Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இண்டையான் முழுவியளமே அதுதானே......🤣 அது சரி கறுமைத்தெல்லாம் நீங்கள் பார்த்தேள் என்னமோ? 😎

நீண்ட  நாட்களாக... இப்படியான காணொளிகள் வரவில்லை.
அதுகும்... பா.ஜ.கா.  காரனின் காணொளி என்றவுடன்... ஆவலுடன் பார்த்தேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

236337282_222519343157553_42665984065101

 

 

எழுதுனவன் கொரோனாவுல பாஸ் பண்ணி இருப்பான் போல

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நீண்ட  நாட்களாக... இப்படியான காணொளிகள் வரவில்லை.
அதுகும்... பா.ஜ.கா.  காரனின் காணொளி என்றவுடன்... ஆவலுடன் பார்த்தேன். 🤣

கால் ஐ வணக்கம் சிறித்தம்பி 🤣

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

கால் ஐ வணக்கம் சிறித்தம்பி 🤣

Bild

கால் ஐ… வணக்கம் குமாராசமி அண்ணே… 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

கால் ஐ… வணக்கம் குமாராசமி அண்ணே… 🤣

வீடியோ பாத்தேன் ... பேஷ் ... பேஷ்🤣

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:
16 hours ago, குமாரசாமி said:

இண்டையான் முழுவியளமே அதுதானே......🤣 அது சரி கறுமைத்தெல்லாம் நீங்கள் பார்த்தேள் என்னமோ? 😎

நீண்ட  நாட்களாக... இப்படியான காணொளிகள் வரவில்லை.
அதுகும்... பா.ஜ.கா.  காரனின் காணொளி என்றவுடன்... ஆவலுடன் பார்த்தேன்

இந்தக் கண்றாவிகளை என்ரை கண்ணிலையும் காட்டுங்கோவனடாப்பா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கண்றாவிகளை என்ரை கண்ணிலையும் காட்டுங்கோவனடாப்பா.

தம்பிமாரே இந்த பக்கத்து இலைக்காரருக்கு சாம்பார் போடுங்கோ......!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கண்றாவிகளை என்ரை கண்ணிலையும் காட்டுங்கோவனடாப்பா.

K T Raghvan video tape எண்டு யூடியூப்பில் சேர்ச் பண்ணவும்.

பிகு

அங்க “பெரிசா” ஒண்டும் இல்ல.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

K T Raghvan video tape எண்டு யூடியூப்பில் சேர்ச் பண்ணவும்.

பிகு

அங்க “பெரிசா” ஒண்டும் இல்ல.

நித்தியானந்தா அளவுக்கு இல்லையெண்டாலும்  ஒருக்கால் பாக்கலாம்....இப்ப ரீமிக்ஸ் பண்ணிவிட்டுருக்கிறாங்கள்...சும்மா அதிருது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நித்தியானந்தா அளவுக்கு இல்லையெண்டாலும்  ஒருக்கால் பாக்கலாம்....இப்ப ரீமிக்ஸ் பண்ணிவிட்டுருக்கிறாங்கள்...சும்மா அதிருது 🤣

🤣 “மாமா ரொம்ப கெட்டவன்” வீடியோவையும் மிக்ஸ் பண்ணி அடிச்சிருங்காங்கள் 🤣

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[url=https://postimages.org/][img]https://i.postimg.cc/wMJXpJLJ/A6-AD2-FA6-B37-E-4212-8-A1-C-468-D48-B4-A4-CE.jpg[/img][/url]

A6-AD2-FA6-B37-E-4212-8-A1-C-468-D48-B4-

7 நாடுகளின் நிதியமைச்சர்களின் படிப்பு பட்டங்கள்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

நித்தியானந்தா அளவுக்கு இல்லையெண்டாலும்  ஒருக்கால் பாக்கலாம்....இப்ப ரீமிக்ஸ் பண்ணிவிட்டுருக்கிறாங்கள்...சும்மா அதிருது 🤣

அந்த வீடியோவை... எக்ஸ்பிரஸ் வேகத்தில், எனது தபால் பெட்டிக்கு அனுப்பி விடவும். 🏃‍♂️🚴‍♀️ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

[url=https://postimages.org/][img]https://i.postimg.cc/wMJXpJLJ/A6-AD2-FA6-B37-E-4212-8-A1-C-468-D48-B4-A4-CE.jpg[/img][/url]

A6-AD2-FA6-B37-E-4212-8-A1-C-468-D48-B4-

7 நாடுகளின் நிதியமைச்சர்களின் படிப்பு பட்டங்கள்.

என்னளவு படிச்சுட்டு என்ர நாட்டுக்கே ஒருத்தர் நிதியமைச்சராய் இருக்கிறார் என்றால் ,  இதைக் காட்டியே வீட்டில நிதியமைச்சர் பதவியை புடுங்கத்தான் இருக்கு......நன்றி பிரியன்.......!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அந்த வீடியோவை... எக்ஸ்பிரஸ் வேகத்தில், எனது தபால் பெட்டிக்கு அனுப்பி விடவும். 🏃‍♂️🚴‍♀️ 🤣

அனுப்பியிருக்கு....தபாலை பிரிக்கும் போது கவனமாக பிரிக்கவும்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

என்னளவு படிச்சுட்டு என்ர நாட்டுக்கே ஒருத்தர் நிதியமைச்சராய் இருக்கிறார் என்றால் ,  இதைக் காட்டியே வீட்டில நிதியமைச்சர் பதவியை புடுங்கத்தான் இருக்கு......நன்றி பிரியன்.......!   😎

விசப்பரீட்சை வேண்டாம். அவிங்க  ஒவ்வொருத்தரும் 100 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சமம். கேள்வி கேட்டால் தாங்க மாட்டீங்க :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அனுப்பியிருக்கு....தபாலை பிரிக்கும் போது கவனமாக பிரிக்கவும்😎

வாவ்… அந்த மாதிரி இருக்கு. 👍🏼 😂

வேலையிடத்தில் இருந்தே… இந்தக் காணொளியை 15 தரத்துக்கு மேல், திரும்பத் திரும்ப பார்த்து விட்டேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

வாவ்… அந்த மாதிரி இருக்கு. 👍🏼😂

வேலையிடத்தில் இருந்தே… இந்தக் காணொளியை 15 தரத்துக்கு மேல், திரும்பத் திரும்ப பார்த்து விட்டேன். 🤣

thanks for enjoying 🤣

Latest Kamal GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் சுமார்தான் ஆனாலும் நிறைய மினக்கட்டிருக்கிறார்கள் .........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவ வீரர்.... ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன்...
அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம்.
யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை.
அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன்.
ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.
அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார்.
புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன்.
முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள்.
நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன.
நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன.
யாராக இருக்கும் என்று மனது.....
ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்தி கொண்டே இருந்தது...
அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து....
ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார்...
ஆச்சர்யமாக இருந்தது.
"எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன.
என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன.
அம்மாவின் முகத்தைவிட,
அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.
அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன்.
இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை.
ஆனால், இதே கைகளால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்
கிறேன்.
என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.
அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 42 வயதில் செத்துப் போனார்.
அம்மாதான் எங்களை வளர்த்தார்.
நாங்கள் மூன்று பிள்ளைகள்.
அம்மா படிக்காதவர்.
ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார்.
பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள்.
மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான்.
எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.
இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து...
உறங்கச்செய்துவிட்டு...
அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள்.
சமையல் அறையில்தான் உறக்கம்.
அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும்.
எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில்...
யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.
அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம்,
நம்பிக்கை கிடைக்கும்.
அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி....
நெற்றியைத் தடவியபடியே இருக்கும்.
அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை...
தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார்....
மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று...
அடி வாங்குவதைப் பார்த்தேன்.
அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார்.
அம்மா அழவே இல்லை.
ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல்,....
விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள்....
வழியில் பேசவே இல்லை.
அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவ
ோ இல்லை.
அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை...
வீட்டில் சாமி கும்பிடவோ,
கோயிலுக்குப் போய் வழிபடவோ,
அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை.
வேலை... வேலை...
அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.
சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை.
ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன்.
கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன்.
கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன்.
மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டி இருக்கிறேன்.
அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.
அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும்.....
யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது....
கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும்,
புதுப் புது ஆடைகள் வாங்கவும்
குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன்.
என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள்.
ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக் கொள்ளவே இல்லை.
கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா.
அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது.
அதன் பிறகு, என்னைத் திருத்தி கொண்டேன்..
தீவிரமாகப் படிக்கத் துவங்கி,
ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து.
.
கடுமையாக உழைத்துப் பதவி-உயர்வு பெற்றேன்.
அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன்.
நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும்,..
அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை....
நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து,....
தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.
முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும்.
சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
ஆனால், அது நடக்கவே இல்லை.
அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம்....
ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது.
அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன்.
இப்போது வயதாகிவிட்டது.
சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கி விடுகிறேன்.
இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன்.
ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?'
என்று கேட்டார்.....
அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன்.
ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக.....
அம்மா எல்லோரிடமும் காட்டினாள்.
அதை அணிந்து கொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது.
அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார்.
டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
நான் கூடவே இருந்தேன்.
'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லையே..?' என்று கேட்டேன்.
அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது.
ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்து வைத்துக்கொண்டார்.
அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன்.
அது எவ்வளவு உழைத்திருக்கிறது.
எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது.
எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது.
அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன்....
இன்று அம்மா என்னோடு இல்லை....
ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன....
ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகி
ன்றன.
இதை வணங்குவதைத் தவிர,
வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.
ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன்.
அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை....
உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள்.....
யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன.
அவை எதையும் யாசிக்கவில்லை.....
அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன.
அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம்.
அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.
இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கிறேன்.
எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன்.
அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன்.
ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.
'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது....
இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன்.
அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை.
நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்...??
முடிவு நம்மிடமே இருக்கிறது...!
 
படித்ததில்_சிலிர்த்தது
அம்மாவின் கைகள்
 
  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை படிக்கவே சிலிர்க்கிறது, மனம் கனக்கிறது, கண்கள் பனிக்கின்றன ........எனது அம்மம்மாவின் ஞாபகம் வந்து தொலைக்கிறது இப்படித்தான் என்னையும் வளர்தவ.....என்ன வீட்டு வேலைகளுக்கு செல்லவில்லை,  தோசை இடியப்பம் அவித்து வித்து .......நான் உழைத்து வந்தபோது சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்தார்.........!  😢

நன்றி அன்பு ......! 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-27-07-46-57-710-com-a
☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிலும் எச்சரிக்கை தேவை .......!   😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரின் டாஷ்போர்டில் இருக்கும் எச்சரிக்கை லைட்களின் சமிக்கை ........!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை பொடியள் வேறை லெவல் கண்டியளோ...😎

 

Edited by குமாரசாமி
  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.