Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் நிலைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா பதவியில் இருக்கும் வரை, மேலை நாடுகள் உதவி கிடைக்கப்போவதில்லை. ராஜபக்சேக்கள் சீனாவின் சார்பு நிலை கொண்டுள்ளதால், இந்தியாவும் அதனையே விரும்புகிறது. இந்தியா உறுதி அளித்த $1பில்லியன் கடன் கூட, எதிர்பார்த்த விரைவில் வரவில்லை. அதாவது, ராஜபக்சேக்கள் அரசியல் ரீதியாக மிகவும் பலவீனம் ஆக வேண்டும் என்று தாமதம் செய்கிறார்கள் போல தோன்றுகிறது. 

ஆகவே அவர்கள் விலக வேண்டிய நிலை வரும்.

2009ல் சர்வதேசத்தின் பார்வையில், புலிகள் ஒரு சுமையாக தமிழர்களுக்கு இருந்தது போலவே, இன்று ராஜபக்சேக்கள் சிங்களவர்களுக்கு சுமையாக மாறி விட்டார்கள்.

இலங்கை வந்த, இந்திய ராணுவத்தினை, மோதி திருப்பி அனுப்ப பிரபாகரன் சிங்களத்துக்கு தேவைப்பட்டது. சுதந்திரத்தையும், இறைமையும் காத்து தந்த, தைரியம் மிக்க இலங்கையர் என்று, அப்போது பதவியில் இருந்த ஜனாதிபதி பிரேமதாச, காதில் பூ சுத்தி அழகு பார்த்தார்.

இம்முறை, சுமந்திரன் வகையறாக்கள், புலம் பெயர் தமிழரை இழுக்கும் அரைவேக்காடு வேலை பார்க்காமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.

தமிழர் நிலை என்ன?

ராஜபக்சேக்களின் நாட்கள் எண்ணப்படுகின்றது. சிங்களம் இப்போது பிரச்சனைக்குள் இருப்பதால், தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசி நடித்து... அவர்கள் வேலை முடித்த பின்னர், பிரபாகரனுக்கு சூட்டிய அதே பூவை எமக்கு சூடலாம்.

நாம் மீண்டும் ஒரு தவறை விட முடியாது. 

ஆகவே...

எம்மை அழிக்க, இலங்கை வாங்கிய கடனுக்கு நாம் பொறுப்பாக முடியாது. அவர்களே  அதை அடைத்து கொள்ளட்டும்.  நாம் எமது வழியை பார்ப்போம் என்ற தெளிவான பார்வையினை எடுக்க வேண்டும்.

அதுக்குரிய பொறிமுறையை சர்வதேசம் அமைத்து தர வேண்டும் என்ற நிலைப்பாட்டினை புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் எடுத்து, சரியான வேளையில் அறிவிக்க வேண்டும்.

இது தொடர்பில் கருத்தாடல்கள் இடம் பெற வேண்டும்.

இரண்டாம் உலக போரின் பின்னர் உண்டாகிய பெரும் பொருளாதார பின்னடைவினாலும், யுத்த காலத்தில் உணவு, பங்கீட்டு அடிப்படையில் பிரிட்டனில் வழங்கப்பட்டதால் உண்டாகிய, விரக்தி காரணமாக யுத்தத்தினை வென்ற சர்ச்சில் வீடு அனுப்பப்பட புதிய கிளமெண்ட் அரசு, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தது.

யுத்தத்தில் வென்றாலும், அதனால் உருவாகிய பொருளாதார பலவீனமே, சூரியன் அஸ்தமிக்காத ஒரு பெரும் சாம்ராஜ்யத்தினை வீழ்த்தியது என்பதனை தெளிவாக புரிந்து இலங்கை, யுத்தத்தில் வென்றாலும் அதனால் உருவாகிய பொருளாதார பின்னடைவை இப்போது சந்திக்கிறது என்பதை புரிந்து கொள்வோம். இதனை வேகப்படுத்திய கொரோனாவுக்கும் நன்றி.

ஆகவே, தெளிவான சிந்தனை, மிக சரியான காய் நகர்தல்கள் என்பன இன்றய தேவை. தமிழகத்தின் ஒத்துழைப்பினை கோரி, இந்திய அரசின் ஆதரவினை பெற வேண்டும். அதை விடுத்து, சிங்களத்தில் என்ன நடக்கிறது என்று விடுப்பு பார்த்துக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. 

அதேவேளை, சந்தர்ப்பத்தினை தவற விட்டு, சிங்களத்தினை இனியும் நம்பி நடக்கும் முட்டாள் தனத்தினை செய்தால், இயற்கை கூட எம்மை மன்னிக்காது.

சுய ஆக்கம் .காம்

 

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

சுய ஆக்கம் .காம்

இந்த வெப்சைட்டை பார்த்தாலே சிலர் அலறபோகினம் இந்த சைட் தோர் போன்வற்றின் மூலம் தான் அணுகலாம் .😆

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இரண்டாம் உலக போரின் பின்னர் உண்டாகிய பெரும் பொருளாதார பின்னடைவினாலும், யுத்த காலத்தில் உணவு, பங்கீட்டு அடிப்படையில் பிரிட்டனில் வழங்கப்பட்டதால் உண்டாகிய, விரக்தி காரணமாக யுத்தத்தினை வென்ற சர்ச்சில் வீடு அனுப்பப்பட புதிய கிளமெண்ட் அரசு, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தது.

சுய ஆக்கம் .காம்

 

இந்தியாவுக்கு மகாத்மா காந்தி தான்…
சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று   புத்தகங்களில் இருக்க,
கிளமெண்ட் அரசு… போனால் போகுது எண்டு,
சும்மா சுதந்திரம் கொடுத்த மாதிரி புது புலுடா விடுகிறீர்கள். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு மகாத்மா காந்தி தான்…
சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று   புத்தகங்களில் இருக்க,
கிளமெண்ட் அரசு… போனால் போகுது எண்டு,
சும்மா சுதந்திரம் கொடுத்த மாதிரி புது புலுடா விடுகிறீர்கள். 😁

தனது சூரியன் மறையா சாம்ராஜ்யம் எங்கும் மகாத்மாவை அல்ல, பல ஆத்மாக்களை பார்த்தது,  பிரிட்டிஸ் அரசு.

தலையில் பெரிய குட்டுப் போட்டு மமதை அடக்கின ஆள், உங்க ஊரு கிற்லர் தான்.... 😁

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

கோத்தா பதவியில் இருக்கும் வரை, மேலை நாடுகள் உதவி கிடைக்கப்போவதில்லை. ராஜபக்சேக்கள் சீனாவின் சார்பு நிலை கொண்டுள்ளதால், இந்தியாவும் அதனையே விரும்புகிறது. இந்தியா உறுதி அளித்த $1பில்லியன் கடன் கூட, எதிர்பார்த்த விரைவில் வரவில்லை. அதாவது, ராஜபக்சேக்கள் அரசியல் ரீதியாக மிகவும் பலவீனம் ஆக வேண்டும் என்று தாமதம் செய்கிறார்கள் போல தோன்றுகிறது. 

ஆகவே அவர்கள் விலக வேண்டிய நிலை வரும்.

2009ல் சர்வதேசத்தின் பார்வையில், புலிகள் ஒரு சுமையாக தமிழர்களுக்கு இருந்தது போலவே, இன்று ராஜபக்சேக்கள் சிங்களவர்களுக்கு சுமையாக மாறி விட்டார்கள்.

இலங்கை வந்த, இந்திய ராணுவத்தினை, மோதி திருப்பி அனுப்ப பிரபாகரன் சிங்களத்துக்கு தேவைப்பட்டது. சுதந்திரத்தையும், இறைமையும் காத்து தந்த, தைரியம் மிக்க இலங்கையர் என்று, அப்போது பதவியில் இருந்த ஜனாதிபதி பிரேமதாச, காதில் பூ சுத்தி அழகு பார்த்தார்.

இம்முறை, சுமந்திரன் வகையறாக்கள், புலம் பெயர் தமிழரை இழுக்கும் அரைவேக்காடு வேலை பார்க்காமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.

தமிழர் நிலை என்ன?

ராஜபக்சேக்களின் நாட்கள் எண்ணப்படுகின்றது. சிங்களம் இப்போது பிரச்சனைக்குள் இருப்பதால், தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசி நடித்து... அவர்கள் வேலை முடித்த பின்னர், பிரபாகரனுக்கு சூட்டிய அதே பூவை எமக்கு சூடலாம்.

நாம் மீண்டும் ஒரு தவறை விட முடியாது. 

ஆகவே...

எம்மை அழிக்க, இலங்கை வாங்கிய கடனுக்கு நாம் பொறுப்பாக முடியாது. அவர்களே  அதை அடைத்து கொள்ளட்டும்.  நாம் எமது வழியை பார்ப்போம் என்ற தெளிவான பார்வையினை எடுக்க வேண்டும்.

அதுக்குரிய பொறிமுறையை சர்வதேசம் அமைத்து தர வேண்டும் என்ற நிலைப்பாட்டினை புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் எடுத்து, சரியான வேளையில் அறிவிக்க வேண்டும்.

இது தொடர்பில் கருத்தாடல்கள் இடம் பெற வேண்டும்.

இரண்டாம் உலக போரின் பின்னர் உண்டாகிய பெரும் பொருளாதார பின்னடைவினாலும், யுத்த காலத்தில் உணவு, பங்கீட்டு அடிப்படையில் பிரிட்டனில் வழங்கப்பட்டதால் உண்டாகிய, விரக்தி காரணமாக யுத்தத்தினை வென்ற சர்ச்சில் வீடு அனுப்பப்பட புதிய கிளமெண்ட் அரசு, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்தது.

யுத்தத்தில் வென்றாலும், அதனால் உருவாகிய பொருளாதார பலவீனமே, சூரியன் அஸ்தமிக்காத ஒரு பெரும் சாம்ராஜ்யத்தினை வீழ்த்தியது என்பதனை தெளிவாக புரிந்து இலங்கை, யுத்தத்தில் வென்றாலும் அதனால் உருவாகிய பொருளாதார பின்னடைவை இப்போது சந்திக்கிறது என்பதை புரிந்து கொள்வோம். இதனை வேகப்படுத்திய கொரோனாவுக்கும் நன்றி.

ஆகவே, தெளிவான சிந்தனை, மிக சரியான காய் நகர்தல்கள் என்பன இன்றய தேவை. தமிழகத்தின் ஒத்துழைப்பினை கோரி, இந்திய அரசின் ஆதரவினை பெற வேண்டும். அதை விடுத்து, சிங்களத்தில் என்ன நடக்கிறது என்று விடுப்பு பார்த்துக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. 

அதேவேளை, சந்தர்ப்பத்தினை தவற விட்டு, சிங்களத்தினை இனியும் நம்பி நடக்கும் முட்டாள் தனத்தினை செய்தால், இயற்கை கூட எம்மை மன்னிக்காது.

சுய ஆக்கம் .காம்

 

பகிர்விற்கு நன்றி.. தோழரை கண்டதில் மகிழ்ச்சி.. 💐

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நாதம்ஸ்........கண்டது சந்தோசம்.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

..கண்டது சந்தோசம்.......!   😁 நாதம்ஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, Nathamuni said:

சுய ஆக்கம் .காம்

உந்தாள் எப்ப திரும்ப வந்தது????? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

உந்தாள் எப்ப திரும்ப வந்தது????? 😁

அதையேன் கேட்க்கிறியள்....

போற போக்கில, ஒரு லம்பான பதவி ஒண்டு அமத்தலாம் எண்டு, கொழும்பு பக்கம் போனன்...

ஓடி வந்தாச்சு...

தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருந்தால் சொல்லுங்கோ... நிதி அமைச்சர், மத்திய வங்கி கவர்னர், திறைசேரி செயலர் என்று... என்ன போஸ்டிங் வேணுமெண்டாலும் எடுத்து தல்லாம்....

நம்ம ஆளு தான் மேல... 😁

உங்கை இருந்து ஓன்லைனில வேலை செய்ய ஓகேயா எண்டு ஒரு ஈமெயில் அனுப்பி இருக்கிறன்... மெயில் இப்பத்தான் துபாய் தாண்டி இருக்குதாம்... 😁

சொன்னாபோல  நம்ம தமிழ் சிறியர்.... ஜனாதிபதி மாளிகை குரல் தரவல்ல அதிகாரியா போடலாமே? என்ன நினைக்கிறியள்? 🧐

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் உங்கள் சுயஆக்கம் விளையாட்டாக இருந்தாலும் பல கேள்வி கேட்டு நிற்கிறது.
பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் உங்கள் சுயஆக்கம் விளையாட்டாக இருந்தாலும் பல கேள்வி கேட்டு நிற்கிறது.
பாராட்டுக்கள்.

சத்தியமா விளையாட்டு இல்லை. சீரியஸ் தான்.

சுஜ ஆக்கம் டொட் காம் தான், இரவல் விளையாட்டு....😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.