Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல்' - உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல்' - உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம்

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல். இதை உலக நாடுகள் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வளர்ந்த நாடுகளில் கையாளப்படும் கொரோனா தடுப்பூசி நிலைவரம் குறித்து உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 

redros_adonam1.jpg

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ்  அதானோம் கூறுகையில், 

“வருமானம் குறைந்த  நாடுகளில் போடப்படும் முதல் டோஸ் தடுப்பூசியை காட்டிலும், வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6 மடங்குக்கும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசியின்  பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படுகின்றன.

கொரோனா தடுப்பூசி உலகின் அனைத்து பகுதிகளுக்கும்  சென்றடைய வேண்டும். ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்ட பின், குறைந்தது ஒரு வருடத்திற்கு பின்னர்,  பூஸ்டர் டோஸ்கள் பற்றி வளர்ந்த நாடுகள் முடிவெடுக்கலாம். அதுவரை பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்தி வைக்க வேண்டும்.

ஏழை நாடுகளில் முன்களப் பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும்  இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஆரோக்கியமான நபர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுவது தற்போதைக்கு பிரதான விடயம் அல்ல.

எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை விட , யாருக்கெல்லாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது தான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்” என்றார்.
 

https://www.virakesari.lk/article/117176

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தானே.ஏற்கனவே போட்ட இரண்டு தடுப்பூசிகளிலும் இல்லாத ஒரு தன்மை மூன்றாவதாக செலுத்தப்படும் பூஸடர் மூலம் தடுக்க,ஈடு செய்ய முடியுமா...?மேலதிக தடுமல்,காச்சலை தடுக்குமாம், முதல் இரண்டும் அஷ்ராசனிக்கா எடுத்தோம் ஆதலால் பயமாக இருக்கிறது மூன்றாவதாக பூஸ்டர் எடுக்கிறோம் என்கிறார்கள்..கொரோனாவும் உலக நாடுகளும்....?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு குத்திட்டாங்களே😮

  • கருத்துக்கள உறவுகள்

பூஸ்டர் தடுப்பூசி ஏற்கனெவே செலுத்தப்பட்ட ஊசிகளின் வீரியம் குறைவதாலேயே செலுத்தப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மடைத்தனமாக scandal என்ற ஆங்கில வார்த்தைக்கு உரிய பன்முக அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் ஊழல் என தலையங்கம் கொடுத்துள்ளது வீரகேசரி.

WHO என்ன சொல்கிறது என்றால் 

உலகில் வறுமையான நாடுகள் ஒரு டோஸ் கூட இல்லாமல் இருக்க, முன்னேறிய நாடுகள் 3வது டோஸ் எடுப்பது - தார்மீகமானது அல்ல, என்பதையே.

தவிர பூஸ்டர் டோசில் ஒரு “ஊழலும்” இல்லை.

இரெண்டு டோசினால் வந்த பாதுகாப்பு போக போக குறைகிறது. ஆகவே யூகேயில் 70 வயதுக்கு மேலான, இரெண்டு டோஸ் அடித்தவர்களின் இறப்பு வீதமும் கூடுகிறது.

இன்று முதல் யூகேயில் 40 வயதுக்கு மேலான எல்லாருக்கும் 3ம் டோஸ் கொடுக்கிறார்கள்.

இனி அடுத்த 5/10 வருடம்,  வருடம் ஒரு பூஸ்டர் போட வேண்டி வரலாம்.

நான் 3 கிழமைக்கு முன் எனது பூஸ்டரை எடுத்தேன். வழமையான உபாதைகள்தான்.

முன்னேறிய நாட்டில் வாழுவதில் இது ஒரு வரப்பிரசாதம். ஏனையவர்கள் 1 டோசுக்கே வழியில்லாமல் இருக்க நாம் 3ம் டோஸ் போடுவது தார்மீகமாக சரியில்லைத்தான்.

ஆனால் தனக்கு மிஞ்சித்தான் தானம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

மொழி பெயர்ப்பு இயலா விட்டால் பேசாமல் இருந்திருக்கலாம் - வீர கேசரி இப்படி அரைகுறை மொழிபெயர்ப்புப் போட்டு விட்டால் இனி "ஐயோ காசடிக்க ஊசி போடுறாங்களாம்!" என்று சதித்திட்டக் குழுவொன்று கிளம்பும்! 😡

ஆறு மாதங்களில் அன்ரிபொடி அளவில் வீழ்ச்சி வருகிறது - ஆனால் ஏனைய பாதுகாப்பு வழிகள் தொடரலாம். மொடெர்னா போட்டு 9 மாதம் கடந்து விட்டது - அடுத்த வாரம் மூன்றாவது டோஸ் எடுக்க இருக்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நந்தன் said:

எனக்கு குத்திட்டாங்களே😮

எப்பிடி?....என்னமாதிரி இருந்தது எண்டு எங்களுக்கும் சொல்லுமனப்பா :)

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசிகள் இரண்டும் போட்டு 6 மாதம் முடிவடைந்த 18  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  பூஸ்டர் டோஸ் எனது ஊரில் போடபடுகிறது.
ஆனால் நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் சீனியர்களுக்கு தான் அது உண்மையில் தேவை என்ற கருத்து பரவலாக உள்ளது.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தடுப்பூசிகள் இரண்டும் போட்டு 6 மாதம் முடிவடைந்த 18  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  பூஸ்டர் டோஸ் எனது ஊரில் போடபடுகிறது.
ஆனால் நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் சீனியர்களுக்கு தான் அது உண்மையில் தேவை என்ற கருத்து பரவலாக உள்ளது.

நீரிழிவு, இதய நோய், இரத்த அழுத்த நோய், உடற்பருமன் அதிகமானோர், இவை எதுவும் இல்லாமல் 65 வயதுக்கு மேற்பட்டோர்: ஆகியோருக்கு மூன்றாவது டோஸ் உயிர்காக்கும் கவசமாக இருக்கும்.

மேல் குழுவில் இல்லாதோர், இளையோர் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? தீவிர நோய் மரணம் இவர்களில் நிகழா விட்டாலும், இவர்கள் மூலம் சமூகப் பரவல் நிகழும் - சமூகப் பரவல் அதிகமானால்: 

1. மேலே இருக்கும் பலவீனமானோருக்கு ஆபத்து வரலாம்.

2. சமூகத்தில் வைரஸ் தொடர்ந்து இருந்தால் அது மேலும் விகாரிகளை உருவாக்கும் - இது இருக்கும் தடுப்பூசிகளையும் செயல்திறனற்றதாக மாற்றக் கூடும்.

எனவே, 6 மாதங்கள் கழித்து 18 வயதிற்கு மேற்பட்டோர் மூன்றாவது டோஸ் எடுத்துக் கொள்ள வலுவான மருத்துவக் காரணம் இருக்கிறது! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எப்பிடி?....என்னமாதிரி இருந்தது எண்டு எங்களுக்கும் சொல்லுமனப்பா :)

மூணாவதுக்கு தலையிடி, காய்ச்சல் வரலம் எண்டு எல்லோரும் எச்சரித்தார்கள். நான் வழமைபோல் போட்டுவிட்டு வேலைக்கு போய்விட்டேன்.எந்த பிரச்சனையும் வரல, ஆனா மனுசி ஒரு வார்த்தை சொன்னா  

நீ மனுசனே இல்லையப்பா என்டு 😝 அதுதான் சந்தேகமா இருக்கு☹️

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

மூணாவதுக்கு தலையிடி, காய்ச்சல் வரலம் எண்டு எல்லோரும் எச்சரித்தார்கள். நான் வழமைபோல் போட்டுவிட்டு வேலைக்கு போய்விட்டேன்.எந்த பிரச்சனையும் வரல, ஆனா மனுசி ஒரு வார்த்தை சொன்னா  

நீ மனுசனே இல்லையப்பா என்டு 😝 அதுதான் சந்தேகமா இருக்கு☹️

இதில் சந்தேகப்பட என்ன  இருக்கிறது உண்மையைத்தான் சொல்லியுள்ளார். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.