Jump to content

ஆட்சிமாற்றம் ஒன்றிற்குத் தயாராகும் கூட்டமைப்பின் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குணா கவியழகனின் இன்றைய காணொளியில் இலங்கையில் ஆட்சிமாற்றம் தொடர்பாக சுமந்திரன் செயற்படத் தொடங்கியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

 

https://youtu.be/yDPW9mTTHWI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஆட்சிமாற்றம் தொடர்பாக தமிழர்கள் இப்போது எதற்காக அக்கறைப்பட வேண்டும்?

2010 இல் சரத்துக்கும், 2015 இல் ரணில் - மைத்திரிக்கும், 2019 இல் சஜித்திற்கும் ஆதரவளித்து நாம் கண்ட பயன் என்ன? (உடனேயே 2005 இல் மகிந்தவை வரப்பண்ணி மக்களை அழிக்கவில்லையா என்று துல்பேன் கேட்க வேண்டாம்). 

தமிழருக்கு முன்னால் உள்ள முக்கியமான பிரச்சினை இப்போது என்ன? முழுநாட்டு மக்களுக்குமான அரசியலைச் செய்வதற்கா சுமந்திரனைத் தமிழர்கள் தெரிவுசெய்தார்கள்?

இப்போதாவது சர்வதேச - பிராந்திய சக்திகளின் பிணாமியாக செயற்படுவதைத் தவிர்த்து, தன்னைத் தெரிவுசெய்த மக்கள் நலன் தொடர்பாக அவர் வேலை செய்தால் என்ன?

Link to comment
Share on other sites

6 minutes ago, ரஞ்சித் said:

இலங்கையில் ஆட்சிமாற்றம் தொடர்பாக தமிழர்கள் இப்போது எதற்காக அக்கறைப்பட வேண்டும்?

எந்த தமிழர்களை குறிப்பிடுகின்றீர்கள் ரஞ்சித்? தாயக தமிழர்களையா அல்லது புலம்பெயர் தமிழர்களையா?

தாயக தமிழர்கள் எனில் அவர்கள் நிச்சயம் மகிந்த சகோதரர்களின் ஆட்சி தொடர விரும்பப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

எந்த தமிழர்களை குறிப்பிடுகின்றீர்கள் ரஞ்சித்? தாயக தமிழர்களையா அல்லது புலம்பெயர் தமிழர்களையா?

தாயகத் தமிழர்களைத்தான். ஆனால் சுமந்திரனின் செயற்பாடுகளால் தாயகத் தமிழர்கள் பாதிக்கப்படும்போது அவர்களின் உறவுகளான புலம்பெயர் தமிழரிலும் அது தாக்கத்தினைச் செலுத்தும். அதுசரி, தமிழர்களை தாயகம் - புலம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? 

புலம்பெயர் தமிழர்கள் தாயக அரசியலில் தலையிடக் கூடாது என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

தாயக தமிழர்கள் எனில் அவர்கள் நிச்சயம் மகிந்த சகோதரர்களின் ஆட்சி தொடர விரும்பப் போவதில்லை.

தாயகத் தமிழர்கள் மட்டுமல்ல, அதை சிங்களவர்களே விரும்பப்போவதில்லை. ஆகவே அதுபற்றி நாம் அக்கறைகொள்ளத் தேவையில்லை என்கிறேன். அவர்களே பார்த்துக்கொள்வார்கள். 

எமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான பிரச்சினை ஆட்சிமாற்றம் அல்ல. எமது இருப்புத் தொடர்பான அச்சுருத்தல். இது இந்த அரசில் மட்டுமல்ல, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இருக்கத்தான் போகிறது. 

ஆட்சிமாற்றம் ஒன்றிற்குத் துணைபோய் குறைந்தது இன்னுமொரு 5 வருடங்களை இன்னொரு “நல்லாட்சி” அரசின் கால்களை நக்குவதற்குப் பாவிப்பதோடு எமது உண்மையான பிரச்சினைகளில் செலுத்தவேண்டிய கவனத்தை இந்னுமொருமுறை சிதறடிக்கப்போகிறோமே என்கிற ஆதங்கம்தான்.

Link to comment
Share on other sites

55 minutes ago, ரஞ்சித் said:

தாயகத் தமிழர்களைத்தான். ஆனால் சுமந்திரனின் செயற்பாடுகளால் தாயகத் தமிழர்கள் பாதிக்கப்படும்போது அவர்களின் உறவுகளான புலம்பெயர் தமிழரிலும் அது தாக்கத்தினைச் செலுத்தும். அதுசரி, தமிழர்களை தாயகம் - புலம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? 

புலம்பெயர் தமிழர்கள் தாயக அரசியலில் தலையிடக் கூடாது என்கிறீர்களா?

தலையிடுதல் இடையூறாக அமையாத வரைக்கும் பிரச்சினை இல்லை. 

தாயகத்தமிழர் புலம்பெயர் தமிழர் என்ற பிரிவு நிச்சயம் உள்ளது. அன்றாட பிரச்சினைகள் தொடக்கம், அரசியல் ரீதியிலான, பொருளாதார பிரச்சினைகள் வரை இரு சமூகங்களும் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,  சவால்கள் முற்றிலும் வேறானவை. உணர்வு பூர்வமான உறவு என்று பார்த்தால் கூட எம்மால் தாயகத்தில் இன்றிருக்கும் ஒருவரது உணர்வை புரிந்து கொள்வதில் சவால்களும் கேள்விகளும் உள்ளன. 

தாயக மக்களின் அரசியல் தெரிவுகளுக்கு தார்மீக ஆதரவையும் பொருளாதார ஆதரவையும் மட்டுமே எம்மால் கொடுக்க முடியும், தலையீட்டை அல்ல. 

நதி கீழ் இருந்து மேல் நோக்கி பாய முடியாது.

45 minutes ago, ரஞ்சித் said:

தாயகத் தமிழர்கள் மட்டுமல்ல, அதை சிங்களவர்களே விரும்பப்போவதில்லை. ஆகவே அதுபற்றி நாம் அக்கறைகொள்ளத் தேவையில்லை என்கிறேன். அவர்களே பார்த்துக்கொள்வார்கள். 

எமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான பிரச்சினை ஆட்சிமாற்றம் அல்ல. எமது இருப்புத் தொடர்பான அச்சுருத்தல். இது இந்த அரசில் மட்டுமல்ல, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இருக்கத்தான் போகிறது. 

ஆட்சிமாற்றம் ஒன்றிற்குத் துணைபோய் குறைந்தது இன்னுமொரு 5 வருடங்களை இன்னொரு “நல்லாட்சி” அரசின் கால்களை நக்குவதற்குப் பாவிப்பதோடு எமது உண்மையான பிரச்சினைகளில் செலுத்தவேண்டிய கவனத்தை இந்னுமொருமுறை சிதறடிக்கப்போகிறோமே என்கிற ஆதங்கம்தான்.

தாயக மக்கள் முன் இருக்கும் தெரிவு கொஞ்சம் நல்ல பேயை தெரிவு செய்வதா அல்லது மோசமான பேயை தெரிவு செய்வதா என்பதே.

தாயக மக்கள் கொரனாவுக்கு கொஞ்சம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர். ஏனெனில் நவீன துஷ்ட கைமுனுக்கள் போட இருந்த பேயாட்டத்தை இந்த கொரனா கொடுத்த நெருக்கடி வெகுவாக குறைத்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தமிழர் புலம்பெயர் தமிழர் என்ற பிரிவு நிச்சயம் உள்ளது. அன்றாட பிரச்சினைகள் தொடக்கம், அரசியல் ரீதியிலான, பொருளாதார பிரச்சினைகள் வரை இரு சமூகங்களும் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,  சவால்கள் முற்றிலும் வேறானவை. உணர்வு பூர்வமான உறவு என்று பார்த்தால் கூட எம்மால் தாயகத்தில் இன்றிருக்கும் ஒருவரது உணர்வை புரிந்து கொள்வதில் சவால்களும் கேள்விகளும் உள்ளன. 

தாயக மக்களின் அரசியல் தெரிவுகளுக்கு தார்மீக ஆதரவையும் பொருளாதார ஆதரவையும் மட்டுமே எம்மால் கொடுக்க முடியும், தலையீட்டை அல்ல. 

நிழலி...மிக முக்கியமாக சர்ப்பிரைஸ் பரிசு கொடுக்கவாவது புலம்பெயர் உறவு தேவை என்பதை அடித்துக்கூற  விரும்புகின்றேன்.....

Link to comment
Share on other sites

குணா அவர்கள் Sumanthiranphobia( சுமந்திரன் குறித்த  அச்சக் கோளாறு)  இல் திரிகின்றார் போல் உள்ளது. சுமந்திரன் சொன்னார் என்று வீரகேசரியில் வந்த செய்தியை வைத்து ஒரு பெரும் அரசியல் ஆய்வையே செய்து முடித்துள்ளளார். யாராவது அச்செய்தியின் மூலம் தெரிந்தால், அறியத்தரவும். சுமந்திரன் அவர்கள் கனடாவில் எம்பிக்களை சந்தித்த படங்கள் கூட வெளியாகி இருந்தன, அவற்றை குணா அவர்கள் பார்க்கவில்லையா?, அல்லது பார்த்தும் தீக்கோழி மாதிரி தலையை மண்ணில் புதைத்துள்ளாரா?. இவையெல்லாம் அச்சக் கோளாறின் அறிகுறிகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

குணா அவர்கள் Sumanthiranphobia( சுமந்திரன் குறித்த  அச்சக் கோளாறு)  இல் திரிகின்றார் போல் உள்ளது. சுமந்திரன் சொன்னார் என்று வீரகேசரியில் வந்த செய்தியை வைத்து ஒரு பெரும் அரசியல் ஆய்வையே செய்து முடித்துள்ளளார். யாராவது அச்செய்தியின் மூலம் தெரிந்தால், அறியத்தரவும். சுமந்திரன் அவர்கள் கனடாவில் எம்பிக்களை சந்தித்த படங்கள் கூட வெளியாகி இருந்தன, அவற்றை குணா அவர்கள் பார்க்கவில்லையா?, அல்லது பார்த்தும் தீக்கோழி மாதிரி தலையை மண்ணில் புதைத்துள்ளாரா?. இவையெல்லாம் அச்சக் கோளாறின் அறிகுறிகளே.

முதலில் வீரகேசரியில் வந்த ஆய்வை படித்தபின் கருத்துக்களை வைப்பது நல்லது செய்தியை படித்தபின் கருத்துக்களை வைப்பது நல்லது அதுக்கு முதல் ஏன் இப்படி ?

Link to comment
Share on other sites

மனித தன்மைமையுடன் சிந்திக்கும் எவருக்கும் ஶ்ரீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றம் அவசியம் தேவை என்பது புரியும். அது நடைபெற்றால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். 

ஶ்ரீலங்காவில் ஒரு கொடுமையான ஆட்சியிருந்து மக்களை கொடுமைப்படுத்தும் போது, “ஐயோ, ஐயோ”,என்று ஒப்பாரி வைத்து உரிமைகளை பெறலாம், என்று பழைய இத்துப்போன அரசியல் ஆய்வுகளை எழுதித்  தமது வாழ்நாளை ஜாலியாக கழிப்பவர்களின்  சிந்தனை போல்  தாயகத்தில் வாழும் மக்கள் சிந்திக்க வேண்டியதில்லை.  ஜதார்தத வாழ்வில் தமக்கு நன்மையளிப்பனவற்றை தமது சொந்த அறிவுடன் சிந்தித்து தமக்கு நன்மையளிபதைத் தெரிவு செய்யவேண்டும். இதில் பழைய எமோஷனுக்கும் சென்றி மென்றுக்கும் இடமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

குணா அவர்கள் Sumanthiranphobia( சுமந்திரன் குறித்த  அச்சக் கோளாறு)  இல் திரிகின்றார் போல் உள்ளது. சுமந்திரன் சொன்னார் என்று வீரகேசரியில் வந்த செய்தியை வைத்து ஒரு பெரும் அரசியல் ஆய்வையே செய்து முடித்துள்ளளார். யாராவது அச்செய்தியின் மூலம் தெரிந்தால், அறியத்தரவும். சுமந்திரன் அவர்கள் கனடாவில் எம்பிக்களை சந்தித்த படங்கள் கூட வெளியாகி இருந்தன, அவற்றை குணா அவர்கள் பார்க்கவில்லையா?, அல்லது பார்த்தும் தீக்கோழி மாதிரி தலையை மண்ணில் புதைத்துள்ளாரா?. இவையெல்லாம் அச்சக் கோளாறின் அறிகுறிகளே.

இவ்வாறான ஓர் எண்ணமே எனக்கும் ஏற்பட்டது. சுமந்திரனை பேசுபொருளாக்குதல் நல்லதொரு விளம்பர உத்தி. நான் முன்பு ஓரிடத்தில் குறிபிட்டு இருந்தபடி இப்ப போராட்டம் சுமந்திரனுக்கு எதிரான விடுதலைப் போராட்டமாக மாறிவிட்டது. சுமந்திரனை ஒரு சுழியத்தை போட்டு வெட்டிவிட்டு இவர்களால் நகர்ந்துவிட முடியாமல் இருக்கின்றது. 2009 இக்கு முற்பட்ட காலத்தில் இவர் போன்ற ஆய்வாளர்கள் எல்லாம் மகுடி வாசிப்பவர்களாக இருந்தார்கள். அதிலும் நிலாந்தன் மாஸ்டர் அபாரம். இப்ப வந்து மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை இந்த ஆய்வாளர்கள் தமிழினத்தின் சாபக்கேடு என்பேன். வீரகேசரியின் செய்தி ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு புகுந்து விளையாடி இருக்கின்றார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை 
    • Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM   களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை  பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச   செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய  சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும்,  அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
    • பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 
    • அதுசரி சாமியார்.. நீங்கள் குளிருக்குப் போத்துப் படுக்க பெட்சீட் பாவிக்கறது இல்லையாம், பரிமளாக்காவின் சாறியைத்தான் பாவிக்கிறதா கேள்விப்பட்டன், உண்மையா??? அதுதான் சாறிஞாபகம் வந்ததோ????😁😂 
    • Published By: VISHNU   04 JUN, 2024 | 03:03 AM   யாழ்ப்பாணத்தை சேர்ந்த போலி மருத்துவர் ஒருவர் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை இலக்கு வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிலையில் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட வேளை, காரினுள் இருந்து 15 பவுண் தங்க நகைகள், 05 இலட்ச ரூபாய் பணம் மற்றும் இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான அதிநவீன கையடக்க தொலைபேசிகள் 05 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், போலியான வைத்தியர்களுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து  தன்னை வைத்தியராக அறிமுகப்படுத்தி, ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக கூறி புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் தமிழர்களை ஏமாற்றி, பெரும் தொகையான பணத்தினை பெற்று யாழ்ப்பாணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.  இந்நிலையில் யாழ்.நகர் பகுதியில் உள்ள தனது காணியொன்றினை ஒரு கோடியே 42 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்வுள்ளதாக கூறி போலியான உறுதி உள்ளிட்ட போலி ஆவணங்களை அனுப்பி, கனடா வாசியிடம் இருந்து ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை சட்டவிரோதமான முறையில் (உண்டியல் மூலம்) பெற்றுள்ளார்.  சில தினங்களின் பின்னரே தமக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கனடாவை சேர்ந்தவருக்கு தெரியவந்துள்ளது.  அதனை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, மோசடியில் ஈடுபட்ட நபர், போலியாக தன்னை ஒரு மருத்துவர் என கூறி புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நபர்கள் பலரிடம் பல ஆண்டு காலமாக இலவச மருத்துவ முகாம்களுக்கு என பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருகின்றார் என தெரியவந்துள்ளது.  இந்நிலையில் குறித்த நபர் அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், காருடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  https://www.virakesari.lk/article/185253
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.