Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”இராணுவ சிப்பாயாக, பாதுகாப்பு செயலாளராக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக... நீங்கள் ஆற்றிய சேவைகளை, போற்றுகின்றோம்.” – மொட்டு கட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

”இராணுவ சிப்பாயாக, பாதுகாப்பு செயலாளராக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக... நீங்கள் ஆற்றிய சேவைகளை, போற்றுகின்றோம்.” – மொட்டு கட்சி

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறிந்து கொள்ளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதியொருவர் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே, பதவியை இராஜினாமா செய்தது இதுவே முதன்முறை எனவும், அதற்கு நீண்டகால பொருளாதார நெருக்கடி, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கே காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாதுகாப்பு செயலாளராக பாரிய சேவையாற்றிய ஜனாதிபதியின் இன்றைய இந்த தீர்மானமானது அவர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பையும் நாட்டுப் பற்றையும் வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறியும் என்பதில்... எவ்விதமான சந்தேககமும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1291232

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பாதுகாப்பு செயலாளராக பாரிய சேவையாற்றிய ஜனாதிபதியின் இன்றைய இந்த தீர்மானமானது அவர் நாட்டின் மீது கொண்டுள்ள அன்பையும் நாட்டுப் பற்றையும் வெளிக்காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களை கையேந்தவும், நடுத்தெருவில் அலையவும் வைத்தவரை ஒருகாலத்திலும் மறக்கமாட்டார்கள் என நினைக்கிறன். அவர் வேறொரு நாட்டில் இறந்தால் அவருக்கு நலம்.

அதை நீங்கள் சொல்லக்கூடாது, அனுபவித்த மக்கள் சொல்லட்டும்.

2 hours ago, தமிழ் சிறி said:

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறியும் என்பதில்... எவ்விதமான சந்தேககமும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மீண்டும் தங்களுக்கு தாங்களே மாலை அணிவித்து மகிழ்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

மீண்டும் தங்களுக்கு தாங்களே மாலை அணிவித்து மகிழ்கிறார்கள்.

இதனைத்தான்… மாறி, மாறி முதுகு சொறிவது என்பார்கள். 😁

  • கருத்துக்கள உறவுகள்

நொந்து போயுள்ள அண்ணலின்  அருமை பெருமைகளை அள்ளிவிடுங்க.....😰

முதலில் அவரது அறையில், ஒன்னரைக் கோடி இருந்த காரணத்தை சொல்லுங்கப்பா?🤨

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நொந்து போயுள்ள அண்ணலின்  அருமை பெருமைகளை அள்ளிவிடுங்க.....😰

முதலில் அவரது அறையில், ஒன்னரைக் கோடி இருந்த காரணத்தை சொல்லுங்கப்பா?🤨

 அம்புட்டதால் பாதுகாப்பு காரணம்!

  • கருத்துக்கள உறவுகள்

“அடுத்த பிறவியிலாவது நல்ல குடும்பத்தில் பிறந்து, சுயமாக உழைத்து ஒரு மனிதனாக வாழப்பாருங்கள்” என்று முகநூலில் ஒருவர் சொல்லி இருந்தார்.ஆணிவேருக்கே அசிங்கம் சேர்த்த ஒரு அருவருப்புப் பிராணி,இவருக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் அவரது சகாக்கள்.அள்ளிக்கொண்டு போன அப்பாவி மக்களின் பணத்தை அந்த ஏழைமக்களுக்கு திருப்பி கொடுக்கப்பாருங்கள் உங்களது பாவக்கணக்கு கொஞ்சம் குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நந்தி said:

“அடுத்த பிறவியிலாவது நல்ல குடும்பத்தில் பிறந்து, சுயமாக உழைத்து ஒரு மனிதனாக வாழப்பாருங்கள்”

ஐயோ! இனி இவர்கள் பிறக்கவே வேண்டாம்,  பூமி  தாங்காது!

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டு மக்களை பிச்சை  எடுக்க வைத்த சேவையை விட வேறென்ன சேவையை மக்கள் எதிர்பார்த்தார்கள்?🙃

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

எதிர்காலத்தில் உங்களது மதிப்பையும் பெறுமதியையும் இந்த சமூகம் அறிந்து கொள்ளும்

கதிரையில் ஏற்றி அழகு பார்த்த மக்களுக்கு சொல்லாமல்,? அவர்களை எதிர்கொள்ள முடியாமல் ஒளித்தோடிய கள்ளனுக்கு  இதைவிட வேறு மதிப்பு எதிர்காலத்தில் வரும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

கதிரையில் ஏற்றி அழகு பார்த்த மக்களுக்கு சொல்லாமல்,? அவர்களை எதிர்கொள்ள முடியாமல் ஒளித்தோடிய கள்ளனுக்கு  இதைவிட வேறு மதிப்பு எதிர்காலத்தில் வரும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்?

May be an image of 3 people and text that says 'ஒரு நாள் இந்த கோத்தாட அருமை இலங்கை மக்களுக்கு புரிஞ்சு எல்லோரும் கோத்தாவ தேடும்போது MEME SIYA கோத்தா அமெரிக்காவின் ஜனாதிபதியா இருப்பான்'

அந்த நேரம், அமெரிக்கா.. நம்மகிட்ட கடன் வாங்க  லைனிலை நிற்கும். 😂
அந்த நிலைமைக்கு... கொண்டு வந்துடுவார்  இந்த கோத்தா.... 🤦

 

Śhankǝǝ V

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா காசு பார்த்தது தான். 

அனால், அது இந்த நிலைக்கு வந்து இராது 

கோத்தாவை இந்த ஓட வேண்டிய நிலைக்கு கொண்டுவந்தது வியத்மகா. அவர்கள் தன, 2019 வரிக்குறைப்பில் கொள்ளை அடித்தவர்கள். கடன் ஏற்கனவே இருந்தது அனால் சமாளிக்க கூடிய நிலையில் இருந்தது.

imf இந்த முதல் நிபந்தனை வரியை பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பது, யதார்த்தமாக வியத்மகா கொள்ளை அடித்தது   வெளியில் கொண்டு வந்து இருக்கிறது 

உண்மையை ஒதுக்கி கள்ள வேண்டும். சிங்கள மக்களுக்கு கோத்த சிங்கள மக்கள் விருமியது, நினைத்ததையே செய்தார்.

கோத்த விட்ட பிழை வியத்தமாகவை நம்பி அவர்களை மட்டும் ஆலோசகர்களாக, வேறு தனியான சுதந்திரமான ஆலோசகர்ளை நியமிக்காதது. 

மாரு வளமாக, இலங்கை அரசியலில் எவர் காசு பார்க்கவில்லை, ஒரு சிலரை தவிர.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'ஒரு நாள் இந்த கோத்தாட அருமை இலங்கை மக்களுக்கு புரிஞ்சு எல்லோரும் கோத்தாவ தேடும்போது MEME SIYA கோத்தா அமெரிக்காவின் ஜனாதிபதியா இருப்பான்'

அந்த நேரம், அமெரிக்கா.. நம்மகிட்ட கடன் வாங்க  லைனிலை நிற்கும். 😂
அந்த நிலைமைக்கு... கொண்டு வந்துடுவார்  இந்த கோத்தா.... 🤦

 

 

கோத்தா, அமெரிக்கா போனால் அமெரிக்காவும் வங்குரோத்து அடைந்துவிடும் என்கிறீர்கள்? ஆனால் அமெரிக்கா இவரை உள்வாங்கும் என நான் நினைக்கவில்லை. இனி இவர்  சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள நேரிடலாம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய், கோத்தா அமெரிக்க பிரஜா உரிமையையும் இழந்து, குடும்பத்தையும் பிரிந்து அலையப்போறார்! இல்லை ஓரிடத்தில் முடங்குவார், கதை முடிந்தும் போகலாம் அரசியல் கனவு பாதியில் முடிந்ததால். அமெரிக்கா போனாலும் அங்குள்ளவர்கள் விரட்டியடிப்பார்களே! இதென்ன கோத்தாவுக்கு வந்த சோதனை?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இன்னும் தமிழர் எதிர்ப்பு இனவாத மாயையில் இருந்து விடுபடவில்லை எனவே ஆட்சியில் முழுமையாக இருந்து நாட்டை முழுமையாக நாசம் பண்ணாமல் இப்படி இடையில் விட்டு போனது எனக்கு வருத்தமே .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.