Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு

spacer.png

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்ட அவர்களை நினைவு கூறும் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு நினைவுத் தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பொதுமக்களை பொலிசார் தாக்கினர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே தவறு இழைத்தனர்.அப்பாவி மக்கள் 11 பேர் படுகொலை செய்வதற்கு காரணமாக அமைந்தனர். குறித்த சம்பவம் இடம்பெற்று 47 வருடங்கள் கடந்த நிலையிலும் அது தொடர்பாக குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

அப்போதிருந்த மாநகர மேஜர் அல்பிரெட் துரையப்பா செய்த அந்த பெரும் துரோகம் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்கள் மிகப் பெரும் போராட்டத்தில் ஈடுபட கூடிய ஒரு நிலைமை தான் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது தமிழர்களை பொறுத்த வரையிலே தமிழர்கள் மீதான இந்த படுகொலைகளை மட்டுமல்ல வடகிழக்கு தமிழர்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் ஸ்ரீலங்கா காவல்துறையினர் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் பாரியளவிலான போராட்டத்தில் ஈடுபட அதற்கான சூழலை உருவாக்கியது.

அந்த ஆயுத போராட்டம் பின்னர் சர்வதேச துணையோடு இருந்தாலும் அது மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கவில்லை ஒரு துரோகத்தனமான செயல்பாட்டிலேயே தமிழ் கட்சிகள் ஈடுபட்டிருப்பது என்பதுதான் மிகவும் துரதிஷ்டவசமானதாக இருக்கிறது.

இந்த செயல்பாடானது மீண்டும் தமிழர்களை எங்கே கொண்டு செல்லப் போகின்றது என்பது தொடர்பாக ஒரு அச்சம் ஏற்படுகின்றது தமிழர்களை நிராகரித்து தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஸ்டி தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி எழுபத்தி நான்கு வருடங்களாக போராடி வந்திருக்கின்றனர்.

இன்று தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு பெற்ற கட்சிகள் ஒற்றையாட்சியை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் எமது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தோம். அன்று எங்களுடைய கருத்தை பொய் என்று சொல்லி சொன்னார்கள் 2015ஆம் ஆண்டில் நாங்கள் சொன்ன கருத்துக்கள் ஓரளவுக்கு உண்மையாக தொடங்கியது.

நீதியரசராக இருந்த கைக்கூலியான விக்னேஸ்வரன் அவர்களை தமிழர்களில் ஒருவராக காட்டி, தமிழ் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களும் கூட அவரை ஒரு நல்லவர் வல்லவர் என்று எங்களுடைய மக்களுக்கு காட்டி அவரை தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்க  துணை நின்று இருந்தார்கள்.

புலம்பெயர் தேசங்களில் இருந்தும் அவருடைய துரோகத்தனம் தெரிந்து கொண்டும் அவருக்குத் துணைநின்றனர். விக்னேஸ்வரன் கூட இந்த 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இந்த துரோகத்துக்கு துணை போயிருக்கின்றார். மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சித்தார்த்தன், மாவை சேனாதிராசா விக்னேஸ்வரன் ஆகியவர்கள் கூட்டிணைந்து

அரசியலமைப்பு ஆவணம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்கள்.இது படிப்படியாக வளர்ச்சி அடைந்து நாடாளுமன்றத்திலும் அந்த அரசியலமைப்பை ஆதரிப்பார்களாக இருந்தால் இந்த தீவில் தமிழர்கள் நிரந்தர அடிமைகளாக்கப்படுவார்கள்.

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய மக்கள் விழிப்படைய வேண்டும் என்று இந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இந்த மக்கள் மீது நாங்கள் ஆணையாக நாங்கள் கேட்கின்றோம்” என்றார்.

 

https://athavannews.com/2022/1261170

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு 

சைக்கிள் கோஸ்டி பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், இதை சொன்னதுக்கு   அவர்களை பாராட்டலாம். துரோகி கதையெல்லாம் வெறும் மேடைப் பேச்சு ( play to the gallery).
அநேக தமிழ் தலைவர்களுக்கு( சம்பந்தன், மாவை, சுரேஷ்,செல்வம்) இந்தியாவில் ஆதனங்கள் இருப்பதாகவும், அவர்களுடைய வாரிசுககளுக்கு இந்தியாவின் உதவிகள் கிடைப்பதாகவும், உறுதிப்படுத்தப்படாத  செய்திகள் சொல்லுகின்றன. யாருக்காவது  தெரியுமா அதன் உண்மை தன்மை?

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நீதியரசராக இருந்த கைக்கூலியான விக்னேஸ்வரன் அவர்களை தமிழர்களில் ஒருவராக காட்டி, தமிழ் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களும் கூட அவரை ஒரு நல்லவர் வல்லவர் என்று எங்களுடைய மக்களுக்கு காட்டி அவரை தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்க  துணை நின்று இருந்தார்கள்

ஆமா ....  இவருக்கும் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கும் என்ன பிரச்சனை? விக்கினேஸ்வரன் ஐயா தமிழருக்கு என்ன துரோகமிழைத்தார்? என்று சொல்லவேயில்லை, துரோகமிழைத்து விட்டார் என்கிறார், ஒருவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவோ? இவர்கள் என்ன சாதித்தார்கள்? என்றும் சொன்னால் நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கோஷ்டிகள் நீங்கள் எல்லோரும் எங்களை இவ்வளவுகாலமும் மாத்தி மாத்தி ஏமாத்தியது போதும்.. இப்போ நாங்க ஒண்டிக்கட்டயாவே இருந்து பழகிட்டோம்...  இனியும் அப்படியே இருந்துக்குறோம்...!!!

Edited by பாலபத்ர ஓணாண்டி

தெரிந்து கொண்டும் வாக்குப் போடும் நாங்கள் தான் முட்டாள்கள். முதலில் நாங்கள் திருந்த வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

எங்களுடைய மக்கள் விழிப்படைய வேண்டும் என்று இந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இந்த மக்கள் மீது நாங்கள் ஆணையாக நாங்கள் கேட்கின்றோம்” என்றார்.

மக்கள் விழிப்படைந்து 100% இவர்களை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுபபினால்  என்ன தீர்வு பெற்றுத் தருவார்கள்?[ உறுதியான தீர்வு ]

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு

 

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார்.

 

 

என்ன விலையழகே...
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அட பிரேக்கிங் நியூஸ் சொல்றார் இவ்வளவுகாலமும் எங்களுக்கு இந்த செய்தி தெரியாமல் போயிட்டுது செய்தி கேள்ள்விப்பட்டு பெருமாளுக்கு தல சுத்துது .🙃 😆

எல்லாம் சிவாஜிகணேசனை தோற்கும் அளவுக்கு நடிக்கிறார்கள் அந்த சைனா தூதுவர்கள் நல்லூர் பக்கம் வந்தபோது  இவர் எந்த புத்துக்குள் மறைந்து  இருந்தவராம் ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

சைக்கிள் கோஸ்டி பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், இதை சொன்னதுக்கு   அவர்களை பாராட்டலாம். துரோகி கதையெல்லாம் வெறும் மேடைப் பேச்சு ( play to the gallery).
அநேக தமிழ் தலைவர்களுக்கு( சம்பந்தன், மாவை, சுரேஷ்,செல்வம்) இந்தியாவில் ஆதனங்கள் இருப்பதாகவும், அவர்களுடைய வாரிசுககளுக்கு இந்தியாவின் உதவிகள் கிடைப்பதாகவும், உறுதிப்படுத்தப்படாத  செய்திகள் சொல்லுகின்றன. யாருக்காவது  தெரியுமா அதன் உண்மை தன்மை?

செல்வத்தின் குடும்பம் இந்தியாவில் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தி. 

அவர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவிடம் முழுமையாக சரணடைந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

என்ன விலையழகே...
என்ன விலையழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே 
மலைத்தான் உடனே அவனே 

அழகைப் படைக்கும் திறமை முழுக்க 
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி

விரைவினில் வந்து கலந்திடு 
விரல்பட மெல்லக் கனிந்திடு 
உடல் மட்டும் இங்கு கிடக்குது 
உடன் வந்து நீயும் உயிர் கொடு

பல்லவன் சிற்பிகள் அன்று 
பண்ணிய சிற்பத்தில் ஒன்று 
பெண்ணென வந்தது இன்று சிலையே
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.