Jump to content

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்


Recommended Posts

இராமாயணம் தமிழர்களுக்கு மட்டும் அல்ல. சைவத்திற்கு எதிரானது.

நீங்கள் எதைப் படித்தாலும், அதை நுட்பமாக படிக்கவும், ஆராயவும் தெரிந்திருக்க வேண்டும்.

இராமன் சிவனை வணங்கியதாக இராமாயணம் சொல்லவில்லை. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட தல வரலாறுகள் என்று சொல்லப்படுகின்ற கதைகள் அவ்வாறன சில விடயங்களை சொல்கின்றன.

"ஆறு காண்டங்களில் நாற்பத்தி இரண்டு படலங்களில்" கம்பர் சொன்னவற்றையும் தாண்டி நீங்கள் புதிதாக ஏதாவது சொல்லி வைக்காதேங்கோ...

சிவதனுசை எவராலும் தொடக்கூட முடியவில்லை... இராமன் எழிதாக எடுத்தான் வளைத்தான் வளையும் போது முறிந்தது என்பது இராமனின் பராக்கிரமத்தை சொன்ன கம்பனின் சிந்தனை அது... பரசுராமன் வில் ஒண்றை இராமனுக்கு பரிசளித்தான் அதை வளைத்து யாரையும் கொல்ல விரும்பாத இராமன் . பரசுராமனின் தவபலன் மீதே வில் தொடுத்தான் என்பதுதான் கம்பன் சொன்னது... கம்பனின் கற்பனைக்கும் மீறி சொல்ல பட்டது அந்த விஸ்னுதனுசு.....

விஸ்னுவில் அவர்தாரங்களில் ஒண்று பரசுராமர் என்பதனால் பரசுராமர் கொடுத்த வில்லை விஸ்னுதனுசு எண்று வர்ணிக்க வெளிக்கிட்டு இருக்கலாம்... அதுக்கும் கம்பராமாயணத்துக்கும் தொடர்பே இல்லை...

Link to comment
Share on other sites

  • Replies 265
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திருமகன் சார்..

கற்பனை.. (imagination) சிந்தனை..(thinking) யோசனை..(idea) இவற்றிற்கு இடையில்.. அர்த்தம் புரியாமல் இங்கு பாவிக்கவில்லை என்பதை தெளிவாகச் சொல்லலாம். அப்படி பிரயோகிக்கப்பட்ட இடத்தைக் காட்டினால்.. உங்களுக்கு போதிய விளக்கமளிக்க தயாராகவே உள்ளோம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்பர்னியம்.. ஆரியம்.. திராவிடம் என்ற சமுகப் பிரிவினை மூளைச் சலவைக்குள் இருந்து எந்தக் கண் கொண்டு பார்த்தாலும்.. அது இப்படித்தான் தெரியும்..!

நமக்கு நாசாவின் குறிப்பு உங்களினது பார்வையை விட பல மடங்கு பெறுமதியான விடயத்தை தருகிறது. இப்பாலம் தொடர்பில் தொடரப்பட வேண்டிய அறிவியல் அணுகுமுறைக்கு வழி காட்டுகிறது..!

Astronaut photography does not provide information on the age of islands in the Palk Strait, nor can it provide information on the subsurface structure or composition of the islands. We therefore cannot speculate on the validity of other origin narratives for the Palk Strait islands.

செய்மதி மூலம் பெறப்பட்ட படங்கள் மூலம் இராமர் பாலத்தின் வயதை தீர்மானிக்க முடியவில்லை. அதுமட்டுமன்றி அதன் உப தரைத்தோற்றக் கட்டமைப்பு மற்றும் அதன் கூறுகள் குறித்து எம்மால் எதுவும் கூற முடியவில்லை. அதனடிப்படையில் எம்மால்.. இப்பாலம் தொடர்பான அறுதியான உறுதியான முடிவுகளைக் கொடுக்க முடியாமல் இருக்கிறது எங்கிறது நாசாவின் குறிப்பு. இது 02- 08-2007 இல் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மதச்சடங்குகளும் வசதியான இடங்களுக்குத்தான் விஞ்ஞான விளக்கம் பேச முற்படுகிறது.

முழுமைக்கும் விஞ்ஞான விளக்கம் பேசமுற்பட்டால் விசயம் கந்தலாகிவிடும் என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

தற்கொலை செய்வதற்க்காக ஒருவன் உண்ணுகின்ற விசத்தில் கூட சிறுநீரகத்துக்கு நன்மைதரும் மூலக்கூறு சிறியளவில் இருந்து விட்டால், அதுக்கு மட்டும் அளந்து விஞ்ஞான விளக்கத்தை பேசிவிட்டு விஞ்ஞானமே சொல்லுகிறது இந்த விசம் மனிதனுக்கு நன்மை செய்கிறது என்று கூறுவதைப் போன்றதே இவர்களது விஞ்ஞானவிளக்கப் பாவிப்பு.

இது மனிதனால் போடப்பட்ட பாலம் என்ற தரவு நாசாவால் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டால், அவர்கள் கோட்பாட்டுக்கு கடவுள் நம்பிக்கை என்பது, உள்வாங்கல் தகவல்களில் அதுவே விவகாரமானது அல்லவா?

தமது ஆராட்சிக்கதிர்களை செவ்வாய். வியாழன்களில் இருந்து விலக்கி குவிக்கப் படவேண்டியது இந்தப் பாலத்தின் மீதே அல்லவா?

மண்ணியல் ரீதியிலான ஆய்வுகளுக்கு அடித்தளம் போட்டிருக்க வேண்டும் அல்லவா?

எங்கே அப்படி ஏதும் அலவாங்குச் சத்தம் கூட ஒன்றும் இன்னும் கேட்க்கவில்லையே!

உங்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்று சொன்னார்களா? இல்லை

நீங்கள் இப்படியே இருப்பதுதான் அவர்களுக்கு சந்தோசம் என்பதாலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணம் தமிழர்களுக்கு மட்டும் அல்ல. சைவத்திற்கு எதிரானது.

நீங்கள் எதைப் படித்தாலும், அதை நுட்பமாக படிக்கவும், ஆராயவும் தெரிந்திருக்க வேண்டும்.

இராமன் சிவனை வணங்கியதாக இராமாயணம் சொல்லவில்லை. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட தல வரலாறுகள் என்று சொல்லப்படுகின்ற கதைகள் அவ்வாறன சில விடயங்களை சொல்கின்றன.

இராமாயணம் சைவத்திற்கு எதிரானது என்று நான் சொல்வதற்கு சில காரணங்கள் உண்டு.

சபேசனின் கருத்துக்கள் அனைத்தும்.. இந்து மதத்தின் மீதும் அதனுடன் தொடர்புள்ள மக்கள் குழுமம் மீதும் எப்படியாவது தப்பபிப்பிராயத்தை வளர்த்திட வேண்டும் என்பதுதான்.

நாம் மதத்தை வெறுப்பவர்களோ விரும்புபவர்களோ அல்ல. ஆனால் மத வழிபாடு செய்யும் உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை ஐநா கூட அங்கீகரிக்கிறது. அதில் தலையீடு செய்ய எமக்கு உரிமையில்லை.

இவருக்கு எப்படி மதத்தின் மீது அபாண்டமான பழிப்புக்களை தாந்தோன்றித்தனமாக செய்ய உரிமை உண்டோ அதே அளவு உரிமை அதை மறுக்கவும் உண்டு..!

இராமாயணம்.. சைவத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. சைவத்துக்கும் அங்கு சம மதிப்பளிக்கப்படுகிறது..!

சிவ கீதை

ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாகிய ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளியது இந்த சிவ கீதை. கீதை என்பது பாட்டு. கீதைகள் சிவ கீதை, ஸ்ரீ இராம கீதை, பகவத் கீதை, சூர்ய கீதை எனப் பலவாகும். இதில் சிவகீதை பத்ம புராணத்தைச் சேர்ந்தது.

இராமர் வனவாசத்தில் சீதையைத் தேடி வருந்திய பொழுது அகத்தியமுனிவரால் இராமருக்கு விரஜா தீட்சை செய்விக்கப் பெற்று, பாசுபத விரதத்தை அனுஷ்டிக்கச் செய்து, அதன் பயனால் சிவபெருமான் பாசுபத அஸ்திரப் படையைத் தந்து, அதனால் இராவணனை வென்று சீதையை மீட்பாய் என்று கூறி, சிவபெருமான் விஸ்வரூப தரிசனம் தந்தருளி, சிவகீதையை உபதேசித்தார். இராமர் பேரானந்த மடைந்தார்.

இக்கீதையில் பாசுபத விரதத்தால் சிவபெருமானை வழிபடும் முறையும், அனைவரும் பின்பற்ற வேண்டிய சிவநெறியாகவும், இறைவழிபாடு, இயற்கை வழிபாடு என்னும் பேருண்மையை உலகிற்கு உணர்த்தியும், மேலும் சிவபூஜா முறைகளை அருளிச் செய்திருக்கிறார்.

திரேதாயுகத்தில் நடைபெற்ற புராணச் சான்றாகும். துவாபரயுகத்தில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு அருளிச் செய்த பகவத் கீதைக்கு முந்தைய காலத்தே நடந்தது. சிவகீதை இராம் அவதாரத்தில் பெற்றது என்றும், கிருஷ்ணர் அவதாரத்தில் கொடுத்தது என்றும், கிருஷ்ணர் தாம் பகவத்கீதையில் "சிவோகம்-பாவனை" செய்கின்ற போது தம்மை பரமாகக் கூறினார் என்பதை அவருடைய சரித்திரங்களில் காணலாம். சிவகீதையில் சூதமுனிவர் தனது சீடர்களுக்கு உபதேசித்த காலத்தில் இதைக் கேட்டாலும், படித்தாலும், சிவசாயுச்சியம் கிடைக்கும் என்று உரைத் தருளினார்.

சிவகீதையை முன்னர் புலோலி சிவஸ்ரீ ம.முத்துக்குமாரசாமி குருக்கள் அவர்களாலும், நல்லூர் தா. கைலாசப் பிள்ளை அவர்களாலும் ஆனந்த வருடம் ஆங்கிலம் 1914-ல் வெளிவந்துள்ளது. தற்போது சிவஸ்ரீ அ.சொர்ண சுந்தரேசன், தேவகோட்டை மற்றும் திருவாடானை சிவஸ்ரீ சொ. சந்திரசேகர குருக்கள் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

இது

திருவரசு புத்தக நிலையம்,

13, தீனதயாளு தெரு,

தியாகராய நகர்,

சென்னை-600 017

மூலம் வெளியிடப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசனின் கருத்துக்கள் அனைத்தும்.. இந்து மதத்தின் மீதும் அதனுடன் தொடர்புள்ள மக்கள் குழுமம் மீதும் எப்படியாவது தப்பபிப்பிராயத்தை வளர்த்திட வேண்டும் என்பதுதான்.

நாம் மதத்தை வெறுப்பவர்களோ விரும்புபவர்களோ அல்ல. ஆனால் மத வழிபாடு செய்யும் உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை ஐநா கூட அங்கீகரிக்கிறது. அதில் தலையீடு செய்ய எமக்கு உரிமையில்லை.

இவருக்கு எப்படி மதத்தின் மீது அபாண்டமான பழிப்புக்களை தாந்தோன்றித்தனமாக செய்ய உரிமை உண்டோ அதே அளவு உரிமை அதை மறுக்கவும் உண்டு..!

இராமாயணம்.. சைவத்துக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. சைவத்துக்கும் அங்கு சம மதிப்பளிக்கப்படுகிறது..!

------------------------------------------------------------------------------------------------------------------------------

மனித உரிமைகள் என்ற அளவுகோலுக்கூடாகவே மதவழிபாட்டு உரிமை நியாயம் பெறுகிறது ஐநாவின் சட்டதில்.

ஆனால் உங்களுடைய பக்திக்கு முதல் பலியாவது மனித உரிமைதானே இதனால்த்தான் அதை கட்டுப்படுத்த நினைப்பதும் மனித உரிமைகளின் அக்கறையின் பொருட்டே ஆகிறது.

மனிதமுன்னேற்றத்துக்கு குறுக்கே படுத்துக் கிடக்கும் இந்த நம்பிக்கைகளை துப்பரவு செய்யாவிட்டால் அதற்க்கு வழிபிறக்குமா?

மேலைநாடுகளின் முன்னேற்றதுக்கு காரணங்கள் என்ன?

வாஸ்து பார்த்துதான் மாடங்கள் கட்டுகிறார்களா? இல்லை

வேலைத்தளங்கள் திறக்கப்படும் போது பூசைகள்தான் செய்கிறார்களா?

தொடர்பு பட்ட சூழ்நிலைகளில் இருந்து வெற்றிவாய்ப்புக்களை பிழிந்தெடுக்க அவர்கள் கவனம் முழுமையாக செலவு செய்யப் படுகிறது. நாமோ அரசமரத்தை சுற்றுவதுபோல் தேவையான இடத்தை விட்டு சம்பந்தமே இல்லாத இன்னோர் இடத்தில் கவனத்தை செலவு செய்கிறோம். பகுத்தறிவின் கேள்விகளுக்கு விஞ்ஞான விளக்கம் வேறு சொல்கின்றோம். அது அவர் மனதில் நம்பிக்கையை உசார்ப்படுத்துகிறது ஆதலால் குற்றம் இல்லையாம். இப்படி ஆத்தில போட்டுட்டு குளத்திலேயே தேடவைக்கின்ற ஒரு தப்பான தொழிலை செய்ய ஊக்கப்படுத்துகிறதே என்ற கவலை இல்லையே உங்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் இரண்டு பிரதான வல்லரசுகளின் மக்களும் மத நம்பிக்கையில் இருப்பவர்கள்.! அமெரிக்கா மற்றும் ரஷ்சியா..!

இத்தாலி.. கிறிஸ்தவ மதத்தின்.. இருப்பிடமாகவே விளங்குகிறது. இஸ்ரேல்.. யூதர்களின். மத இருப்பிடமாக உள்ளது. ஏன் இந்தியா கூட இன்று பல துறைகளில் வேகமாக முன்னேறி இருக்கிறது.

மத அடிப்படைகளுக்கு அப்பால் மக்கள் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே நடத்தேல்லையா..??!

பிரச்சனை மதத்தில் அல்ல.. உங்கள் மனங்களில்..! ஐநாவே மத உரிமைகளை அடிப்படை மனித உரிமைகளுக்குள் வழங்கும் போது.. அதை நிராகரிக்க நீங்க யார் சார்..??! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் இரண்டு பிரதான வல்லரசுகளின் மக்களும் மத நம்பிக்கையில் இருப்பவர்கள்.! அமெரிக்கா மற்றும் ரஷ்சியா..!

இத்தாலி.. கிறிஸ்தவ மதத்தின்.. இருப்பிடமாகவே விளங்குகிறது. இஸ்ரேல்.. யூதர்களின். மத இருப்பிடமாக உள்ளது. ஏன் இந்தியா கூட இன்று பல துறைகளில் வேகமாக முன்னேறி இருக்கிறது.

மத அடிப்படைகளுக்கு அப்பால் மக்கள் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தையே நடத்தேல்லையா..??!

பிரச்சனை மதத்தில் அல்ல.. உங்கள் மனங்களில்..! ஐநாவே மத உரிமைகளை அடிப்படை மனித உரிமைகளுக்குள் வழங்கும் போது.. அதை நிராகரிக்க நீங்க யார் சார்..??! :D

-------------------------------------------------------------------------------------------------------

சுப்புறமணிய சுவாமியின் மத உணர்வு என்ன சொல்கிறது?

நாய்களின் பிழைப்பு நடத்தும் மனித உயிர்களுக்கு இது முன்வினைப்பயன் அது அவர்களுக்கு ஏற்றதே சமுதாய முன்னேற்றம் ஒன்றும் வேண்டியதல்ல. எனவே இந்தக் கொள்கையை மனித உரிமை என்ற சட்டதுக்குள் ஒளிந்து உயிர் பிழைக்க விட வேண்டுமா ஐயா?

குற்றங்கள் புரிதல் என்பது மனித இயற்கை என்ற சட்டத்துக்குள் போட வேண்டும்.

பரிகாரம் தெய்வ வழிபாட்டால் தேட வேண்டும்.

எவனுடையவோ வேர்வையை திருடிவிட்டு அதில் ஒருதுளியில் எவனுக்கோ செலவளித்து பரிகாரம் செய்வது நியாயமாகிறதாம் இவர்களுக்கு.

தூக்குக் காவடியில் தொங்கும் அவஸ்தையை விட மற்றவனுக்கு இளைக்கும் துன்பத்தை செய்யாமல் விடுவது கடினமாக இருக்கும் என்பதால் தன் ஆயுள் முழுக்க மற்றவனுக்கு துன்பத்தை செய்து சில துளி நிமிடங்களுக்கு மட்டும் தன் உணர்வுகளை வருத்தி பரிகாரம் செய்ய நினைக்கிறான். இந்தக் காவடி பக்கதன்.

சுயநலத்துக்கு பிடித்த மதம் தான் இவர்களை இப்படி எல்லாம் செய்ய வைக்கிறது.

கண்கட்டி வித்தைகளால்த்தான் தெய்வ இருப்பு நிலை நிறுத்தப் படவேண்டும் என்று சிந்திக்கத் தூண்டும் அளவு அறிவுகளை தெய்வ பக்திகள் என்று சொல்லவேண்டுமாம்.

Link to comment
Share on other sites

சிவதனுசு, விஸ்ணுதனுசு என்று கம்பர் தன்னுடைய கற்பனையால் பாடவில்லை. வான்மீகி இராமாயணத்திலும் அப்படித்தான் இருக்கிறது. இது கம்பருடைய இடைச் செருகல் அல்ல.

வேண்டுமென்றால் நெடுக்காலபோவான் சொன்ன தகவல்கள் பின்பு சைவர்களால் செய்யப்பட்ட இடைச் செருகல்களாக இருக்கலாம்.

ஆயினும் நெடுக்காலபோவான் சொன்ன தகவல்கள் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், நாம் சில விடயங்களை புரிந்து கொள்ளவேண்டும்.

பொதுவாக படைப்பாளிகள் மக்கள் விரும்புகின்ற கருத்துக்களை வெளிப்படையாகவும், ஆரவாரமாகவும் ஆங்காங்கே சொல்லிக்கொண்டு, நுட்பமான முறையில் தமது கருத்துக்களையும் எதிரான விடயங்களையும் தமது படைப்புக்குள் நுளைப்பார்கள். அந்த விடயங்கள் வெளிப்படையாக சொல்லப்படுவதில்லை. காட்சிகளாகவும், சம்பவங்களாகவும் வந்து போகும்.

"கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படம் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவானது என்று நம்புகின்ற தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். காரணம் அந்தப் படத்தில் பல இடங்களில் காணப்படுகின்ற "சிவகீதைகள்". ஆனால் தமிழர்களின் போராட்டம் எவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தப்படுகின்றது என்பது நுட்பமாகப் பார்த்தால்தான் விளங்கும்

இன்றைய பேச்சு வழக்குத் தமிழில் வந்த "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம் சொல்கின்ற செய்திகளின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாத இவர்களால், இராமாயணத்தை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?´

நெடுக்காலபோவான் சிவகீதை பற்றிய தகவலை தந்தது ஒரு நல்ல விடயம்.

இன்றைக்கு சைவர்களின் வீட்டில் பகவத்கீதைதான் தொங்குகின்றது. சிவகீதை என்ற ஒன்று இருப்பதே இவர்களுக்கு தெரியாது. எப்படித் தெரியும்? சைவர்களைத்தான் இராமன் வெற்றி கொண்டுவிட்டாரே!

Link to comment
Share on other sites

ஈழத்திருமகன் சார்..

கற்பனை.. (imagination) சிந்தனை..(thinking) யோசனை..(idea) இவற்றிற்கு இடையில்.. அர்த்தம் புரியாமல் இங்கு பாவிக்கவில்லை என்பதை தெளிவாகச் சொல்லலாம். அப்படி பிரயோகிக்கப்பட்ட இடத்தைக் காட்டினால்.. உங்களுக்கு போதிய விளக்கமளிக்க தயாராகவே உள்ளோம்..!

நெடுக்ஸ்..... "சார்" எல்லாம் போடாதீர்கள். :):)

நண்பர்களே, நான் வயது முதிர்ந்தவனோ அல்லது மிகவும் மரியாதைக்குரியவனோ அல்ல. பலரையும் போல் நானும் ஒரு மாணவனே. எனது 33வது வயதில் இருக்கிறேன். பெயரை மட்டும் கூறினால் போதுமானது.

சரி.

நெடுக்ஸ். இப்போதும் பாருங்கள். நீங்கள் மேலதிகமாக "idea" என்பதையும் இணைத்து விட்டீர்கள். இந்த மூன்று சொற்களிலும் நீங்கள் மிகத் தெளிவாக இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகமே. உங்களை புண்படுத்துவதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். நான் கண்டு கொண்டதைத்தான் கூறினேன்.

முதல் இரண்டு சொற்களுக்கும் எனது கருத்தை எழுதிவிட்டேன். "யோசனை" என்றால் என்ன என்பதை எழுதுங்கள். (What do you mean by "idea"? )

"எண்ணங்கள்" இல்லாமல் "சொற்கள்" இல்லை (There is no word without a thought). எண்ணங்கள்... எண்ணங்களின் தொகுப்பான கோட்பாடுகள்.. இந்த கோட்பாடுகளை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வன சொற்கள் (மொழியின் அங்கம்). இந்த சொற்களை பூரணமாக அறியாமல் கோட்பாடுகளையோ அல்லது எண்ணங்களையோ அறிய முடியாது. ஏற்கெனவே இதை எழுதியிருக்கிறேன். வீணே சொற்களை பாவிப்பது எதையும் அறிய உதவாது. :unsure::)

Link to comment
Share on other sites

இராமாயணம் தமிழர்களுக்கு மட்டும் அல்ல. சைவத்திற்கு எதிரானது.

நீங்கள் எதைப் படித்தாலும், அதை நுட்பமாக படிக்கவும், ஆராயவும் தெரிந்திருக்க வேண்டும்.

இராமன் சிவனை வணங்கியதாக இராமாயணம் சொல்லவில்லை. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட தல வரலாறுகள் என்று சொல்லப்படுகின்ற கதைகள் அவ்வாறன சில விடயங்களை சொல்கின்றன.

இராமாயணம் சைவத்திற்கு எதிரானது என்று நான் சொல்வதற்கு சில காரணங்கள் உண்டு.

இப்பொழுதாவது உங்களுடைய நுண்ணறிவைக் கொண்டு சிந்தித்துப்பாருங்கள்.

இராமாயணத்தில் இராமனிடம் நாண் ஏற்றச் சொல்லி இரண்டு விற்கள் கொடுக்கப்படுகின்றன.

இப்படி இரண்டு விற்களில் ஒன்று உடைக்கப்படுகிறது, மற்றது நாண் ஏற்றப்படுகிறது

மிதிலையில் இராமன் உடைத்து நொறுக்கிய வில் : சிவதனுசு

திரும்பி வருகின்ற போது இராமன் நாண் ஏற்றிய வில் : விஸ்ணுதனுசு

சிவதனுசு உடைக்கப்படுகிறது. விஸ்ணுதனுசு நாண் ஏற்றப்படுகிறது.

இப்பொழுதாவது உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா?

திரு. சபேசன் நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறீர்கள்.

இராமனுக்கு பல்வேறு அஸ்திரங்களையும், உபதேசங்களையும் ராமாயணத்தின் பல்வேறு காண்டங்களில் வழங்குகின்ற விசுவாமித்திரனும், அகத்தியனும் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து பல வரங்கள் பெற்ற மாமுனிகள்.

அதிலும் சிவமுனி அகத்தியர் வால்மீகி ராமாயணத்தில் 3 கட்டங்களில் வருகிறார்

1. அகத்தியர் தன் தவத்தை கலைத்த காரணத்தால் தாடகையின் கணவன் சுந்தனை எரித்து சாம்பர் ஆக்குதல்

2. வனவாசம் ஆரம்பிக்கும் ராமன், குகனின் எல்லையில் பரதனை சந்தித்த பின் அகத்தியர் ஆசிரமத்திற்கு சென்று ஆசி பெறுகிறான். அப்போது சிவனின் பாசுபத அஸ்திரம் முதலானவற்றை ராமனுக்கு வழங்கும் அகத்தியர் ராமனை பஞ்சாவதி (இன்றைய மகாராஷ்டிர நாசிக் பகுதி) வனப்பகுதிக்கு சென்று ஆசிரமம் அமைத்து தங்குமாறு கூறுகிறார். இங்கே தான் ராமலட்சுமணர்கள் சூர்ப்பனகையை சந்திக்கிறார்கள்.

3. ராம ராவண யுத்தத்தின் போது ஒரு கட்டத்தில் ராமன் சோர்வடைந்து நம்பிக்கை இழக்கிறான். அப்போது ராமனுக்கு சோர்வை போக்கி நம்பிக்கையை தரும் ஆதித்திய இருதயம் என்னும் சூரியனுக்குரிய மந்திரத்தை அகத்தியர் உபதேசிக்கிறார். சூரியனின் அதிதேவதை சிவன் ஆகும்.

மேற்சொன்னவை யாவும் இராமயணத்தின் மூலப்பதிப்பான வால்மீகி இராமயணத்திலேயே உள்ளது.

சிவதனுசு பலகாலம் பாவிக்காது இரும்பு பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. ஆனால் பரசுராமன் தரும் தனுசோ பாவனையில் உள்ளது. உபயோகிக்காது பழசாகிவிட்ட சிவதனுசு நாண் ஏற்றும் போது உடைந்து விடுகிறது. உபயோகத்தில் உள்ள பரசுராமன் தனுசு உடையவில்லை. இந்த சின்னஞ்சிறு விடயங்கள் எல்லாம் உங்கள் பகுத்தறிவுக்கு எட்டுவதில்லை போல் இருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இதை தானோ :unsure:

சைவத்திற்கு யார் எதிரி என்பதை திருச்செந்தூரில் வைரவேலையே திருடி வாயில் போட்டுக்கொண்ட கழகத்தின் கண்மணிகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வீண்புரளி கிளப்பாதீர்கள். ஆடு நனைகிறதே என்று எதுவோ அழுததாம். அது போல் தான் உள்ளது சிலரின் திடீர் சைவப்பற்றும்

Link to comment
Share on other sites

சிவதனுசு, விஸ்ணுதனுசு என்று கம்பர் தன்னுடைய கற்பனையால் பாடவில்லை. வான்மீகி இராமாயணத்திலும் அப்படித்தான் இருக்கிறது. இது கம்பருடைய இடைச் செருகல் அல்ல.

.

அப்படி ஒரு பாடலை (விஸ்னு தனுசு பற்றி) கம்பர் பாடவே இல்லை... ஒருவேளை எனக்கு தெரியவில்லையோ..?

விஸ்னுதனுசு பற்றி கம்பர் பாடிய அந்த பாடல்களை எனக்கு தருவீர்களா...??? படிக்க ஆவலாக இருக்கிறேன்...!

Link to comment
Share on other sites

ராமாயணம் என்பது ராம + அயணம், ராமனின் பயணங்கள் என பொருள் படும். ஆகவே பால காண்டமும், ராமனின் முடிசூடலில் இருந்து தொடங்கும் உத்தர காண்டமும் வால்மீகி ராமாயணத்தில் பின்னாளில் இணைக்கப்பட்டதாக கருதுவோர் உண்டு.

வால்மீகி இராமயணத்தில் இராமன் கடவுள் அவதாரமாக கூறப்படவில்லை. உதாரண மனிதன் (ideal man), உதாரண மன்னன்(ideal king) என்ற அடிப்படையில் தான் வர்ணிக்கப்பட்டிருக்கிறான். 1574 ல் துளசிதாசர் எழுதிய துளசி ராமாயணத்தில் தான் ராமன் கடவுள் அவதாரமாக சொல்லப்படுகிறான்.

ராமாயணத்தில் வரும் லங்காபுரி தற்போதைய இலங்கை அல்ல, இந்தியாவின் மகாராஷ்டிரத்தின் ஒரு பகுதியே என்று சொல்பவர்களும் உண்டு. தங்களை இராவணின் பரம்பரையாக கருதும் ஒரு பிரிவினர் மகாராஷ்டிரத்தில் இன்னும் வாழ்கிறார்கள். இவர்கள் இன்னும் இராவணனுக்கு விழா கூட எடுக்கிறார்கள். ராமன் சூர்ப்பனகையை சந்தித்த பஞ்சாவதி வனப்பகுதி இன்றைய நாசிக் பிரதேசத்தை ஒட்டிய பகுதியே என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதற்கேற்றாற் போல் மகாராஷ்டிராவில் இன்னும் ரவீன், ரவீனா என்னும் பெயர்கள் வழக்கத்தில் உள்ளன.

சுக்ரீவனின் கிஷ்கிந்தை கர்நாடகத்தின் பெல்லாரி பிரதேசம் என்று கருதுகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் சேது அணையை இராமர் பூரணமாக கட்டினார் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் குறைவுதான். ஏற்கனவே இருந்த நிலத்தொடர்பு சில இடங்களில் தண்ணீருக்கடியில் சில அடிகள் அமிழ்ந்து விட அந்த இடங்களை கற்பாறைகள், மரக்கட்டைகள் போன்றவற்றை போட்டு நிரப்பி தற்காலிக பாலமாக உபயோகித்திருக்கலாம் என கருத இடமுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற்றிவேலண்னை ஆடு நனைகிறதே என்று.... பெரிய வார்த்தையளெல்லாம் பாவிக்கிறியள். மற்றப்பக்கம் சாதகமான செய்தியொண்டும் இல்லை, நல்ல செய்தி வரும்வரைக்கும் அழுத்தத்த இதிலயாவது குறைப்பமெண்டால் விடுறியளில்லை.

:unsure:

Link to comment
Share on other sites

வேற்றிவேலண்னை ஆடு நனைகிறதே என்று.... பெரிய வார்த்தையளெல்லாம் பாவிக்கிறியள். மற்றப்பக்கம் சாதகமான செய்தியொண்டும் இல்லை, நல்ல செய்தி வரும்வரைக்கும் அழுத்தத்த இதிலயாவது குறைப்பமெண்டால் விடுறியளில்லை. :D

ஹி ஹி :unsure::)

அழுத்தத்தை குறைப்பதா?? கூடாதே.

பழம்பெரும் நூல்கள் அடங்கிய இந்த இணையத்தளத்துக்கு சென்று பாருங்கள். வேதம், வேதாந்தம் என்று எத்தனை புரட்டுக்களை பிரித்து பகுதி பகுதியாக வைத்திருக்கிறார்கள். வாசித்தீர்கள் என்றால் அழுத்தம் பன்மடங்கு கூடும். இவற்றை வாசிப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எல்லாம். :):)

http://www.sacred-texts.com/hin/index.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்..... "சார்" எல்லாம் போடாதீர்கள். :):D

நண்பர்களே, நான் வயது முதிர்ந்தவனோ அல்லது மிகவும் மரியாதைக்குரியவனோ அல்ல. பலரையும் போல் நானும் ஒரு மாணவனே. எனது 33வது வயதில் இருக்கிறேன். பெயரை மட்டும் கூறினால் போதுமானது.

சரி.

நெடுக்ஸ். இப்போதும் பாருங்கள். நீங்கள் மேலதிகமாக "idea" என்பதையும் இணைத்து விட்டீர்கள். இந்த மூன்று சொற்களிலும் நீங்கள் மிகத் தெளிவாக இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகமே. உங்களை புண்படுத்துவதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். நான் கண்டு கொண்டதைத்தான் கூறினேன்.

முதல் இரண்டு சொற்களுக்கும் எனது கருத்தை எழுதிவிட்டேன். "யோசனை" என்றால் என்ன என்பதை எழுதுங்கள். (What do you mean by "idea"? )

"எண்ணங்கள்" இல்லாமல் "சொற்கள்" இல்லை (There is no word without a thought). எண்ணங்கள்... எண்ணங்களின் தொகுப்பான கோட்பாடுகள்.. இந்த கோட்பாடுகளை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வன சொற்கள் (மொழியின் அங்கம்). இந்த சொற்களை பூரணமாக அறியாமல் கோட்பாடுகளையோ அல்லது எண்ணங்களையோ அறிய முடியாது. ஏற்கெனவே இதை எழுதியிருக்கிறேன். வீணே சொற்களை பாவிப்பது எதையும் அறிய உதவாது. :):)

What do you mean by "idea"?
இப்படிக் கேட்டதற்காக.. அதே வடிவில்...

Idea:- any conception existing in the mind as a result of mental understanding, awareness, or activity.

Thinking:- to have a conscious mind, to some extent of reasoning, remembering experiences, making rational decisions

Imagination:- the faculty of imagining, or of forming mental images or concepts of what is not actually present to the senses.

5 ஆண்டில ஆசிரியர் கேட்டதுக்கு அப்புறம் எங்களைப் பார்த்து இப்படிக் கேட்ட முதல் ஆள்...! ரெம்ப வீக் சார் நீங்க சில விசயத்தில..! :unsure::D

Link to comment
Share on other sites

சிவதனுசு பலகாலம் பாவிக்காது இரும்பு பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. ஆனால் பரசுராமன் தரும் விஷ்ணு தனுசோ பாவனையில் உள்ளது. உபயோகிக்காது பழசாகிவிட்ட சிவதனுசு நாண் ஏற்றும் போது உடைந்து விடுகிறது. உபயோகத்தில் உள்ள விஷ்ணு தனுசு உடையவில்லை. இந்த சின்னஞ்சிறு விடயங்கள் எல்லாம் உங்கள் பகுத்தறிவுக்கு எட்டுவதில்லை போல் இருக்கிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இதை தானோ :unsure:

அண்ணா நீங்கள் வேற விஸ்னுதனுசு எண்று கதையை கிளப்பி வொடாதேங்கண்ணா... சிவதனுசின் வீரியதை கம்பர் அழகான தமிழில் சிவனின் சினம் கொண்ட இமைகளை போண்றது ஏன்கிறார்... அதனால்தான் அதுக்கு பெயர் "சிவதனுசு."

'இமைய வில் வாங்கிய ஈசன், "பங்கு உறை

உமையினை இகழ்ந்தனன் என்ன" ஓங்கிய

கமை அறு சினத் தனிக் கார்முகம் கொளா,

சமை உறு தக்கனார் வேள்வி சாரவே.

பொழிப்பு என்ன எண்றால் தக்கனின் வேள்விக்கு செண்று வந்த உமையின் மீது கொண்ட சினதால் வளைந்து பலமான சிவனின் இமைகளை ஒத்தது இந்த தனுசு என்கிறார்.... அதனால்தான் அதற்கு பெயர் சிவ தனுசு...

சபேசன் சொல்லுவது காட்டுக்கதைகள்... ;)

Link to comment
Share on other sites

Idea:- any conception existing in the mind as a result of mental understanding, awareness, or activity.

Thinking:- to have a conscious mind, to some extent of reasoning, remembering experiences, making rational decisions

Imagination:- the faculty of imagining, or of forming mental images or concepts of what is not actually present to the senses.

5 ஆண்டில ஆசிரியர் கேட்டதுக்கு அப்புறம் எங்களைப் பார்த்து இப்படிக் கேட்ட முதல் ஆள்...! ரெம்ப வீக் சார் நீங்க சில விசயத்தில..! :unsure::)

அப்பனே.

பொறுமை. பொறுமை. இப்பொழுதுதானே தொடங்கி இருக்கிறோம். :):)

சரி. விடயத்துக்கு வருவோம். உங்கள் கருத்துப்படி "கற்பனை" மட்டும்தான் "மனதில் இமேஜ்" களை உருவாக்குகிறதா? இல்லை சிந்தனை, ஐடியா எல்லாம் மனதில் இமேஜ்களை உருவாக்குகிறதா?

கற்பனைக்கு "not actually present to the sense" என்று எழுதி இருக்கிறீர்கள். ஒரு மனிதன், அவனுக்கு என்றுமே அறிந்தோ அல்லது உணர்ந்தோ இல்லாத ஒன்றை பற்றி "கற்பனை" அல்லது "சிந்தனை" செய்ய முடியுமா? (I am asking that can any human being think or immagine something which is completely unknown, i.e. completely insensible).

மற்றது. ஆமாம் நண்பா. நான் மிகவும் வீக். அதை நாணயமாக ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். என்னுடன் படித்த பல நண்பர்கள் இந்த களத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூட அது தெரியும். நம்மைப்போல் தெரியாதவர்கள் தானே தெரிந்தவர்களிடம் கேட்டு அறிய வேண்டும். அதுதான் கேட்கிறேன். :D:D

Link to comment
Share on other sites

அண்ணா நீங்கள் வேற விஸ்னுதனுசு எண்று கதையை கிளப்பி வொடாதேங்கண்ணா... சிவதனுசின் வீரியதை கம்பர் அழகான தமிழில் சிவனின் சினம் கொண்ட இமைகளை போண்றது ஏன்கிறார்... அதனால்தான் அதுக்கு பெயர் "சிவதனுசு."

'இமைய வில் வாங்கிய ஈசன், "பங்கு உறை

உமையினை இகழ்ந்தனன் என்ன" ஓங்கிய

கமை அறு சினத் தனிக் கார்முகம் கொளா,

சமை உறு தக்கனார் வேள்வி சாரவே.

பொழிப்பு என்ன எண்றால் தக்கனின் வேள்விக்கு செண்று வந்த உமையின் மீது கொண்ட சினதால் வளைந்து பலமான சிவனின் இமைகளை ஒத்தது இந்த தனுசு என்கிறார்.... அதனால்தான் அதற்கு பெயர் சிவ தனுசு...

சபேசன் சொல்லுவது காட்டுக்கதைகள்... ;)

தல, :unsure::)

எழுத்து மாறிவிட்டதா? இல்லை காட்டுக்கதை தானா?

சரி. வானளாவிய புகழுடன் கோலோச்சிய இராவணன், மூன்று உலகங்களையும் வென்றவன், புஷ்ப்பக விமானம் வைத்து பறந்தவன், கம்பர் கூறியதுபோல்

வாரணம் பொருது மார்பும், வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க்கேற்ப, நயம்பட உரைத்த நாவும்

தாரணி மொளலிபத்தும், சங்கரன் கொடுத்த வாளும்

வீரமும் களத்தே போக்கி, வெறுங்கையோடு இலங்கை புக்கான்.

என்று போயிருப்பானா? அல்லது அக்கணமே அவமானத்தால் மடிந்திருப்பானா? சங்கரனார்க்கு ஆயுத வியாபாரமா? அங்கு வில், இங்கு வாள். :):)

தர்மத்தின் காவலனான இராமன், ஆயுதம் இழந்த இராவணனுடன் கைகளையும் கால்களையும் ஆயுதமாக கொண்டு "துவந்த யுத்தம்" நடத்தியிருக்க வேண்டும். யுத்தத்தில் எதிரி ஆயுதம் இழந்துவிட்டால் மற்றவனும் ஆயுதங்களை எறிந்துவிட்டு மல்யுத்தம் செய்ய வேண்டும் என்பது அக்கால யுத்தமரபு. இராமன் ஏன் செய்யவில்லை? பயமா?

Link to comment
Share on other sites

:):)

குறுக்ஸ். பார்த்தீரா எமது அறிதிறனின் ஆழத்தை. இதை நான் இங்கு இணைக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். நீங்கள் இணைத்துவிட்டீர்கள். :D:D

நமது கல்வியின் படுபிழையான அணுகுமுறை இதுதான். யாராவது கேட்டுவிட்டால், ஒன்று புத்தகத்தை புரட்டி யாரோ சொன்னவற்றை சுமந்து வந்து கொட்டுவது. அல்லது தற்காலத்தில் "எங்கும் நிறைந்தவரும் கேட்டவுடன் ஆயிரமாயிரமாக அள்ளிக்கொடுப்பவருமான கூகிள் ஆண்டவரிடம்" சரணடைவது.

இது காலம் காலமாக, எமது சமயம் கற்பிக்கும் ஒரு வழிமுறை. என்றோ ஆதிசங்கரர் கூறியதை அது உண்மையா அல்லது அவர் ஒரு illusion இற்குள் அகப்பட்டு கொண்டாரா என்று அறியாமல் (கவனிக்க: இது "படிப்பது" அல்ல. It is not studying but learning) அதை எமது முதுகில் சுமப்பது. என்றைக்காவது பழைய குப்பைகளை கிளறாமல் எம்முடைய கூர்ந்த அறிவை பயன்படுத்தி இருக்கிறோமா? :):D

Link to comment
Share on other sites

தல, :unsure::)

எழுத்து மாறிவிட்டதா? இல்லை காட்டுக்கதை தானா?

சரி. வானளாவிய புகழுடன் கோலோச்சிய இராவணன், மூன்று உலகங்களையும் வென்றவன், புஷ்ப்பக விமானம் வைத்து பறந்தவன், கம்பர் கூறியதுபோல்

வாரணம் பொருது மார்பும், வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க்கேற்ப, நயம்பட உரைத்த நாவும்

தாரணி மொளலிபத்தும், சங்கரன் கொடுத்த வாளும்

வீரமும் களத்தே போக்கி, வெறுங்கையோடு இலங்கை புக்கான்.

என்று போயிருப்பானா? அல்லது அக்கணமே அவமானத்தால் மடிந்திருப்பானா? சங்கரனார்க்கு ஆயுத வியாபாரமா? அங்கு வில், இங்கு வாள். :):)

தர்மத்தின் காவலனான இராமன், ஆயுதம் இழந்த இராவணனுடன் கைகளையும் கால்களையும் ஆயுதமாக கொண்டு "துவந்த யுத்தம்" நடத்தியிருக்க வேண்டும். யுத்தத்தில் எதிரி ஆயுதம் இழந்துவிட்டால் மற்றவனும் ஆயுதங்களை எறிந்துவிட்டு மல்யுத்தம் செய்ய வேண்டும் என்பது அக்கால யுத்தமரபு. இராமன் ஏன் செய்யவில்லை? பயமா?

'தேறினால், பின்னை யாதும் செயற்கு அரிது

ஊறுதான் உற்றபோதே உயிர்தனை

நூறுவாய்' என, மாதலி நூக்கினான்;

ஏறு சேவகனும், இது இயம்பினான்.

ஈழத்திருமகனின் கேள்வியை இராமனின் சாரதி மாயலி இராமனிடம் கேட்ப்பது..... அதோடு இராவனனை இப்போதே கொல்லு மாறு சொல்கிறார்...

படை துறந்து, மயங்கிய பண்பினான்

இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின்

நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?

கடை துறந்தது போர், என் கருத்து' என்றான்

அதுக்கு இராமரின் பதில் இது.... படைகளை துறந்து மயங்கிய ஒருவனை கொல்வது நீதி அண்று எண்று இராமர் மொழிந்தார் என்கிறார் கம்பர்...

சங்கரனார் இராமனுக்கு ஆயுதம் கொடுக்க வில்லை....

Link to comment
Share on other sites

'தேறினால், பின்னை யாதும் செயற்கு அரிது

ஊறுதான் உற்றபோதே உயிர்தனை

நூறுவாய்' என, மாதலி நூக்கினான்;

ஏறு சேவகனும், இது இயம்பினான்.

ஈழத்திருமகனின் கேள்வியை இராமனின் சாரதி மாயலி இராமனிடம் கேட்ப்பது..... அதோடு இராவனனை இப்போதே கொல்லு மாறு சொல்கிறார்...

படை துறந்து, மயங்கிய பண்பினான்

இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின்

நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?

கடை துறந்தது போர், என் கருத்து' என்றான்

அதுக்கு இராமரின் பதில் இது.... படைகளை துறந்து மயங்கிய ஒருவனை கொல்வது நீதி அண்று எண்று இராமர் மொழிந்தார் என்கிறார் கம்பர்...

சங்கரனார் இராமனுக்கு ஆயுதம் கொடுக்க வில்லை....

ம்.. தல,

இராமனுக்கு சகல "அஸ்த்திர வித்தைகளை" அருளியவர் விஸ்வாமித்திரர் (இவர் சிவனிடம் வரமாக தனுர் வேதத்தை பெற்றவர் என்று இராமாயணம் கூறுகிறது) இவை சிவன் அருளிய அஸ்த்திரங்களே. இராவணனுக்கு வாளைக் கொடுத்தவரும் சிவன்தான்.

இதிலே ஒன்றைக் கவனியுங்கள். அஸ்த்திர வித்தையானாலும், யோகக் கலையானாலும், நடனக்கலையானாலும் அவற்றை சிவனைத்தவிர வேறு எந்த ஆண் தெய்வங்களும் பெற்றதாக கூறப்படவில்லை. "ப்ரும்மாஸ்திரத்தின்" அதிதேவதையாக மட்டுமே பிரம்மதேவரை இராமாயணம் கூறுகிறது. வைதீக மதத்தின் மூலப்பொருளாக கூறப்படும் "ரிக் வேதத்தின்" முழுமுதல் கடவுள் இந்திரன் கூட இவ்வாறான எத்தகைய சக்திகளையும் பெற்றிருக்கவில்லை.

மேலும், இராமனின் வாயால் "இன்று போய் போர்க்கு நாளை வா" என்று கூறவைத்து, அவனை உயர்த்துவதற்காகவே இந்தக் கட்டம் எழுதப்பட்டது என நினைக்கிறேன். உண்மையில் இது வான்மீகி இராமாயணத்தில் இருக்கிறதா என்பதை "சம்ஸ்க்கிருதம்" கற்றவர்கள்தான் வாசித்து கூறவேண்டும். நான் அறிந்தளவில், இராமனை உயர்த்த, கம்பர் கையாண்ட ஒரு அணியே இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தனைக் ஹரோ எண்டு போட்டால் இல்லாத, பொல்லாத எல்லாத்தையும் போட்டு பப்பாவில ஏத்துறது என்ன புதிய கதையோ? எல்லா நேரத்திலும் அது நடக்கும். கம்பர் மட்டும் என்ன விதிவிலக்கோ??

ஒவ்வொருமுறையும் அடிபடுறியள். பிறகு அமைதியாகுறியள். பிறகு ஆரம்பத்தில் கதைச்சதையே திருப்பத் தொடங்குறியள். பிள்ளைகளுக்கு வாய் உழையுறதில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அயின்ச்ரைன் அய்யா உதெல்லாத்தயும் தேடித்திரிஞ்சு படிச்சிருக்கிறியள், அதாலதான் பிரசர் கூடி அவதிப்படுறியள். நமக்கு உதுவள் light hearted entertainment.

ஹி ஹி

அழுத்தத்தை குறைப்பதா?? கூடாதே.

பழம்பெரும் நூல்கள் அடங்கிய இந்த இணையத்தளத்துக்கு சென்று பாருங்கள். வேதம், வேதாந்தம் என்று எத்தனை புரட்டுக்களை பிரித்து பகுதி பகுதியாக வைத்திருக்கிறார்கள். வாசித்தீர்கள் என்றால் அழுத்தம் பன்மடங்கு கூடும். இவற்றை வாசிப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எல்லாம்.

http://www.sacred-texts.com/hin/index.htm

அய்யா மேல நீங்கள் தந்த லிங் எங்கும் நிறைந்தவரும் கேட்டவுடன் ஆயிரமாயிரமாக அள்ளிக்கொடுப்பவருமான கூகிள் ஆண்டவரிடம் பெற்றதா அல்லது பிறக்கும்போதே உங்களுடன் ஒட்டிப்பிறந்ததா?

ஹி ஹி

குறுக்ஸ். பார்த்தீரா எமது அறிதிறனின் ஆழத்தை. இதை நான் இங்கு இணைக்க வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். நீங்கள் இணைத்துவிட்டீர்கள்.

நமது கல்வியின் படுபிழையான அணுகுமுறை இதுதான். யாராவது கேட்டுவிட்டால், ஒன்று புத்தகத்தை புரட்டி யாரோ சொன்னவற்றை சுமந்து வந்து கொட்டுவது. அல்லது தற்காலத்தில் "எங்கும் நிறைந்தவரும் கேட்டவுடன் ஆயிரமாயிரமாக அள்ளிக்கொடுப்பவருமான கூகிள் ஆண்டவரிடம்" சரணடைவது.

இது காலம் காலமாக, எமது சமயம் கற்பிக்கும் ஒரு வழிமுறை. என்றோ ஆதிசங்கரர் கூறியதை அது உண்மையா அல்லது அவர் ஒரு illusion இற்குள் அகப்பட்டு கொண்டாரா என்று அறியாமல் (கவனிக்க: இது "படிப்பது" அல்ல. It is not studying but learning) அதை எமது முதுகில் சுமப்பது. என்றைக்காவது பழைய குப்பைகளை கிளறாமல் எம்முடைய கூர்ந்த அறிவை பயன்படுத்தி இருக்கிறோமா?

அய்யா நீங்கள் பிறக்கேக்க பூரண அறிவோடு பிறந்திருப்பியள், ஆனா எங்களுக்கு உந்த கூகிள் ஆண்டவன்தான் தஞ்சம்.

:unsure:

Link to comment
Share on other sites

அயின்ச்ரைன் அய்யா உதெல்லாத்தயும் தேடித்திரிஞ்சு படிச்சிருக்கிறியள், அதாலதான் பிரசர் கூடி அவதிப்படுறியள். நமக்கு உதுவள் light hearted entertainment.

மிகவும் நல்லது. :unsure::)

அய்யா மேல நீங்கள் தந்த லிங் எங்கும் நிறைந்தவரும் கேட்டவுடன் ஆயிரமாயிரமாக அள்ளிக்கொடுப்பவருமான கூகிள் ஆண்டவரிடம் பெற்றதா அல்லது பிறக்கும்போதே உங்களுடன் ஒட்டிப்பிறந்ததா?

இதற்கெல்லாம் கூகிள் ஆண்டவர் எதற்கு. இவ்வாறு பல மின்னூல் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.

அய்யா நீங்கள் பிறக்கேக்க பூரண அறிவோடு பிறந்திருப்பியள், ஆனா எங்களுக்கு உந்த கூகிள் ஆண்டவன்தான் தஞ்சம். :)

அப்பனே, இந்த ஓவர்நக்கல் தானே வேண்டாம் என்கிறது. சரி வேலை இருக்கிறது. நாளை பார்க்கலாம். :):D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.