Jump to content

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்

July 22, 2021

spacer.png

அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.  மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து  சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. 

கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன்  சுவாமி காவியும் உள்ளனர்.

ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் பலரும் ஆலயத்தின் வெளியே நிற்க இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவிமை , குறித்த ஆலயத்தில் பல ஆண்டுகாலமாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. 

அவர்கள் தமது இயலாமையை பிள்ளையாரிடம் கூறி ஆலயத்தின் வெளியே நின்று பஞ்சமுக பிள்ளையார் , எழுந்தருளி பிள்ளையாரின் தரிசனத்தை கண்டு வீடு திரும்பினர் என இயலாமையுடன் ஆலயத்தின் அருகே வசிக்கும் அடியவர் ஒருவர் கூறினார்.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2021/163735

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.... சாமி குத்தமாகப்போகுது! சுத்த பத்தமில்லாமல் சாமியைத்தூக்கி, இருக்கிறதை விட இன்னும் கொட்டுன்னப்போகுது.

1 hour ago, கிருபன் said:

கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன்  சுவாமி காவியும் உள்ளனர்.

அவர்களுக்கும் அந்தப்பயம் தான். மக்களை திருப்பியாச்சு, இப்போ சுவாமியை தூக்கி சமரசம் செய்யினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2017ல் அய்யர் சொன்னார். வெளியாலை இருந்து காசு வருகுது, கோயில்கள் பெரிசாகுது. ஆனால் கோவில் மணி அடிக்க, சுத்தம் செய்ய ஆள் இல்லை. பெடியள் பிஸி.... அவையள் உந்த வேலைக்கே வரபோகினம்.

கடைசீல தென்பகுதியில் இருந்து தான் சமபளத்துக்கு ஆள் எடுக்கவேணும் போல எண்டு.

மூதூரில், ஒரு இஸ்லாமிய இளைஞர், இந்து கோவிலில் பணி செய்தார். அவர் வேலை முடிந்து செல்லும் போது, போலீசார், அவரது அடையாள அட்டையினை வாங்கி, பார்த்து, என்ன வேலை செய்கிறாய் என்று கேட்க, பிள்ளையார் கோவிலில் என்று சொல்ல, அங்கே போன் போட்டு உண்மைதானோ என்று விசாரிக்க, அவரது பெயர் ஒரு இந்து பெயராக சொல்லப்பட்டு இருப்பதனை அறிந்தனர்.

கோவில் வேலையில் இருந்து நீக்கினாலும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில், அவர் தவறு ஒன்று இழைக்கவில்லை.

இதுதான் நிலை. சாமி தூக்கவும் சிங்கள இளைஞர் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையய்யா! தூக்க வந்தவர்களை வெளியில விட்டிட்டல்லே தூக்கியிருக்கினம். ஏதோ உள்ளுக்கை நடந்திருக்குது. என்ன சொல்லி சாமியை  டீல் சமாதானப்படுத்தியிருப்பினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இல்லையய்யா! தூக்க வந்தவர்களை வெளியில விட்டிட்டல்லே தூக்கியிருக்கினம். ஏதோ உள்ளுக்கை நடந்திருக்குது. என்ன சொல்லி சாமியை  டீல் சமாதானப்படுத்தியிருப்பினம்?

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

அதிக சீதனம் காதல்  காரணாமாகவும் சிங்கள இளைஞர்களை தமிழ் பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள் என்று செய்தியும் அடிபடுது புத்தான்  அண்ண யாழ்ப்பாணம் மாறுகிறதா என விவாகப்பதிவாளர் வினா தொடுத்துள்ளார் என செய்தியும் வரும் .

ஆனால் நம்ம கல்யாணம் கட்டி பெட்டயை வெளிநாடு எடுப்போம் . 

எங்க போனாலும் இந்த சாதி கோதாரி பெரிய பிரச்சினை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

மூதூரில், ஒரு இஸ்லாமிய இளைஞர், இந்து கோவிலில் பணி செய்தார். அவர் வேலை முடிந்து செல்லும் போது, போலீசார், அவரது அடையாள அட்டையினை வாங்கி, பார்த்து, என்ன வேலை செய்கிறாய் என்று கேட்க, பிள்ளையார் கோவிலில் என்று சொல்ல, அங்கே போன் போட்டு உண்மைதானோ என்று விசாரிக்க, அவரது பெயர் ஒரு இந்து பெயராக சொல்லப்பட்டு இருப்பதனை அறிந்தனர்.

👆🏼இது ஆள்மாறாட்டம். பெரிய கிரிமினல் கேசெல்லோ?

நீங்கள் இப்படி சொல்லுறியள்?👇

9 hours ago, Nathamuni said:

ஏனெனில், அவர் தவறு ஒன்று இழைக்கவில்லை.

ஓ…தவறு செய்தர் இஸ்லாமிய இளைஞர் எல்லோ….அனுதாபம்கள்.

9 hours ago, Nathamuni said:

சாமி தூக்கவும் சிங்கள இளைஞர் தேவை. 

வாழை பழத்தில் ஊசி.

இங்கே சாதி பிரச்சனையாலோ, சாமி தூக்க இந்துக்கள் இல்லை என்பதாலோ ஆமி சாமி தூக்கவில்லை.

கொரோனாவை காரணம் காட்டி தூக்க வேண்டிய மக்களை வெளியே விட்டு தாங்கள் தூக்கி உள்ளார்கள்.

ஏன் ஆமிக்கி கொரோனா தொத்தாதா?

பிள்ளை தண்டில் உள்வலம் வருவதெண்டால் - ஒரு சில உள்ளூர் இளஞர்களை தேர்ந்து இதை செய்ய விட்டிருக்கலாம். பின்னர் அவர்களை தனிமை படுத்தி இருக்கலாம்.

இப்படி முஸ்லீமோ, தமிழனோ போய் தலதா மாளிகை விடயத்தில் கை வைக்க முடியுமா?

இது நிச்சயமாக கலாச்சார அழிப்பின் ஒரு பங்குதான்.

நீங்கள் தூக்கிறெண்டா… தூக்கவே வேணாம் என்று கோயில் நிர்வாகம் முடிவெடுத்திருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

👆🏼இது ஆள்மாறாட்டம். பெரிய கிரிமினல் கேசெல்லோ?

நீங்கள் இப்படி சொல்லுறியள்?👇

ஓ…தவறு செய்தர் இஸ்லாமிய இளைஞர் எல்லோ….அனுதாபம்கள்.

வாழை பழத்தில் ஊசி.

தல, என்ன காத்தால.... வேறு ஒண்டும் சிக்கலையோ...

ஆள் மாறாட்டம், அடையாள அட்டையில் செய்யவில்லை. அதிகாரிகளுக்கும் பொய் சொல்லவில்லை.

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... அதனை முறையாக செக் பண்ணாமல் விட்டது, கோவில்காரர் பிழை. அடையாள அட்டை கேட்டு இருக்க வேண்டும்.

அதுவே காரணமாக சொல்லி, கேஸை முடித்தார்கள் என்று இங்கே ஒரு திரியில் விலாவரியாக விவாதித்து இருக்கிறோம்.

ஓர் இருவர் செயலுக்காக, உங்களுக்கு, இஸ்லாம் மீதும், இஸ்லாமிய சமூகம் மீதும் அந்தளவு வன்மம் தேவை இல்லை. 😰

தவறாக ஒன்றை சொல்லி விட்டு, அதனை வேடிக்கையாக தான் சொன்னேன் என்று நிறுவ முயல்றீர்கள், மீண்டும், மீண்டும் தலையால் கிடங்கு கிண்ட முயல்கிறீர்கள், என்று தெரிகிறதே. 

Good luck!!

***

எனக்கு, முக்கியமான மீட்டிங் இருக்கு, உங்களுக்கு தர நேரம் இல்லை. இரவு சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர்.

எனக்கென்னவோ இது, பக்தரை உள்நுழைய விடாமல் தடுத்து,  பிள்ளையாரை தாங்கள் காவிக்கொண்டு புத்தரை மூலஸ்தானத்தில் வைத்தார்களோ என்று சந்தேகமாய் கிடக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... 

இஸ் இட்🤣.

கள்ள பெயரை வேலையிடத்தில் கொடுப்பது தவறில்லை என்று பிரக்கிராசி சொல்றார் எண்டா அவர் கள்ள பிரக்கிராசியாத்தான் இருக்கும்🤣.

12 minutes ago, Nathamuni said:

ஓர் இருவர் செயலுக்காக, உங்களுக்கு, இஸ்லாம் மீதும், இஸ்லாமிய சமூகம் மீதும் அந்தளவு வன்மம் தேவை இல்லை. 😰

அவர்கள் மீது ஒரு வன்மமும் இல்லை. ஓரிருவர் புலம் பெயர் தமிழ் அரசியலை குழப்பி அடிக்கும் கைங்காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மேல்தான் ஒரு இது. 

14 minutes ago, Nathamuni said:

தவறாக ஒன்றை சொல்லி விட்டு, அதனை வேடிக்கையாக தான் சொன்னேன் என்று நிறுவ முயல்றீர்கள், மீண்டும், மீண்டும் தலையால் கிடங்கு கிண்ட முயல்கிறீர்கள், என்று தெரிகிறதே

எதையும் வேடிக்கையாக சொல்லவே இல்லை. சொல்வதெல்லாம் உண்மை.

15 minutes ago, Nathamuni said:

எனக்கு, முக்கியமான மீட்டிங் இருக்கு, உங்களுக்கு தர நேரம் இல்லை. இரவு சந்திப்போம்.

எனக்கு வேலை எதுவும் இல்லை. டே அண்ட் நைட். வாங்கோ பேசுவம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

கட்டுரையின் தலையங்கம் ...
சாதிபிரச்சனை யாழ்நகரில் இராணுவம் சாமி காவினார்கள்:

கட்டுரை எழுதியவர் ....தலித் ராஜா....

சிங்கள இராணுவத்திற்கு அச்சுவேலி சித்திவிநாயர் மேலே ஒரு ஈர்ப்பு இருக்கு. 😘

இது மூன்று  வருடங்களுக்கு முன்னர்👇🏾

 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முறையாக செக் பண்ணாமல் விட்டது, கோவில்காரர் பிழை. அடையாள அட்டை கேட்டு இருக்க வேண்டும்.

இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. பொதுவாக வேலைக்கு ஊழியர்களை அமர்த்தும்பொழுது அவர்களைப்பற்றி ஆராய்ந்து வேலைக்கு எடுப்பார்கள். இங்கே கோயில் நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை. 

 

2 hours ago, Nathamuni said:

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்... 

அதேபோல ஒருவர் வேலைக்காக பெயர் மாற்றும் பொழுது பெயர் மாற்றிய ஆவணம் தொடங்கி அடையாள அட்டை வரை மாற்றப்பட்டிருக்கும்.. இது பொதுவான ஒன்று.. 

ஆனால் வேலைக்காக பெயர் மாற்றுவதை ஒரு பிரகிரசியர் தவறில்லை என கூறுவார் என்பது மீண்டும் ஒரு தவறான விளக்கம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இஸ் இட்🤣.

கள்ள பெயரை வேலையிடத்தில் கொடுப்பது தவறில்லை என்று பிரக்கிராசி சொல்றார் எண்டா அவர் கள்ள பிரக்கிராசியாத்தான் இருக்கும்🤣.

அவர்கள் மீது ஒரு வன்மமும் இல்லை. ஓரிருவர் புலம் பெயர் தமிழ் அரசியலை குழப்பி அடிக்கும் கைங்காரியத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மேல்தான் ஒரு இது. 

எதையும் வேடிக்கையாக சொல்லவே இல்லை. சொல்வதெல்லாம் உண்மை.

எனக்கு வேலை எதுவும் இல்லை. டே அண்ட் நைட். வாங்கோ பேசுவம்.

 

கோசன் சா என்ற பெயரில், யாழில் முழு நேரமாக வேலை செய்ய, பிராக்கிரசியரின் ஆலோசனை கேட்டனியலோ?

மூதூர் பிள்ளையார் கோவிலில், கோயில் மணி அடிக்க, புக்கை கிண்ட, வாற ஆளுக்கு பிரகிராசி ஆலோசனை.... தேவைதான்...

உங்களுக்கு வேலை இல்லை.... தெரியும்... உங்கள் தமிழுணர்வு குறித்து இந்த தளம் அறியும்.

ஆகவே... நிதானமாக பேசினால் அன்றி, பதிலும் இல்லை. 

நன்றி.

12 minutes ago, கிருபன் said:

சிங்கள இராணுவத்திற்கு அச்சுவேலி சித்திவிநாயர் மேலே ஒரு ஈர்ப்பு இருக்கு. 😘

இது மூன்று  வருடங்களுக்கு முன்னர்👇🏾

 

spacer.png

உந்த பொட்டையள், உந்த மாதிரி, இளிச்சுக்கொண்டு நிண்டால், சுழட்டமால், வேற என்ன தான் செய்வார்கள்?  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.. பொதுவாக வேலைக்கு ஊழியர்களை அமர்த்தும்பொழுது அவர்களைப்பற்றி ஆராய்ந்து வேலைக்கு எடுப்பார்கள். இங்கே கோயில் நிர்வாகம் அதை சரிவர செய்யவில்லை. 

 

அதேபோல ஒருவர் வேலைக்காக பெயர் மாற்றும் பொழுது பெயர் மாற்றிய ஆவணம் தொடங்கி அடையாள அட்டை வரை மாற்றப்பட்டிருக்கும்.. இது பொதுவான ஒன்று.. 

ஆனால் வேலைக்காக பெயர் மாற்றுவதை ஒரு பிரகிரசியர் தவறில்லை என கூறுவார் என்பது மீண்டும் ஒரு தவறான விளக்கம்..

இது தொடர்பில் இங்கே திரியே ஓடியது.

நீங்கள் உங்கள் கருத்துக்களை பொத்தாம், பொதுவாக இடுகிறீர்கள், விடயத்தினை விளங்காமல் என்று நினைக்கிறேன்.

எனது கருத்து, இந்த கோவில் வழக்கு சம்பந்தமானது மட்டுமே. அதனை. என்னை முட்டாள் ஆக்க ஒருவர், பொதுக்கருத்தாக சொன்னதாக காட்டி விட முனைகிறார்.

எனக்கு பசி, பயங்கர பசி, திருட விரும்பவில்லை. கோவிலுக்கு போகிறேன், ஏதாவது பொங்கல், வடை கிடைக்கும் என்று. அய்யா எல்லாம் முடிந்து விட்டதே என்கிறார்.

இங்க வாப்பா, இந்தா இரண்டு ரூபா... அந்த கடையில ஒரு பணிஸ் வாங்கி சாப்பிட்டு, வந்து இந்த பாத்திரத்தை கழுவு, கோயிலை கூட்டு, சாப்பாடுக்கு காசு தருகிறேன் என்கிறார்.

ஓமோம் என்கிறேன்... கூடவே என்ன பெயர் தம்பி என்கிறார். விவேகத்துடன் ஒரு பெயரை சொல்கிறேன்.

வேலை கிடைக்கிறது, வயிறும் நிரம்புகிறது.

போலீசார் இடையே மறித்து, விசாரிக்க வேலை போகிறது.... பசியால் வேலைக்காக, அவர் சொன்ன பெயரில் தவறில்லை என்று முடிவாகிறது.

இதில் என்ன தவறு என்கிறீர்கள்?

சிலர், விதாண்டவத்துக்கு, அலம்பறை செய்ய விரும்பினால், இலங்கை போய் அந்த வழக்கினை எடுத்து, நியாயம் பிளக்கட்டும்.

Link to comment
Share on other sites

15 hours ago, கிருபன் said:

 

அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.  மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து  சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

3 hours ago, putthan said:

இனி ஒரு முன்னாள் புரட்சிவாதி கற்பனையில் ....அச்சுவேலியில் சாதிப்பிரச்சனை காரணமாக சிங்கள இராணுவம் சாமி தூக்க வேண்டி வந்திட்டுது ..

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

எனக்கு பசி, பயங்கர பசி, திருட விரும்பவில்லை. கோவிலுக்கு போகிறேன், ஏதாவது பொங்கல், வடை கிடைக்கும் என்று. அய்யா எல்லாம் முடிந்து விட்டதே என்கிறார்.

இங்க வாப்பா, இந்தா இரண்டு ரூபா... அந்த கடையில ஒரு பணிஸ் வாங்கி சாப்பிட்டு, வந்து இந்த பாத்திரத்தை கழுவு, கோயிலை கூட்டு, சாப்பாடுக்கு காசு தருகிறேன் என்கிறார்.

ஓமோம் என்கிறேன்... கூடவே என்ன பெயர் தம்பி என்கிறார். விவேகத்துடன் ஒரு பெயரை சொல்கிறேன்.

வேலை கிடைக்கிறது, வயிறும் நிரம்புகிறது.

போலீசார் இடையே மறித்து, விசாரிக்க வேலை போகிறது.... பசியால் வேலைக்காக, அவர் சொன்ன பெயரில் தவறில்லை என்று முடிவாகிறது.

இதில் என்ன தவறு என்கிறீர்கள்?

சிலர், விதாண்டவத்துக்கு, அலம்பறை செய்ய விரும்பினால், இலங்கை போய் அந்த வழக்கினை எடுத்து, நியாயம் பிளக்கட்டும்.

இனப்பாசம் மேலிட்டதாலோ என்னமோ - தமிழ் சினிமா ரேஞ்சுக்கு ஏழ்மை, பசி என திரைகதை எழுதி ஆள்மாறட்டம் செய்த நபருக்கு வக்காலத்து வாங்கிறீர்கள்.

ஏதோ ஒரு ஊரில் இருந்து பஸ் காசு கொடுத்து, பஸ் பிடித்து மூதூர் வருவதை விட்டு விட்டு, அந்த காசில் பணிஸ் வாங்கி சாப்பிடலாமே?

பள்ளிவாசலில் இல்லாத உதவியா? நான் ஒரு முஸ்லீம், பண கஸ்டத்தால் கோவிலில் வேலை செய்ய உத்தேசிக்கிறேன் என சொன்னாலே ஓடி வந்து உதவி செய்வார்கள்.

இலங்கையில் வேற வேலையே இல்லையா? கோவில் ஊழியத்தை தவிர?

அவரவருக்கு அவர் மத நம்பிக்கை புனிதமானது. தமது கோவில், பள்ளிவாசல் விடயங்களை தம் மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களே செய்ய வேண்டும் என விரும்புவது ஓர் அடிப்படை உரிமை.

நீங்கள் முன்பு ஒரு திரியில் CV யில் பொய் சொல்லுங்கள் என்று அட்வைஸ் கொடுத்த ஆள்.

அதே திரியில், நம்பி வேலை தந்த முன்னாள் முதலாளி வேலையை விட்டு நீக்கும் போது அவர் சிஸ்ட்ச்த்தில் சில “கண்ணி வெடிகளை” வைத்து விட்டு வருவதாகவும் சொன்னீர்கள். 

ஆகவே இந்த நபர் செய்தது உங்களுக்கு பெரிதாக தெரியாது - ஆனால் நிச்சயம் இது நம்பி கோவிலுக்கு போகும் மக்களின் மனதை புண்படுத்தவே செய்யும்.

42 minutes ago, Nathamuni said:

ஆகவே... நிதானமாக பேசினால் அன்றி, பதிலும் இல்லை

மன்னிக்கவும் நான் யாரின் பதிலை எதிர்பார்த்தும் எழுதுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

 

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத தீண்டத்தகாதவர்களையும் பிரித்தறிய செய்யும் முறை இது. 

நாம் சாதி ரீதியிலான, பிற்போக்குத்தனமான விடயங்களை மரபு என்று இன்னும் தூக்கித் திரியும் போது, அந்த இடைவெளிகளில் எதிரிகள் புகுந்து கொள்கின்றனர்.

இல்லை, நிழலி....

ஆறுமுக நாவலர் காலத்தில் இருந்தே, ஆண்கள் மேலாடை அணியக்கூடாது என்று வழக்கம் வந்து விட்டது.

மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கோவில் உள்ளே அனுமதி இல்லை. பிறகு என்ன, மேலாடை பிரச்சனையாக இருந்திருக்க முடியும்?

இன்னும் ஆழ்ந்து பார்த்தால், இந்த மேலாடை இலலாமல் கோவிலில் வணங்கும் வழக்கம், கேரளத்தில் உள்ளது. தமிழகத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

கோவில்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் வரவேண்டும் என்ற வழக்கம் சாதி அடிப்படையிலான வழக்கம். மேலாடை இல்லாவிடின் தான் பூணூல் அணிந்துள்ளவர்களா, இல்லையா என பார்க்க முடியும். அவாளையும் அவாள் அல்லாத

இதை பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால் சேர்ட் போடும் பழக்கம் ஐரோப்பிய செருகல்தானே? அதுக்கு முதல் வேட்டி, சால்வை?

ஆகவே இது ஒரு பழமை பேணும் முனைப்பாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

இது தொடர்பில் இங்கே திரியே ஓடியது.

நீங்கள் உங்கள் கருத்துக்களை பொத்தாம், பொதுவாக இடுகிறீர்கள், விடயத்தினை விளங்காமல் என்று நினைக்கிறேன்.

எனது கருத்து, இந்த கோவில் வழக்கு சம்பந்தமானது மட்டுமே

👇🏼நீங்கள் கூட இங்கே “ வேலையிடத்தில் , வேலைக்காக” என பொதுவாகத்தானே எழுதினீர்கள்? அதற்குத்தான் என் பதில் கருத்து.. 

“இந்த கோயில் வழக்கில், இந்த வேலைக்காக” என்று கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாம்.. 

3 hours ago, Nathamuni said:

வேலை இடத்தில், வேலைக்காக பெயரை மாத்தி சொல்வது தவறு இல்லை என்று எந்த 'ப்ராக்ட்சிங்' பிரகிரசியரையும் கேட்டால் சொல்வார்கள்...

மேலும் உங்களுடைய உதாரணத்தில் வருபவர் விவேகமானவராக இருந்திருந்தாலும் அந்த விவேகம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு உதவவில்லை.. அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இல்லாதவர்களுக்கு, CV யில் என்ன சொல்வது என்று என்னத்தை புரியும்.

நான் மாதம் குறைந்தது மூன்று பேருக்கு, வேலைக்கு, CV தயாரிப்புக்கு உதவுகிறேன். வேலையும் எடுக்கிறார்கள். இப்போது தான் ஒரு நேர்முக தேர்வு செய்து, ஒருவர் குறித்த எனது அபிப்பிராயம் சொல்லி வந்தேன்.

நிறுவனங்களில், CV குறித்தும் அதிலுள்ள உண்மைத்தன்மை குறித்து சொல்லி, எப்படி சரியானவர்களை அதனூடு தெரிவு செய்வது என்று டிரைனிங் கொடுக்கிறார்கள். எனக்கும் அந்த ட்ரெயினிங் தரப்பட்டுள்ளது.

முதலில் cv யில் எத்தனை பேர் உண்மை சொல்கிறார்கள் என்று பிரித்தானியாவில் சொல்லப்படும் சர்வே பார்க்கட்டும்.

வீட்டில் குந்தி இருந்து கொண்டு நியாயம் மட்டுமே பிளக்கலாம். யாழில் முழங்காலம். பிரயோசனம் இல்லை.

எனக்கு வேலை இல்லை என்று சொல்லிக்கொண்டே, cv குறித்து அலம்பறை பண்ணுவது வெறும் வெத்து வேட்டுதான்.

இதோ, கொரோனோ லொக்கடவுன் முடிந்து விட்டது. வரப்போகின்றனர் இந்தியர்கள். பட்டேலும், ரிஷியும் (மாமாவின் நிறுவனம் இன்போர்சிஸ்) போரிஸ்க்கு மண்டை கழுவி கதவு திறந்து விட்டாச்சு.

நாம cv ல அதை பண்ணாத, பிடுங்காத எண்டு பிளந்து கட்டுவம் எல்லோ. moral வகுப்பு எடுக்கினம், வேலை என்றால் என்ன என்று தெரியாதவயல்.

அக்கௌன்டன்ட் மார் தமது வேலைகளை IT கொண்டு போகுது என்று உணர்வு இல்லாமல் உள்ளனர்.  அந்த IT யுடன் வரப்போகின்றனர் வெளிநாடுகளில் இருந்து. என்னால் முடிந்த அளவுக்கு உதவுகிறேன்.

இருவர் இப்போது உதவி பெறுகின்றனர். ஒருவர் history டிகிரி. அடுத்தவர் accounting & finance: லண்டன் UCL படிப்பு, அனால் 2-2 வில் பாஸ். பிரயோசனம் இல்லை. ஆனால் IT யில் வேலை எடுக்க முடியும் என்று அவர்களை ஆர்வத்துடன் முயலவைக்கிறேன்.

இருவரும் இங்கே பிறந்தவர்கள், ஒருவர் காபி ஊத்துகிறார், இன்னோருவர் பெற்றிங்  கடையில் வேலை.... இதனை cv யில் சொன்னால் வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள். அல்லது, உங்கள் உதவி தேவை இல்லை, அவர்கள் அப்படியே வேலை செய்யட்டும் என்றாவது சொலுங்கள்.

ஆகவே வேலை இருப்பவர்களும், வேலை இல்லாதவர்களும், தயவுடன் உங்கள் கருத்துக்களை ஒரு ஓரமாக வைக்கவும்.

*

cv யில் பொய் சொல்வது என்பதை இங்கே பலர், அப்படியே எடுத்துக்கொள்கிறார்கள் போலுள்ளது. பொய் என்பது, இல்லாத கல்வித்தகுதியை இருப்பதாக சொல்வதல்ல. அது எனது professional ethics கும் இல்லை.

உதாரணமாக, நான் ஒரு சாப்ட்வேர் பயிட்சி கொடுத்தால், அவர் அதில் தேர்ச்சி அடைந்த பின்னர், ஒரு நண்பரின் நிறுவனத்துக்கு அனுப்புவது, அந்த நிறுவனம் இந்தியவாவிலோம இங்கிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ இருப்பார். அவரது அலுவலகத்தில் ஒரு மாதம் வேலை செய்தால் cv யில் 6 மாதம் என்று போடுவார். அந்த 6 மாதத்துக்கான கடும் முயல்வினை அந்த ஒரு மாதத்தில் எடுப்பார்.

இப்போது, வேலை ஓன்லைனினில் நடக்கிறது.

ஆகவே, கூடுதலாக யோசித்து, அறம் போதிக்க வேண்டாமே.

43 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மேலும் உங்களுடைய உதாரணத்தில் வருபவர் விவேகமானவராக இருந்திருந்தாலும் அந்த விவேகம் அவருக்கு நீண்ட நாட்களுக்கு உதவவில்லை.. அவ்வளவுதான்

துரதிஷ்ட்டம், வேலையை நன்றாக செய்தார். மேலும் அதிகாரிகளுக்கு பொய் சொல்லவில்லை.

இது நடந்த வழக்கு, பத்திரிகையில் வந்தது, இங்கேயும் விவாதித்து இருக்கிறோம்.

ஆனால், ஏதோ கதை போல, அப்படி இருக்காதோ, இப்படி இருக்காதோ என்று ஒருத்தர், கதை விட்டு, குழப்புகிறாரே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஆகவே வேலை இருப்பவர்களும், வேலை இல்லாதவர்களும், தயவுடன் உங்கள் கருத்துக்களை ஒரு ஓரமாக வைக்கவும்.

என்னை பிரகராசி என்றீர்கள். இன்னொரு திரியில் ஒன்லைனில் எதோ செய்கிறேன் என்றீர்கள். பின்னர் யாரோ எனக்கு ஊதியம் தந்து யாழில் எழுகிறேன். இடையில் டியூசன் டீச்சர். இப்போ வேலையில்லாதவன்.

ஓவரா சுத்தவிட்டாச்சு போல 🤣.

ஆனால் CVயில் பொய் சொல்ல கற்றுகொடுக்கும் உங்களுக்கு இதில் உள்ள   Ethics, moral பிரச்ச்னைகள் ஒரு பொருட்டல்ல என்பது தெரிந்ததுதான்.

நம்பி வேலை கொடுத்தவனுக்கு சிஸ்டத்யில் “கண்ணி வெடி சொருகிவிட்டேன்” என மார்தட்டி சொல்லும் நபர்களுக்கு moral compass பழுது என்பது தெரிந்ததுதான்.

இல்லாவிடில் மகள் வயதை ஒத்த ஐயரின் பள்ளி சிறுமி மகளுக்கு ஒரு லைன் போடாமல் விட்டு விட்டோமே என்று எழுத கை வந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இல்லாவிடில் மகள் வயதை ஒத்த ஐயரின் பள்ளி சிறுமி மகளுக்கு ஒரு லைன் போடாமல் விட்டு விட்டோமே என்று எழுத கை வந்திருக்காது.

நீங்கள் நிதானத்தில் இல்லை. அய்யர் அம்மா கதை மிக, மிக பழையது.

மகளோ? 🥴 ஏன் உங்கள் சிந்தனை இப்படி தறி கெட்டு ஓடுகிறது?

இன்று மோத வேண்டும் என்று வேலை மினக்கெட்டு வந்து, ஏதோ மனதில் வருவதை எல்லாம் அலம்புகிறீர்கள்...

நல்லது, இன்னுமோர் மீட்டிங். நேர்முகம் தான்...பார்ப்போம். வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் நிதானத்தில் இல்லை. அய்யர் அம்மா கதை மிக, மிக பழையது. மகளோ? 🥴

சரி உங்கள் வயது ஒத்தபள்ளி சிறுமியா?

அப்போ தனது மகள் விபரத்தை- ஐயர் இன்னொரு பள்ளி சிறுவனிடமா விபரித்தார்? இல்லைத்தானே?

ஒரு மனிதன் தனது மகள் கற்பமாவது என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அப்பாவி எனும் (உங்களை விட வயது குறைந்த பெண்) விபரத்தை உங்களிடம் நம்பி பகிர்கிறார்.

சாதாரணமாக moral compass வேலை செய்பவத்களுக்கு ஐயோ பாவமே என்று தோன்றும். 

சே, சான்சை தவறவிட்டோமோ? என்று எண்ணி அதை ஒரு இணையதளத்திலும் எழுதுபவர்?

நீங்கள் நிதானாம் பற்றி எழுதலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Nathamuni said:

ஆகவே, கூடுதலாக யோசித்து, அறம் போதிக்க வேண்டாமே.

அறம் என்பதை போதிக்க எனக்கு முதிர்ச்சி இல்லை ஆனால் morale பிழை என என் கண்ணில் படுவதை பற்றி எழுதுகிறேன் .. அவ்வளவுதான்.. 

நன்றி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

சரி உங்கள் வயது ஒத்தபள்ளி சிறுமியா?

அப்போ தனது மகள் விபரத்தை- ஐயர் இன்னொரு பள்ளி சிறுவனிடமா விபரித்தார்? இல்லைத்தானே?

ஒரு மனிதன் தனது மகள் கற்பமாவது என்றால் என்னவென்றே தெரியாத ஒரு அப்பாவி எனும் (உங்களை விட வயது குறைந்த பெண்) விபரத்தை உங்களிடம் நம்பி பகிர்கிறார்.

சாதாரணமாக moral compass வேலை செய்பவத்களுக்கு ஐயோ பாவமே என்று தோன்றும். 

சே, சான்சை தவறவிட்டோமோ? என்று எண்ணி அதை ஒரு இணையதளத்திலும் எழுதுபவர்?

நீங்கள் நிதானாம் பற்றி எழுதலாமா?

கடுப்பேறவில்லை, மை லோட்..

உங்களுக்குத்தான் நேரம் இருக்குதே.... ஏதையாவது போட்டு உருட்டி விளாட வேண்டும் எண்டு நான் அப்பப்ப உருட்டி விடுற தேங்காய், உதவுறது மகிழ்ச்சி.

டொட்டடோய்ங்.... தல, லீவைப் போட்டுட்டு கிளம்பப்போறார்.

அதுதான் என்னோட விளாடுடார்.....

நம்மள விட்டுட்டு போகாதீங்கப்பு.... அப்புறம்.... கூல்டவுண் ஆக எங்கை போறதாம். 😂

11 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அறம் என்பதை போதிக்க எனக்கு முதிர்ச்சி இல்லை ஆனால் morale பிழை என என் கண்ணில் படுவதை பற்றி எழுதுகிறேன் .. அவ்வளவுதான்.. 

நன்றி..

நீங்கள், வேற... இதுக்குள நிண்டு..... புரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டு......

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "விடியல் உன் கையில்"     "இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!"   நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும் இங்குமாக நோட்டமிட்டபடி தொங்கிய தோள்களுமாக வாடிய முகமுமாக இருந்தது. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் விடிவு இன்றி தவிக்கிறது. அது என்ன ? என் தோல்வி தான் என்ன ? எது உண்மையில் என் வாழ்வில் பிழைத்தது? என் மனம் பல பல சிந்தனை வெள்ளத்தால் மூழ்கி, அவை ஒவ்வொன்றும் என்னைப் பார்த்து கத்திக்கொண்டு இருந்தன. அந்த வெறுமை என்னையே விழுங்கும் அளவிற்கு இருக்கிறது. அது தான் நான் உங்களுடன் என் கதையை இப்ப பகிர்கிறேன்.   நான் இலங்கையை விட்டு ஒரு அந்நியனாக லண்டன் வந்த நாளை இன்னும் மறக்கவில்லை. என் வாழ்வு ஒரு நோக்கம் கொண்டதாக, ஒரு பெரிய அந்தஸ்து நிலையில் என்னை அமைக்க ஆசைப் பட்டேன். அதை இந்த லண்டன் மாநகரம் எனக்கு தந்தது. நான் வந்து மூன்றாம் நாளே ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி முகாமையாளராக பதவி பெற்றேன். உண்மையில் என் நோக்கம் இதை விடப் பெரிது, என்றாலும் முதல் படியில் கால் வைத்தல் தானே ஏணியின் கடைசிப் படிக்குப் போகலாம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல, நான் என் முழுக்கவனத்தையும் அந்த நிறுவனத்திலும் என் வேலையிலும் கட்டாயம் செலவழிக்க வேண்டும் என்பதும் தெரியும். ஆனால் என் முதல் தவறை, இப்ப என் உள்ளத்தை தாக்கும் வேதனை, சொல்லிக்கொண்டு இருக்கிறது!   நான் என் வாழ்வின் மற்ற விடயங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல், வேலை, வேலை , என்றே இருந்துவிட்டேன். பதவி, பதவி இதுவே இதுவே என் முழு நோக்கமாக இருந்தது. இப்ப நினைத்தால் நான் முழு முட்டாள் என்று தோன்றுகிறது. வீடு வாங்கினேன், மோட்டார் வண்டி வாங்கினேன் , பதவி உயர்வு அடைந்தேன். என் செல்வாக்கு நல்ல அழகான பெண்ணை மனைவியாக்கியது. ஆனால் என்னை எதுவுமே திருப்தி செய்யவில்லை. நான் அந்த நிறுவனத்தின் தலைமை பதவியை அடையவேண்டும், என் செல்வாக்கு , அதிகாரம் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிலும் ஒலிக்க வேண்டும். அது வரை நான் ஓயப்போவதில்லை! அது தான் என் உள்ளத்தில் எதிர் ஒலித்துக்கொண்டு இருந்தது!   ஆனால் நான் மிகத் தவறு செய்தது இப்ப தான் புரிகிறது. நான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள், அவளுக்கும் ஆசைகள் இருக்கும் என்பதை மறந்தே விட்டேன்.   அந்தஸ்துக்கு ஒரு அழகிய மனைவி, கொலு பொம்மைமாதிரி இருப்பது வாழ்வு அல்ல என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் குடும்பத்தில் இருந்து மனத்தளவில் மிகத் தூரவே இருந்துவிட்டேன். ஆமாம், முதல் இரவு நாம் சந்திக்கும் பொழுது அவள் எத்தனை எதிர்பார்ப்புடன் இருந்தாள் என்பதை, இப்ப தான் அவளின் நாட்குறிப்பில் இருந்து அறிகிறேன்.   'என் கணவர் வந்ததும் ஆரத்தழுவி அன்பு செலுத்துவார் என்று எத்தனையோ கனவு கண்டேன். நாம் முதல் முதல் தனிய ஒரு அறையில் சந்திக்கிறோம். பகல் முழுவதும் திருமண கொண்டாட்டம், நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் என கழிந்தது. இரவு ஆனதும் ஆனந்தமாய் மகிழ்திருக்கலாம் என்று ஏங்கி நின்றேன். ஆனால் அவரோ, தன் நிறுவனம் பற்றியும், அதில் தான் சம்பள உயர்வுடன் அடுத்த மாதம் புது பதவிக்கு போவதாகவும், நான் வந்த ராசி வேலை செய்வதாகவும் புகழ்ந்தாரே தவிர, இது எம் இருவரின் முதல் இரவு என்பதை எனோ மறந்து விட்டார். என்ன செய்வது கணவன் கதை கதைத்தான். கண் வெட்டாமல் அவனை நான் ரசித்து கொண்டு இருந்தேன். அவரின் பேச்சின் வலி கூட எனக்கு வலிக்வில்லை. அவரை கட்டிப் பிடிக்கும் தைரியம் எனக்கில்லை. மெல்ல வாய்திறந்து, நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னேன். அவரோ எல்லாம் தன் பதவி தந்த அழகு என்றார்'. என்று குறிப்பிட்டு இருந்தார்!   எனக்கு அவளை மாதிரியே அழகிய பெண்குழந்தை மூன்று ஆண்டுகள் கழித்து பிறந்தது. அவளுக்கு அது ஒரு ஆறுதல், ஆனால் நானோ இன்னும் என் வேலையில் கடுமையாகவும், பதவி, அதிகார மோகம் அபின் மாதிரியும் என்னை அதில் அடிமையாக்கி விட்டதை நான் உணரவே இல்லை. அவள் பலதடவை தனக்கு மகன் வேண்டும் என்று கூறியதையே பொருட்படுத்தாமல், எல்லாம் என் முழு நோக்கம் அடையட்டும் என்று தள்ளி கடத்திவிட்டேன் . அது அவளை எவ்வளவு பாதிக்கும் என்று யோசிக்கவே இல்லை. நாளடைவில் நான் எனக்கே அந்நியனாகி விட்டேன்!   எட்டு ஆண்டுகளுக்கு பின் அவள் மனநிலை பாதித்து தன்னையே இழக்க தொடங்கிவிட்டாள். அவள் உடல்நிலை உருக்குலைய தொடங்கியது. என் மனைவி என்று நான் பெருமை பட்ட அழகு இப்ப அவளிடம் இல்லை. ஆனால் நான் இப்ப அந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் மிகப்பெரிய வசதிகளுடன், அதிகாரத்துடன் இருக்கிறேன். வைத்தியர் என்னிடம் வந்து அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவளுக்கு நல்ல கணவனாக, அவளின் விருப்பு வெறுப்பு அறிந்து நெருக்கமாக அன்பு காட்டினால், அவள் விரைவில் குணமடைவார் என்றார்.   இப்ப என் பதவி, பொறுப்பு அதிகாரம் எல்லாம் மிக உச்சியில். எனக்கு நேரம் கிடைப்பதே குறைந்து விட்டது, ஏன், என்னையே இப்ப கவனிக்க முடியாத நிலையாகி விட்டது. அது தான் நான் இப்ப மாடியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் மாடியில் இருந்த கதிரையில் சாய்ந்து அயர்ந்துவிட்டேன். என் கன்னத்தை யாரோ தடவுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டு கண்விழித்தேன். என் ஐந்து வயது மகள் தான். நான் விழித்ததும் ஒரு முத்தம் தந்தார், மகளின் கண்ணில் கண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அந்த கண்ணீர் பல கேள்விகளை என் மேல் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் என்றுமே நல்ல தந்தையாக மகளுக்கு இருந்தது இல்லை . ஆக இந்த ஐந்து ஆண்டும் தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த உடைகள், தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த விளையாட்டு சாமான்கள் இப்படி அளவற்று கொடுத்தேனே தவிர, ஒரு சொட்டு அன்பாக பேசியோ, விளையாடவோ, அணைக்கவோ இல்லை. எல்லாம் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.   நான் என் மகளை தூக்கினேன். அவரின் கண்ணீரை துடைத்தேன். மகள் என்னை யாரோ ஒருவன் போல பார்த்தார். பின் ' அப்பா , அம்மா வருவாரா ?' என்று கேட்டார். நான் அவரை கட்டிப்பிடித்து ' கட்டாயம் வருவார், விடியல் பிறக்கும்' என்றேன். விடியல் என் கையில் தான் என்பதை, காலம் கடந்தாலும், மகளின் பார்வை, கண்ணீர் உணர்த்தியது. மகள் அதற்குப் பின் என் கையில் உறங்கிவிட்டார்.   இப்ப இருளாகிவிட்டது. அந்த இருண்ட வானில் அழகிய நிலவை பார்த்தேன். அது என் மனைவியின் முகம் மாதிரி எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக புறக்கணித்த என் வெறுமையை நிரப்பும் காலம் வந்துவிட்டது என்று நினைத்தேன். ஒரு தாள் எடுத்து, நான் இதுவரை முயன்று பெற்ற அந்த தலைமை பதவிக்கு விடை கொடுக்க, அதில் இருந்து விலகும் ராஜினாமா கடிதம் எழுதினேன், அதில் பிற்குறிப்பாக நான் அங்கேயே ஒரு சாதாரண ஊழியராக வேலை செய்ய விருப்பம் என்றும் குறிப்பிட்டேன், எனக்கு இப்ப மன நிம்மதி, மகளை கட்டிலில் கிடத்திவிட்டு, படுத்து இருந்த மனைவியின் பக்கத்தில் போனேன். குனிந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து, அவளின் தலையை என் மடியில் கிடத்தினேன், அவளின் கண்ணில் இருந்து அந்தக் கண்ணீர் என் மடியை நனைத்தது. அவளின் கையை வருடியபடி நான் என்றும் உனக்கு மட்டுமே கணவன், என் பதவியை, அந்த அதிகார மோகத்தை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கத்தியே விட்டேன்!     "விடியல் பிறக்கிறது, காற்றில் அதன் குரல் கேட்கிறது என் உலகம் விழிக்கிறது, மண்டியிட்டு உன்னைச் சந்திக்கிறேன் உன் மடியில் என் ஆத்மா இனி உறங்கட்டும் எம் வாழ்வு உன் கையில் இனிமையாகட்டும்!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣. போன சட்ட மன்றத்தேர்தலில் தமிழ் நாட்டில் 3 வது பெரிய கட்சி…. இப்போ 8 தொகுதியில் 3வது பெரிய கட்சி🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.