Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பாகி விடும்-பொ. ஐங்கரநேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பாகி விடும்-பொ. ஐங்கரநேசன்

November 16, 2021

 

 

p.inkaranesan மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பாகி விடும்-பொ. ஐங்கரநேசன்

மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் போரால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுநாளாக நவம்பர், 3ஆவது சனிக்கிழமையைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பொ. ஐங்கரநேசன் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

‘இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும்.

இதேபோன்றே, மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும்.

அந்தவகையில், மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானதாகிவிடும்.

வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் போரில் ஈடுபட்டு இறந்தவர்களின் நினைவாகவும் போரால் இறந்த பொதுமக்களின் நினைவாகவும் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தின் 3ஆவது சனிக்கிழமையைப் பொது நினைவுநாளாகக் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இறந்தோரை நினைவுகூரும் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் வந்தாலும் அதற்குப் பலதடைகள் இருந்து வருகின்றமையே இதற்கான காரணமெனவும் தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் போராடி மடிந்த வீரமறவர்களின் நினைவாக நொவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளையும், போரில் இறந்த பொதுமக்கள் நினைவாக மே 18 இல் முள்ளிவாய்க்கால் தினத்தையும் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கடைப்பிடித்து வரும் நிலையில் ஆயர் மன்றத்திடமிருந்து இக்கோரிக்கை எழுந்துள்ளது.

கூட்டுப் பிரார்த்தனைகளைப்போன்று கூட்டு அஞ்சலிகளுக்கும் வலிமை மிக அதிகம். இதனாலேயே வெவ்வேறு காலப்பகுதிகளில் இறந்தாலும் போராடி மடிந்தவர்களுக்கான கூட்டு நினைவுநாளாக நவம்பர் 27ம், போரில் மடிந்த பொது மக்களுக்கான கூட்டு நினைவுநாளாக மே 18 ம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கூட்டு நினைவுநாளுக்கான இத்திகதிகள் எழுந்தமானமான தெரிவுகள் அல்ல. ஒவ்வொரு திகதியும் தன்னகத்தே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான வரலாறுகளைப் பொதிந்து வைத்திருக்கிறது. இத்தினங்கள் தமிழ்த் தேசிய இனத்தின் வலிமிகுந்த போராட்ட வரலாற்றை சந்ததிகள் தோறும் கடத்தும் வரலாற்றுக் கடத்திகளாகும்.

இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே தெரியாமல் அழித்தொழித்தது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை, அதனூடாகப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மக்கள் மனங்களில் பதியவைக்கும் வரலாற்றுக் கடத்திகளாக இவை அமைந்துவிடும் என்பதே இதற்கான காரணமாகும்.

இதேபோன்றே, மாவீரர் நினைவுநாளை மாற்றியமைப்பதும், எல்லோருக்குமான பொதுவான நினைவுநாளாகக் கடைப்பிடிப்பதும் மக்கள் மனங்களில் எஞ்சியுள்ள நினைவுகளையும் துடைத்தழிக்கும் வரலாற்றுத் திரிபுபடுத்திகளாக அமைந்துவிடும். அந்தவகையில், மாவீரர் நாளை ஆயர் மன்றம் மாற்றியமைப்பது படையினர் மாவீரர் துயிலுமில்லங்களைத் தகர்த்தமைக்கு ஒப்பானதாகிவிடும்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளைச் சர்வதேசங்களுக்கு எடுத்துச்சென்ற வெள்ளாடைப் போராளிகளாகக் கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் குருவானவர்கள் பலர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் சார்ந்த அமைப்பிடமிருந்து கெடுபிடிகளைக் காரணங்காட்டி இக்கோரிக்கை எழுந்திருப்பது தமிழ் மக்களிடையே பெருங் கவலையைத் தோற்றுவித்துள்ளது. எனவே, ஆயர் மன்றம் தங்களது இந்த முடிவை மீள்பரிசீலனை செய்து, தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியினர் இறந்த தங்கள் தலைவர்களின் நினைவுகளைக் கார்த்திகை வீரர்கள் தினமாக வெளிப்படையாகவே கடைப்பிடிப்பதைப்போன்று தமிழ்மக்களும் போரில் இறந்த போராளிகளினதும் பொதுமக்களினதும் நினைவுநாட்களைக் கடைப்பிடிக்கும் உரித்துடையவர்கள் என்பதை நிலைநாட்டுவதற்குத் தொடர்ந்து குரல்கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்

 

https://www.ilakku.org/changing-the-heros-memorial-would-be-tantamount-to-destroying-the-tires/

  • கருத்துக்கள உறவுகள்

இது இவர்களாக எடுத்த முடிவா என்பதில் ஐயமுள்ளது. யாருடைய தூண்டுதலிலோ  அல்லது உத்தரவிலோ நடைபெற்றிருக்கலாம் என்றே நினைக்கின்றேன். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும், மக்களின் அவலங்களின்போதும் ஆலமரம்போன்று அசையாது நின்று குரல்கொடுத்தவர்கள் இப்படியொரு அர்த்தமற்ற சப்பைக்கட்டுகட்டும் முடிவுக்கு எப்படி வரமுடிந்தது. ஏதோவொரு பின்னணியில்லாது நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை, இந்திய படைகள், புலிகள், ஈ பி.ஆர்.எல்.எவ், புளட், இதர தமிழ், முஸ்லீம் ஆயுத குழுக்கள், சிங்கள குண்டர்கள் இவர்கள் கொலை செய்த தமிழ் மக்களை நினைவு கூறும் நாள் எப்போது? மே18, நவம்பர்26/27 பொருத்தம் இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாளை தேர்ந்தெடுக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்??

5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை, இந்திய படைகள், புலிகள், ஈ பி.ஆர்.எல்.எவ், புளட், இதர தமிழ், முஸ்லீம் ஆயுத குழுக்கள், சிங்கள குண்டர்கள் இவர்கள் கொலை செய்த தமிழ் மக்களை நினைவு கூறும் நாள் எப்போது? மே18, நவம்பர்26/27 பொருத்தம் இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கை, இந்திய படைகள், புலிகள், ஈ பி.ஆர்.எல்.எவ், புளட், இதர தமிழ், முஸ்லீம் ஆயுத குழுக்கள், சிங்கள குண்டர்கள் இவர்கள் கொலை செய்த தமிழ் மக்களை நினைவு கூறும் நாள் எப்போது? மே18, நவம்பர்26/27 பொருத்தம் இல்லையே.

பங்குனி 08 2020 பொருத்தமான நாளாக இருக்கும் என எண்ணுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் மறைமாவட்ட மன்றத்தின் அறிக்கையை இணைக்கமுடியுமா?

ஐந்கரநேசன் ஐயா ஏன் குழம்புகின்றார்?

பாகுபாடு, பாரபட்சம் இன்றி, அவர் அது இவர் இது என முத்திரை குத்தாமல் போரில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களையும் ஓர் தினத்தில் நினைவு கூறுவது சிறப்பானதே.

Edited by நியாயத்தை கதைப்போம்
எ.பி

1 hour ago, Paanch said:

பங்குனி 08 2020 பொருத்தமான நாளாக இருக்கும் என எண்ணுகிறேன். 

எதற்காக பங்குனி 08 ? புரியவில்லை...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

@கிருபன் மறைமாவட்ட மன்றத்தின் அறிக்கையை இணைக்கமுடியுமா?

ஐந்கரநேசன் ஐயா ஏன் குழம்புகின்றார்?

பாகுபாடு, பாரபட்சம் இன்றி, அவர் அது இவர் இது என முத்திரை குத்தாமல் போரில் கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களையும் ஓர் தினத்தில் நினைவு கூறுவது சிறப்பானதே.

முன்னர் யாழில் இணைத்திருந்தேன்

👇🏾👇🏾👇🏾

 

  • கருத்துக்கள உறவுகள்

 

3 hours ago, tulpen said:

எதற்காக பங்குனி 08 ? புரியவில்லை...............

 

 பங்குனி 08 என்றால் அது உலகத்திற்கு மார்ச்  21 தானே அது என்ன சிறப்பு நாள் ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

 

 

 பங்குனி 08 என்றால் அது உலகத்திற்கு மார்ச்  21 தானே அது என்ன சிறப்பு நாள் ?

பூமத்திய ரேகையில் சூரியன் உச்சம் பெறும் நாள்…!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

பூமத்திய ரேகையில் சூரியன் உச்சம் பெறும் நாள்…!

ஓம் அவர் புரட்டாசியை விட்டுவிட்டு பங்குனி 08  தெரிவு செய்து இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2021 at 14:45, கிருபன் said:

முன்னர் யாழில் இணைத்திருந்தேன்

👇🏾👇🏾👇🏾

 

 

இணைப்பிற்கு நன்றி கிருபன்.

அறிக்கையில் தவறாக எதுவும் தென்படவில்லை. எனது ஆதரவு உண்டு.

 

On 16/11/2021 at 11:56, nunavilan said:

எந்த நாளை தேர்ந்தெடுக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்கள்??

 

இலங்கை சுதந்திரம் பெற்றபின் இனவாதம் காரணமாக கொல்லப்பட்ட முதலாவது தமிழன் பலியாகிய நாளை கொல்லப்பட்ட அனைத்து தமிழ் மக்களிற்குமான நினைவு நாளாக கடைப்பிடிக்கலாம்.

மேற்கண்ட தரவு இல்லை என்றால் ஜனவரி ஒன்று ஆங்கில புது வருடம் கழிய ஜனவரி இரண்டாம் திகதி ஒவ்வொரு வருடமும். இலங்கையில் 365 நாட்களும் தமிழ் மக்கள் வெவ்வேறு தரப்பினரால் கொல்லப்பட்டதனால் வருட ஆரம்பத்தில் நினைவு நாள் பொருத்தம் என்பது எனது கருத்து.

Edited by நியாயத்தை கதைப்போம்
எ.பி

  • கருத்துக்கள உறவுகள்

மாவீர் நாளை மாற்ற முடியாது. 😡

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை மாவீர் வாரத்தினுள் நினைவுகூரப்படுவதை பரிசீலிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் பற்றி அறிக்கையில் ஏதும் இல்லையே. முழுமையாக வாசித்து விளங்காமலே பொங்கி எழுவதோ? 

அவர்கள் போரில் மடிந்தவர்களுக்கான பிரார்த்தனைக்கு ஓர் நாளை ஒதுக்கி உள்ளார்கள். அவ்வளவே. இவ்வாறே இலங்கையில் உள்ள இந்து அமைப்புக்களும் இந்து கோயில்களில் ஓர் நாளை ஒதுக்கி இலங்கையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு பிரார்த்தனை செய்யலாம், வழிபாடுகளில் ஈடுபடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை மாவீர் வாரத்தினுள் நினைவுகூரப்படுவதை பரிசீலிக்கலாம். 

 

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் உரிமை கோரியும், உரிமை கோராமலும் சுட்டும், சித்திரவதை செய்தும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் ஆயிரக்கணக்கு..

உங்கள் அம்மாவோ, அப்பாவோ, சகோதரமோ, நெருங்கிய உறவினரோ, நண்பனோ, நண்பியோ, ஆசானோ.. இந்த பட்டியலில் அடங்கினால்.. இவர்களை மாவீரர் தினத்தில் நினைவுகூறல் செய்வதை நீங்கள் ஏற்று கொள்வீர்களா?

Edited by நியாயத்தை கதைப்போம்
எ.பி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

 

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் உரிமை கோரியும், உரிமை கோராமலும் சுட்டும், சித்திரவதை செய்தும் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் ஆயிரக்கணக்கு..

உங்கள் அம்மாவோ, அப்பாவோ, சகோதரமோ, நெருங்கிய உறவினரோ, நண்பனோ, நண்பியோ, ஆசானோ.. இந்த பட்டியலில் அடங்கினால்.. இவர்களை மாவீரர் தினத்தில் நினைவுகூறல் செய்வதை நீங்கள் ஏற்று கொள்வீர்களா?

தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, யுத்தத்தில் இறந்த, காணாமல் ஆக்கப்பட்ட, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்கையில் காணாமல் போன, இறந்துபோன....... ஒட்டுமொத்த தமிழரையும் நினைவு கூர வேண்டும். 

இதில் 2ம் கேள்விக்கே இடமில்லை. 

ஆனால் எதை எப்படி, எப்போ என்பதுதான் கரிசனைக்குரியது.

நிச்சயமாக  ஒருநாள் இது நடைபெறும். 

தமிழர் எல்லோரையும் இது ஒன்று சேர்க்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.