பதில்லை. சீமான் போல ஜனரஞ்சகமாக பேச கூடியவர்கள் பேச்சை, பேச்சாற்றலுக்கா விரும்பி கேட்பேன்.

திமுகவில் ஆ ராசா தரவுகள் வைத்து பேசுவார் அது பிடிக்கும்.

முன்பு ஒரு பெண்ணாக ஜெயின் கம்பீர பேச்சு பிடிக்கும்.

கருணாநிதி - எனோ தெரியவில்லை அவர் பேச்சும் தமிழும் என்னை ஒரு போதும் கவர்ந்ததில்லை.

இவர் எதோ வக்கீல் என்றார்கள். ஆனால் மேலே புரட்சி சொன்ன மாரி நான் பார்த்த அளவில் இவர் ஒரு நாலம்தர பேச்சாளர். அதற்கு மேல் இவரில் மினகெடவில்லை.

பிகு

நான் ஒரு திரியில் சீமான் றோ ஏஜெண்ட் என்ற எனது சந்தேகத்தை வெளிபடுத்தி விட்டு அந்த திரியோடு விட்டு விட்டேன்.

ஆனால் அதை சம்பந்தமில்லாத திரிகளில் காவி வந்து நீங்கள், அக்னி போன்றவர்கள் அதை வாசகர் மனதில் ஆழமாக பதிய வைக்க, மீள மீள நினைவு படுத்த எடுக்கும் முயற்சிக்கு நான் என்றும் நன்றியுடையவானக இருப்பேன்.

 

நாங்கள் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று கருத்தை பார்ப்பதில்லை. அவர்கள் கூறும் கருத்தை பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, appan said:

நாங்கள் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று கருத்தை பார்ப்பதில்லை. அவர்கள் கூறும் கருத்தை பார்க்கிறோம்.

நல்லது அப்பன். இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.