Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2  குழாய்கிணறுகளின் வேலைகளும்  பூர்த்தி  செய்யப்பட்டன.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2  குழாய்கிணறுகளின் வேலைகளும்  பூர்த்தி  செய்யப்பட்டன.

அம்மாவின் திவசம் மற்றும் பெரியக்காவின் 75வது பிறந்தநாள் சார்ந்த  உதவிகளின் படி

2 குழாய்க்கிணறுகளை செய்வதற்கான காலம் ஆனி என கணிக்கப்பட்டது.

அதாவது இதற்கு  முன்னர்  தண்ணீருக்கான  துவாரம் போடும் போது

மழைத்தண்ணீர்  மேலே நிற்பதால் தண்ணீரை தொடர்ந்து பெற முடியாது  போய் விடும்  என்பதால் 

தண்ணீர் கீழிறங்கும்வரை  பொறுக்கவேண்டியதாயிற்று.

ஆனால் அதற்கிடையில் கொரோனா  காரணமாக உள்ளிருப்பு  அறிவிக்கப்பட்டதால்

மேலும் தள்ளிப்போடவேண்டி  வந்து  விட்டது.

ஆனாலும் இனியும் தாமதித்தால் 

மீண்டும்  மழை வந்தால்  மீண்டும் ஒரு  வருடம்  தோண்டமுடியாது போய் விடும்  என்பதால்

கொரோனா உள்ளிருப்பு  காலத்தில்  ஏற்பட்ட விலையேற்றத்தையும் பாராமல் வேலைகளை முடிக்க முயற்சிக்கும்படி நான்கேட்டுக்கொண்டதற்கு  இணங்க

எமது  ஏற்கனவே கணிப்பிடப்பட்ட 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 

1 லட்சத்து 56ஆயிரம் ரூபாயாக ஒரு குழாய்க்கிணற்றுக்கான  செலவு செய்யப்பட்டு

120 அடி ஆளத்துக்கு குழி  தோண்டப்பட்டு

2  குழாய்கிணறுகளும் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 குழாய்க்கிணறுகளாலும்

அந்த  சுற்றுவட்டாரத்தில்  உள்ள 10 குடும்பங்களுக்கு  மேல் பயன்  பெறமுடியும்  என்று அறிந்தபோது  மட்டற்ற மகிழ்ச்சி.

 

அத்துடன் இங்கிருந்து  ஒரு பார்சலும் அனுப்பியிருந்தேன்

அதுவும்  கிடைக்கப்பெற்றுள்ளது.

200 கோழிகள்

20 சேவல்கள்.

2 குழாய்க்கிணறுகள் மற்றும் பணம் பொருட்கள் என கிட்டத்தட்ட 1 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது மட்டுமன்றி
 
அதை அது சம்பந்தமாக படித்து பட்டம் பெற்றவர்களைக்கொண்டு திறமாக நிர்மானித்து
 
உடனடியான பலன்களை அவர்கள் பெறும் வகையில் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
(குழாய்க்கிணறுக்கான இன்னும் சில பூச்சு வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.)
 

(விீடியோக்களை இணைக்கமுடியவில்லை.  அதனால் படங்கள்  மட்டும்)

நன்றி

 

IMG-20210924-WA0011.jpg

 

 

IMG-20210427-175412.jpg

 

IMG-20210924-WA0021.jpg

 

 
242662469_385114069728734_58878106246470
play_72dp.png
242697860_1744693765727186_5706158259574
play_72dp.png
242817675_1202744826906241_4035038034909
play_72dp.png
242635917_547649793206497_37724377980658
play_72dp.png
 
 
 
 
 
 
 
 

 

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • விசுகு changed the title to 2  குழாய்கிணறுகளின் வேலைகளும்  பூர்த்தி  செய்யப்பட்டன.
  • கருத்துக்கள உறவுகள்

பிழை திருத்தம் இன்னும் இருக்கிறது👋✍️⤴️

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணை, எந்த இடம் என்று சொல்லவில்லை!
யாழ்ப்பாணமா இருக்காது, இவ்வளவு ஆழம் போனால் சவர் தண்ணி தான் வரும். வன்னி என்று தான் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

வாழ்த்துக்கள் அண்ணை, எந்த இடம் என்று சொல்லவில்லை!
யாழ்ப்பாணமா இருக்காது, இவ்வளவு ஆழம் போனால் சவர் தண்ணி தான் வரும். வன்னி என்று தான் நினைக்கிறேன்.

 

நன்றி சகோ

ஆட்களையோ

இடத்தையோ வெளியிட விரும்பவில்லை

ஆனால் நீங்கள்  குறிப்பிடுவதும்  உண்மை தான்

வேறு  ஆட்களுக்கு பயன்படட்டும்

இடம் கிளிநொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

@விசுகு நீங்கள் ஒரு தனிமனித தொண்டு நிறுவனம் அண்ணை. நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

@விசுகு நீங்கள் ஒரு தனிமனித தொண்டு நிறுவனம் அண்ணை. நன்றி.

 

நன்றி தம்பி

இது போன்ற விடயங்களை  செய்யும்போது

அதை முழுமையாக  நிறைவேற்ற பல சிரமங்களுக்கும் மேலதிக நாம்  எதிர்பார்க்காத செலவுகளுக்கும் நாம்  ஆளாவோம். நான் இதற்கு தயாராக  இருப்பதனாலேயே இவற்றை  திறம்பட சரியான  முறையில்செய்யமுடிகிறது (உதாரணமாக  இவர்களுக்கு ஒரு  பார்சலும் அனுப்பி உதவலாம்  என  நான்  தொடங்கி  பட்ட பாடும் அதனால்  வந்த செலவுகளும் உடல்உபாதைகளும் சொல்லி  மாளா?)

அதனால்  தான் பலரும் இவற்றை பொறுப்பெடுக்க பின் நிற்கிறார்கள்

ஆனால் ஒருத்தரும்  பொறுப்பெடுத்து செய்யாதுவிட்டால்???

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

 

நன்றி தம்பி

இது போன்ற விடயங்களை  செய்யும்போது

அதை முழுமையாக  நிறைவேற்ற பல சிரமங்களுக்கும் மேலதிக நாம்  எதிர்பார்க்காத செலவுகளுக்கும் நாம்  ஆளாவோம். நான் இதற்கு தயாராக  இருப்பதனாலேயே இவற்றை  திறம்பட சரியான  முறையில்செய்யமுடிகிறது (உதாரணமாக  இவர்களுக்கு ஒரு  பார்சலும் அனுப்பி உதவலாம்  என  நான்  தொடங்கி  பட்ட பாடும் அதனால்  வந்த செலவுகளும் உடல்உபாதைகளும் சொல்லி  மாளா?)

அதனால்  தான் பலரும் இவற்றை பொறுப்பெடுக்க பின் நிற்கிறார்கள்

ஆனால் ஒருத்தரும்  பொறுப்பெடுத்து செய்யாதுவிட்டால்???

இங்கே இருந்து கொண்டு ஊரில ஒரு பத்தைய வெளியாக்கிற, இங்க ஒரு வீட்டை கட்டி முடிக்கிற மாரி. நீங்கள் என்ன பாடு பட்டிருப்பியள் என்பது விளங்குது🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க அன்பும் நன்றியும் அண்ணை..🙏🙏 கஸ்ரப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோசம் மது மாது செல்வம் இதனால் வரும் மகிழ்ச்சியை போலில்லாமல் வித்தியாசமாக இருக்கும்.. அதாவது இதில்தான் மனதுக்கு அமைதியும் சாந்தமும் இனம்புரியாத தெய்வீகநிலையும் ஏற்படும்.. இதை நான் முதன் முதல் ஒரு கஸ்ரப்பட்ட ஒருபையன் எனக்கு தெரிஞ்சவன் சாதிமாறிக்கட்டியதால் ஒருவீட்டிலும் அண்டுவதில்லை அவனுக்கு ஊர்க்காசு ஒரு பத்தாயிரம் அனுப்பின்னான் ரெண்டு மூண்டு நாளயாலை கோழிகுஞ்சு அடைவச்சு பொரிக்குற இங்குபேட்டர் வாங்கி அந்த படமும் அனுப்பி இருந்தான்.. ஒரு மாதத்தால கோழிக்குஞ்சு படம் அனுப்பினான்.. அப்பதான் இந்த போதைக்குநான் அடிமையான நான்.. இப்ப நான் வாழ்க்கை இறப்பு அதன்பின் எதுவும் இல்லை எண்டதை எல்லாம் புரிஞ்சுகொண்டபோது ஒரே விரக்தியில் இருந்தானான்.. அதில இருந்து மீண்டுவர இந்த போதையும் பெரிதும் உதவினது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்........  🙏  🙏

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்  விசுகு🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 02:22, விசுகு said:

 

நன்றி தம்பி

இது போன்ற விடயங்களை  செய்யும்போது

அதை முழுமையாக  நிறைவேற்ற பல சிரமங்களுக்கும் மேலதிக நாம்  எதிர்பார்க்காத செலவுகளுக்கும் நாம்  ஆளாவோம். நான் இதற்கு தயாராக  இருப்பதனாலேயே இவற்றை  திறம்பட சரியான  முறையில்செய்யமுடிகிறது (உதாரணமாக  இவர்களுக்கு ஒரு  பார்சலும் அனுப்பி உதவலாம்  என  நான்  தொடங்கி  பட்ட பாடும் அதனால்  வந்த செலவுகளும் உடல்உபாதைகளும் சொல்லி  மாளா?)

அதனால்  தான் பலரும் இவற்றை பொறுப்பெடுக்க பின் நிற்கிறார்கள்

ஆனால் ஒருத்தரும்  பொறுப்பெடுத்து செய்யாதுவிட்டால்???

நல்ல விடயம் உங்கள் செயல் தொடர வாழ்த்துக்கள் ....
ஊரில் உள்ள சில இளைஞர்கள் (யூடியுப் பதிவு போடும் இளைஞர்கள் ) சில புலம் பெயர் உறவுகளின் உதவியினுடாக பல நல்ல செயல்களை செய்கின்றனர் ...குழாய் கிணறு செய்தல் ...உலர் உணவு வழங்குதல்..மரம் நடுதல் 

On 28/9/2021 at 08:55, பாலபத்ர ஓணாண்டி said:

மிக்க அன்பும் நன்றியும் அண்ணை..🙏🙏 கஸ்ரப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோசம் மது மாது செல்வம் இதனால் வரும் மகிழ்ச்சியை போலில்லாமல் வித்தியாசமாக இருக்கும்.. அதாவது இதில்தான் மனதுக்கு அமைதியும் சாந்தமும் இனம்புரியாத தெய்வீகநிலையும் ஏற்படும்.. இதை நான் முதன் முதல் ஒரு கஸ்ரப்பட்ட ஒருபையன் எனக்கு தெரிஞ்சவன் சாதிமாறிக்கட்டியதால் ஒருவீட்டிலும் அண்டுவதில்லை அவனுக்கு ஊர்க்காசு ஒரு பத்தாயிரம் அனுப்பின்னான் ரெண்டு மூண்டு நாளயாலை கோழிகுஞ்சு அடைவச்சு பொரிக்குற இங்குபேட்டர் வாங்கி அந்த படமும் அனுப்பி இருந்தான்.. ஒரு மாதத்தால கோழிக்குஞ்சு படம் அனுப்பினான்.. அப்பதான் இந்த போதைக்குநான் அடிமையான நான்.. இப்ப நான் வாழ்க்கை இறப்பு அதன்பின் எதுவும் இல்லை எண்டதை எல்லாம் புரிஞ்சுகொண்டபோது ஒரே விரக்தியில் இருந்தானான்.. அதில இருந்து மீண்டுவர இந்த போதையும் பெரிதும் உதவினது..

உண்மை ....அந்த போதை மனதிருப்தியை தருவது உண்மையே 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2021 at 16:44, விசுகு said:

 

நன்றி சகோ

ஆட்களையோ

இடத்தையோ வெளியிட விரும்பவில்லை

ஆனால் நீங்கள்  குறிப்பிடுவதும்  உண்மை தான்

வேறு  ஆட்களுக்கு பயன்படட்டும்

இடம் கிளிநொச்சி

நன்றி பாராட்டுகள்  வாழ்த்துக்கள் வட்டக்கச்சி  போல் தெரியுது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.