Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தலைவர்களின் சதியில் இருந்து காப்பாற்றவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் – பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு தலைவர்களின் சதியில் இருந்து காப்பாற்றவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் – பிள்ளையான்

spacer.png

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என   மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “வடகிழக்கில் நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிட்டவர்களில் அதிகூடிய விரும்புவாக்கு எனக்கு கிடைத்தது. அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன்,கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.

நான் சிறையிலிருந்து வெளிவரும்போது கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை விரைவாக அமுலாக்குவதில் மிகப்பெரிய சங்கடங்களும் உள்ள சூழ்நிலையில்தான் உள்ளோம்.

இருந்தபோதிலும் நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டுவருகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துவைத்துள்ளது.

அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார். ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றின் காரணமான கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்,பலவற்றை செய்துவருகின்றோம்.

நான் கல்வைத்தேன் என்பதற்காக கட்டப்படாமலிருந்த பொதுநூலகத்திற்காக கட்டப்பணிக்கு நான் 200மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடுசெய்து பணி நடைபெற்றுவருகின்றது. இந்த கொரனா தொற்று அதிகரிக்காத நிலையிருந்தால் மேமாதம் அல்லது அதற்கு பின்னர் நூலகம் திறந்துவைக்கப்படும்.

அதேபோன்று 62கிலோமீற்றர் பாதைகளை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 100கிலோமீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்கு கிடைத்திருந்தது. இரு வாரத்தில் மேலும் 40கிலாமீற்றர் வீதிவரவுள்ளது. பல அபிவிருத்திசார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டுவந்திருக்கின்றோம்.

இந்த நன்மைகள் ஊடாக கிராமங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். கல்வியும் பொருளாதாரமும் இல்லையென்றால் மிகவும் பின்தங்கிய நிலைக்குசென்றுவிடும். அதனை கட்டியெழுப்புவதற்கான தளம் இன்னும் எங்களுக்கு போதாதாகவேயுள்ளது.

நாங்கள் எமது பிரதேசத்தின் உற்பத்தி துறையினை சர்வதேசத்தின் தரத்திற்கு கொண்டுசெல்வதற்கான கல்விதுறையை நாங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அதேபோன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான மொழியறிவுகளை வழங்குவதற்கு கிராம மட்ட கற்பித்தல்செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.”  என தெரிவித்தார்.
 

 

https://athavannews.com/2022/1263874

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என   மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மதரீதியாக இயங்கும் இனம் ஒன்று அவர்களுக்குக் கிடைத்த அரச அதிகாரத்துடனும், மதரீதியாகக் கிடைக்கும் பெரும் பொருள்ச் செல்வாக்கையும் வைத்துத் தமிழர்களுடைய வாழ்விடங்களையும், காணிகளோடு தொழில் நிலையங்களையும் கைப்பற்றி அங்குள்ள தமிழினத்தை ஓட்டாண்டியாக்க முயன்றபோது அதனை ஓரளவிற்கேனும் தடுத்தாட்கொண்ட பிள்ளையானைப் பாராட்டுவதில் தப்பில்லை, அந்தச் செயற்பாட்டின் நன்றிக்காகவே அங்குவாழும் இளைஞர் யுவதிகள் அவருக்கு அதிகூடிய வாக்கினையளித்து சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என்பதுதான் யதார்த்தம்.

மறுபக்கம் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என அங்கு ஊறிப்போயுள்ள துவேசம் பிள்ளையான் போன்றவர்களிலும் உறைந்துள்ளதால் அது அவர்கள் பேச்சிலும் நாற்றத்தைக் கொண்டுவருகிறது. உண்மையில் மட்டக்களப்பை முன்னேற்றியதில் யாழ்ப்பாண மக்களுக்குப் பெரும் பங்குண்டு. அதேநேரம் அங்கு சாதி, சமயம், கற்றவர், பெரும்குலத்தோர் என்ற செருக்குடன் சென்று குடியேறிய யாழப்பாண மக்களால் மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்ட குடியினர் பட்டதுன்பங்களும் அனேகம் என்பதையும் மறுதலிக்க முடியாது.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 பிள்ளையான் சிங்களவர்களை விட துவேசம் பிடித்தவர்......

சந்தர்ப்பம் வந்த போதே தனியக பிரிந்து போயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை  நம்பி புருசனை????

போய்  வாருங்கள்😭

கதவு  திறந்து  இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள்

சிங்கள எஜமானர்களின் விருப்புக்கேற்றவாறு ஒவ்வொன்றும் குரைக்குது. வடக்கென்றும், கிழக்கென்றும் பிரிக்குது. இதனால் ஒருநாள் வருந்த வேண்டிவரும் இதுவல்ல, வரும் சந்ததி.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குத் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 

சம்பந்தனையும் சாணக்கியனையுமா..

வடக்கில் தலைவர்கள் என்று தற்போது ஒருவரும் இல்லையே.. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வடக்குத் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 

சம்பந்தனையும் சாணக்கியனையுமா..

வடக்கில் தலைவர்கள் என்று தற்போது ஒருவரும் இல்லையே.. 

🤣

சுமந்திரனையாக்கும் 🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வடக்குத் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 

சம்பந்தனையும் சாணக்கியனையுமா..

வடக்கில் தலைவர்கள் என்று தற்போது ஒருவரும் இல்லையே.. 

🤣

அவருக்கென்ன காரணமா தேவை??

காரியம்  நடக்கணும்

அதுக்கு எதையும்  தேடலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

சுமந்திரனையாக்கும் 🤪

அட, சுமந்திரனை தலைவர் என்று பிள்ளையான் ஏற்றுக்கொண்டுவிட்டார..?

சொல்லவேயில..🤪

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

வடக்குத் தலைவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்? 

சம்பந்தனையும் சாணக்கியனையுமா..

வடக்கில் தலைவர்கள் என்று தற்போது ஒருவரும் இல்லையே.. 

🤣

தலைவர் பிரபாகரனை.

அவரை எதிர்த்துத்தான் இவரும் கருணாவும் வெளியேறிச் சென்று எதிரியுடன் சேர்ந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரஞ்சித் said:

தலைவர் பிரபாகரனை.

அவரை எதிர்த்துத்தான் இவரும் கருணாவும் வெளியேறிச் சென்று எதிரியுடன் சேர்ந்தார்கள்.

அந்த மனிதனின் நேர்மைக்கு இங்கே ஒருவரும் கால்காசு பெறுமதி பெறார். 

""எறும்பு ஊர்ந்து மரம் சாய்வதில்லை""

🙏

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

வடக்கு தலைவர்களின் சதியில் இருந்து காப்பாற்றவே மக்கள் எனக்கு வாக்களித்தார்கள் – பிள்ளையான்

spacer.png

கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என   மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுங்கான்கேணி கிராமத்திற்கான பிரதான வீதியை புனரமைப்பதற்கான பணிகள் ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “வடகிழக்கில் நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிட்டவர்களில் அதிகூடிய விரும்புவாக்கு எனக்கு கிடைத்தது. அதற்கு காரணம் இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன்,கிழக்கு மாகாணத்தின் தனித்துவம்பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர்.

நான் சிறையிலிருந்து வெளிவரும்போது கொவிட் தொற்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை விரைவாக அமுலாக்குவதில் மிகப்பெரிய சங்கடங்களும் உள்ள சூழ்நிலையில்தான் உள்ளோம்.

இருந்தபோதிலும் நாங்கள் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் ஒரு இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டுவருகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு தனித்துவமான கட்சி. எமது கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துவைத்துள்ளது.

அந்த கட்சியின் உறுப்பினர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார். ஒரு இணக்கப்பாட்டுடன் நாங்கள் செயற்படுவதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றின் காரணமான கடுமையான நெருக்கடிகளுக்கும் மத்தியில் பல அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்,பலவற்றை செய்துவருகின்றோம்.

நான் கல்வைத்தேன் என்பதற்காக கட்டப்படாமலிருந்த பொதுநூலகத்திற்காக கட்டப்பணிக்கு நான் 200மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடுசெய்து பணி நடைபெற்றுவருகின்றது. இந்த கொரனா தொற்று அதிகரிக்காத நிலையிருந்தால் மேமாதம் அல்லது அதற்கு பின்னர் நூலகம் திறந்துவைக்கப்படும்.

அதேபோன்று 62கிலோமீற்றர் பாதைகளை புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 100கிலோமீற்றர் முதல் கட்ட அனுமதி எனக்கு கிடைத்திருந்தது. இரு வாரத்தில் மேலும் 40கிலாமீற்றர் வீதிவரவுள்ளது. பல அபிவிருத்திசார்ந்த நிதிகளை நாங்கள் கொண்டுவந்திருக்கின்றோம்.

இந்த நன்மைகள் ஊடாக கிராமங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். கல்வியும் பொருளாதாரமும் இல்லையென்றால் மிகவும் பின்தங்கிய நிலைக்குசென்றுவிடும். அதனை கட்டியெழுப்புவதற்கான தளம் இன்னும் எங்களுக்கு போதாதாகவேயுள்ளது.

நாங்கள் எமது பிரதேசத்தின் உற்பத்தி துறையினை சர்வதேசத்தின் தரத்திற்கு கொண்டுசெல்வதற்கான கல்விதுறையை நாங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். அதேபோன்று தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான மொழியறிவுகளை வழங்குவதற்கு கிராம மட்ட கற்பித்தல்செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.”  என தெரிவித்தார்.
 

 

https://athavannews.com/2022/1263874

 

வேப்பவெட்டுவான் வீதி மண்கொள்ளையர்களின் தலைவர்கள் பிள்ளையான், வியாழேந்திரன் பங்கு என்ன? 

இதற்குத்தானா பிள்ளையானை தெரிவு செய்தோம்? 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் ராணுவத்தின் ஏவலாளியாக இருக்கும்போதே மண் கொள்ளையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இது அரச. ராணுவ ஆதரவுடனேயே இன்றுவரை நடைபெற்று வருகிறது. சந்தனமடு ஆற்றிலிருந்து பிள்ளையாபின் ஆயுததாரிகள் மண் அகழ்வில் ஈடுபடும்போது பொதுமக்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டு துப்பாக்கிப் பிரியோகமும் பலமுறை செய்திருக்கிறார்கள். பிள்ளையான் மண் கொள்ளைக்காரன் என்பது கிழக்கு மக்கள் அறியாதது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், கிழக்கு மாகாண புத்திஜீவிகளான பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் ஆகியோர் முன்வைக்கும் கிழக்கு மாகாணத்தை அடிமைப்படுத்தி, தமது காழின் கீழ் கொண்டுவந்து அடக்கியாளவே வடக்குத் தமிழர்கள் முயல்கிறார்கள், இதனாலேயே வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணையவேண்டும் என்று இன்றும் கேட்டுவருகிறார்கள், கிழக்கு மண் கிழக்குத் தமிழர்களுக்கானது, அதனை அவர்கள் எவ்வாறு பாவிக்கவேண்டும் என்பதுபற்றி வடக்கர்கள் கவலைப்படத் தேவையில்லை என்னும் புதிய தியரிகளோடு ஒருசிலர் இக்களத்தில் இனி வருவார்கள். 

ஆகவே, அது அவர்களின் மண், அவர்களின் தலைவர்கள், அவர்களால் 50,000 விருப்பு வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட "மக்கள் மனம் கவர்ந்தவர்கள்" என்று கூறிவிட்டு நாம் கடந்து செல்வதே நாம் செய்யவேண்டியது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.