Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெறறுக்கொள்ளும் திட்டம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெறறுக்கொள்ளும் திட்டம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு

spacer.png
யாழ்.குடாநாட்டிற்கு நன்னீரை கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக 1962 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆறுமுகம் திட்டம் பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும், ஆனையிறவு கடல் நீரேரியில் பருவ கால மீன்பிடித தொழிலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டடிருந்தது.இந்நிலையில், குறித்த திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி ஆனையிறவு கடல் நீரேரியில் 23 வீதமான பகுதியை மறித்து அணை அமைத்து, திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தினால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெறறுக்கொள்ளும் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு, புதிய திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தி, கருத்துக்களை அறிந்து கொள்ளும் வகையில் இன்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மறுசீரமைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்பாசனப் பணிப்பாளர் த.இராஜகோபுவினால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)
http://www.samakalam.com/யாழ்-மாவட்டத்திற்கான-நன/

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம் திட்டம் மீண்டும் வருகிறது

-நடராசா கிருஸ்ணகுமார், சுப்பிரமணியம் பாஸ்கரன்

இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்துக்கான நன்னீரை பெறறுக்கொள்ளுகின்ற ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், நேற்று  (13) இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த திட்டம் தொடர்பாக 1962ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும்,  ஆனையிறவு கடல் நீரேரியில் பருவகால மீன்பிடிதொழிலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டடிருந்தது.

இந்நிலையில், குறித்த திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஆனையிறவு கடல் நீரேரியில் 23 சதவீதமான பகுதியை மறித்து அணை அமைத்து, இந்தத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், பிரதேச மக்கள் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு, புதிய திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தி,  கருத்துகளை அறிந்துகொள்ளும் வகையில், இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, நெதர்லாந்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மறுசீரமைக்கப்பட்ட திட்டம் தொடர்பாக கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் த.இராஜகோபு தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Tamilmirror Online || ஆறுமுகம் திட்டம் மீண்டும் வருகிறது

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பிழம்பு said:

ஆறுமுகம் திட்டம் மீண்டும் வருகிறது

ஓம் முருகா! ஆறுமுகத்தோனே!! இந்தக் கொரோனா சமயத்தில் நீங்கள் அடையாள அட்டை. ஆவணங்கள் இன்றிவந்தால், திருப்பி அனுப்பப்படுவது உறுதி அப்பனே.!!!😲

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்வளுக்கு இடையூறு இன்றி நடந்தால் நல்ல விடையம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மழைகாலத்தில் வரும் நன்னீரை  கடலில் சேராமல் சேகரித்தாலே பாதி பிரச்சனை குறைந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆறுமுகம் திட்டம் பற்றி முன்னெரும் ஒரு தரம் யாழில் விரிவாக அலசினோம். எனது பாமர பார்வைக்கு ஆனையிறவு ஏரியை நன்னீரேரியாக்குவது நல்ல திட்டமாகவே படுகிறது.

20 minutes ago, குமாரசாமி said:

மழைகாலத்தில் வரும் நன்னீரை  கடலில் சேராமல் சேகரித்தாலே பாதி பிரச்சனை குறைந்து விடும்.

உண்மைதான். இவற்றை குளங்களில் சேமிக்கலாம். ஆனாலும் அவை விரைவில் ஆவியாகிவிடும். மழை நீரை சேர்த்து, கடல் தொடர்பை துண்டித்து, ஒரு நீரேரியை உவர்ப்பு தன்மையை படிபடியாக குறைப்பது  வினைதிறனுள்ளதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் காடழிப்பு தீவிரமடைந்திருப்பதால்.. எதிர்காலத்தில் அங்கு பெரும் வரட்சிக்கான சந்தர்ப்பமே அதிகம். அதுபோக இலங்கையின் வரட்சியான மாவட்டங்களில் ஒன்றாக விளங்கும் மன்னார் உட்பட வன்னி மக்கள் பெரும் போகம்.. சிறு போகம் என்று இந்தக் குளங்களில் உள்ள நீரையே தான் நம்பி வாழ்கின்றனர். அவர்களிடம் இருந்து நீர் திருடப்பட அனுமதிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்குச் சமன்.

குடாநாட்டில் மணல் திட்டுக்கள் அழிக்கப்படுதல்.. கண்டல் அழிப்பு.. கட்டுப்பாடற்ற இராணுவ ஆக்கிரமிப்பின் கீழான விவசாயம்... இராணுவத்துக்கான எரிபொருள் மின்விநியோக சேமிப்பு,, இராணுவக் கிட்டங்கிஅள்.. இப்படி பல கேட்பார் கேள்வி இன்றி இந்தக் குத்தியரின் அனுமதியின் கீழ் நிகழும் நிகழ்வுகளால்.. யாழ்நிலக்கீழ் நீர் மாசடைந்து வருகிறது. முதலில் அதனை தடுக்கலாம். 

மேலும் யாழ் மாடவட்டத்தில் உள்ள பாரமரிப்பற்று தூர்வாராமல் கிடக்கும் குளங்கள் ஏரிகளை தூர்வார்ந்து மழை நீரை சேமித்தால் மண்ணின் நீருப்பு இயல்பு கூடும். அசேதன பசளைகளை விடுத்து சேதனப் பசளை பாவனையை ஊக்குவிக்க வேண்டும். இராணுவ அரண்கள் அகழிகளால்.. நீர் வழிந்தோடல் செயற்பாடு இடையுறுத்தப்படுவதால்.. இயற்கையான மண்ணின் நீர்ப்பிடிப்பு அளவு குறைவடைகிறது. எல்லா இராணுவ முகாம்களும் அகழிகளும் மூடப்பட்டு சிங்கள இராணுவ இருப்பு முற்றாக அகற்றப்படுதல் மிக அவசியம். 

பொலித்தீன் பாவனைக்கு முற்றான தடை. வீடுகளில் மழை நீரை சேமித்தல் கட்டாயம். நீர் முகாமைத்துவ விவசாய நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.. குறிப்பாக சொட்டு நீர் விவசாயம்... குளங்கள் ஏரிகளை மூடிவிட்டு.. மாடி மனைகளை கட்டும்.. இந்த ஊதாரியாரின் செயலை நிறுத்திவிட்டு.. ஊருக்கு ஓர் குளமும் ஏரியும் அமைதல் வேண்டும். கோவில் கேணிகள் தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிப்பிடங்களாக அவையும் மாற வேண்டும். இவை தாம் மண்ணில் நன்னீரின் இருப்பை அதிகரிக்குமே தவிர... வன்னியில் இருந்து நன்னீரை திருடுவது என்பது வன்னி மக்களுக்கு எதிரான இன்னொரு வடிவ போராகவே பார்க்க வேண்டி இருக்கும்.

இந்த சுயபுத்தியும் கேள்புத்தியும் அற்ற அத்தியடி எலிக்கேசியால்... போர்காலத்தில் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.. இப்போ இன்னும் உயிரோடு இருந்து மக்களின் வளங்களையும் அழிக்கிறது.

கடலுக்குள் பஸ்ஸை கொட்டி.. அது நாசமானது காணாது என்று.. எனி வன்னி மண்ணின் நீர் வளமாக விளங்கும் குளங்களில் இருந்து நீரை திருட திட்டம்போடுது இந்த எலிக்கேசி. அந்த நீரை யாழில் விநியோகிப்பதன் மூலம் வருவாய் ஈட்டி தான் பொக்கட்டுக்குள் போடலாம் என்று கனவு காண்கிறார் இவர்,

ஏலவே இதன் ஒரு முன்னோடியாக.. யாழில்.. நீர் வழங்கலுக்கு என்று குழாய்கள் நாட்டப்பட்டு வருவதோடு மக்களுக்கு அலகு விலை அடிப்படையில் அதனை விநியோகிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. 

ஏன் இஸ்ரேலில் இருந்து கிபீர்,.. டோரா.. ரோன் வாங்கின ஆக்கள்.. கடல் நீரை நன்னீராக்கும் இஸ்ரேலிய தொழில்நுட்பத்தை வாங்கி.. இந்த திட்டத்தை நிறைவேற்றலாமே. வன்னியில் இருந்து நீரை திருடி வன்னியை பாலைவனமாக்காமல். ஏலவே காடழிப்பால் வன்னி காய்ந்து கருவாடாகி வருகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, goshan_che said:

உண்மைதான். இவற்றை குளங்களில் சேமிக்கலாம். ஆனாலும் அவை விரைவில் ஆவியாகிவிடும்.

வருசத்திலை 12 மாதமும் குளத்திலை குதிச்சு குளிச்சு நீந்தி வாழ்ந்தனாங்கள்.
ஆவியாகிறது எல்லாம் பெரிய விசயமில்லை. அப்பப்ப தூர்வாரி பாதுகாத்தாலே போதும்.😁

  • கருத்துக்கள உறவுகள்

டெண்டர் கேட்குறவங்க கேட்கலாம்..👌

hqdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2021 at 15:46, கிருபன் said:

ஆனையிறவு கடல் நீரேரியில் பருவ கால மீன்பிடித தொழிலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டடிருந்தது.

கிட்டதட்ட என்ட வயசு ஆகிறது இந்த திட்டத்திற்கு. இந்த திட்டம் அமுல்படுத்தாமைக்கு முக்கிய காரணம்  மக்களின் எதிர்ப்பாம்.....மக்கள் வேண்டாம் என்றால்  எதையும் செய்யாத அரசுகள் தானே  நம்ம அரசுகள்.....ஆறுமுகா உனக்கே வெளிச்சம்.....இவர் தொடங்க அடுத்த அரசு வந்து நிறுத்தி வைக்க .....இப்படி இன்னும் ஒரு 60 வருசம் போகும் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.