Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் தீவகப் பகுதிகளில் பெண்களின் நடத்தை வருத்தமளிக்கிறது – வடமாகாண ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1633682834316-1-1.jpg

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா

-யாழ் நிருபர்-

யாழ் தீவகப் பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் சமூகத்துக்கு விரோதமான நடத்தைகளுக்கு தள்ளப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலையில், அவ்வாறான பெண்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தீவக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சாதாரண பகுதிகளோடு ஒப்பிடுகையில் கஷ்டமானது .

இருந்தாலும் சில தீவகப் பகுதிகளில் வாழும் பெண்கள் சமூகத்திற்கு ஒவ்வாத விடயங்களில் ஈடுபடுவது எனது கவனத்திறகு வந்துள்ள நிலையில், இது எமது சமூகத்திற்கு அவமானமாக பார்க்கிறேன்.

யாழ் மாவட்ட செயலகம் ஊடாக தீவகப் பகுதிகள் தொடர்பான விவரங்களை கேட்டறிந்த நிலையில், அதிலும் பெண்களின் நிலை தொடர்பில் இவ்வாறான தகவல்கள் வெளிவருவது வருத்தமளிக்கிறது.

ஆகவே சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்ற தொழில் துறையை ஏற்படுத்துவதற்கு, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன், என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.minnal24.com/?p=63789

 

 

Gallery

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தம்பி  குணாளன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தீவகப் பகுதிகளில் பெண்களின் நடத்தை வருத்தமளிக்கிறது – வடமாகாண ஆளுநர்

இவரு வரும்போதே யாழ்ப்பாணத்தானை ஒரு கை பார்க்கிறேன் என்ற எண்ணத்துடன் வந்தவர்...அப்ப இவருக்கு அந்த எண்ணம்தானே வரும்...மேட்டுக்குடிக் குணம்

 

  • கருத்துக்கள உறவுகள்

அரச திட்டங்களுக்கு துணை போகாவிட்டால் இப்படி சிலவற்றை தூக்கி போடவேண்டியது. ஆரிய குளத்து விடயத்திலேயே இவர் யார் என்பது புரிஞ்சு போச்சு!

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதுமே பரவலாக  இப்படியான விடயங்கள் நடக்கும் பொழுது தீவக பெண்களைக் கொச்சைப் புடுத்திய ஆளுநரின் கருத்து வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.தீவக மக்களின் பிரதிநிதி என்று கூறிக் கொள்ளும் சிறிதரனும்.டக்ளசும் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தீவக வறுமைக்கு டக்கியர் தான் முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். தீவகத்தை விட கொழும்பில் குட்டைப் பாவாடையோடு இரவிரவா பெண்கள் வீதி ஓரங்களில் நடமாடுவதை ஆளுனர் கவனிக்கவில்லைப் போலும்.

ஆனாலும்.. விபச்சாரத்துக்குள் பெண்கள் தள்ளப்படுவது ஆதரிக்கக் கூடிய விடயமே அல்ல. அவர்களுக்கு வருவாய்க்கு மாற்று கெளரவமான வழி முறை செய்து கொடுக்கப்படுதல் அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2022 at 14:42, colomban said:

இருந்தாலும் சில தீவகப் பகுதிகளில் வாழும் பெண்கள் சமூகத்திற்கு ஒவ்வாத விடயங்களில் ஈடுபடுவது எனது கவனத்திறகு வந்துள்ள நிலையில், இது எமது சமூகத்திற்கு அவமானமாக பார்க்கிறேன்.

மண்ணாங்கட்டி
எதுக்கும் ஒரு தடவை தீவகப் பக்கம் நேரில் வந்து விசாரித்துப் பாருங்கள்
எல்லாம் விபரமாகக் கிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் உண்மையாக நடந்தாலும் நடந்தாலும் அவற்றை நாம் ஏற்றுக்கொள்வதில்லை.

விபச்சார விடுதி முற்றுகை என எத்தனை செய்திகளை படித்தாயிற்று. 🤔🤔

 

  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதியில் இருந்து வந்து பிச்சை, களவு எடுக்கேலுமென்றால் விபச்சாரம் செய்யேலாதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.