Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30 வருடகால இருண்ட யுகத்தை இல்லாதொழித்து வடக்கு மக்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட 30 வருடகால

 இருண்ட யுகத்தை இல்லாதொழித்து வடக்கு மக்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம்.

 

 

 

வடக்கிற்கும்,தெற்கிற்கும் இடையிலான பாலமாக யாழ்தேவி புகையிரதத்தை கருதுகிறேன்.

 

எமது ஆட்சியில் இரு மாகாணங்களுக்குமிடையிலான நல்லுறவு அபிவிருத்தி ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

 

 

200 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலைய திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

 

 

 

யாழ்ப்பாண மக்களுடன் உரையாடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.யாழ் மாவட்டத்தின் 30வருடகால சம்பவங்களை நன்கு அறிந்துள்ளேன்.

 

1970ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ் மாவட்டத்தின் நிலைமை நினைவில் உள்ளது.

 

அக்காலப்பகுதியில் யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும்,கொழும்பு வாழ் மக்கள் மத்தியிலும் நல்லுறவு காணப்பட்டது.

 

யாழ்ப்பாண நகரங்களில் சிங்கள முதலாளிமார்களும் இருந்தார்கள்.

 

கொழும்பில் மாத்திரமல்ல மாத்தறை முதலாளிமார்களும் யாழ்ப்பாண நகரில் வெதுப்பகங்களை வைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்தார்கள்.

 

 

 

அக்காலப்பகுதியில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் போது விவசாயிகளும்,பெண்களும் அமோகமாக வரவேற்றார்கள்.

 

யாழ் மக்களுக்கும்,தெற்கு மக்களுக்கும் இடையிலான நல்லுறவு 1980ஆம் ஆண்டளவில் இருண்ட யுகத்திற்கு தள்ளப்பட்டது.

 

 

 

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் புகையிரத பாதை உடைக்கப்பட்டது.தெற்கிலிருந்து வடக்குக்கு செல்லும் யாழ்தேவி புகையிரத சேவை நிறுத்தப்பட்டது.வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நல்லுறவின் பாலமாக நான் யாழ் தேவியை கருதுகிறேன்.

 

1980 ஆம் ஆண்டுக்கு பிறகு வடக்கு மக்களின் சுதந்திரம் முடக்கப்பட்டது.விவசாயிகள் விவசாய நிலங்களுக்கும், மீனவர்கள் கடற்றொழிலுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வடக்கு பதுங்கு குழியாக்கப்பட்டது.

 

தமக்கு சொந்தமான இடத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட்டது.மக்கள் தங்களின் உடமைகளை இழந்து நெருக் கடிக்குள்ளானார்கள்.

 

 

வடக்கு மக்கள் அகதிகளாக ஒவ்வொரு இடங்களுக்கும் செல்ல வேண்டிய நிலைமை தோற்றம் பெற்றது.

 

ஆரம்ப காலத்தில் இந்தியாவிற்கும்,ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றார்கள்.பல நாடுகளில் புகழிடம் கோர வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

 

 

 

நாட்டில் 30வருடம் இருண்ட யுகம் காணப்பட்டது.வடக்கு மக்களின் வாழ்க்கையும், அபிவிருத்தியும் இருண்ட யுகத்திற்குள் தள்ளப்பட்டது.

 

2019ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி அந்த இருண்ட யுகத்தை முழுமையாக இல்லாதொழிக்க எம்மால் முடிந்தது.இருண்ட யுகத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை தவிர ஏனைய அனைத்தையும் வடக்கு மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

 

வடக்கின் தற்போதைய அபிவிருத்திகள் யுத்தம் முடிவடைந்தபோது காண முடியவில்லை.

 

 

இடிந்த கட்டிடங்கள்,உடைந்த வீதிகள்,உள்ளிட்ட யுத்த சுவடுகளை மாத்திரம் காண முடிந்தது.இரண்டு வருட காலத்திற்குள் வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்தோம்.

 

வடக்கு மக்கள் உணவு உண்பதற்கும்,பல் துலக்குவதற்கும் மாத்திரம் வாய் திறப்பார்கள் என்ற வழக்கு அக்காலப்பகுதியில் காணப்பட்டது.நாங்கள் அதனை மாற்றியமைத்து அவர்களுக்கான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தோம்.

 

 

வடக்கு மாகாணத்தில் நாம் மேற்கொண்ட அபிவிருத்தி பணிகள் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு இடைநிறுத்தப்பட்டது.நல்லிணக்கம் பேச்சளவில் மாத்திரம் செயற்படுத்தப்பட்டது.

 

 

நல்லாட்சி காலத்தில் வடக்கு மாகாணமும் அபிவிருத்தியடையவில்லை நாடும் அபிவிருத்தி யடையவில்லை.

இருப்பினும் நல்லிணக்கம் என்ற பெயரில் பல பில்லியன் நிதி செலவிடப்பட்டது.

 

கொவிட் -19 பெருந்தொற்று தாக்கத்தின் மத்தியில் நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

 

கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாத்துள்ளோம் என்றார்.

https://www.madawalaenews.com/2022/03/30_20.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ வடக்கு கிழக்கு மக்கள் உங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டுமா இல்லை பிரிந்து போக வேண்டுமா என்று நீங்கள் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு வைத்து கேட்டால், கண்டிப்பாக இருண்ட யுகத்திலிருந்து அவர்களை மீட்டு வெளிச்சத்தை காண்பித்த  உங்களுக்கு சார்பாக வேண்டாம் என்றுதான் வாக்களிப்பார்கள் என்று சொல்கிறீர்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

அழித்தது,இடித்தது முடக்கினது எல்லாமே சிங்களம் செய்ததுதானே இப்பவரைக்கும் நாங்கள் வாழ்ந்த செழிப்பை தரமுடியேல்லை அடைத்து அதை விடுங்க... 30 வருடமாக நீங்கள் பொருளாதாரத் தடையை திணித்தபோது  எந்த நாட்டிலும் கையேந்தாமல் தன்னிறைவை நோக்கி பயணித்தோமே அதுவா இருண்ட யுகம் போங்கடா வாயில நல்ல் வருது எழுதினா பயபுள்ளைக வெட்டிப்புடுவாங்க

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

அழித்தது,இடித்தது முடக்கினது எல்லாமே சிங்களம் செய்ததுதானே இப்பவரைக்கும் நாங்கள் வாழ்ந்த செழிப்பை தரமுடியேல்லை அடைத்து அதை விடுங்க... 30 வருடமாக நீங்கள் பொருளாதாரத் தடையை திணித்தபோது  எந்த நாட்டிலும் கையேந்தாமல் தன்னிறைவை நோக்கி பயணித்தோமே அதுவா இருண்ட யுகம் போங்கடா வாயில நல்ல் வருது எழுதினா பயபுள்ளைக வெட்டிப்புடுவாங்க

 

நம்ம  வயசுக்கு 🤣 வைச்சிருக்கக்கூடாது  சகோதரி கொட்டிடணும்

அப்புறம்  யாராவது  கழுவினா  என்ன??

கழுவாட்டி  என்ன??😂

  • கருத்துக்கள உறவுகள்

30 வருட விடுதலைப்போராட்ட காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க பிரதமருக்கு அருகதையில்லை - அருள் ஜெயேந்திரன் 

( எம்.நியூட்டன்)

கடந்த 30 வருடங்களாக தமிழர் தாயகத்தில் தமிழ் இளைஞர் யுவதிகள் பிரபாகரன் தலைமையில் போராடினர்.

அத்தகைய 30 வருட விடுதலைப்போராட்டத்திற்கான காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு அருகதை இல்லை என  அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார். 

IMG-20220321-WA0003.jpg

யாழ்.ஊடக அமையத்தில் இன்று  திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

 30 வருடங்களாக உரிமைக்காக போராடிய நாங்கள் கௌரவமாக வாழ்ந்தோம். ஆனால் அதனை இருண்ட யுகம் என்கிறார் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, உண்மையில் இருண்ட யுகமென்பது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை, கைகளை கட்டி பின்புறத்தால் சுட்டீர்களே அதுவே இருண்ட யுகம். வகை தொகையற்று சரணடைந்தவர்களை காணாமல் ஆக்கியுள்ளீர்களே அதுவே இருண்ட யுகம்.

இப்போது அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு வெட்கமற்று ஒரு இலட்சம் ரூபா தரப்போவதாக சொல்கிறீர்கள். நான் பகிரங்கமாக சவால்விடுகின்றேன். தென்னிலங்கையை சேர்ந்த உங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் எத்தனைபேரோ அவ்வளவு பேருக்கும் இலட்சக்கணக்கில் உதவ தயார்.

உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கோருவது தங்கள் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதையே. அவர்களை கொன்று புதைத்திருந்தால் எப்போது எங்கே கொன்று புதைத்தீர்கள்? எதற்காக கொன்று புதைத்தீர்கள் என்பதையாவது சொல்லிவிடுங்கள். 

தமிழ் மக்களது விடுதலைப்போராட்டம் நடந்த போதும் என்றுமே சிங்கள மக்களது பொருளாதார இலக்குகள் கைவைக்கப்படவில்லை. மூவின மக்களும் பொருளாதார ரீதியாக மேம்பட்டேயிருந்தனர்.

ஆனால் இன்றோ பஞ்சத்தை ராஜபக்ஷர்கள் கொண்டுவந்து அனைத்து மக்களையும் நடுவீதியில் நிறுத்தியிருக்கிறார்கள் என்றார்.

30 வருட விடுதலைப்போராட்ட காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க பிரதமருக்கு அருகதையில்லை - அருள் ஜெயேந்திரன்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் காலம் இருண்ட யுகமாகவே இருந்திட்டுப் போகட்டும். தாங்கள் கிட்டத்தட்ட கடந்த இரண்டு தசாப்தங்களாக சொறீலங்காவுக்கு காட்டிய ஒளிமயனான யுகத்தை இப்ப எல்லாரும் அனுபவிக்கினம். கண்டு மகிழவும்.

கவிழ்ற கப்பலில் இருந்து மகிந்த ஓதும் ஓலமே இந்த சாத்தான் வேதம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2022 at 23:54, colomban said:

இருண்ட யுகத்தை இல்லாதொழித்து வடக்கு மக்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம்.

அதன் பயன்; நாடு முழுவதும் இருளில் மூழ்கி தவிக்குது, இவர் ஒளிச்சு இங்க ஓடி வந்து நின்று கதை விடுகிறார்.

எங்கட  நாட்டை எங்களிடமே விட்டிருந்தால், பிழைத்துபோகட்டும் என்று நாங்கள் கடன் கொடுத்து உதவியிருப்போம். இப்போ நாடுநாடாய் அலைகிறார்கள். வாய்க்கொழுப்பு மட்டும் அடங்கேலை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் கழுத்து முட்ட நகைகள் போட்டுக் கொண்டு நடுச் சரமத்திலும் எவரும் எங்கும் போய்வர முடிந்தது.

இப்போது 10 தமிழனுக்கு 1 பொலிஸ் ராணுவம் புலனாய்வுப்பிரிவு இருந்தும் வயது வேறுபாடின்றி வீட்டுக்குள்ளேயே இருக்க முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.