Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்சியை அபகரிக்கச் சதி; ஆனந்தசங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை அபகரிக்கச் சதி; ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியினை அபகரிக்க ஒரு குழுவினர் தந்திரமாக செயற்பட்டுவருவதாகவும் அவர்களை கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர் விடுதலைக் கூட்டணி பொதுக்குழு மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
Anandasangaree.jpg
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி. இதனை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு என்மேல் அவதூறு சொல்லி என்னை அவமானப்படுத்தி கட்சி ஆவணங்களையும், அலுவலகத்தையும் அபகரிக்கத்திட்டமிட்டதோடல்லாமல், 24.01.2022 அன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும் 29.01.2022 அன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நியமனங்களை வழங்க இருப்பதாகவும் அறிகிறேன். இதில் கலந்துகொள்வது சட்டவிரோதமான செயலாகும். ஆதலால் தயவு செய்து சட்டவிரோதமான இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதீர்கள்.
இந்த மோசடிக்கார்களுக்கெதிராக எனது சட்டத்தரணி மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் இந்த மோசடிக்காரர்களை மக்கள் நம்ம வேண்டாம் என்றும், அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து ஆதரவாளர்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/162213

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக் கட்சியை பாதுகாக்கக் கூட வக்கில.. இதுக்கு யாருக்கு காட்டிக்கொடுப்புக் கடிதம் எழுதலாமுன்னு யோசியப்பு யோசி. அதுதானே உங்க அரசியல். 

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியை காப்பாற்ற ஒரே வழி.. நல்ல அடிமாட்டு விலைக்கு எண்டாலும் யாருக்காவது பேய்க்காட்டி விற்றுவிடலாம்…

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா உடும்புக்கறி உண்டு கட்சியை உடும்புப் பிடியாகத்தான் பிடித்து வைத்திருந்தார். ஆனாலும் பாவம் எங்கோ சறுக்கிவிட்டது. 🙄

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியை வாசிக்க, ஒரே சிரிப்பாய் இருக்கு.
ஆனந்த சங்கரியை… அவரது கட்சியில் உள்ள ஆட்களே அவமானப் படுத்தி விட்டார்களாம்.
மானம் என்று… ஒன்று, இருந்தால்தானே… அவமானப் படுத்த முடியும். 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nunavilan said:

தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி.

காக்கைவன்னியன் கட்சி எண்டு சொல்லுறதை விட்டுட்டு பாரம்பரிய கட்சியாமெல்லே..😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

காக்கைவன்னியன் கட்சி எண்டு சொல்லுறதை விட்டுட்டு பாரம்பரிய கட்சியாமெல்லே..😂

எல்லோருமே மறந்து போனார்கள் என்று 
ஞாபகப்படுத்த என்று ஒரு சின்ன குண்டு அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

அன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும்

4 பேர் இருப்பினமா.?  இந்த குழு இம்சை தாங்க ஏலவில்லையே நாராயணா .மருந்தடித்து கொல்லுங்கப்பா..☺️

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

கட்சியை அபகரிக்கச் சதி; ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியினை அபகரிக்க ஒரு குழுவினர் தந்திரமாக செயற்பட்டுவருவதாகவும் அவர்களை கட்சியின் ஆதரவாளர்களும் மக்களும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழர் விடுதலைக் கூட்டணி பொதுக்குழு மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு அன்பான வேண்டுகோள்.
Anandasangaree.jpg
தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பாரம்பரியமிக்க கட்சி. இதனை பொய்களை வாரி வழங்கும் ஒரு குழுவினர் தந்திரமாக அபகரிக்கத் திட்டமிட்டு என்மேல் அவதூறு சொல்லி என்னை அவமானப்படுத்தி கட்சி ஆவணங்களையும், அலுவலகத்தையும் அபகரிக்கத்திட்டமிட்டதோடல்லாமல், 24.01.2022 அன்று நடவடிக்கைக் குழுவைக் கூட்ட இருப்பதாகவும் 29.01.2022 அன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நியமனங்களை வழங்க இருப்பதாகவும் அறிகிறேன். இதில் கலந்துகொள்வது சட்டவிரோதமான செயலாகும். ஆதலால் தயவு செய்து சட்டவிரோதமான இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதீர்கள்.
இந்த மோசடிக்கார்களுக்கெதிராக எனது சட்டத்தரணி மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன் என்றும் இந்த மோசடிக்காரர்களை மக்கள் நம்ம வேண்டாம் என்றும், அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அனைத்து ஆதரவாளர்களையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/162213

அடிப்படையே உதைக்குதே..

"அபகரிக்க"  திட்டம்..☹️

உம்மட சொந்த சொத்தென்றால் தான் தானே "அபகரிப்பு" என்பது பொருந்தும்.

இது மக்களின் ஒரு அரசியல் கட்சி ஐயா. இப்பத்தைக்கு நீர் நிர்வாகத்தில் இருக்கிறீர், அவ்வளவே.

எத்தனை வயசாகியும் இது கூட விளங்கவில்லை எண்டால்...

கச்சியேகம்பனே.......

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம், உவற்றை கட்சி மன்னர்காலத்துப் பொக்கிஷம், அதை அபகரிக்க முழு உலகமே சதிசெய்யுது!!!

இனக்கொலையாளிகளுக்கு வக்காலத்து வாங்கவும் இனக்கொலையை நியாயப்படுத்தவும் கட்சியென்ற பெயரில இந்த *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் நடத்துற கசாப்புக்கடையை அபகரிக்கப்போறாங்கள் எண்டு அலறுது.  கட்டையில போற காலத்தில கனவு கினவு ஏதாச்சும் கண்டுதோ?? உந்தப்பக்கம் கொரோணா எண்டு சொன்னாங்கள், ஒண்டும் நடக்கேல்லைப் போல? உடும்புக்கறி தின்னுறதால எதிர்ப்புச் சக்தி வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதின சொல்லை நீக்கினது பிரச்சினையில்லை. ஆனால் இவருக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு? 

இனக்கொலை செய்தவர்களுக்கு நற்சான்றிதழ்

புலிகளுக்கெதிராக ஐ நா வுக்கு மடல்

மகிந்தவாலும், சந்திரிக்காவாலும் சிறந்த தமிழ் அரசியல்வாதி (எல்லாம் தமிழருக்கெதிராக தொடர்ச்சியாகக் கத்திக்கொண்டிருப்பதற்கும், சிங்களத்திற்கு ஆதரவாக சான்றிதழ் கொடுத்து வருவதற்கும்)

கருணாவின் அரசியல் ஆலோசகர் (2004 - 2005)

இந்தவகையான இனத்துரோகத்திற்கு இவருக்கு மரியாதை குடுக்கத்தான் வேணும்!!!

 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

நான் எழுதின சொல்லை நீக்கினது பிரச்சினையில்லை. ஆனால் இவருக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு? 

இனக்கொலை செய்தவர்களுக்கு நற்சான்றிதழ்

புலிகளுக்கெதிராக ஐ நா வுக்கு மடல்

மகிந்தவாலும், சந்திரிக்காவாலும் சிறந்த தமிழ் அரசியல்வாதி (எல்லாம் தமிழருக்கெதிராக தொடர்ச்சியாகக் கத்திக்கொண்டிருப்பதற்கும், சிங்களத்திற்கு ஆதரவாக சான்றிதழ் கொடுத்து வருவதற்கும்)

கருணாவின் அரசியல் ஆலோசகர் (2004 - 2005)

இந்தவகையான இனத்துரோகத்திற்கு இவருக்கு மரியாதை குடுக்கத்தான் வேணும்!!!

 

இவருடைய செயலைப் பாராட்டி… சிங்கள அரசு இவருக்கு,
ஒரு கோடி ரூபாய்…. பரிசு கொடுத்தது, நல்ல நினைவில் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.