Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடன் வழங்கியவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வழங்கியவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் – சுமந்திரன்

கடன்களை பிறிதொரு திகதியில் திருப்பிச் செலுத்துவது குறித்து ஆராய வேண்டும்..!

suma-720x375.jpg

கடன்களை மீள செலுத்துவதற்கான புதிய கால அட்டவணை குறித்து அரசாங்கம் கடன் வழங்கியவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகேள் விடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடனும் மூன்று முக்கிய குழுக்களின் தலைவர்களுடனும் அவர் இரண்டு சுற்றுபேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹர்ச டி சில்வா, எரான் விக்கிரமரட்ண தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரிய ஆகியோரும் இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

அரசாங்கம் கடன் வழங்கியவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, கடன்களை மீள செலுத்துவதற்கான புதிய கால அட்டவணைக்கான யோசனையை முன்வைக்கவேண்டும் என இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடன்களை பிறிதொரு திகதியில் திருப்பிச் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டிற்கு அரசாங்கத்தினால் வரமுடியுமென்றால் அரசாங்கத்திடம் குறிப்பிட்ட அளவு டொலர் எஞ்சியிருக்கும் என்றும் அதனை மக்களிற்கு எரிபொருள், மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடன்களை பிறிதொரு திகதியில் திருப்பி செலுத்துவதற்கான ஏற்பாடு காரணமாக அரசாங்கத்தின் சமூக நலன்புரி நடவடிக்கைகளிற்கு பாதிப்பு ஏற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1266583

  • கருத்துக்கள உறவுகள்

தம்பீ...  சுமந்திரா,
அரசாங்கம் தன்ரை வேலையை பார்த்துக் கொள்ளும்.
நீங்கள்.. உங்கள் மக்களின்ரை, அலுவலை பாரப்பு. 

இந்தாளுக்கு.... தான், என்னத்துக்கு பாராளுமன்றம் போனதெண்டே மறந்து போச்சுது.
சோனகனுக்கும், சிங்களவனுக்கும்... வக்காலத்து வாங்கிக் கொண்டே இருக்குது.   

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தம்பீ...  சுமந்திரா,
அரசாங்கம் தன்ரை வேலையை பார்த்துக் கொள்ளும்.
நீங்கள்.. உங்கள் மக்களின்ரை, அலுவலை பாரப்பு. 

இந்தாளுக்கு.... தான், என்னத்துக்கு பாராளுமன்றம் போனதெண்டே மறந்து போச்சுது.
சோனகனுக்கும், சிங்களவனுக்கும்... வக்காலத்து வாங்கிக் கொண்டே இருக்குது.   

உலகத்தை நினச்சன் ;  சிரிச்சன்..memees.php?w=650&img=c2VudGhpbC9zZW50aGl நம்மட ஊர்ல எத்தனை சந்து பொந்து இருக்குனு உனக்கு தெரியுமா.?  

  • கருத்துக்கள உறவுகள்

விசுவாசம்???

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

தம்பீ...  சுமந்திரா,
அரசாங்கம் தன்ரை வேலையை பார்த்துக் கொள்ளும்.
நீங்கள்.. உங்கள் மக்களின்ரை, அலுவலை பாரப்பு. 

இந்தாளுக்கு.... தான், என்னத்துக்கு பாராளுமன்றம் போனதெண்டே மறந்து போச்சுது.
சோனகனுக்கும், சிங்களவனுக்கும்... வக்காலத்து வாங்கிக் கொண்டே இருக்குது.   

12 வருடமாய் தமிழருக்கு  ஒன்றும் செய்யவில்லை இனி சிங்களவனுக்கு வெட்டி புடுங்க போரராம் அப்படியே சிங்களவனுடன் இருக்க சொல்லுங்க அவர் எல்லா உருவமும் எடுத்து பார்க்கிறார் ஒன்றும் முடியல கொஞ்சநாள் தாங்களே தங்களை அண்டன் பாலசிங்கம் என்று ஸ்ரீதரனும் இவரும் சொல்லிப்பார்த்தனர் மக்கள் முறைத்தார்கள் மேட்டுக்குடி றேன்சில் ஒருநாள் நெல்லு விதைத்து அன்றே பொங்கல் போட்டார் படம் எடுத்த வீடியோக்காரனே பொங்கித்தள்ளிவிட்டான் புலம்பெயரை சந்தித்த புலிகள் போல் கனடா பக்கம் போனார் அடிவிழாத குறையாக தெறித்து ஓடினார் அப்படியே லண்டன் பக்கம் ஒதுங்கி தன்னுடைய பந்தம்களுக்கு  மட்டும் அவர்கள் கொடுத்த சிவாஸ் ரீகளை குடித்து விட்டு அரசியல் கதைத்தார் ஆதாரம் படம்கள் உள்ளன இப்ப நவீன கதிர்காமரா வேடம் போட்டு உள்ளார் நல்ல ராசியானவர் இனி தமிழ் பக்கம் வரவேண்டாம் சிங்களவரே  அவரை வைத்து கொள்ளட்டும் எமது பக்கம் இளையவர்கள் நிறைய இருக்கினம் அவர்கள் வரட்டும் .

சுமத்திரன் இல்லாவிட்டால் வேறுயார் என்று கேட்பவர்களுக்கு நிறைய இளையவர்கள் மூன்று மொழியும் சரளமாய் கதைப்பவர்கள் இருக்கிறார்கள்  முதலில் சம் சும் கூட்டம்  ஒதுங்கட்டும் இளையவர்கள்  தாங்களா  அரசியலுக்கு வருவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ...ஓ இதுவா இவர் கூடிப்பேசிய அந்த ரகசியம்? இப்போ விளங்குது, இதுக்கு கேட்காமலேயே விட்டிருந்தால் அவராகவே சொல்லிப்போட்டு போறார். அமைச்சசரும் என்னவோ ஏதோ என்று பதறிப்போனார். சிங்களருக்கு இவர் யோசனை? .... ம். இதுக்கு வேறொரு பெயர் இரகசியம் இவர்கள் மொழியில்.                    

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

ஓ ...ஓ இதுவா இவர் கூடிப்பேசிய அந்த ரகசியம்? இப்போ விளங்குது, இதுக்கு கேட்காமலேயே விட்டிருந்தால் அவராகவே சொல்லிப்போட்டு போறார். அமைச்சசரும் என்னவோ ஏதோ என்று பதறிப்போனார். சிங்களருக்கு இவர் யோசனை? .... ம். இதுக்கு வேறொரு பெயர் இரகசியம் இவர்கள் மொழியில்.                    

சும்மின் விசுவாசிகளே அவரை கைவிட்டு விட்டார்கள் முன்பெல்லாம் சும் பற்றி எழுதினால் ஐந்தாறு பேர் கம்பு சுத்துவினம் போதாக்குறைக்கு தாங்களே தங்களை ஆறிவாளிகள் என்று சொல்லிக்கொண்டு இப்ப அந்த அறிவாளிகளுக்கு விளங்கிட்டுது சும்மால் ஒன்றும் வெட்டி பிடுங்க முடியாது என்று பள்ளிக்கூடம் போகாத நாங்க சொன்னது பலித்துவிட்டது அந்த  வெக்கத்தில் ஒளித்து இருந்து பார்க்கினம் 😃..........................................................................நிறைய எழுதலாம் இப்போ வேணாம் .🙃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

விசுவாசம்???

அவருக்கு உள்ளூரை விட வெளியூரிலைதான் விசுவாசம் எக்கச்சக்கம். அந்த விசுவாசியள் தான் தாயக மக்களுக்கு யாரை தெரிவு செய்யோணும் எண்டு தெரியும் புலம்பெயர்மக்கள் வாயை மூடிக்கொண்டு இருங்கோ எண்டு புலம்புவினம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இனி தமிழ் பக்கம் வரவேண்டாம் சிங்களவரே  அவரை வைத்து கொள்ளட்டும்

 

1 hour ago, பெருமாள் said:

அப்படியே சிங்களவனுடன் இருக்க சொல்லுங்க

இவர் எப்படித்தான் சிங்களவரை தன் தோள் மேல் சுமந்தாலும், இந்தக்கோடரிக்காம்பை அவன் ஏற்கத் தாயாரில்லை. தமிழரோடு உள் இருந்து அவர்களை சிதைக்கும் எந்த  தமிழ் எட்டப்பரையும் சிங்களம் பாவிக்கும். தமிழருக்காக உண்மையாக உழைப்பவரை பாத்து பயப்படும்,  தன்வலையில் வீழ்த்தி நன்மையடையப்பார்க்கும் ஆனால் தன்னோடு சேர்த்து தன் இனத்தை அழிக்க விரும்பாது. கரை சேருவதற்காக இந்த கலன்களை பாவிக்குமேயொழிய இதுகளை காலம் எல்லாம் வைத்து பூஜிக்க போவதில்லை, தூக்கி குப்பையிலே கடாசிவிடும். அதனாற்தான் இவர்களும் தமிழ் என்று ஒட்டிக்கொண்டிருந்து சிங்களவனோடு உறவாட முடிகிறது.

சிங்களவனோடு இருந்துகொண்டு தூதரகங்களோடு இரகசிய பேச்சு நடத்த முடியுமா? வெளிநாடு பறந்து உல்லாசம் அனுபவிக்க முடியுமா? அல்லது பேய்க்காட்டத்தான் முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.