Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டா அரசியலும் இருக்கும் கேள்விகளும்

Featured Replies

GOTA  இலகுவில் பதவியை விட்டு இறங்குவார் என நான் நம்பவில்லை 
இராணுவ பலத்தை வைத்தாவது தனது பதவியை தொடர கூடும்.
கிடைக்கும் அயல்நாட்டு உதவிகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை சிறிது  குறையுமாயின் சிங்கள மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் அல்லது காலம் கடத்தி கொண்டு செல்லும் போது போராடடம் தானாக நீர்த்து போயிடக்கூடும் ..

 

இந்த நிலையிலிருந்து மீண்டுவர குறைந்தது இலங்கைக்கு ஐந்து வருடங்களிற்கு மேலாக எடுக்கும் அடுத்து கைகாட்டக்கூடிய நம்பிக்கையான தலைவர்கள் சிங்களவர்களிடமும் இல்லை சஜித் ரணில் போன்றவர்களின் ஆளுமை திறன் என்பது இந்த பிரச்சினையிலிருந்து மீண்டுவர தக்க முடிவுகள் எடுக்க கூடியவர்களாக தெரியவில்லை ,
வேறு அரசாங்கம் மாறினாலும் இந்த நிலைமை குறுகிய காலம் நீடிக்கும் மக்களின் போராட்டம்கள் இல்லாமல் போகலாம் சிலவேளைகளில்.

 

இன்னொரு தேர்தலுக்கு ஆக வேண்டிய செலவுகளிற்கு பணம் எங்கிருந்து வர போகிறது அதும் மேலதிக கடனாக தானே பெற வேண்டும் 
தமிழ் மக்களில் வெளிநாட்டில உறவினர்களை கொண்டுள்ளோர்கள் ஓரளவு தாக்கு பிடிக்க கூடியதாக இருக்க மற்றையோர் கடுமையான வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொள்வார்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நீங்கள் தந்த பல  (ஆதங்கமான, அறிவுபூர்வமான, யதார்த்தமான) நல்ல கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. 🙏
  

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Sasi_varnam said:

சரி அப்படியென்றால் ஏன் ரதி இந்தியாவுக்கும், சைனாவுக்கும் நிலத்தை தாரை வார்க்கிறார்கள்....

இவர்கள் நினைத்திருந்தால் , நாடு பொருளாதார வீழ்ச்சியை  நோக்கி செல்லும் ஆரம்ப கட்டத்திலையையே தடுத்திருக்கலாம் ...அவர்கள் அதை நினைத்து கூட பார்க்கவில்லை .
நாடு ,நாடாய் கடன் கேட்டு திரியிறதை விட்டுட்டு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன் வாங்கி இருக்கலாம் ...ஏன் அதை அவர்கள் செய்ய நினைக்கவில்லை ..அவற்றிடம் கடன் வாங்கினால் அவர்களது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் ...இப்படி தான் செலவழிக்க வேண்டும் ...தமிழ் ,முஸ்லீம் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் காலக்கேடு கொடுத்து தான் கடன் கொடுப்பார்கள் ...அப்பவே கோத்தா உதை செய்திருந்தால் இதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்திருக்க கூடும் .
இவற்றினை பற்றி நன்கு அறிந்த பலர் இங்கு இருக்கினம் ...அவர்கள் தங்கள் கருத்தை சொல்லலாம் .
நான் சொல்ல வந்தது கோத்தா போன்றவர்கள் நாடு எப்படி தான் வீழ்ந்தாலும் தமிழனின் காலில் விழ கூடாது என்ற கொள்கை உடையவர்கள் ...2000க்கு பிறகு பிறந்த சிங்கள இளைய தலைமுறை மாற்றத்தை கொண்டு வர ஆரம்பித்து இருக்குது என்று சொல்கிறார்கள் ...பார்ப்போம் 
இந்தியா ,சீனா போன்ற நாடுகளுக்கு கொடுத்தால் அதை எப்படி மீட்பது என்று சிங்களவர்களுக்கு தெரியும் ...தமிழர்களிடம் போனால் மீட்க முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 07:43, vasee said:

எனது கருத்து இணைய தர்வுகளை எனது இடைனிலை பாடசாலை கல்வியறிவின் புரிதலின் அடிப்படையில் கூறப்படுவதால், எனது கருத்து தவறாக இருக்கலாம்.

இலங்கையில் பொருளாதார சரிவு (recession)ஏற்படும் எந்த அறிகுற்யும் தென்படவில்லை.

Business confidence and consumer confidence (Leading indicator) நல்ல நிலையில் உள்ளது அத்துடன் ஆண்டிறுதி (மார்கழி)GDP 3.5% என எதிவு கூறுகிறார்கள்.

இலங்கையின் தற்போதய பொருளாதார சிக்கல் அடிப்படையில் தீர்க்ககூடிய ஓரளவிற்கு இலகுவான பிரச்சினை, இலங்கையின் தற்போதய சிக்கல் Balance of Payment பாதகமாக உள்ளதால் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மொத்த தேசிய வருமானத்தில்

சுற்றுலாத்துறை 13%

உற்பத்திதுறை 17%

இந்த இரண்டு துறையும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்தான் இந்த நிலை.

இலங்கையால் இந்த சிக்கலில் இருந்து இலகுவாக மீள முடியும்.

1. இலங்கை வங்குரோத்தாவதை என்ன விலை கொடுத்தேனும் தவிர்த்தல்

2. மொத்த தேசிய வருமானத்தில் 35% வீதம் இறக்குமதியில் செலவாகிறது அதில் வெறும் நாலில் ஒரு பங்கு மட்டும் முதலீட்டு செலவு மிகுதி நுகர்வு செலவு,நுகர்வு செலவில் அத்தியாவசியங்களை நிரல்படுத்தல்.

3. வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்தல்.

4. மூடிய பொருளாதார கொள்கைக்கு அவசரப்பட்டு செல்லவேண்டிய அவசியமில்லை ஏனெல் இலங்கையின் கல்வியறிவுள்ள சனத்தொகை மிகப்பெரிய வளம் அதன் மூலம் சேவை துறை ஏற்றுமதிக்கு புதிய சந்தையை உருவாக்கலாம்.

இலங்கையில் நல்ல ஒரு அரசு உருவானால் இந்த சிக்கலை 1-6 வருடத்திற்குள் தீர்க்கலாம் என கருதுகிறேன்.

இலங்கையில் பெரும்பான்மையினரிடையே ஒரு பேரழிவு ஏற்படப்போகிறது எனும் எண்ணம் வரத்தொடங்கியுள்ளது ( மனிதாபிமான பிரச்சனைகளுக்கு மக்கள் அன்னிய செலாவணி தட்டுப்பாடால் முகம் கொடுக்கும் நிலை உள்ளதுதான்) இதன் மூலம் அவர்கள் சிந்தனையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சிறுபான்மையினர் அரசியல்வாதிகள் செய்வது போல (Scare campaign) அதாவது முன்பு தமிழருக்கும் உலகுக்கும் புலிகள்தான் தீர்வு திட்டங்களுக்கு தடை போடுகிறார்கள் என்று நம்பவைத்தை போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு இந்த நிகழ்வை பயன்படுத்தலாம் என கருதுகிறேன்.

இலங்கை மத்திய வங்கி தரவுகளின் அடிப்படையிலேயே இலங்கை பொருளாதார சரிவு (recession) ஏற்படாது என தெரிவித்தேன், ஆனால் எவ்வாறு இலங்கையில் இன்றைய நிலையில் Business confidence and consumer confidence (Leading indicator) நல்ல நிலையில் இருக்கமுடியுமா?  என்ற சாதாரண் பொதறிவில்லாமல் இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை உண்மை என நினைத்து கருத்து பதிந்து விட்டேன், தவறுக்கு மன்னிக்கவும்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 10:56, ரதி said:

இவர்கள் நினைத்திருந்தால் , நாடு பொருளாதார வீழ்ச்சியை  நோக்கி செல்லும் ஆரம்ப கட்டத்திலையையே தடுத்திருக்கலாம் ...அவர்கள் அதை நினைத்து கூட பார்க்கவில்லை .
நாடு ,நாடாய் கடன் கேட்டு திரியிறதை விட்டுட்டு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன் வாங்கி இருக்கலாம் ...ஏன் அதை அவர்கள் செய்ய நினைக்கவில்லை ..அவற்றிடம் கடன் வாங்கினால் அவர்களது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் ...இப்படி தான் செலவழிக்க வேண்டும் ...தமிழ் ,முஸ்லீம் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும் போன்ற பல நிபந்தனைகள் காலக்கேடு கொடுத்து தான் கடன் கொடுப்பார்கள் ...அப்பவே கோத்தா உதை செய்திருந்தால் இதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்திருக்க கூடும் .

கேள்வியும் கேட்டு

பதிலும் எழுதியிருக்கிறீர்கள்.

On 6/4/2022 at 10:56, ரதி said:

இந்தியா ,சீனா போன்ற நாடுகளுக்கு கொடுத்தால் அதை எப்படி மீட்பது என்று சிங்களவர்களுக்கு தெரியும் ...தமிழர்களிடம் போனால் மீட்க முடியுமா

இதுதான் விழங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 12:01, Sasi_varnam said:

இந்த திரியில் நீங்கள் தந்த பல  (ஆதங்கமான, அறிவுபூர்வமான, யதார்த்தமான) நல்ல கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. 🙏
  

கேள்விகளை  தொகுத்து எழுதிய சசிக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2022 at 00:58, கிருபன் said:

ஒரு சர்வதேச நிதியத்தை உருவாக்கி வடக்கு கிழக்கை வாங்க முயற்சிக்கலாம்!

 

இது நல்லதொரு ஐடியாதான்.

ஆனல் இதற்கு கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா? 
ஹிஸ்புல்லவிடம் அரபு நாடு காசு நிறைந்துள்ளது அவன் தமிழர்கள் கேட்கும் விலையை விட அதிகம் கொடுத்து வாங்க தயாரகவுள்ளான்

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 03:18, ரதி said:

சிங்களவன், இதற்கு தான் உங்களுக்கு நாட்டை பிரிச்சு தர மாட்டன் என்டவன் 😀
 

எங்களுக்கு தந்தால் எங்களையும் முன்னேற்றி அவர்களுடைய இடங்களையும் முன்னேற்ற உதவலாம்.. ஆனால் அப்படி செய்ய அவர்களுடைய உணர்வில் ஊட்டப்பட்ட இனவாதம் விடமாட்டாது..அப்படி தராமல் செய்த பலனை அனுபவிக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் என்ன இவர்களோடு சேர்ந்து எங்களுக்கும் தண்டனை.. 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, colomban said:

இது நல்லதொரு ஐடியாதான்.

ஆனல் இதற்கு கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா? 
ஹிஸ்புல்லவிடம் அரபு நாடு காசு நிறைந்துள்ளது அவன் தமிழர்கள் கேட்கும் விலையை விட அதிகம் கொடுத்து வாங்க தயாரகவுள்ளான்

முஸ்லீம்களும் தமிழர்கள் தானே. தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் தனி அலகு கேட்கின்றார்களா?
சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவர்களும் தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்களும் மொழி ரீதியாக வேறு பட்டுத்தானே நிற்கின்றார்கள்.
இலங்கையில் முஸ்லீம் ஒரு மதம் மட்டுமே. அது இனம் அல்ல. 👈

  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎-‎04‎-‎2022 at 15:25, பிரபா சிதம்பரநாதன் said:

எங்களுக்கு தந்தால் எங்களையும் முன்னேற்றி அவர்களுடைய இடங்களையும் முன்னேற்ற உதவலாம்.. ஆனால் அப்படி செய்ய அவர்களுடைய உணர்வில் ஊட்டப்பட்ட இனவாதம் விடமாட்டாது..அப்படி தராமல் செய்த பலனை அனுபவிக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் என்ன இவர்களோடு சேர்ந்து எங்களுக்கும் தண்டனை.. 

 

 

 

 

 

தந்தார்கள் என்றால் அவர்களை விட முன்னுக்கு போய் விடுவோம் என்ற பயம் இருக்குது ...எங்களுக்கு இருக்கும் மிக பெரிய மைனஸ் தமிழ்நாடு பக்கத்தில் இருப்பது தான் ...எங்களுக்கு பக்கத்தில் வட இந்தியாவோ அல்லது வேறு மொழி பேசும் மக்கள் அருகிலிருந்திருந்தால் , இலங்கை ஓரளவுக்கு இறங்கி வந்திருக்க கூடும் 
 

On ‎08‎-‎04‎-‎2022 at 01:57, ஈழப்பிரியன் said:

கேள்வியும் கேட்டு

பதிலும் எழுதியிருக்கிறீர்கள்.

இதுதான் விழங்கவில்லை.

தமிழர்களிடம் நிலத்தையோ ,இடத்தையோ கொடுத்தால் திரும்ப வாங்க முடியுமா அண்ணா?...அதை வைத்து கொண்டு மேலும் விஸ்தரிக்கவே பார்ப்பார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

எமது தலைமுறை சிங்களவர்கள் மாற மாட்டார்கள் ....எமது பேர பிள்ளைகள் காலத்தில் மாற்றம் வர கூடும் .
இந்த போராட்டத்தில் சிங்களவர்களோடு சேர்ந்து முஸ்லீம்களும் போராடுகிறார்கள் ....இப்ப நடப்பது பொது பிரச்சனை ...அவர்கள் இப் போராட்டத்தில் வென்று ,கோத்தா கூட்டனியை பதவியை விட்டு துரத்தி நாட்டை ஓரளவுக்கு சுபீ ட்சமாக்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம் ....அதன் பின்னர் தமிழரும் இந்த நாட்டின் குடி மக்கள் என்று எந்த மூஞ்சியை வைத்து கொண்டு சொல்வார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

தந்தார்கள் என்றால் அவர்களை விட முன்னுக்கு போய் விடுவோம் என்ற பயம் இருக்குது ...எங்களுக்கு இருக்கும் மிக பெரிய மைனஸ் தமிழ்நாடு பக்கத்தில் இருப்பது தான் ...எங்களுக்கு பக்கத்தில் வட இந்தியாவோ அல்லது வேறு மொழி பேசும் மக்கள் அருகிலிருந்திருந்தால் , இலங்கை ஓரளவுக்கு இறங்கி வந்திருக்க கூடும் 

தமிழ்நாட்டுடன் சுமுகமாகத்தானே இருக்கின்றார்கள்.யாமிருக்க பயமேன் என்று வாக்கு கொடுத்திருப்பார்கள் அல்லவா?

Bild

ஒருவேளை தமிழ்நாடு என்றவுடன் சீமானை நினைத்து பயப்பிடுகின்றார்களோ?

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 

 

ஒருவேளை தமிழ்நாடு என்றவுடன் சீமானை நினைத்து பயப்பிடுகின்றார்களோ

பகுடி விடாதீங்கோ அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.