Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு

கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த பாடசாலைகள் இம்மாதம்  27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை மூடப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஏனைய கிராமப்புற பாடசாலைகள் வழமைப்போன்று செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.newswire.lk/wp-content/uploads/2022/06/Screenshot_20220626-181911_Gmail.jpg

 

https://www.virakesari.lk/article/130228

  • கருத்துக்கள உறவுகள்

நகர பாடசாலைக்கு வரும் பிள்ளைகளை, அந்தந்த கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க சொல்லியதாக கேள்விப்பட்டேன், நிலமை வழமைக்கு திரும்பிய பின்(?) பழையபடி ஆரம்பத்தில் படித்த பாடசாலைகளுக்கு போக முடியுமோ என்ற தயக்கம் பெற்றோருக்கு இருக்க கூடும்..எல்லாமே குழப்பமாக உள்ளது.. 

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமை சீராக 7 வருடங்களாவது ஆகும் என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:

நிலைமை சீராக 7 வருடங்களாவது ஆகும் என் கிறார்கள்.

அதற்கு மேலயும் ஆகலாம் நூணா சாத்தியமே இல்ல 4000கோடி ரூபா மீண்டும் அச்சிடப்பட்டதாக செய்தி சொல்லுது.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

நிலைமை சீராக 7 வருடங்களாவது ஆகும் என் கிறார்கள்.

 

Just now, தனிக்காட்டு ராஜா said:

அதற்கு மேலயும் ஆகலாம் நூணா சாத்தியமே இல்ல 4000கோடி ரூபா மீண்டும் அச்சிடப்பட்டதாக செய்தி சொல்லுது.

balance of payment இல் உள்ள நடைமுறை கணக்கில் உள்ள நடைமுறைக்கணக்கில் கோவிட் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறை மாலைதீவு மொத்த தேசிய வருமானத்தில் 40%, பிஜி 27% இலங்கை 2% (அண்ணளவாக நினைவில் உள்ளதன் அடிப்படையில்).

முதல் இரண்டு நாடுகளும் மிக விரைவாகவே  மீட்சி அடைந்து விட்டது ஆனால் இலங்கையினால் முடியவில்லை அதற்கு ஒரு காரணம் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு மற்றும் தங்கத்தின் இருப்புக்கு என்ன நடந்தது என யாராலும் கூறமுடியவில்லை.

தனி சொல்வதை பார்க்கும் போது இனி இலங்கை நிலை கவலைக்கிடமாக உள்ளது போல கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதற்கு மேலயும் ஆகலாம் நூணா சாத்தியமே இல்ல 4000கோடி ரூபா மீண்டும் அச்சிடப்பட்டதாக செய்தி சொல்லுது.

எல்லாம் அனுபமில்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தியதின் விளைவு.

தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பது போல் விளையாட்டு செயல் அல்ல இது.
தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் தவளைக்கத்து கத்திவிட்டு வீட்டுக்கு வந்தி சிவனேயென போர்த்து மூடிக்கொண்டு படுத்துறங்கலாம்.

ஆனால்  ஆட்சிபீடம் ஏறுபவர்கள் நிதானமும் சமாதானமும் நாட்டின் கணக்கு வழக்கு தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இனவாதத்தை நாட்டுப்பற்று என கருதினால் இதுவும் வரும் இதுக்கு மேலேயும் வரும்.

இது எனது கருத்து மட்டுமே. 😎

எல்லாம் தெரிஞ்சனீர் வந்து செய்து காட்டுமன் எண்டு சொல்லப்படாது கண்டியளோ 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக பாடசாலைகள் இயங்கவில்லை - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

( எம்.நியூட்டன்)

அரசாங்கத்தின் தெளிவில்லாத அறிவித்தல் காரணமாக 27 ஆம் திகதி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் ஆசிரியர், மாணவர் வரவு நிலை குறைவாகக் காணப்பட்டதோடு பெரும்பாலான பாடசாலைகள் இயங்கவில்லை என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் பாசாலைகளை இயக்குதல் என்ற அரசாங்கத்தின் குழப்பமான அறிவித்தல், வருகைதரமுடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறையாக கணிக்க முடியாது என்ற ஆசிரியர்களுக்குச் சாதகமான அறிவித்தல், அதிபர் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதியின்மை,சீரற்ற எரிபொருள் விநியோகம்,இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு, எரிசக்தி அமைச்சரின் எரிபொருள் இல்லையென்ற அபாயகரமான அறிவித்தல் இத்தகைய நிலைகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து மார்க்கங்கள் சீராகும் வரை பாடசாலை செல்வதைத் தவிப்போம் என நாம் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதன்படி நாட்டில் உள்ள பெருமளவான பாடசாலைகளில் போக்குவரத்து மார்க்கங்கள் இல்லாத பலர் எமது வேண்டுகோளை ஏற்று பாடசாலைக்குச் செல்லவில்லை. ஒரு சில பாடசாலை அதிபர்கள் ஆசியர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்த அதேவேளை மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்ததாக எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், வலயச் செயலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இத்தகைய நிலை தொடராமல் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் சீராக, அரசாங்கம் ஆசிரியர்களுக்கான எரிபொருள் விநியோகம், போக்குவரத்து மார்க்கங்கள் என்பவற்றிற்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த பாடசாலைகளையும் நீண்ட நாட்களுக்கு மூடும்நிலை ஏற்படும் என்றுள்ளது.

 

https://www.virakesari.lk/article/130286

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vasee said:

 

balance of payment இல் உள்ள நடைமுறை கணக்கில் உள்ள நடைமுறைக்கணக்கில் கோவிட் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறை மாலைதீவு மொத்த தேசிய வருமானத்தில் 40%, பிஜி 27% இலங்கை 2% (அண்ணளவாக நினைவில் உள்ளதன் அடிப்படையில்).

முதல் இரண்டு நாடுகளும் மிக விரைவாகவே  மீட்சி அடைந்து விட்டது ஆனால் இலங்கையினால் முடியவில்லை அதற்கு ஒரு காரணம் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு மற்றும் தங்கத்தின் இருப்புக்கு என்ன நடந்தது என யாராலும் கூறமுடியவில்லை.

தனி சொல்வதை பார்க்கும் போது இனி இலங்கை நிலை கவலைக்கிடமாக உள்ளது போல கருதுகிறேன்.

மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலையினால் வாழ்க்கைச் மிக அதிகரித்துச் செல்கிறது 

கவலைக்கிடமே அதை மட்டும் உறுதியாக சொல்வேன் வடகிழக்கில் மெதுவாக பாதிப்பு ஆரம்பிக்கிறது

17 hours ago, குமாரசாமி said:

எல்லாம் அனுபமில்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தியதின் விளைவு.

தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பது போல் விளையாட்டு செயல் அல்ல இது.
தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் தவளைக்கத்து கத்திவிட்டு வீட்டுக்கு வந்தி சிவனேயென போர்த்து மூடிக்கொண்டு படுத்துறங்கலாம்.

ஆனால்  ஆட்சிபீடம் ஏறுபவர்கள் நிதானமும் சமாதானமும் நாட்டின் கணக்கு வழக்கு தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இனவாதத்தை நாட்டுப்பற்று என கருதினால் இதுவும் வரும் இதுக்கு மேலேயும் வரும்.

இது எனது கருத்து மட்டுமே. 😎

எல்லாம் தெரிஞ்சனீர் வந்து செய்து காட்டுமன் எண்டு சொல்லப்படாது கண்டியளோ 🤣

இலங்கை எப்போது இனவாதத்தை களைந்து தமிழ் மக்களுடன் சுமூகமாக ஓர் நல்லுறவை ஏற்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறதோ இந்த பிரச்சினையில் இருந்து மீளலாம் ஆனால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள் மீளவும் மாட்டார்கள் இதற்குள் நாங்களும் அடக்கம் (தமிழ் மக்கள்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலையினால் வாழ்க்கைச் மிக அதிகரித்துச் செல்கிறது 

கவலைக்கிடமே அதை மட்டும் உறுதியாக சொல்வேன் வடகிழக்கில் மெதுவாக பாதிப்பு ஆரம்பிக்கிறது

இலங்கை எப்போது இனவாதத்தை களைந்து தமிழ் மக்களுடன் சுமூகமாக ஓர் நல்லுறவை ஏற்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறதோ இந்த பிரச்சினையில் இருந்து மீளலாம் ஆனால் அதை அவர்கள் செய்ய மாட்டார்கள் மீளவும் மாட்டார்கள் இதற்குள் நாங்களும் அடக்கம் (தமிழ் மக்கள்)

தமிழ் அரசியல் தலைவர்களும் தங்கள் வயிறு வளர்க்க அட்டகாச வசனங்களுடன் திரிகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தமிழ் அரசியல் தலைவர்களும் தங்கள் வயிறு வளர்க்க அட்டகாச வசனங்களுடன் திரிகின்றார்கள்.

இந்த நேரத்திலும் உதவாமல் அவர்கள் வாய்ப் பேச்சால் மட்டும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் மக்கள் படும் அவலங்களை அவர்கள் கண்டு கொள்வதுமில்லை பாராளுமன்றத்தில் உசுப்பேற்றல்  மட்டுமே எஞ்சி நிற்கின்றது மக்களோ வயிற்றுப்பிழைப்புக்காக நாள்தோறும் மிகவும் அல்லல்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இராணுவ அடக்குமுறைக்கொள்கையால் சிங்களதேசம் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறதே தவிர, தமிழினத்தின் சுதந்திர எழுச்சியை அதனால் அழித்துவிட முடியாது.

இந்த உண்மையை சிங்களப்பேரினவாதம் என்றோ ஒருநாள் உணர்ந்தே தீரும்!
- தலைவர் பிரபாகரன்
(மாவீரர் நாள் உரை -1997)

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2022 at 17:14, பிரபா சிதம்பரநாதன் said:

நகர பாடசாலைக்கு வரும் பிள்ளைகளை, அந்தந்த கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க சொல்லியதாக கேள்விப்பட்டேன், நிலமை வழமைக்கு திரும்பிய பின்(?) பழையபடி ஆரம்பத்தில் படித்த பாடசாலைகளுக்கு போக முடியுமோ என்ற தயக்கம் பெற்றோருக்கு இருக்க கூடும்..எல்லாமே குழப்பமாக உள்ளது.. 

90-92(போக்குவரத்து நெருக்கடி) வரை நாங்கள் கொஞ்சப் பேர் யாழ் இந்துவில் தவணைப் பரீட்சை எழுதுவது, அருகில் இருக்கும் விக்ரோறியாவில் கல்வி கற்பது என ஒழுங்கு படுத்தி இருந்தவை. அப்ப பஞ்சலிங்கம் சேர் யாழ் இந்துவின் அதிபர், விக்ரோறியா கல்லூரியில் சந்திரபாலன் சேர். இருவரிடமும் கதைத்து எமது கல்வி தொடர வாய்ப்பளித்தனர். இரு அதிபர்களும் எனது வாழ்வில் மறக்க முடியாதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

90-92(போக்குவரத்து நெருக்கடி) வரை நாங்கள் கொஞ்சப் பேர் யாழ் இந்துவில் தவணைப் பரீட்சை எழுதுவது, அருகில் இருக்கும் விக்ரோறியாவில் கல்வி கற்பது என ஒழுங்கு படுத்தி இருந்தவை. அப்ப பஞ்சலிங்கம் சேர் யாழ் இந்துவின் அதிபர், விக்ரோறியா கல்லூரியில் சந்திரபாலன் சேர். இருவரிடமும் கதைத்து எமது கல்வி தொடர வாய்ப்பளித்தனர். இரு அதிபர்களும் எனது வாழ்வில் மறக்க முடியாதவர்கள்.

அப்படித்தான் ஏதாவது செய்யவேண்டும். ஆனால் St.Patrick’s,  St.Johns போன்ற கல்லூரிகள் என்ன செய்வார்களோ தெரியாது.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படித்தான் ஏதாவது செய்யவேண்டும். ஆனால் St.Patrick’s,  St.Johns போன்ற கல்லூரிகள் என்ன செய்வார்களோ தெரியாது.. 

பரியோவான் ஏனைய உள்ளூர் அமெரிக்கன் மிசன் பள்ளிகளுக்கும்,

சம்பத்தரிசியர் ஏனைய ரோமன் கத்தோலிக்க பள்ளிக்கும் மாறுவார்கள் என நினைக்கிறேன்.

முக்கிய பாடங்களை  zoom மூலம் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

பரியோவான் ஏனைய உள்ளூர் அமெரிக்கன் மிசன் பள்ளிகளுக்கும்,

சம்பத்தரிசியர் ஏனைய ரோமன் கத்தோலிக்க பள்ளிக்கும் மாறுவார்கள் என நினைக்கிறேன்.

முக்கிய பாடங்களை  zoom மூலம் செய்யலாம்.

இருக்கலாம்.. பாவம் பிள்ளைகள்.. 2019ல் பாடசாலையை தொடங்கியவர்களுக்கு ஆரம்ப கல்வியே முறையாக நடக்கவில்லை.. மிகவும் தடுமாறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களிடம் நாட்டை கையளித்ததால் வந்த வினை!

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் அதிபராக இருக்கிறார், கல்விப் பணிப்பாளருடனான கலந்துரையாடலில் பிள்ளைகளுக்கு திரும்ப எழுத்து பழக்க வேண்டி வரும் என எச்சரித்ததாக கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

முக்கிய பாடங்களை  zoom மூலம் செய்யலாம்.

அதுக்கும் மின்சாரம் வேணுமே?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுக்கும் மின்சாரம் வேணுமே?

வறுமை  மட்டுமல்ல

கல்வியறிவற்ற ஒரு  சமூகமும்  உருவாகப்போகிறதா???

😪

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அதுக்கும் மின்சாரம் வேணுமே?

ஓம்

 

1 hour ago, விசுகு said:

வறுமை  மட்டுமல்ல

கல்வியறிவற்ற ஒரு  சமூகமும்  உருவாகப்போகிறதா???

😪

ஓம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.