Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளதாகவும் ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

Kamzy_Gunaratnam.jpg

கேள்வி : இலங்கை தமிழர்கள் தமக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இன்னமும் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள் ?

பதில் : இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பலர் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மீண்டும் அதனை சரி செய்வது இலகுவானதல்ல. எனினும் இலங்கை மக்கள் தமக்கான தீர்வை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதனை எம்மால் கூற முடியாது. இலங்கை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற பாதையை அமைத்துக் கொடுப்பது அந்நாட்டு மக்களின் கைகளிலேயே உள்ளது.

என்னால் இங்கிருந்து அதற்கான வழிகளைக் கூற முடியாது. மாறாக எனது பயிற்சிகளை மாத்திரமே பகிர்ந்து கொள்ள முடியும். எனவே மக்கள் அது தொடர்பான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அரசியலில் ஈடுபட வேண்டும்.

கேள்வி : இலங்கை தமிழ் மக்கள் தங்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஈடுபாடு மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ?

பதில் : நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்தும் பேணும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்பதை தற்போது விளக்கமாகக் கூற முடியாது. எனினும் யுத்த குற்ற விசாரணைகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளை முன்னெடுக்காமல் எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. நல்லிணக்கம் , வெளிப்படைதன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

எனவே நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்வதோடு , இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு விடயங்களையும் நான் வலியுறுத்துகின்றேன். யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும். காரணம் சகலருக்கும் உண்மையை கண்டறிதலே தேவையாகவுள்ளது.

கேள்வி : இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கை வம்சாவளி நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான உங்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் ?

பதில் : இலங்கையின் விவகாரத்தில் சர்வதேச ரீதியில் சில விடயங்களைச் செய்ய முடியும். ஆனால் இலங்கையிலுள்ள மக்களே இதில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். சமூகம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் சர்வதேசம் என்ற ரீதியில் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளன. அதற்கமைய இலங்கையுடனான நட்புறவை தொடர்தல் மற்றும் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.

கேள்வி : புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில் : கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன். அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.

கேள்வி : யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நீங்கள் , அவை உள்வாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது வெளிவாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

பதில் : வெளிவாரியான யுத்த குற்ற விசாரணைகளையே நாம் வலியுறுத்துகின்றோம். உள்வாரி விசாரணைகளை வைத்து என்ன செய்வது? இலங்கை அரசாங்கம் தவறிழைத்திருந்தால் அதனை அவர்களே விசாரணை செய்வது பொறுத்தமானதாக இருக்குமா?

கேள்வி : இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் ஆவர். எனவே அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் சில நெருக்கடிகள் உள்ளன. இது குறித்து உங்கள் நிலைப்பாடு?

பதில் : இலங்கையில் வெளிப்படை தன்மையான ஜனநாயகம் காணப்படுகிறது என்பதை காண்பிப்பதற்கு அரசாங்கம் சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் அதுவும் பாரியதொரு குற்றமாகவே கருதப்படும். இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி | Virakesari.lk

  • 2 weeks later...
  • Replies 53
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இணைக்க அரசியல் யாரையும் விட்டு வைப்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2021 at 19:23, பிழம்பு said:

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன்.

மிகச்சிறப்பு. உண்மையான அரசியல்வாதி இவர்தான்.

 

மக்கள் தங்களையும் தங்கள் வலுவையும் சுயமதிப்பீடு செய்யும்வரை  சம்பந்தர் - டக்ளஸ் - கம்சாயினியென்று பட்டியல் நீளவே செய்யும்.  

  • கருத்துக்கள உறவுகள்+

//முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன்.//


பெண்களுக்கு அரசியல் அதிகாரமா? உலகின் முதலாவது பெண் முதன்மை அமைச்சர்(PM) சிறிமாவோ பண்டாரநாயக்கா என்பது நினைவிருக்கட்டும், மக்களே! 
கடவுளே... 🥱🥱🥱 

 

 

//அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.//

பால் நிலை சமத்துவமா?🤣🤣 
ஐயோ... இந்த மாதிரி ஒன்டை எங்களுக்காகப் பேசும் என்டு எதிர் பார்த்த ஆக்கள் ஆரேனும் இருந்தால் இண்டையோட அந்த நிலைப்பாட்டை குப்பையில் போடவும். இதுவும் பண்டியோடு🐽 சேர்ந்த கன்டே!🐷🐷

 

 

//இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.//

****

 

 

Edited by நியானி
மீம்ஸ் நீக்கப்பட்டுள்ளது

இவர் தன்னை முழுவதுமாக தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு, தான் தமிழர் வாக்குகள் இன்றியே இனி வெற்றி பெறுவேன் என்று கூறிவிட்டார். இவரைநோக்கிநோர்வாத் தமிழர்கள் இனிப் போராட்டங்களை நடாத்த வேண்டும். இவர் முற்று முழுதாகவேநோர்வே அரசின் முகவராகத் தொழிற்படத் தொடங்கி விட்டர். இவரின் இப் பேட்டியை கொழும்புநோர்வேத் தூதரகமே ஒழுஙகமைதுள்ளது. இதைநோர்வாத் தமிழர்கள் இவரின் குடும்ப உறவுகள் மூலமாவது சொல்லி அவர் போகும் பாதை தவறானது என்று சொல்லி வழி காட்ட வேண்டும். இவர் தமிழ் இளைய்யொர் அமைப்பின் செயற்பாட்டளாராக இருந்து அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர். இப்பொது ஏறி வந்த ஏணியய்த் தூக்கி எறிந்து விட்டடார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நன்னிச் சோழன் said:

//முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன்.//


பெண்களுக்கு அரசியல் அதிகாரமா? உலகின் முதலாவது பெண் முதன்மை அமைச்சர்(PM) சிறிமாவோ பண்டாரநாயக்கா என்பது நினைவிருக்கட்டும், மக்களே! 
கடவுளே... 🥱🥱🥱 

 

 

//அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.//

பால் நிலை சமத்துவமா?🤣🤣 
ஐயோ... இந்த மாதிரி ஒன்டை எங்களுக்காகப் பேசும் என்டு எதிர் பார்த்த ஆக்கள் ஆரேனும் இருந்தால் இண்டையோட அந்த நிலைப்பாட்டை குப்பையில் போடவும். இதுவும் பண்டியோடு🐽 சேர்ந்த கன்டே!🐷🐷

 

 

//இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.//

No photo description available.

 

 

 

 

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

😂Kamzy_Gunaratnam.jpg😂

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

நன்னிச்  சோழன், 
போர் நடந்த காலத்தில்... ராதிகா குமாரசாமி என்ற பெண்மணியை தெரியுமா?
மனித உரிமை மீறல், சிறுவர்கள்... புலிகளில் உள்ளார்கள் என்று,
சின்னக் கதிர்காமி போல்... கூவிக்  கொண்டு திரிந்தவர்.

இவரின் கருத்தைப் பார்க்க, அவரின் நினைவு வந்தது.
ராதிகாவின்.. படம் இருந்தால், இணைத்து விடுங்கள்.
ஒப்பிட்டுப் பார்க்க, வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

RC.jpg

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

Radhika Coomaraswamy

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மணி தவறாக ஏதும் கூறவில்லையே... 

சாதா காக்கைகளைப் போல பறந்து பறந்து  கத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனரோ..☹️

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, தமிழ் சிறி said:

நன்னிச்  சோழன், 
போர் நடந்த காலத்தில்... ராதிகா குமாரசாமி என்ற பெண்மணியை தெரியுமா?
மனித உரிமை மீறல், சிறுவர்கள்... புலிகளில் உள்ளார்கள் என்று,
சின்னக் கதிர்காமி போல்... கூவிக்  கொண்டு திரிந்தவர்.

இவரின் கருத்தைப் பார்க்க, அவரின் நினைவு வந்தது.
ராதிகாவின்.. படம் இருந்தால், இணைத்து விடுங்கள்.
ஒப்பிட்டுப் பார்க்க, வாசகர்களுக்கு இலகுவாக இருக்கும்.

 

இல்லை சிறி அவர்களே... நான் இப்போதுதான் முதற்தடவையாக கேள்விப்படுகிறேன், இப்பெண்மணி பற்றி! 

நொச்சி அவர்கள் இணைத்துள்ளார், இதுவாவெனப் பாருங்கள். எனக்கு இவ பற்றித் தெரியாது. (அப்போது நான் குழந்தை; இணையத்தள வசதியற்ற இடத்தில் வேறு இருந்தேன்.)

 

 

2 hours ago, nochchi said:

RC.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

 

இல்லை சிறி அவர்களே... நான் இப்போதுதான் முதற்தடவையாக கேள்விப்படுகிறேன், இப்பெண்மணி பற்றி! 

நொச்சி அவர்கள் இணைத்துள்ளார், இதுவாவெனப் பாருங்கள். எனக்கு இவ பற்றித் தெரியாது. (அப்போது நான் குழந்தை; இணையத்தள வசதியற்ற இடத்தில் வேறு இருந்தேன்.)

நன்னிச்  சோழன்....
நொச்சி, சொன்னது சரியே....

இந்தப் பெண்மணி தான்...
உலகமெல்லாம்... பறந்து திரிந்து, 
புலிகளில்... சிறுவரை, சேர்க்கிறார்கள் என்று...
"லிப்ஸ்டிக்"  பூசின, வாயால்.... பொய்  செய்தி பரப்பியது.

அந்த, நேரம்.... இது, யாழ். களத்திலும்.... விவாத பொருளாகி,
இளம் பிக்குகள்... புத்த சமயத்தில், இருப்பதை...
இவ,  கண்டு கொள்ள மாட்டாவோ... என்று, பலரும் விவாதித்தார்கள்.

அதன்... சாட்சியாக, இன்றும் பல, யாழ்.கள  உறுப்பினர்கள் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
4 minutes ago, தமிழ் சிறி said:

நன்னிச்  சோழன்....
நொச்சி, சொன்னது சரியே....

இந்தப் பெண்மணி தான்...
உலகமெல்லாம்... பறந்து திரிந்து, 
புலிகளில்... சிறுவரை, சேர்க்கிறார்கள் என்று...
"லிப்ஸ்டிக்"  பூசின, வாயால்.... பொய்  செய்தி பரப்பியது.

அந்த, நேரம்.... இது, யாழ். களத்திலும்.... விவாத பொருளாகி,
இளம் பிக்குகள்... புத்த சமயத்தில், இருப்பதை...
இவ,  கண்டு கொள்ள மாட்டாவோ... என்று, பலரும் விவாதித்தார்கள்.

அதன்... சாட்சியாக, இன்றும் பல, யாழ்.கள  உறுப்பினர்கள் உள்ளார்கள்.

எங்கட இனத்தில புல்லுருவிகள் மிதமிஞ்சிப் போயிருக்கிறது, வேறொன்றுமில்லை...
இப்ப அந்த எண்ணிக்கையில இன்னொண்டு கூடுதலாக சேர்ந்திருக்கிறது!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நன்னிச் சோழன் said:

எங்கட இனத்தில புல்லுருவிகள் மிதமிஞ்சிப் போயிருக்கிறது, வேறொன்றுமில்லை...
இப்ப அந்த எண்ணிக்கையில இன்னொண்டு கூடுதலாக சேர்ந்திருக்கிறது!

 

 

இந்தப் பெண் என்ன விதமான பதிலைக் கூறியிருக்க வேண்டும் என்கிறீர்கள் ? 

இராதிகா சிற்சபேசன் போல, தன்வாயால் கெட்டு, எங்களின் குரல் கனேடிய நாடாளுமன்றத்தில்  அறவே இல்லாமல் போனது போல போகவேண்டும் என்கிறீர்களோ? 

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, Kapithan said:

இந்தப் பெண் என்ன விதமான பதிலைக் கூறியிருக்க வேண்டும் என்கிறீர்கள் ? 

இராதிகா சிற்சபேசன் போல, தன்வாயால் கெட்டு, எங்களின் குரல் கனேடிய நாடாளுமன்றத்தில்  அறவே இல்லாமல் போனது போல போகவேண்டும் என்கிறீர்களோ? 

கப்பித்தன் அவர்களே... சமரசத்திற்கு ஒத்துக்கொண்ட பின்னர் இவரிடம் இருந்து நாங்கள் எதை எதிர்பார்க்க முடியும்?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2021 at 13:23, பிழம்பு said:

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் நிச்சயம் போர் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை எனில் அதுவே பாரியதொரு குற்றமாக கருதப்படும் என்று நோர்வே பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளதாகவும் ஹம்ஷாயினி குணரத்னம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

Kamzy_Gunaratnam.jpg

கேள்வி : இலங்கை தமிழர்கள் தமக்கான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இன்னமும் சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை நீங்கள் எவ்வாறு அவதானிக்கிறீர்கள் ?

பதில் : இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் பலர் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். மீண்டும் அதனை சரி செய்வது இலகுவானதல்ல. எனினும் இலங்கை மக்கள் தமக்கான தீர்வை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதனை எம்மால் கூற முடியாது. இலங்கை எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற பாதையை அமைத்துக் கொடுப்பது அந்நாட்டு மக்களின் கைகளிலேயே உள்ளது.

என்னால் இங்கிருந்து அதற்கான வழிகளைக் கூற முடியாது. மாறாக எனது பயிற்சிகளை மாத்திரமே பகிர்ந்து கொள்ள முடியும். எனவே மக்கள் அது தொடர்பான அரசியலை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது அரசியலில் ஈடுபட வேண்டும்.

கேள்வி : இலங்கை தமிழ் மக்கள் தங்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சர்வதேச ஈடுபாடு மிகவும் அவசியம் என்று கருதுகின்றனர். இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு ?

பதில் : நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்ந்தும் பேணும். ஆனால் அதனை எவ்வாறு செய்வது என்பதை தற்போது விளக்கமாகக் கூற முடியாது. எனினும் யுத்த குற்ற விசாரணைகள் நிச்சயம் இடம்பெற வேண்டும். அந்த விசாரணைகளை முன்னெடுக்காமல் எம்மால் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. நல்லிணக்கம் , வெளிப்படைதன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு இது மிகவும் அத்தியாவசியமானதாகும்.

எனவே நோர்வே இலங்கையுடனான நட்புறவை தொடர்வதோடு , இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு விடயங்களையும் நான் வலியுறுத்துகின்றேன். யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனில் தொடர்ந்து பயணிப்பது கடினமாகும். காரணம் சகலருக்கும் உண்மையை கண்டறிதலே தேவையாகவுள்ளது.

கேள்வி : இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சர்வதேச பொறிமுறையின் கீழ் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இலங்கை வம்சாவளி நோர்வே பாராளுமன்ற உறுப்பினரான உங்களின் பங்களிப்பு எவ்வாறு அமையும் ?

பதில் : இலங்கையின் விவகாரத்தில் சர்வதேச ரீதியில் சில விடயங்களைச் செய்ய முடியும். ஆனால் இலங்கையிலுள்ள மக்களே இதில் அதிக அவதானம் செலுத்த வேண்டும். சமூகம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் சர்வதேசம் என்ற ரீதியில் எமக்கும் பொறுப்புக்கள் உள்ளன. அதற்கமைய இலங்கையுடனான நட்புறவை தொடர்தல் மற்றும் யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற இரு நிலைப்பாட்டில் ஸ்திரமாகவுள்ளோம்.

கேள்வி : புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

பதில் : கலந்துரையாடலுக்கான எந்தவொரு அழைப்பினையும் நான் ஏற்றுக் கொள்வேன். நான் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவள் இல்லை. நான் நோர்வே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவராவேன். எவ்வாறிருப்பினும் யார் அழைப்பு விடுத்தாலும் அதனை ஏற்று கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு நான் தயாராகவுள்ளேன்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இலங்கைக்கு விஜயம் செய்து அவரை சந்தித்த போது பெண்களின் பிரச்சினைகள் , பெண்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கான முக்கியத்துவம் உள்ளிட்ட பெண்களுடன் தொடர்புடைய விடயங்களையே அவரிடம் வலியுறுத்தினேன். அதே போன்று தற்போதைய ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவரிடமும் அரசியலில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்துவேன்.

கேள்வி : யுத்த குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள நீங்கள் , அவை உள்வாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது வெளிவாரியானதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

பதில் : வெளிவாரியான யுத்த குற்ற விசாரணைகளையே நாம் வலியுறுத்துகின்றோம். உள்வாரி விசாரணைகளை வைத்து என்ன செய்வது? இலங்கை அரசாங்கம் தவறிழைத்திருந்தால் அதனை அவர்களே விசாரணை செய்வது பொறுத்தமானதாக இருக்குமா?

கேள்வி : இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையினத்தவர்கள் ஆவர். எனவே அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதிலும் சில நெருக்கடிகள் உள்ளன. இது குறித்து உங்கள் நிலைப்பாடு?

பதில் : இலங்கையில் வெளிப்படை தன்மையான ஜனநாயகம் காணப்படுகிறது என்பதை காண்பிப்பதற்கு அரசாங்கம் சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. யுத்த குற்ற விசாரணைகளை முன்னெடுப்பது மாத்திரமின்றி , சிறுபான்மையினரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பும் கடமையும் பெரும்பான்மையிருக்கும் இருக்கிறது. மேற்குலக நாடுகளில் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றால் அதுவும் பாரியதொரு குற்றமாகவே கருதப்படும். இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் என்மனதில் எப்போதும் இடமுண்டு.

இலங்கையின் யுத்த குற்ற விசாரணைகள் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஹம்ஷாயினி | Virakesari.lk

யதார்த்தம் புரிந்த பெண் போல் உள்ளது. பதில்கள் சிறப்பாக உள்ளன.

6 hours ago, narathar said:

இவர் தன்னை முழுவதுமாக தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு, தான் தமிழர் வாக்குகள் இன்றியே இனி வெற்றி பெறுவேன் என்று கூறிவிட்டார். இவரைநோக்கிநோர்வாத் தமிழர்கள் இனிப் போராட்டங்களை நடாத்த வேண்டும். இவர் முற்று முழுதாகவேநோர்வே அரசின் முகவராகத் தொழிற்படத் தொடங்கி விட்டர். இவரின் இப் பேட்டியை கொழும்புநோர்வேத் தூதரகமே ஒழுஙகமைதுள்ளது. இதைநோர்வாத் தமிழர்கள் இவரின் குடும்ப உறவுகள் மூலமாவது சொல்லி அவர் போகும் பாதை தவறானது என்று சொல்லி வழி காட்ட வேண்டும். இவர் தமிழ் இளைய்யொர் அமைப்பின் செயற்பாட்டளாராக இருந்து அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர். இப்பொது ஏறி வந்த ஏணியய்த் தூக்கி எறிந்து விட்டடார்.

உங்கள் கருத்தை பார்த்தால் நீங்கள் போராட்டம் நடாத்த வேண்டியது நோர்வே அரசுக்கு எதிராகவே. வளர்த்த கிடாய் மார்பில் பாய்ந்து விட்டதோ?

நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்தினத்தின் பேட்டி முழுவதும் வாசித்ததில் அவரது பதில்கள்  சிறப்பான கருத்துக்களாகவே தெரிகிறது. இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு அவர்களுக்கு உரித்தான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என தெளிவாக கூறியுள்ளார். போர்ககுற்ற விசாரணைகள் வெளிவாரியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இங்கு அவரை கரித்து கொட்டுபவர்கள் அவர் எந்த கேள்விக்கு தவறாக பதிலளித்தார் என்று கூறவேண்டும். அவர் எப்படி கூறி இருக்க வேண்டும் என்றும் கூற வேண்டும்.  நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்புணர்வுடன் பதிலளித்துள்ளார்.  

ஒரு பெண்ணாக பாலின சமத்துவத்தை அவர் வலியுறுத்தியது உலகில் வாழும் நாகரீக  அடைந்த மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தே. 

  • கருத்துக்கள உறவுகள்

1. இலங்கையில் தமிழர் ஒரு தேசியஇனம்.
2. தனித்துவமான மொழியையும்,  பண்பாட்டையும், வாழ்வியல் முறைகளையும் கொண்டவர்கள்.
3. இலங்கைத்தீவிலே 1918 முதல் 2002வரையான காலத்தில் ஏற்பட்ட எந்த ஒப்பந்தங்களையும்  சிங்களத்தரப்பு ஏற்று நடந்ததில்லை. 
4. எல்லா ஒப்பந்தங்களையும் தன்னைப் பலப்பபடுத்தவே சிங்களம் பயன்படுத்திமை வரலாறு. 
5. தமிழர்களைப் பிரிந்து சென்று தனிநாட்டைக் கோரும் நிலையை ஏற்படுத்தியது சிங்களம் என்பதே வரலாறு. 
6. தமிழர் சிறுபான்மையல்ல. அவர்கள் இலங்கைத் தீவின் சமபங்காளிகளாவர்.
7. தமிழரை ஒரு இனமாக ஏற்காத சிங்களம் சிறுபான்மையினருக்கு தாம் சமஉரிமையயை வழங்கியிருப்பதாகவே உலகெங்கும் பலமில்லியன் டொலர்களைச் செலவுசெய்து பரப்புரைசெய்து வருகிறது. 
8. அதனை மிகச்சிறப்பாக சிங்களத்தின் கொள்கையை  எந்தவொரு வரலாற்றுப் பார்வையுமற்று அப்படியே இந்த நோர்வே நாடாளுமன்றத்துக்குச் செல்லும் உறுப்பினர் சுட்டுவது தவறாகும்.  

 முதலிலே தமிழர்கள் தமது நிலையையும், தமக்கு இனத்துவ அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுவரும் அழிவுகளையும், இன்றுவரை வன்பறிப்புக்குள்ளாகும் தமிழர் பிரதேசங்கள் குறித்தும் தெளிவானதொரு பார்வையைக்கொண்டு செயற்படாதவரை தமிழினம் இலங்கைத் தீவிலிருருந்து சிங்கள சிறீலங்காவால் முற்றுமுழுதாக அழிக்கப்படும். 

அது நீர்கொழும்பில் தொடங்கி வவுனியா தெற்கு மணலாறு என விரிவடைந்து செல்ல இன்றும் சிங்களத்துக்கு முண்டுகொடுக்கும் தமிழரைத் எப்படி நோக்குவது. 

புலத்திலே உள்ள தமிழர்கள் அரசியல் ரீதியாக உதவமுடியுமாயின் தமது பதிவி கட்சி என்ற வரையறைக்குள் நின்று தமிழரது நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க முடியுமாயின் செய்யலாம். செய்யமுடியாதுவிடின் சிங்களத்தின் கொள்கைகளை முன்மொழியாது இருக்கலாம் அல்லவா? அதேவேளை இவர் தமிரது ஆதரவே தனக்குத்தேவையில்லையென்று கூறியே வந்துள்ளார். இவரது தவறான கருத்துகளைத் தமிழினம் கண்டித்தல் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நன்னிச் சோழன் said:

கப்பித்தன் அவர்களே... சமரசத்திற்கு ஒத்துக்கொண்ட பின்னர் இவரிடம் இருந்து நாங்கள் எதை எதிர்பார்க்க முடியும்?

 

 

நீங்கள் எதை எதிர்பாற்கிறீர்கள் ? அதைக் கூறலாமல்லவா ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

1. இலங்கையில் தமிழர் ஒரு தேசியஇனம்.
2. தனித்துவமான மொழியையும்,  பண்பாட்டையும், வாழ்வியல் முறைகளையும் கொண்டவர்கள்.
3. இலங்கைத்தீவிலே 1918 முதல் 2002வரையான காலத்தில் ஏற்பட்ட எந்த ஒப்பந்தங்களையும்  சிங்களத்தரப்பு ஏற்று நடந்ததில்லை. 
4. எல்லா ஒப்பந்தங்களையும் தன்னைப் பலப்பபடுத்தவே சிங்களம் பயன்படுத்திமை வரலாறு. 
5. தமிழர்களைப் பிரிந்து சென்று தனிநாட்டைக் கோரும் நிலையை ஏற்படுத்தியது சிங்களம் என்பதே வரலாறு. 
6. தமிழர் சிறுபான்மையல்ல. அவர்கள் இலங்கைத் தீவின் சமபங்காளிகளாவர்.
7. தமிழரை ஒரு இனமாக ஏற்காத சிங்களம் சிறுபான்மையினருக்கு தாம் சமஉரிமையயை வழங்கியிருப்பதாகவே உலகெங்கும் பலமில்லியன் டொலர்களைச் செலவுசெய்து பரப்புரைசெய்து வருகிறது. 
8. அதனை மிகச்சிறப்பாக சிங்களத்தின் கொள்கையை  எந்தவொரு வரலாற்றுப் பார்வையுமற்று அப்படியே இந்த நோர்வே நாடாளுமன்றத்துக்குச் செல்லும் உறுப்பினர் சுட்டுவது தவறாகும்.  

 முதலிலே தமிழர்கள் தமது நிலையையும், தமக்கு இனத்துவ அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுவரும் அழிவுகளையும், இன்றுவரை வன்பறிப்புக்குள்ளாகும் தமிழர் பிரதேசங்கள் குறித்தும் தெளிவானதொரு பார்வையைக்கொண்டு செயற்படாதவரை தமிழினம் இலங்கைத் தீவிலிருருந்து சிங்கள சிறீலங்காவால் முற்றுமுழுதாக அழிக்கப்படும். 

அது நீர்கொழும்பில் தொடங்கி வவுனியா தெற்கு மணலாறு என விரிவடைந்து செல்ல இன்றும் சிங்களத்துக்கு முண்டுகொடுக்கும் தமிழரைத் எப்படி நோக்குவது. 

புலத்திலே உள்ள தமிழர்கள் அரசியல் ரீதியாக உதவமுடியுமாயின் தமது பதிவி கட்சி என்ற வரையறைக்குள் நின்று தமிழரது நியாயமான கோரிக்கைகளை முன்வைக்க முடியுமாயின் செய்யலாம். செய்யமுடியாதுவிடின் சிங்களத்தின் கொள்கைகளை முன்மொழியாது இருக்கலாம் அல்லவா? அதேவேளை இவர் தமிரது ஆதரவே தனக்குத்தேவையில்லையென்று கூறியே வந்துள்ளார். இவரது தவறான கருத்துகளைத் தமிழினம் கண்டித்தல் வேண்டும். 

உங்கள் கருத்தைப் பார்த்தால் கம்சாயினி TNA யின் பிரதிநிதியாகத்தான் நோர்வே நாடாளுமன்றத்தில் போட்டியிட்டிருக்க முடியும். நோர்வே பிரசையாக அல்ல.. 😔

வெளிநாடுகளில் வாழும்  நாம் வீதியில் வாகனம் செலுத்தும்போதுகூட அந்தந்த நாடுகளின் மிகச் சாதாரண போக்குவரத்துச் சட்ட விதிகளைக்கூட மதிக்கின்றோம். ஆனால் வெளிநாடுகளில்  அரசியலில் ஈடுபடும்போது மட்டும் TNA யின் பிரதிநிதியாகச் செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் சரியான சிந்தனையாக இருக்க முடியும் ? 

12 minutes ago, Kapithan said:

உங்கள் கருத்தைப் பார்த்தால் கம்சாயினி TNA யின் பிரதிநிதியாகத்தான் நோர்வே நாடாளுமன்றத்தில் போட்டியிட்டிருக்க முடியும். நோர்வே பிரசையாக அல்ல.. 😔

வெளிநாடுகளில் வாழும்  நாம் வீதியில் வாகனம் செலுத்தும்போதுகூட அந்தந்த நாடுகளின் மிகச் சாதாரண போக்குவரத்துச் சட்ட விதிகளைக்கூட மதிக்கின்றோம். ஆனால் வெளிநாடுகளில்  அரசியலில் ஈடுபடும்போது மட்டும் TNA யின் பிரதிநிதியாகச் செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் சரியான சிந்தனையாக இருக்க முடியும் ? 

சரியான கருத்து கபிதன். 👍

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருடைய அரசியல் நிலைப்பாடு என்பது அவர் சார்ந்த கட்சி  சார்ந்தே இருக்கும்
அதை மீறினால் அவருடைய அரசியலே கேவிக்குறி ஆகலாம் .  

**

Edited by நியானி
மேற்கோள் காட்டிய மீம்ஸ் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, narathar said:

இவர் தன்னை முழுவதுமாக தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு, தான் தமிழர் வாக்குகள் இன்றியே இனி வெற்றி பெறுவேன் என்று கூறிவிட்டார். இவரைநோக்கிநோர்வாத் தமிழர்கள் இனிப் போராட்டங்களை நடாத்த வேண்டும். இவர் முற்று முழுதாகவேநோர்வே அரசின் முகவராகத் தொழிற்படத் தொடங்கி விட்டர். இவரின் இப் பேட்டியை கொழும்புநோர்வேத் தூதரகமே ஒழுஙகமைதுள்ளது. இதைநோர்வாத் தமிழர்கள் இவரின் குடும்ப உறவுகள் மூலமாவது சொல்லி அவர் போகும் பாதை தவறானது என்று சொல்லி வழி காட்ட வேண்டும். இவர் தமிழ் இளைய்யொர் அமைப்பின் செயற்பாட்டளாராக இருந்து அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர். இப்பொது ஏறி வந்த ஏணியய்த் தூக்கி எறிந்து விட்டடார்.

நாரதர் அவர்களே,
உங்கள் கருத்தையே நோர்வேயின் பல முன்னணி குமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டியதை நேற்று நடைபெற்ற ஒரு கருத்தாடலில் அவதானிக்க முடிந்தது.

Edited by nochchi
அவதானிக்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nochchi said:

மிகச்சிறப்பு. உண்மையான அரசியல்வாதி இவர்தான்.

 

மக்கள் தங்களையும் தங்கள் வலுவையும் சுயமதிப்பீடு செய்யும்வரை  சம்பந்தர் - டக்ளஸ் - கம்சாயினியென்று பட்டியல் நீளவே செய்யும்.  

 

2 hours ago, Kapithan said:

உங்கள் கருத்தைப் பார்த்தால் கம்சாயினி TNA யின் பிரதிநிதியாகத்தான் நோர்வே நாடாளுமன்றத்தில் போட்டியிட்டிருக்க முடியும். நோர்வே பிரசையாக அல்ல.. 😔

வெளிநாடுகளில் வாழும்  நாம் வீதியில் வாகனம் செலுத்தும்போதுகூட அந்தந்த நாடுகளின் மிகச் சாதாரண போக்குவரத்துச் சட்ட விதிகளைக்கூட மதிக்கின்றோம். ஆனால் வெளிநாடுகளில்  அரசியலில் ஈடுபடும்போது மட்டும் TNA யின் பிரதிநிதியாகச் செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் சரியான சிந்தனையாக இருக்க முடியும் ? 


கபிதான் அவர்களே, 
நானும் த.தே.கூ பிரதிநிதியாக இருக்கவேண்டாம் என்றே சொல்கின்றேன்
  அதைத்தான் மேலே, அந்த இடத்திலே சுட்டியுள்ளேன். அதை நீங்கள் பார்க்கவில்லையா?

18 hours ago, வாத்தியார் said:

ஒருவருடைய அரசியல் நிலைப்பாடு என்பது அவர் சார்ந்த கட்சி  சார்ந்தே இருக்கும்
அதை மீறினால் அவருடைய அரசியலே கேவிக்குறி ஆகலாம் .  

தமிழர்கள் தாம் சார்ந்த கட்சிகளை தமிழர் சார்பாக மாற்ற வேண்டுமே அன்றி கட்சிகளின் நிலைப்பாடுகளை தமிரிடம் விற்கும் முகவராக இருக்க முடியாது. அவ்வாறில்லை தமிழர் நிராகரிக்க வேண்டும். 

10 hours ago, tulpen said:

நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் கம்ஷாயினி குணரத்தினத்தின் பேட்டி முழுவதும் வாசித்ததில் அவரது பதில்கள்  சிறப்பான கருத்துக்களாகவே தெரிகிறது. இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு அவர்களுக்கு உரித்தான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என தெளிவாக கூறியுள்ளார். போர்ககுற்ற விசாரணைகள் வெளிவாரியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இங்கு அவரை கரித்து கொட்டுபவர்கள் அவர் எந்த கேள்விக்கு தவறாக பதிலளித்தார் என்று கூறவேண்டும். அவர் எப்படி கூறி இருக்க வேண்டும் என்றும் கூற வேண்டும்.  நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்புணர்வுடன் பதிலளித்துள்ளார்.  

ஒரு பெண்ணாக பாலின சமத்துவத்தை அவர் வலியுறுத்தியது உலகில் வாழும் நாகரீக  அடைந்த மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தே. 

ஈழத்தில் தமிழர் ஒரு தேசிய இனம். இன்ச் சிறுபான்மை அல்ல. தமிழருக்கு இழைக்கப்பட்ட து இனப்படுகொலை. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் அல்ல. இவை மிக முக்கியமான வித்தியாசங்கள் இவைற்றத் தெரிந்தே இவர் கூறுகிறார். ஏனெனில் அது தான் அமெரிக்கா அரசின் நோர்விஜிய அரசுகளின் நிலைப்பாடு. இவற்றை தமிழருக்கு விற்று பிழைப்பு நாடாத்துவதை விட்டு இவர் இருக்க வேண்டும். தமிழர்கள் அரசியல் ஏமாளிகள் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.