Jump to content

நாட்டை, விற்பதற்கோ... அல்லது இந்தியாவிற்கு, பாதிப்பு ஏற்படும் வகையிலோ... செயற்பட மாட்டேன் – டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை, விற்பதற்கோ... அல்லது இந்தியாவிற்கு, பாதிப்பு ஏற்படும் வகையிலோ... செயற்பட மாட்டேன் – டக்ளஸ்

நாட்டை விற்பதற்கோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் தான் ஒருபோதும் செயற்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, சீன நிறுவனத்திற்கு பூனகரி கெளதாரி முனையில் அட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்று எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

சீனாவின் தொழில்நுட்ப அறிவையும் பெற்று போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகும் ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1230038

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே நாட்டை வித்தாச்சப்பு. நரைத்த தாடிக்கார குத்தியர் இன்னும் கோமாவில இருந்து முழுசா எழும்பவில்லை போலும். வாங்கின அடி அப்படி. 

இவர் அளவுக்கு அதிகமா உதார் விட ஆரம்பிச்சு.. விமல் வீரவன்ச ரேஞ்சில இருக்கப் போறார். காலம் சரியில்லைப் போல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவோ நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

வேலையற்றிருக்கும் இளைஞர்களின் குடும்ப வாக்குகள் அனைத்தும் டக்ளசு ஐயாவுக்குப் போய், அவர் அடுத்த சனாதிபதியாக வந்துவிடுவாரோ என்று மகிந்த குடும்பமே கலங்கிப்போய் இருக்கிறதாம். என்று நான் பகிடியாகத்தான் எழுதினேன், அந்தாள் அதனை உண்மை என்று நம்பி இப்பவே சனாதிபதி றேஞ்சுக்கு கதைவிடுது. 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

வேலையற்றிருக்கும் இளைஞர்களின் குடும்ப வாக்குகள் அனைத்தும் டக்ளசு ஐயாவுக்குப் போய், அவர் அடுத்த சனாதிபதியாக வந்துவிடுவாரோ என்று மகிந்த குடும்பமே கலங்கிப்போய் இருக்கிறதாம். என்று நான் பகிடியாகத்தான் எழுதினேன், அந்தாள் அதனை உண்மை என்று நம்பி இப்பவே சனாதிபதி றேஞ்சுக்கு கதைவிடுது. 😲

அவரது நெடுநாள் கனவாயிருக்குமோ? இவரைக்கேட்டு இவரது ஒப்புதலோடுதானாம் நாட்டை விக்கிறதெண்டால் விப்பினமாம். இவர்தான் நாட்டை காட்டிக்கொடுப்பதில்லை, விற்பதில்லை என்று சூளுறைத்துவிட்டாரே. இனியும் இந்தியாவிற்கு கவலையெதற்கு? அமைதியாய் படுத்து தூங்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

இனியும் இந்தியாவிற்கு கவலையெதற்கு? அமைதியாய் படுத்து தூங்கலாம். 

நீங்க வேற, இந்தியா தனது இந்திய மண்ணிலேயே நிம்மதியாகத் தூங்கமுடியாமல் சந்திர மண்டலத்துக்குப் போகுது.. செய்தி படிக்கவில்லையா.?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

நீங்க வேற, இந்தியா தனது இந்திய மண்ணிலேயே நிம்மதியாகத் தூங்கமுடியாமல் சந்திர மண்டலத்துக்குப் போகுது.. செய்தி படிக்கவில்லையா.?? 

மாட்டு வண்டியிலயா? போயினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

ஏலவே நாட்டை வித்தாச்சப்பு. நரைத்த தாடிக்கார குத்தியர் இன்னும் கோமாவில இருந்து முழுசா எழும்பவில்லை போலும். வாங்கின அடி அப்படி. 

இவர் அளவுக்கு அதிகமா உதார் விட ஆரம்பிச்சு.. விமல் வீரவன்ச ரேஞ்சில இருக்கப் போறார். காலம் சரியில்லைப் போல. 

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

அந்த மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். இவர் எங்கேயோ போயிட்டார். கனடா.. அமெரிக்கா.. பிரிட்டன்.. என்று உலகம் பூராவும் முதலீடுகளோடு. போதாததுக்கு சகோதரனும்.

இனத்துரோகிகளுக்கு...காட்டிக்கொடுப்பவர்களுக்கு எப்பவுமே எலும்புத் துண்டுகள் கிடைக்கும். ஒரு கட்டத்தில்.. அதை எஜமானன் நிறுத்தும் போதுதான் நிலைமை புரியும்.

கருணா.. இலங்கையின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர். அவரால்.. அவரில் ஊரில் இருக்கும் மக்களின் ஏழ்மையை போக்க முடிந்ததா..????!

அவர் அங்கு கிழக்கின் விடியல் என்று காட்டிக்கொடுத்தார். இவர் இங்கு வடக்கின் வசந்தம் என்று காட்டிக்கொடுத்தார்கள்.

இவர்களுக்கு வாக்குப் போடும் மக்கள் கூட்டம்.. இப்பவும் அப்பவும் அதே ஏழ்மையில் தான். வெறும் சிறு சலுகைகளே அவர்களின் முன் பெரிதாகக் காட்டப்பட்டு வாக்குப் பறிக்கப்படுகிறது. அவ்வளவே.

இதை எல்லாம் நீங்கள் இவர்களின் மீதான மக்களின் காதல்.. ஆதரவு என்று காட்ட விரும்பினால் காட்டிக்கொள்ளுங்கள்.. இவரால்.. படுகொலை செய்யப்பட்ட.. துன்பப்பட்ட மக்கள்.. இவரை மன்னிக்க மாட்டார்கள். அதே தான் கருணா.. பிள்ளையான்.. சித்தார்த்தனுக்கும்.

சொறீலங்காவில் இருப்பது சனநாயகம் என்று நம்பும் அளவுக்கு நாங்கள் இல்லை. நீங்கள் இருக்கலாம்.. ஏனெனில்.. நீங்கள் அதற்கு சொல்லிக் கொள்வது.. நாங்கள் ஊரில் இருக்கிறம். நாங்கள் ஊரில் இருந்த போதும்.. இந்தக் கொலை கொள்ளையர்களுக்கு வாக்குப் போடுவது பற்றி சிந்தித்ததே இல்லை. இதற்கு மேல்.. உங்களுக்கு சொல்லி என்ன பயன்.. ! காலம் உங்களின் முன் துரோகிகளையும் தியாகி ஆக்கி மண்டியிட வைத்திருக்கிறது என்று நொந்து கொள்வதை விட வேறு எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் இவர்களை நம்பி ஏமாறுவதை தவிர இவர்களுக்கு வாக்குப்போடும் மக்களுக்கும் வேறு பயனில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படி சொல்லி சொல்லி நீங்க உருட்ட வேண்டியதுதான் அந்தாள்  அமைச்சர் ஆகிறார், எம்பி ஆகிறார்  காலம் காலமாக  அப்ப இவருக்கு ஓட்டு போடும் மக்கள் கோமாவிலா இருக்கிறாங்கள் 

கூட்டமைப்பினர் கூத்தாடிகளாக இருக்கும் வரையில் தோழர் டக்ளஸ் அவர்களின் காட்டில் மழை தான்.
மக்கள் உரிமைக்கு முன்னர் இப்போது  அபிவிருத்தியைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாத்தியார் said:

மக்கள் உரிமைக்கு முன்னர் இப்போது  அபிவிருத்தியைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன். 

அபிவிருத்தியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர உரிமையை நிராகரிக்கவில்லை. மக்கள் உரிமைக்குரலை முன்கொண்டு செல்லத்தக்க தலைமையின்மையால்.. மக்கள் அந்தக் குரலை ஆக்கிரமிப்பு சூழலுக்குள் அடக்கி வாசிக்கிறார்களே தவிர..  அங்கு.. அபிவிருத்தியை நோக்கி உரிமையை கைவிட்டதாக அர்த்தப்பட வாய்ப்பில்லை.  பெரும்பான்மையான தமிழ் மக்கள் மனதில் உரிமை தொடர்பில்.. மண் தொடர்பில்.. ஒரு ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அந்த மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். இவர் எங்கேயோ போயிட்டார். கனடா.. அமெரிக்கா.. பிரிட்டன்.. என்று உலகம் பூராவும் முதலீடுகளோடு. போதாததுக்கு சகோதரனும்.

இனத்துரோகிகளுக்கு...காட்டிக்கொடுப்பவர்களுக்கு எப்பவுமே எலும்புத் துண்டுகள் கிடைக்கும். ஒரு கட்டத்தில்.. அதை எஜமானன் நிறுத்தும் போதுதான் நிலைமை புரியும்.

கருணா.. இலங்கையின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவர். அவரால்.. அவரில் ஊரில் இருக்கும் மக்களின் ஏழ்மையை போக்க முடிந்ததா..????!

அவர் அங்கு கிழக்கின் விடியல் என்று காட்டிக்கொடுத்தார். இவர் இங்கு வடக்கின் வசந்தம் என்று காட்டிக்கொடுத்தார்கள்.

இவர்களுக்கு வாக்குப் போடும் மக்கள் கூட்டம்.. இப்பவும் அப்பவும் அதே ஏழ்மையில் தான். வெறும் சிறு சலுகைகளே அவர்களின் முன் பெரிதாகக் காட்டப்பட்டு வாக்குப் பறிக்கப்படுகிறது. அவ்வளவே.

இதை எல்லாம் நீங்கள் இவர்களின் மீதான மக்களின் காதல்.. ஆதரவு என்று காட்ட விரும்பினால் காட்டிக்கொள்ளுங்கள்.. இவரால்.. படுகொலை செய்யப்பட்ட.. துன்பப்பட்ட மக்கள்.. இவரை மன்னிக்க மாட்டார்கள். அதே தான் கருணா.. பிள்ளையான்.. சித்தார்த்தனுக்கும்.

சொறீலங்காவில் இருப்பது சனநாயகம் என்று நம்பும் அளவுக்கு நாங்கள் இல்லை. நீங்கள் இருக்கலாம்.. ஏனெனில்.. நீங்கள் அதற்கு சொல்லிக் கொள்வது.. நாங்கள் ஊரில் இருக்கிறம். நாங்கள் ஊரில் இருந்த போதும்.. இந்தக் கொலை கொள்ளையர்களுக்கு வாக்குப் போடுவது பற்றி சிந்தித்ததே இல்லை. இதற்கு மேல்.. உங்களுக்கு சொல்லி என்ன பயன்.. ! காலம் உங்களின் முன் துரோகிகளையும் தியாகி ஆக்கி மண்டியிட வைத்திருக்கிறது என்று நொந்து கொள்வதை விட வேறு எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் இவர்களை நம்பி ஏமாறுவதை தவிர இவர்களுக்கு வாக்குப்போடும் மக்களுக்கும் வேறு பயனில்லை. 

நெடுக்ஸ்... மிக அருமையான கருத்தை, 
ஆணித்தரமாக.... பதிந்து உள்ளமைக்கு நன்றி. 👏 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கொந்தளிப்போடு சூறாவளியும் சேர்ந்து கையில் இருந்ததையெல்லாம் பிடுங்கிக்கொண்டு போக நடுக்கடலில்  நிர்க்கதியான ஒருவர் ஒரு துரும்பாவது கிடைக்காதா பற்றிக்கொண்டு கரையேறி விடலாம் என்று ஏங்கும் நிலையிலேயே மக்கள் இப்போதுள்ளனர். அநேரத்தில் பொய்யான வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் கொடுத்து வாக்கை கொள்ளையடிக்கின்றனர். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லாதவர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? எல்லா குள்ள நரிகளிடமும் ஏமாறுவதைவிட வேறு தெரிவு இல்லை. மக்களின் வாக்கை கொள்ளையடித்து கதிரை ஏறுபவர்கள் எல்லாம் யோக்கியர்கள் கிடையாது. வாக்கு போட்டவர் எல்லாம் நன்மை பெற்றவரும் கிடையாது. அவர்கள் குறைகளில் இவர்கள் இலாபம் அடைகின்றனர் அவ்வளவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
    • "முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?" நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன்  அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது  அப்பொழுது இந்த 'அகதி' 'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே! இன்று யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!   "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே  ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்!  ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன்  ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"    அன்று    "குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு     வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு  படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு  பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!" பின்  "நாற்பது வயது தொப்பை விழுகுது  கருத்த முடி நரை விழுகுது  ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது  குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது  ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது    அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது    வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது    மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது   தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது   பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது   விரலை குத்தி சீனி பார்க்குது   நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது  கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென  அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது  பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது  தாண்டி எண்பது வருமோ?    ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"   பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!   எல்லோருக்கும் எனது நன்றிகள்   
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.