Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன்

spacer.png

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடன் இதுவரை உத்தியோகபூர்வ சந்திப்பை நடத்தவில்லை.

கடந்த வருடம் அரச தலைவர் செயலகத்தால் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இம்மாத இறுதியில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டமைப்பும் அதற்கான பதிலை வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், பேச்சுவார்த்தைக்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என கூறினார்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க தாம் விரும்பவில்லை என்றும் இந்த விடயத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பொது நேரில் தெரிவிப்போம் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழியமைக்கும் வகையில் அந்தப் பேச்சு இடம்பெற வேண்டும் என குறிப்பிட்ட சம்பந்தன், அதை விடுத்து இனியும் ஏமாறத் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டார்.
 

 

https://athavannews.com/2022/1262405

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க தாம் விரும்பவில்லை என்றும் இந்த விடயத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பொது நேரில் தெரிவிப்போம் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அட கடவுளே! எழுபது வருடத்திற்கு பிறகா இந்த முடிவை எடுக்க வேண்டும்?  ஒருவேளை தனது மூப்பை எண்ணி இந்த முடிவை எடுத்திருப்பாரோ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க தாம் விரும்பவில்லை என்றும் இந்த விடயத்தை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பொது நேரில் தெரிவிப்போம் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கையில் இருந்தது கல் (விடுதலைப் புலிகள்) அல்ல. நழுவவிட்ட பின்புதான் சம்பந்தருக்குத் தெரிகிறது அது வைரம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டபய தனது கட்சி தேர்தலில்  தோற்கும் எனும் நிலை வரும் போது கூட்டமைப்புடன் பேசலாம். அது வரை கூட்டமைப்பை தட்டிக்கழிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன்

 

ஐயா இப்பத்தான்  அரசியலுக்கு வாறார் போலும்...

70 வருடங்களாக  தமிழினத்துக்கு  இப்படி  பேசக்கூடிய செய்யக்கூடிய  ஆள் கிடைத்திருந்தால்???

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, கிருபன் said:

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை

ஒம் சம்பந்தன் ஐயா......எல்லாம் செய்து பாத்தாச்சுது
இனி குங் பூ ஒண்டுதான் மிச்சம்...

Gif GIF - Gif GIFs

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை – சம்பந்தன்

அவர் சொல்வதை நீங்கள் விழங்கிக் கொள்ளவில்லை.

அவர் சொல்வதன் அர்த்தம்.
இனிமேல் என்னால் பேச முடியாது.
கடிதத்தில் தொடர்பு கொள்வோம் என்பது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பொங்கலுக்காவது தீர்வு வருமா..? எங்களாலும் காலத்தை வீணடிக்க முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தை என்ற ஒன்றை எப்ப நடத்தினனீங்கள் சம்புந்தர். அது புலிகளோட போயே போச்சு. சும்மா போய் குந்தி இருந்து மிக்ஸர் சாப்பிட்டிட்டு கொட்டாவி விட்டிட்டு வந்தெல்லாம் பேச்சுவார்த்தை ஆகாது. 

அதுசரி.. பேச்சு வார்த்தை முடிஞ்சு.. அடுத்து என்ன..??! கோலாட்டம் சிலம்பாட்டமா..??!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அடுத்த பொங்கலுக்காவது தீர்வு வருமா..? எங்களாலும் காலத்தை வீணடிக்க முடியாது..

கேட்டுப்பாருங்கோ கால அவகாசம் குடுக்க முடியுமா சார் எண்டு?

எனக்கு நல்லவடிவாய் தெரியும் கேட்டால் இல்லையெண்டு சொல்லாமல் கால அவகாசம் தருவுவினம்.....அப்பிடியான கொடை வள்ளல் கூட்டம் அது.

  • கருத்துக்கள உறவுகள்

எழுபது வருடம் வீணிலே கழிந்து, எண்ணடங்கா உயிர்களும், உடமைகளும் அழிந்தது இழப்பாகவே யாருக்கும் தெரியவில்லை. இப்போ தான் காலத்தைப்பற்றி அழுகிறார்கள் காரணம் காலம் அவர்கள் வாழ்வில் மாறுதலை ஏற்படுத்தியபடியால், காலங்கடந்த ஞானம் பேசுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் கடத்துவதற்கு அவருக்கு அதிக காலமில்லை, எல்லைக்கு வந்தாச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.