Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு எதிரியோடு போரிடுவது போல வைரசோடு சண்டை போட்டு சுட்டுவீழ்த்த முடியாது – எம்.ஏ சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எதிரியோடு போரிடுவது போல வைரசோடு சண்டை போட்டு சுட்டுவீழ்த்த முடியாது – எம்.ஏ சுமந்திரன்

எங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பு செய்பவர்கள் பொதுசுகாதார பரிசோதகர்கள் அவர்கள் இதுவரை காலம் வரையில் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காகவும் தடுப்பூசி செலுத்துவதிலும் அனுபவம் மிக்கவர்களாக காணப்படுகின்றனர். அப்படியானவர்களின் கருத்துக்கள் அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காமல் இராணுவத்தினரை வைத்துவைரஸ்பரவலை தடுக்கலாம் என அரசாங்கமும் ஜனாதிபதியும்நினைத்தது பெருந்தவறு. ஒரு எதிரியோடு போரிடுவது போல வைரசோடு சண்டை போட்டு சுட்டுவீழ்த்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விசேட அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைக்கு நாடு இவ்வளவு மோசமான நிலைக்கு வந்திருக்கின்ற நிலையில் கூட சுகாதார பிரிவினர் நாளுக்குநாள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்,நாட்டை குறிப்பிட்ட ஒரு நீண்டகாலத்திற்கு முடக்கவேண்டும் என்ற கோரிக்கை அவர்களிடமிருந்து வெளியாகின்றது. ஆனால் அரசாங்கம் அதற்கு செவிமடுக்காமல் தங்கள் நலனிற்காக மாறுபட்ட தீர்மானங்களை எடுத்துவருகின்றது,சென்றவருடமே இ;ந்த தொற்று ஆரம்பமானவேளை- இதனை கட்டுப்படுத்தவதற்கு போதிய சட்டங்கள் சரியான சட்டங்களை இயற்றவேண்டும், இதற்காக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என சகல எதிர்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன அதற்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.புதிய நாடாளுமன்றம் உருவாகி ஒரு வருடகாலமாகின்ற போதிலும் இன்னும் அவ்வாறான சட்டங்கள் இயற்றப்படவில்லை.

அரசாங்கம் அதிலே முன்னின்று செயற்பாடாதன் காரணமாக ஒரு தனிநபர் சட்டமூலத்தை நான் நாடாளுமன்றத்திலே கொண்டுவந்தேன்.அதனையாவது நிறைவேற்றுங்கள் என நான் பல தடவை நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம் ஆனால் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்க மறுகின்றது.ஏனென்றால் அவ்வாறான சட்டமொன்றை இயற்றினால் சட்டத்தின் ஆட்சி நாட்டிலே இருக்கும், இதை குறித்து தீர்மானம் எடுக்கவேண்டியவர்கள் அந்த தீர்மானங்களை எடுப்பார்கள், இராணுவம் அதற்குஉதவலாம் ஆனால் தீர்மானத்தை எடுப்பவர்கள் அதற்கு உரியவர்களாகயிருக்கவேண்டும் அரசாங்கம் அதற்கு உரிய இடத்தை வழங்கவேண்டும்.இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு நாடு முற்றாக முடக்கப்படவேண்டும்,என்ற கருத்து சுகாதார பிரிவினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.அரசாங்கம் அதற்கு செவிசாய்த்து அவ்வாறான நடவடிக்கையை அமுல்படுத்தவேண்டும்.பொதுமக்களிற்கும் ஒரு கோரிக்கை அரசாங்கம் நாட்டை முடக்காவிட்டாலும் உங்களுடைய சொந்த பாதுகாப்பினை கருத்தில்கொண்டு நீங்களாவது வீடுகளிற்கு உள்ளே முடங்கியிருங்கள்.

நாளுக்குநாள் இறக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குகின்றது, தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.அரசாங்கம் மக்களிற்கு தெரிவிக்கும் தகவல் தவறானது மிகவும் குறைந்த தொகையையே அரசாங்கம் தெரிவிக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு நாங்கள் வருவதற்கு அரசாங்கம் தான் பிரதான காரணமாக காணப்படுகின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.(15)
 

 

http://www.samakalam.com/ஒரு-எதிரியோடு-போரிடுவது/

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

இராணுவத்தினரை வைத்துவைரஸ்பரவலை தடுக்கலாம் என அரசாங்கமும் ஜனாதிபதியும்நினைத்தது பெருந்தவறு

இலங்கை இராணுவத்தின் அறிவு, செயற்பாடு எல்லாவற்றிலும் தோல்வி என்பது இரண்டாவது தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொதுமக்களிற்கும் ஒரு கோரிக்கை அரசாங்கம் நாட்டை முடக்காவிட்டாலும் உங்களுடைய சொந்த பாதுகாப்பினை கருத்தில்கொண்டு நீங்களாவது வீடுகளிற்கு உள்ளே முடங்கியிருங்கள்.

கோவில் திருவிழாக்களும் திருமண நிகழ்வுகளும் அரசாங்க ஏற்பாட்டில் தானே நடக்கினறன். அங்கே கூடும் பக்தர்களையும்
மக்களையும் அரச செலவில் தானே அழைத்து வருகின்றார்கள் .😞

 

1 hour ago, கிருபன் said:

இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு நாங்கள் வருவதற்கு அரசாங்கம் தான் பிரதான காரணமாக காணப்படுகின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.


 

கோவிட் தொடர்பாக  விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டில் உங்கள் பங்கு எந்த நிலைமையில் இருந்தது... இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

இலங்கை இராணுவத்தின் அறிவு, செயற்பாடு எல்லாவற்றிலும் தோல்வி என்பது இரண்டாவது தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

முதல் தடவை எப்ப நிரூபிக்கப் பட்டது? (வடிவாக யோசித்துச் சொல்லுங்கோ!)😉

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இலங்கை இராணுவத்தின் அறிவு, செயற்பாடு எல்லாவற்றிலும் தோல்வி என்பது இரண்டாவது தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

56 minutes ago, Justin said:

முதல் தடவை எப்ப நிரூபிக்கப் பட்டது? (வடிவாக யோசித்துச் சொல்லுங்கோ!)😉

இலங்கையில் இராணுவமே இல்லையாம், யோசிப்பதற்கு என்ன உள்ளது.? 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இலங்கை இராணுவத்தின் அறிவு, செயற்பாடு எல்லாவற்றிலும் தோல்வி என்பது இரண்டாவது தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் சொல்லவது உண்மை தான். அதுவும் வெகு குறுகிய காலத்தில்.

1. கொரோனா விடயம்.

2. ஆப்கானிஸ்தானில் தலிபான்களை புலிகள் பாணியில் வீழ்த்துவோம் விடயம்.. ஆப்கானிஸ்தானுக்கு கோத்தா வழங்கிய ஆலோசனையின் உச்சம்.. ஆப்கானிஸ்தான் சனாதிபதி.. உப சனாதிபதி எல்லாம் நாட்டை விட்டு ஓட்டம். ஆப்கானிஸ்தான்.. முழுவதும் தலிபான்களின் கைகளுக்குள் வரும் நிலை சமர் தொடங்கி சில வாரங்களுக்குள்.

சோவியத் வெளியேறிய போது கூட இந்த வேகம் இருக்கவில்லை.. அமெரிக்கா வெளியேறி சில வாரங்களுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம். மேற்குலகின் இராணுவ கொள்கைகளுக்கு மிக மோசமான தோல்வியை தலிபான்கள் கொடுத்திருக்கினம்..!  விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில்.. புலிகளாய் போய் வீழ்ந்தது தான் நடந்திருக்குது என்பது வெளிப்படையாகிவிட்டது. அதில் சொறீலங்கா இராணுவம்.. வெற்றிக் கோசம்.. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை தான்.. ஆனால் ஒரு இன அழிப்பை செய்துவிட்டு.. கூட்டு பயிற்சி செய்தவர்களின் கொட்டத்தை தலிபான்கள் தனியா அடக்கிவிட்டார்கள் என்பதில்.. ஆச்சரியம் தான். 

இப்ப பைடனும் நெருக்கடியில்.. பொரிஸும் நெருக்கடியில். இதுக்குத்தானா எங்கள் பிள்ளைகளை கணவன்மாரை ஆப்கானிஸ்தான் அனுப்பி கொன்றீர்கள் என்று மக்கள் கேக்க ஆரம்பித்து விட்டார்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் மக்காள்! நமக்குக் காண்டு இருக்கிற அமெரிக்காக் காரனைச் சுத்தி விட்டார்கள் என்ற புழுகத்தில் மனிதகுலத்திற்கே எதிரிகளான தலிபான்களை ஆதர்ச புருஷர்களாக ஏற்றுக் கொண்டு விடாதீர்கள்! பிறகு நா.க.த வைக் கூட நாட்டை விட்டுக் கலைத்து விடுவார்கள்! 😂

  • கருத்துக்கள உறவுகள்

2 பேர் மற்றும் நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் இன் கார்ட்டூனாக இருக்கக்கூடும்

Cartoon by Wasantha Siriwardena

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

முதல் தடவை எப்ப நிரூபிக்கப் பட்டது? (வடிவாக யோசித்துச் சொல்லுங்கோ!)😉

ம்கும் இப்ப்டி திடீர் என்று கேட்டால் என்னத்த மனுசன் சொல்லுவார் 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் பாத்து பாத்து ஓடியவர்களை இந்தியாவும், மற்றைய நாடுகளும் அழைத்து நடத்திய போரை தாங்கள் செய்ததாக வீராப்பு காட்டிவிட்டு, பின் உண்மையை ஒத்துக்கொண்டு அந்தந்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்து, உங்களின் உதவி இல்லாமல் இந்த போரை நாம் வென்றிருக்க முடியாது என்று இப்போதும் கூறுகிறார்கள். அந்த கணக்கில தான் கொரோனாவுக்கும் சவால் விட்டார்கள். இப்போ யாரும் கைகொடுக்க வரவில்லை தடுமாறுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

கவனம் மக்காள்! நமக்குக் காண்டு இருக்கிற அமெரிக்காக் காரனைச் சுத்தி விட்டார்கள் என்ற புழுகத்தில் மனிதகுலத்திற்கே எதிரிகளான தலிபான்களை ஆதர்ச புருஷர்களாக ஏற்றுக் கொண்டு விடாதீர்கள்! பிறகு நா.க.த வைக் கூட நாட்டை விட்டுக் கலைத்து விடுவார்கள்! 😂

அது மட்டுமல்ல தமிழிச்சிகள் பாடசாலை வேலைக்கு போகாமல் புர்க்காவுடனும் வீட்டிற்குள் இருக்க வேண்டியும் தமிழன்கள் நீண்ட தாடியுடன் திரிய வேண்டிவரும் 😟

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

கவனம் மக்காள்! நமக்குக் காண்டு இருக்கிற அமெரிக்காக் காரனைச் சுத்தி விட்டார்கள் என்ற புழுகத்தில் மனிதகுலத்திற்கே எதிரிகளான தலிபான்களை ஆதர்ச புருஷர்களாக ஏற்றுக் கொண்டு விடாதீர்கள்! பிறகு நா.க.த வைக் கூட நாட்டை விட்டுக் கலைத்து விடுவார்கள்! 😂

நீங்கள் யாழ்வாசிகளை ஒருவிதமான மாயைக்குள் வைத்திருக்க விரும்புகிறீர்கள் ஆனால்  உங்களையும் உங்கள் கருத்துக்களுக்கும் மாறாகவும் உலகம் வெகு வேகமாக ஓடதொடங்கிவிட்டது அங்கு தலிபானுடன் உறவு வைத்துக்கொள்ள சைனாவும் ரஸ்யாவும் ஒத்தைக்காலில் நிக்கினம் என்ற வியப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன நீங்க என்னடானா பழைய உரலை இடித்து கொண்டு இருக்கிறீர்கள் .

https://www.trtworld.com/asia/china-open-to-deepening-taliban-ties-as-russia-keeps-diplomatic-comms-open-49219

இதற்க்கு பிறகும் வந்து பெற்றோமாக்ஸ் வேணுமெண்டால் ஒன்றும் செய்ய இயலாது .🤣 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2021 at 05:23, Paanch said:

இலங்கையில் இராணுவமே இல்லையாம், யோசிப்பதற்கு என்ன உள்ளது.? 

 

 

சிவாஜிலிங்கம் எங்கை விளக்கேத்துகிறார்? பாதிரிமார் எங்கை நினைவுக்கல் வைக்கினம்? என்று திரிந்து விளக்கேத்துகிற கையை தட்டிவிடவும், கற்களை களவெடுக்கவும், நினைவுத்தூபிகளை உடைக்கவும் அலையினமே அன்றி கொரோனாவை கட்டுப்படுத்தவல்ல. வெளிநாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த என்று இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன. இவர்களோ சிறுபான்மையினரை அடக்கவும், அடிமைப்படுத்தவும் கொரோனவை பயன்படுத்துகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2021 at 04:17, Justin said:

முதல் தடவை எப்ப நிரூபிக்கப் பட்டது? (வடிவாக யோசித்துச் சொல்லுங்கோ!)😉

இன அழிப்பு இலங்கை இராணுவத்தை நான் சொன்னால் தங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் பொத்துக்கொண்டு வருகுது? ஏதோ அவர்கள் செய்யாததை நான் சொன்னதுபோல் விளக்கம் கேட்டு, வியாக்கியானம் செய்து கொண்டு பலபேர்....... ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.