Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில்... தனது பிரத்தியேகப் பணத்தை, முதலீடு செய்து...  "ஒருநாள் கடவுச்சீட்டு" சேவையை, ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் பிரச்சினை இருப்பதால்தான் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தேன் – தம்மிக்க!

யாழில்... தனது பிரத்தியேகப் பணத்தை, முதலீடு செய்து...  "ஒருநாள் கடவுச்சீட்டு" சேவையை, ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா.

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், இந்த நிலைமையை மாற்றியமைப்பதாகவும் அமைச்சர் தம்மிக்கப் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அமைச்சின் கீழ், முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, கொழும்பு துறைமுக நகர்,பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரை அண்டிய அபிவிருத்தித் திட்டம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், கொழும்பு தாமரைத்தடாக முகமைத்துவ நிறுவனம்,

டொக்னோ பார்க்க கம்பனி பிரைவட் லிமிட்டட் தகவல், தொழில்நுட்ப மையம், ஆகிய நிறுவனங்கள் குறித்த அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான வர்த்தமானியும் நேற்றிரவு வெளியிடப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1288753

  • கருத்துக்கள உறவுகள்

கடவுச் சீட்டை வழங்கி தமிழனை நாட்டைவிட்டு துரத்த பிளான்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில்... தனது பிரத்தியேகப் பணத்தை, முதலீடு செய்து..

 

 றால் போட்டு சுறா பிடிக்கும்  ஆசையோ ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

கடவுச் சீட்டை வழங்கி தமிழனை நாட்டைவிட்டு துரத்த பிளான்.

இப்ப தமிழனை மட்டும் இல்லை எல்லாரையும் நாட்டை விட்டு துரத்துர பிளான்தான்.மற்றும் தமிழன் ஏதோ அங்கு தான் வாழவேன்டும் என்டு அடம் பிடிக்கிறான என்ன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

கடவுச் சீட்டை வழங்கி தமிழனை நாட்டைவிட்டு துரத்த பிளான்.

மனித வளத்தின்  பெறுமதி தெரியாதவர்கள் இலவசக்கல்வி இலவச மதிய உணவு இலவச கல்வி இலவச மருத்துவம் எல்லாவற்றையும் கொடுத்து இளைய வர்களின் மனித வளத்தை வெளிநாடுகளுக்கு இலவசமாய் ஏற்றுமதி  செய்கிறார்கள் . நாம் இங்கு வருவது வரவிடுவது இந்த நாடுகளின்  கருணையினால் அல்ல சுய நலத்தால் புரிந்தவன் பிஸ்தா .

இனவாதம் கண்ணை மறைக்க 6 லட்ஷம் இந்திய தமிழரின் மனிதவளத்தை  தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பிய வர்களை என்னவென்று சொல்வது இப்படியான குறுகிய  சிந்தனைகள் உள்ளவர்களின் நாடு இனிவரும் பத்து வருடங்களுக்கு மேல் தாண்டி பஞ்சத்தில் தான் மீள்வதுக்கு  வாய்ப்பில்லை . தமிழர்கள் அரசபதவியில்  இருப்பதை  பார்த்து சிங்களவருக்கு  16 பேருக்கு ஒரு அரச உத்தியோகம் கொடுத்து அழகு பார்த்தவர்களுக்கு திறைசேரியில் இருந்து சம்பள பணம் அள்ள அள்ள புத்த பெருமான் கொடுப்பார் என்று நம்பினார்களாக்கும் .இன்னும் நிறைய இருக்கு நேரமின்மை இத்துடன் முடிக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை கடவுச்சீட்டை எடுத்துக் கொண்டு  வெளிநாட்டுக்கு கலைக்கிற பிளான் போல இருக்கு.தமழர் எல்லாம் வெளிநாடு போனால் கொஞ்ச காலத்தில் இலங்கையை விலைக்கு வாங்கி விடுவார்கள். நல்ல திட்டம் தொடரங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலையில் எவருமே வெளிநாடுகளுக்கு ஓடிப் போய்விட முடியாது.

ஆனாலும் எல்லோருமே அவசர அவசரமாக பாஸ்போட்டை எடுக்கிறார்கள்.

ஆக எல்லா இடங்களிலும் கடையைத் திறந்துவிட்டா அரசுக்கு வியாபாரம் அமோகமாக இருக்கும்.

இனி கொஞ்சகாலம் அரசுக்கு வருவாய் தரக் கூடியவைகளை வலிய திறந்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அவருக்குத்தான் தெரிந்திருக்கு, எதை எப்போ எங்கே ஆரம்பிக்க வேண்டுமென்பது. பிழைக்கத் தெரிந்தவர்!

  • கருத்துக்கள உறவுகள்

நாடு வங்குறோத்தாகி இப்படி கெட்டுபோயிருக்கு அவனவன் பாஸ்போர்டுகளை முடக்கிறதுக்கு பதிலாக எங்கேயாவது  ஓடி தப்புங்கள் என்று என்றுமில்லாதவாறு பாஸ்போர்ட் விநியோகத்தை அதிகரிப்பதென்றால் பேதிக்கு குடிச்சிட்டு வடலிக்கை ஒதுங்கின மாதிரித்தான் கதை முடியப் போகுது.

அரசாங்கத்திலை இருக்கிறவன் எல்லோரும் மதிகெட்ட சூனியங்கள். எவனாவது சொந்த காசை கொடுத்து அரசாங்கத்துக்கு அலுவலகம் துறப்பானா, அது என்ன நீ உழைச்சு சம்பாதித்த காசா அல்லது அடிச்சு சம்பாதித்த காசா. அதுவும் இவருக்கு யாழ்பாணத்திலை அலுவலகம் திறக்க இவ்வளவு ஆவல்.

இனவெறியின் போராலை ஏற்கனவே ஆயிரம், இலட்சம் என்ற கணக்கில் மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறியது போதாதா. மிஞ்சியுள்ளதையும் அனுப்ப ஆசையென்றால் அனுப்பி விடுங்கோ நாடு குட்டிச் சுவராகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.