Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா,  ஜனாதிபதியின் விசேட  பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார் என சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றம் 2016 இல் துமிந்தா சில்வாவிற்கு மரணதண்டனை விதித்தது.

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள  துமிந்த சில்வாவின்  வழக்கினை மீண்டும் விசாரிக்க நியமிக்கப்பட்ட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விடுதலை செய்ய பரிந்துரைத்தது.

இந்நிலையில், இன்று (24.06.2021) துமிந்த சில்வாவா ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய கொலையாளிகளை வெளியே சுதந்திரமாக நாடு எங்குள்ளது? ஐந்துக்கு மேற்பட்ட நீதிபதிகள் விசாரித்து சந்தேகமின்றி குற்றவாளியென நிருபிக்கபட்ட நபர். நீதி இங்கு சுதந்திரமாக செயல்படுகின்றதா?

வயதுபோக போக போக எனக்கு மட்டுலல்ல என்னுடய சிங்கள நண்பர்களும் கூட சொல்கிறர்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதில் தவறில்லலை என.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துமிந்த சில்வாவின் விடுதலை சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது - அமெரிக்கா விசனம்.

(நா.தனுஜா)

 

உயர்நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்ட துமிந்த சில்வா பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குட்படுத்தியுள்ளதாக அமெரிக்கா விசனம் வெளியிட்டுள்ளது.

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/127909/alaina-teplitz.jpg

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் கடந்த 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றத்தினால் மரணதண்டனை உறுதிசெய்யப்பட்ட துமிந்த சில்வாவின் விடுதலையானது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே உடன்பட்டிருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் சமத்துவமான நீதி ஆகியவை உறுதிசெய்யப்படுவது அவசியமாகும்.

துமிந்த சில்வாவின் விடுதலை சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது - அமெரிக்கா விசனம் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி 

(நா.தனுஜா)

 

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? என்று கேள்வியெழுப்பியுள்ள  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இது தொடர்பில் மேலும் பல கேள்விகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து அவைகுறித்த விபரங்களைப் தமக்கும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இந்த கேள்விகளுக்கான பதில்கள் திருப்திகரமானவையாக அமையாதபட்சத்தில், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றது என்றும் அது சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் சீர்குலைவதற்கே வழிவகுக்கும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சட்டவிரோதமான ஒன்றுகூடலில் அங்கம் வகித்தமை மற்றும் கொலைக்குற்றச்சாட்டின் அடிப்படையில் மேல்நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தீர்ப்பு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான உயர்நீதிமன்றத்தின் விசேட குழுவினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தண்டனைக்குள்ளான துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி இத்தகைய பொதுமன்னிப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய குறித்த வழக்கை நடத்திய நீதிபதியிடமிருந்து அறிக்கை பெறப்பட வேண்டும்.

பின்னர் அந்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படுவதுடன் சட்டமா அதிபர் மற்றம் நீதியமைச்சர் ஆகியோரின் ஆலோசனையும் பெறப்பட வேண்டும். அவர்கள் இருவரும் அதுகுறித்த தமது பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே இந்த பொதுமன்னிப்பானது குறித்த வழக்கை விசாரணைசெய்து தீர்ப்பளித்த நீதிபதிகள், சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக வழங்கப்பட்டதா? என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு இருக்கின்றது.

ஆகவே இதுவிடயத்தில் மேற்படி தரப்பினரால் அறிக்கையோ, அபிப்பிராயமோ அல்லது பரிந்துரைகளோ முன்வைக்கப்பட்டதா என்பதையும் அவ்வாறெனில் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டதா? அல்லது வழங்கவேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டதா? என்பதை வெளிப்படுத்துமாறுகோரி ஜனாதிபதிக்கு நாம் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறோம்.

இவ்வாறான பொதுமன்னிப்பை வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்பட்டாலும், அது எப்போதும்; சட்டரீதியாகவே அணுகப்பட வேண்டும். அத்தகைய அதிகாரம் தன்னிச்சையான முறையிலோ அல்லது தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையிலோ பயன்படுத்தப்படக்கூடாது.

கடந்த காலத்திலும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு எந்த அடிப்படையில் கைதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்ற விடயம் தெளிவுபடுத்தப்படாமல், சில கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

அத்தகைய சந்தர்ப்பங்களிலும் சட்டத்தரணிகள் சங்கம் தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. ஆகவே இதுகுறித்து ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துமாறு வலியுறுத்தியிருக்கின்றோம்.

Image

Image

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எவ்வடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்?, இந்தப் பொதுமன்னிப்பை வழ்ஙகும்போது கவனத்தில்கொள்ளப்பட்ட பிரதான விடயங்கள், தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனையோரின் வழக்குகளிலிருந்து துமிந்த சில்வாவின் வழங்கு விலக்களிக்கப்படுவதற்கான காரணம், துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளித்த நீதிபதிகளிடம் அறிக்கை கோரப்பட்டதா? ஆமெனில், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் என்ன?, இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டதா? ஆமெனில், அதன் உள்ளடக்கம் என்ன?, இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பில் நீதியமைச்சரிடம் பரிந்துரைகள் கோரப்பட்டதா? ஆமெனில், அதன் உள்ளடக்கம் என்ன? ஆகியவை தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என்றே கடிதம் மூலம் கோரியிருக்கிறோம்.

இந்தக் கேள்விகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் திருப்தியளிக்கவில்லை எனின், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றதும் தன்னிச்சையானதுமாகும். அது சட்டத்தின் ஆட்சி சீர்குலைவதற்கும் நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீழ்ச்சிகாண்பதற்குமே வழிவகுக்கும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி 

(நா.தனுஜா)

 

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? என்று கேள்வியெழுப்பியுள்ள  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இது தொடர்பில் மேலும் பல கேள்விகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து அவைகுறித்த விபரங்களைப் தமக்கும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இந்த கேள்விகளுக்கான பதில்கள் திருப்திகரமானவையாக அமையாதபட்சத்தில், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றது என்றும் அது சட்டத்தின் ஆட்சியும் நீதித்துறையின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் சீர்குலைவதற்கே வழிவகுக்கும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சட்டவிரோதமான ஒன்றுகூடலில் அங்கம் வகித்தமை மற்றும் கொலைக்குற்றச்சாட்டின் அடிப்படையில் மேல்நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தத் தீர்ப்பு முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான உயர்நீதிமன்றத்தின் விசேட குழுவினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தண்டனைக்குள்ளான துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி இத்தகைய பொதுமன்னிப்பை வழங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைய குறித்த வழக்கை நடத்திய நீதிபதியிடமிருந்து அறிக்கை பெறப்பட வேண்டும்.

பின்னர் அந்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படுவதுடன் சட்டமா அதிபர் மற்றம் நீதியமைச்சர் ஆகியோரின் ஆலோசனையும் பெறப்பட வேண்டும். அவர்கள் இருவரும் அதுகுறித்த தமது பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே இந்த பொதுமன்னிப்பானது குறித்த வழக்கை விசாரணைசெய்து தீர்ப்பளித்த நீதிபதிகள், சட்டமா அதிபர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக வழங்கப்பட்டதா? என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு இருக்கின்றது.

ஆகவே இதுவிடயத்தில் மேற்படி தரப்பினரால் அறிக்கையோ, அபிப்பிராயமோ அல்லது பரிந்துரைகளோ முன்வைக்கப்பட்டதா என்பதையும் அவ்வாறெனில் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டதா? அல்லது வழங்கவேண்டாம் என்று பரிந்துரைக்கப்பட்டதா? என்பதை வெளிப்படுத்துமாறுகோரி ஜனாதிபதிக்கு நாம் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறோம்.

இவ்வாறான பொதுமன்னிப்பை வழங்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் காணப்பட்டாலும், அது எப்போதும்; சட்டரீதியாகவே அணுகப்பட வேண்டும். அத்தகைய அதிகாரம் தன்னிச்சையான முறையிலோ அல்லது தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையிலோ பயன்படுத்தப்படக்கூடாது.

கடந்த காலத்திலும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு எந்த அடிப்படையில் கைதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள் என்ற விடயம் தெளிவுபடுத்தப்படாமல், சில கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

அத்தகைய சந்தர்ப்பங்களிலும் சட்டத்தரணிகள் சங்கம் தற்போது எடுத்திருக்கும் நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. ஆகவே இதுகுறித்து ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் வெளிப்படுத்துமாறு வலியுறுத்தியிருக்கின்றோம்.

Image

Image

அரசியலமைப்பின் 34(1) ஆம் சரத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு துமிந்த சில்வா எவ்வடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்?, இந்தப் பொதுமன்னிப்பை வழ்ஙகும்போது கவனத்தில்கொள்ளப்பட்ட பிரதான விடயங்கள், தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனையோரின் வழக்குகளிலிருந்து துமிந்த சில்வாவின் வழங்கு விலக்களிக்கப்படுவதற்கான காரணம், துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் இந்த வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளித்த நீதிபதிகளிடம் அறிக்கை கோரப்பட்டதா? ஆமெனில், அந்த அறிக்கையின் உள்ளடக்கம் என்ன?, இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டதா? ஆமெனில், அதன் உள்ளடக்கம் என்ன?, இந்தப் பொதுமன்னிப்பு தொடர்பில் நீதியமைச்சரிடம் பரிந்துரைகள் கோரப்பட்டதா? ஆமெனில், அதன் உள்ளடக்கம் என்ன? ஆகியவை தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என்றே கடிதம் மூலம் கோரியிருக்கிறோம்.

இந்தக் கேள்விகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் திருப்தியளிக்கவில்லை எனின், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு நியாயமற்றதும் தன்னிச்சையானதுமாகும். அது சட்டத்தின் ஆட்சி சீர்குலைவதற்கும் நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீழ்ச்சிகாண்பதற்குமே வழிவகுக்கும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்புக்கு துமிந்த சில்வா எந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார் ? ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி  | Virakesari.lk

வணக்கம் சட்டத்தரணிகளே, சர்வாதிகாரியிட்டைநீங்கள் யாரும் கேள்வி கேட்க முடியாது தெரியாதோ

தமிழ் மக்களைக் கொன்ற படையினரையும் வெளி நாட்டு பெண்மணியை கொன்றவரையும் விடுதலை செய்யும் போது கொண்டாடிய சிங்கள மக்கள் இன்று துமிந்தவின் விடுதலையை எதிர்ப்பது வேடிக்கை.  

பாதாள உலக குழுக்கள் பலவற்றைத்  தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்த  பாரத லக்ஷ்மன் எனும் ரவுடியை கொன்ற இன்னொரு ரவுடிக்கு மன்னிப்பளித்ததை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், ஆனால் சிறுவர்கள் உட்பட பல தமிழ் மக்களை கொன்றவருக்கு கொடுக்கும் மன்னிப்பை எதிர்ப்பார்கள்.

காலம் ஒரு பூமராங் போன்றது என்பதை சிங்கள மக்கள் விரைவில் உணருவர்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

தமிழ் மக்களைக் கொன்ற படையினரையும் வெளி நாட்டு பெண்மணியை கொன்றவரையும் விடுதலை செய்யும் போது கொண்டாடிய சிங்கள மக்கள் இன்று துமிந்தவின் விடுதலையை எதிர்ப்பது வேடிக்கை.  

பாதாள உலக குழுக்கள் பலவற்றைத்  தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்த  பாரத லக்ஷ்மன் எனும் ரவுடியை கொன்ற இன்னொரு ரவுடிக்கு மன்னிப்பளித்ததை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், ஆனால் சிறுவர்கள் உட்பட பல தமிழ் மக்களை கொன்றவருக்கு கொடுக்கும் மன்னிப்பை எதிர்ப்பார்கள்.

காலம் ஒரு பூமராங் போன்றது என்பதை சிங்கள மக்கள் விரைவில் உணருவர்.

நானும் கிட்டத்தட்ட இப்பிடித்தான் யோசித்தேன். மிருசுவிலில் பலரை கொலை செய்தவன் இலகுவாக வெளியில் வரும்போது, இதுக்கு ஏன் இவ்வளவு அலப்பறை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனப்படுகொலையையே செய்திட்டு ஹாயா இருக்கிறவங்களுக்கு.. இதெல்லாம் பெரிய விசயமே அல்ல.

என்ன எங்களுக்கு  கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் நாங்களே தவறானவர்களை சிங்களவன் பக்கம் அனுப்பி தவறவிட்டு வருகிறோம்.

அந்த வரிசையில்..சிங்களவர்களோடு வாழ்வது பெருமை புகழ் சுமந்திரன் தொடங்கி சிங்கள அரச பயங்கரவாதத்தை பற்றி மூச்சும் விடாமல்.. அவர்களின் காலை நக்கி பிழைக்கும் நாயாய் இருப்பதில் பெருமை புகழ் சுண்டக்காய் சுரேந்திரன் வரை.. இதுகாறுகள் இருக்கும் வரை தமிழகளுக்கும் நியாயமில்லை.. இப்படியான நிகழ்வுகளுக்கும் குறைவிருக்காது. 

இதில் புலிகள் விடுதலை என்ற வாசகத்தை போட தமிழ் எலும்பு பொறுக்கிகளுக்கு தீனியாக.. அப்பாவிகளை பிடிச்சு சிறையில் வைச்சிட்டு.. புலிப்பட்டம் கண்டி விடுவதும் அடங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா  தனது கைங்கரியத்தை தமிழ் கைதிகளின் விடுதலை மூலம் நிறைவேற்றி விடலாம் என நினைத்து இறங்கியிருப்பார்.  தமிழரின் விடுதலையால் சிங்களம் கொதிக்கும், பிரச்சனை கிளம்பும் அந்த இடைவெளியில் தான் சயிக்கிள் ஓடலாம் என்று நினைத்திருப்பார். ஆனால் இனி இவர் எடுக்கும் ஒவ்வொரு அடியும் இவருக்கு எதிராகவே திரும்பும் வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

துமிந்த சில்வா விடுதலை – மரண தண்டனைக் கைதிகள்  உணவுத் தவிர்ப்பு போராட்டம்

 
1-77.jpg?resize=493%2C309&ssl=1
 32 Views

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில்  உள்ள மரண தண்டனை கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தளர்த்துமாறு கோரி சுமார் 74 மரண தண்டனைக் கைதிகள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதனால் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

அதே நேரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு அளித்ததுபோல தங்களையும் விடுதலை செய்யுமாறும்  அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மரண தண்டனை விதிக்கப்பட்ட 235 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது குறித்து ஏற்கனவே நீதி அமைச்சினால் ஜனாதிபதி செயலகத்திற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

https://www.ilakku.org/?p=53342

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.