Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பம் – கொரோனா பரவுவதாக குற்றச்சாட்டு!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இணையவழி முறைமையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1266742

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சிறீலங்கா அரசின் ஆற்றமுடியாத கவலை.😩👇

அடடா இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலேயே இந்தத் திட்டத்தைப் போட்டு நடைமுறைப் படுத்தியிருந்தால், இன்று எவ்வித சிரமமும் இன்றிப் பல வெளிநாடுகளுடன் அவர்கள் மொழியில் பேசி அவர்களை மகிழவைத்து, வேண்டிய கடனைப்பெற்று நாங்களும் முன்னேறி, நாட்டையும் முன்னேற்றி இருக்கலாம்.😋   

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்

சீனமொழியை படி என்றால் சனம் குழம்பிவிடும்.

ஆனபடியால் வேறுமொழிகளையும் படி என்றால் மக்கள் சீனமொழியைத் தான் படிப்பார்கள்.

இதே உத்தியை இந்தியாவும் கையாள்கிறது.

இந்தியை நாசூக்காக திணிப்பதற்காக

ஒவ்வாரு மாநிலத்தவரும் மூன்று மொழிகள் படிக்க வேண்டுமென்கிறார்கள்.

இப்போ விரும்பியோ விரும்பாமலே இந்தி படிக்க வேண்டியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்புதான் வருகுது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சிந்தனைகளில் சில அடிப்படை மாற்றங்கள் தேவையோ தெரியவில்லை.

எமது தமிழ் மக்களில் அதிகம் பேருக்கு சிங்கள மொழியில் பாண்டித்தியம் இருந்திருந்தால் இந்த பிரச்சினைகள் எல்லாம் எப்பவோ தீர்ந்திருக்குமோ.

பிரச்சினை தருபவனின் மொழியில் அவனுடன் தொடர்பு கொள்வது அரைவாசிப் பிரச்சினையை அங்கேயே தீர்த்துவிடும். 

இல்லாவிடில் அவனுடைய கோட்டைக்கு போய் தான் தீர்வு காண வேணுமெண்டாலும் அவனின் மொழியில் பாண்டித்தியம் அவசியம் ஆகின்றது .

சாத்திரியின் " அட இவன்தானா"  கதையும் ஞாபகத்தில் வந்து செல்கிறது ...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு சேவகம் செய்யவே நம்மவர் விரும்புவர், அதுவே பெருமையென்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

தன் மக்களை சொந்த நாட்டில் நிம்மதியாக வாழவிடாதவன் என்னத்தை படித்தாலும் முன்னேற முடியாது. தமிழனை அவனது சொந்தநிலத்தில் உரிமையோடு வாழ விட்டிருந்தாலே நாடு முன்னேறி எங்கேயோ போயிருக்கும். சும்மாயிருந்து கடன்வாங்கி சண்டை பிடித்ததுதான் பெருமை.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2022 at 09:12, தமிழ் சிறி said:

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பம் – கொரோனா பரவுவதாக குற்றச்சாட்டு!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்

 

இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

https://athavannews.com/2022/1266742

இது ஒரு சிறப்பான திட்டம் .....எதிர்காலத்தில் தமிழர் சிங்களவர் இடையே மொழிப்பிரச்சினை வரவே கூடாது என்பதற்காக தமிழ்,சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்து விட்டார்கள்........!  👍 

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல நம்ம பிள்ளைகளை எழுத்துப்பிழை இல்லாமல்  எழுத வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.  யாழில்  ஒரு நடுத்தர குடும்பத்து பிள்ளையை இன்டெர் நஷனல் பள்ளியில் கற்க வைத்துள்ளனர். (ஏனைய பள்ளிகளின் 
 ஆசிரியர்கள் சரியில்லையாம் )  சித்தப்பா  காசு அனுப்புவார் ( குளிரும் வெயில் கொடுமையிலும் எப்படி கஷ்டப் பட்டுஅனுப்புகிறாரோ? ) .." என் பிள்ளை இன்டர்நேஷனல் ஸ்கூல்  "  இல் என்று  படம் காடட.  வருட இறுதியில் தமிழ் பெயில்,   ஜேர்மன்  பாஷை பாஸ் மார்க்காம். எங்கே ? போகிறது நம் இனம்.      .  

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.