Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகள் தினம் 2007

Featured Replies

கரும்புலிகள் தினம் ஜூலை 5 2007

கரும்புலி கப்டன் மில்லர் 5.7.87 அன்று நெல்லியடி மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் தளத்தினுள் வீரகாவியமானார்.அன்றிலிருந்த? கரும்புலிகள் என்னும் உயிராயுதங்கள் எம்மண்னில் விளையத்தொடங்கின கிட்டத்தட்ட 300 வரையிலான கரும்புலிகளும் எண்ணிக்கை தெரியாத முகம் காட்டாத கரும்புலிகளும் வீரகாவியமாகிவிட்டனர் தமிழீழ அன்னைகாக வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களுக்கும் எம் வீரவணக்கம்

photo1.jpg

முதல் கரும்புலி கப்டன் மில்லர்[/b]

photo2.jpg

முதல் கடற்கரும்புலிகள்

photo5.jpg

photo3.jpg

முதல் பெண் கரும்புலி

photo34.jpg

இந்தியா சிவகாசி மண்னை சேர்ந்த கரும்புலி மாவீரன்

photo25.jpg

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

photo16.jpg

ஊரில் ஒருத்திகாய்

சுற்றியலையும்

சுற்றம் மத்தியில்...

குண்டுகள் வெடிக்க

ஊர் விட்டுப் பறக்க

அகதி அந்தஸ்தில்

சுகம் காண

அலையும் உறவுகள் மத்தியில்..

உயிரை ஊழியமாக்கி

ஊழியத் தீ மூட்டி

ஊர் மண்ணை

உண்மையாய் காதலித்த

ஊமை உறவதை

களவாட வந்த

கயவர்களின்..

அந்நியச் சுவடழிக்க

தம்முடல் அழித்த

எம்முயிர் மூச்சுக்களே

அன்பான உறவுகளே

நீவிர் வாழ்வீர்

சுதந்திர தேசத்தின்

பூங்காற்றில்...!

உமது இழப்பில்

துயரில்லை

வீரம்....எழுகிறது..

குருதி

அழைக்கிறது

உறுதி கொள்ள

உங்கள் இலட்சியம் தாங்க..!

கரும்புலிகள் படங்கள்..!

http://aruchuna.net/categories.php?cat_id=...64e41465b1a584e

Edited by nedukkalapoovan

கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது. கரும்புலித்தாக்குதலை நாடத்தும் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிரமிப்ப+ட்டும் தியாகங்கள், உலக சமுதாயத்தை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. மனிதன் பிறந்ததே வாழ்வதற்;காகத்தான். அப்படியானால் இறப்பதற்;காகவே களம் புகும் இக் கரும்புலிகள் யார்..? இவர்களது உருவாக்கத்தின் வரலாற்றுப் பின்னணி என்;ன. ஈடு இணையற்ற இவர்களது ஈகமும் மன ஓர்மமும் சமுதாயத்தில் எற்படுத்தும் தாக்கம் எத்தகையது, என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகளானது மானிட ஆய்வாளர்கள் மத்தியில் ஆராச்சிக்குரியனவாகிவிட்டன.

இன்று உலகெங்குமுள்ள அடக்குமுறையாளர்கள் தங்களுக்குள் கைகோர்த்தபடி, சுதந்திரச் சுவாசிக்க விழையும் மக்களை மிருகத்தனமாக அடக்கி ஒடுக்க முனைகின்றனர். இவர்களிடம் ஆள், ஆயுத பலம் உண்டு. ஆட்சி அதிகாரம் உண்டு.தொழில் நுட்பவலுவுண்டு. இவற்றை தேவைப்படும் இடங்;களுக்கு, தேவைப்படும் நேரங்களில் கொடுத்து மாறி, போராட்;ட சக்திகளை பலம் இழக்க செய்து, தமது அடக்கு முறைகளை வலுப்படுத்துகின்றனர். இந்த நவீன அடக்கு முறையாளர்களுக்கு ஈடு கொடுக்க கூடிய அளவிற்கு ஆள் ஆயுத தொழில் நுட்பத்திறன்களைப் போராட்ட சக்திகள் கொண்டிருப்பதில்லை;. மிகக் குறைந்த அளவில் இவர்களுக்கு இருக்கும் போராட்ட திறன்களில் இருந்து மிக உச்ச பயன்களைப் பெற்றாலொழிய போரட்ட சக்கரத்தை ஒர் எல்லைக்கப்பால் நகர்த்த முடியாது.

எனவே ஒடுக்கு முறையாளர்களின் நாடியை ஒடுங்கச் செய்யும் அளவுக்கு, பல்வேறு திசைகளில் இருந்தும் வேவ்வேறு வடிவங்களில் போர்ச்சக்;கரம் நகர்த்தப்பட வேண்டும். இந்தப் போர் வடிவங்களுக்குள்ளே உயர்ந்ததும், உன்னதமானதுமான விடுததைப் புலிகளின் போர் வடிவம்தான் கரும்புலித் தாக்குதலாகும். தன்னை இழந்து அல்லது எதிரிகள் பலரை அல்லது எதிரியின் பலமிக்கதொரு இலக்கை அழிக்க கூடிய படையணி ஒன்றை அமைக்கும் யோசனையை, தமிழீழத் தேசியத் தலைவர்; திரு. வே. பிரபாகரன் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்தார். அந்த எண்ணக் கருவை செயற்படுத்தக் கூடிய ஆற்றலை விடுதலைப் புலி வீரர்கள் மத்தியில் சிறுகச் சிறுக எற்படுத்திக் கொண்டுவாந்தார். பின்னர் 'ஒப்றேசன் லிபறேசன்" என்ற பெயருடைய இரணுவ நடவடிக்கை மூலம் வடமராட்;சி பகுதியை ஆக்கிரமித்த சிங்களப் படைகள் வெற்றிக்களிப்பில் ஆழ்ந்தன.

இதன் மூலம் சிங்கள இராணுவத்திற்கு உளவியல் ரீதியான போரிடும் ஆற்றல் திடிரெனக் கூடியது. சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளை அழித்துவிடலாம் எனத் திமிருடன் சிந்திக்க தொடங்கியது. இதே சமயம், அந்த இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து, மற்றைய பகுதிகளுக்கு சென்றதுடன், அந்த திடிர் நடவடிக்கையால் மக்கள் குழம்பியும், போராட்ட வெற்றியில் நம்பிக்கை இழக்கக் கூடிய,சூழலும் தோன்றியது. இந்த சூழ்நிலைகளில்தான் ஒரு கரும்புலித்தாக்குதலை நடத்த தமிழ் தேசியத் தலைவர் திரு வே. பிரபாகரன் முடிவெடுத்து அதற்;கான ஆயத்தங்களைச் செய்தார்.

1987 ஆம் ஆணடு ய+லை மாதம் 5ம் திகதி, நெல்லியடிச் மத்திய மகாவித்தியாலத்தில் அதைக்கப்பட்டிருந்த சிங்கள இராணுவ முகாமிற்குள் முதலாவது கரும்புலி விரன் புகுந்து அம் முகாமை சின்னாபின்னமாக்கினான். சிங்கள அரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் கிலி கொள்ளச் செய்த அந்த முதலாவது கரும்புலித் தாக்குதல், கப்டன் மில்லர் செய்து முடித்தான். அன்றிலிருந்து இன்றுவரை பல கரும்புலித் தாக்குதல்கள் நிகழ்தப் பட்டுவிட்டன. அதில் பல கரும்புலிகள் விரச்சாவு அடைந்து உள்ளனர். ஒவ்வொரு விடுதலைப் புலி விரனும், விராங்கனையும் சாவைச் சந்திக்க தயாரான நிலையில்தான் இருக்கிறார்கள்;. அனால் தங்களுடைய சாவு எப்போது வரும் என்பது அவர்களுக்கு தெரியாது. போர்களத்திற்கு செல்லும் போதுகூடத் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையுடன்தான் ஒரு விடுதலைப் புலி விரன் செல்கிறான். சில வேளை அவன் அங்கே சாவை சந்திக்கலாம் அல்லது திரும்பி வரலாம்.

ஆனால் கரும்புலிகள் நிலை வேறுபட்டது. களம் புகுவதற்க்கு பல நாட்கள் முன்னமே தங்களுடைய சாவை தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அடுத்த நிமிடத்தில் சாகப் பொகிறேன் என்ற உண்மையை ப+ரணமாக தெரிந்து கொண்டுதான் கரும்புலிகள் வெடிமருந்தை தங்களுடன் கொண்டு செல்கிறார்கள். இராணுவ முகாங்களில் இருக்கும் பலநூறு எதிரிகளின் கரங்களில் இருந்து முழங்கி கொண்டிருக்கும் துப்பாக்கிகளை கருத்தில் எடுக்காது, உடைந்;து நொருங்கி போய்; கிடக்கும் பாதைவழியே சீராக நிதானமாக வெடிமருந்து வண்;டியை ஓட்டி சென்று, எதிரி முகாமின் இதயத்திற்குள்ளே புகுந்து, தன்னையும் சேர்த்து வெடிக்கச் செய்வதென்பது சாதாரண விடயமல்;ல.இயல்பாகவே அச்சமுட்டும் அலைகளை கொண்ட அகண்ட சமுத்திரத்துக்குள், நடு இரவில், எதிரியின் நவீன காவற் கருவிகளையும் புத்தி சாதுரியமாக மீறி, வெடி மருந்து படகுடன் உட்புகுந்து எதிரியின் கப்பலை நெருங்கி முன்னரே தீர்மானிக்கப்பட்;ட இலக்கை இனங்காண்பதற்காக ஒரு முறை கப்பலை சுற்றி வந்து,குறித்த இலக்கின் மீது மோதி, வெடிமருந்து படகுடன் சேர்ந்து வெடித்து சிதற ஒரு மனித மனம் உடன்படாது.

இவைகள் ஒரு சாதரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதை செய்வதற்கென்றொரு ஆத்மீக பலம் தேவை. தன்னை தற்கொடை செய்து கொள்ளத் தயாரண மனோதிடம் வேண்டும். தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றம் இன்றி, உறுதியுடன் குறி பிசகாது எதிரியை தேடி ஓடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்து கொள்ள தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின்படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு ப+தம் அல்ல. இது அடிமைப் பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்து விசையாக விளங்கும் உயரிய போர் வடிவம்தான் எங்களது கரும்புலிகள்.

உலகின் எந்த ஆயுதங்களாலும் வெற்றி கொள்ளப்பட முடியாததும், உலகின் எந்த தொழில் நுட்பத்தாலும் தடுக்க முடியாததும், உலகின் எந்த அரச இயந்திரத்தாலும் அடக்க முடியாததும்தான் எங்களது கரும்புலிகளின் மனோபலம்.. இந்த மனோபலம் வீர உணர்வை வெளிப்படுத்தும் ஒரு குறியீடு மட்டுமல்ல. எமது சமுதாய எண்ணவோட்டத்தில் பிரளயத்தை எற்படுத்த போகும் சக்தி கொண்ட ஒரு அரசியல் வடிவமுமாகும். ஒவ்வொரு கரும்புலியும் தனது உயிரை போக்கி கொள்ளும்போது நிகழும் பூகம்பம், தமிழீழ விடுதலை போரட்ட சக்கரத்தை முன்னோக்கி தள்ளிவிடுவதுடன் வீரம்மீக்க, யாருக்கும் அடிபணியாத, அடக்க நினைப்பவரை நடுங்க வைக்கும் ஆற்றல் கொண்ட தமிழ் சமுகத்திற்குத் தேவையான உணர்வையும் ஊட்டி விடுகின்றது.

தேசபக்தியையும் விர உணர்வையும் அடித்தளமாக கொண்ட இத்தகைய மனோபலம் எமது மக்களிடம் இருக்குமாக இருந்தால், உலகில் எவரும் எம்மை எதுவும் செய்ய முடியாததுடன், சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழும் பலத்தை நாம் பெற்று கொள்ள முடியும். இன்று பல நூற்றுகணக்கான விடுதலைப்புலி விரர்கள் தங்களைக் கரும்புலி அணியில் இணைத்து கொண்டு இருக்கின்றனர்.ஓவ்வொரு முறையும் கரும்புலித்தாக்தலுக்கான திட்டம் தீட்டப்படும்போது, தன்னைத்தானே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஒவ்வொரு விரனும், விராங்கனையும் முண்டியடிக்கின்றார்கள். அலையலையாக கரும்புலித்தாக்குதலுக்கு தயாராகும் இந்த தியாகச் செயலை உலகில் எங்குமே காணமுடியாது. இது உலக அதிசயங்களில்; புதியதொன்றாகும். களம்புகும் கரும்புலிகளின் பிரமிப்ப+ட்டும் வீரச் சாதனைகள், ஆழும்வர்க்கத்திற்க்கு கிலியை உண்டுபண்ணுகின்ற அதே சமயம், அந்த உன்னதமான அர்ப்பண உணர்வு எற்படுத்தும் சமுகத் தாக்கம், தமிழீழக் குடிமக்களின் மனதில் இருக்கும் சுதந்திர ஒளியை இன்னும் வளத்து செல்லும் என்பது உறுதி!

www.tamilpower.com

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்க தங்கள் உயிர்களை அர்ப்பணித்த கரும்புலி மாவீர்களுக்கு வீரவணக்கங்கள்.உங்களின் கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் நீங்கள் இணைத்துள்ள படங்களை யாழ் கள விதிக்கு அமைய மாற்றி அமைத்தீர்கள் என்றால் இப்பக்கம் இன்னும் சிறப்புற எம் அருமைக் கரும்புலிகளை நினைவு கூற வசதியாக அமையும்..! கருத்தில் கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்..! தயவுசெய்து குறையாக எண்ணாமல் செயற்படுத்துவீர்கள் என்று நம்புகின்றோம்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து காவியமான எமது கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு பதிவு செய்யப்பட்ட கரும்புலிகள் பற்றிய தகவல்களை வாசிக்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=11922

  • கருத்துக்கள உறவுகள்

blacktigersdays.jpg

தாயகக்கனவோடு வீரச்சாவடைந்த கரும்புலிகளுக்கு எம் வீரவணக்கங்கள்

தின்று தினவெடுத்து தினம் நூறு கதை பேசும் மானிட உலகில் பிறந்த தேவதைகளே கரும்புலிகளே! உங்கள் தேகத்தின் மூச்சுக்காற்று எங்கள் தேசத்தின் மூச்சுக்காற்றாய் புவி வாழும் வரையில் வாழும்.

உங்கள் தியாகத்தின் அளவை சொல்ல ஒரு வார்த்தை தமிழில் இல்லை. அதனால் இறவாத பெருவாழ்வே கரும்புலியே என சிரம் தாழ்த்தி வணக்கம் சொன்னேன்

Edited by vettri-vel

தாயகத்திற்காக தம்உயிரைத் தியாகம்செய்த கரும்புலி வீரர்களிற்கு வீரவணக்கங்கள்!

கண்ணீர் அஞ்சலிகள்!

sympathywreath2infoyp6.gif

விடுதலைப் பாதைக்கு உறுதுணையாக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த 322 கரும்புலி மாவீரர்களுக்கு எனது வணக்கங்கள்.

உதிர்ரத்தையும்

உடலையும் எகக்காய்

விதைத்திட்ட உங்களுக்காய்

என் கண்ணீர் அஞ்சலிகள்

் ்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வீரவணக்கங்கள் கூற புலத்தில் இருக்கும் எனக்கு தகுதி இல்லை இருந்தும் என்னுடைய வீரவணக்கங்கள்.

தாயக மண்ணிற்க்காய் தங்கள் இன்னுயிர்களை விதையாக விதைத்த வீரப்புலிகள் கரும்புலிகளிற்க்கு தலை குணிந்து வீர வணக்கங்கள்

Edited by வானவில்

  • தொடங்கியவர்

ஈழவன் நீங்கள் இணைத்துள்ள படங்களை யாழ் கள விதிக்கு அமைய மாற்றி அமைத்தீர்கள் என்றால் இப்பக்கம் இன்னும் சிறப்புற எம் அருமைக் கரும்புலிகளை நினைவு கூற வசதியாக அமையும்..! கருத்தில் கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்..! தயவுசெய்து குறையாக எண்ணாமல் செயற்படுத்துவீர்கள் என்று நம்புகின்றோம்..! <_<

இப்ப ஓகேயா நெடுக்ஸ் :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஓகேயா நெடுக்ஸ் :)

நன்றிகள். இப்பதான் இதில் ஒரு நிறைவை உணர்கிறது.. மனம்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் வீர வணக்கங்கள் உரித்தாகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.