Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு அமைய மிக விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கப்பெற இந்தியா ஆதரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு அமைய மிக விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கப்பெற இந்தியா ஆதரவு

(நா.தனுஜா)

இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருக்கின்றது.

 அதுமாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கின்றது.

 அதேவேளை ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றுக்கு அமைவாக சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை இலக்காகக்கொண்ட மக்களின் அபிலாஷைகள் அடைந்துகொள்ளப்படுவதை முன்னிறுத்தி இந்தியா எப்போதும் இலங்கை மக்களுடன் உடன்நிற்கும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் மீள உறுதிப்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இலங்கையில் அரசாங்கம் மற்றும் அதன் தலைமைத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட நிலைவரங்களுக்கு ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு அமைவாக வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுவதை இந்தியா எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார் என்று தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், முன்நோக்கிப்பயணிப்பதற்கு விரும்பும் இலங்கை மக்களுக்கு இயலுமான அனைத்து வழிகளிலும் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உறுதியளித்ததாகவும் தெரிவித்திருக்கின்றது.

இலங்கையில் தற்போது மேலோங்கிவரும் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இந்தியாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், இந்தியாவின் 'அயலகத்திற்கு முதலிடம்' மற்றும் பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பும் அபிவிருத்தியும் (சாகர்) ஆகிய கொள்கைகளை அடிக்கோடிட்டுக்காண்பிக்கும் வகையில் அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை மக்களுடனான ஒருமைப்பாடும் அவர்களுக்கான ஆதரவும் தொடரும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது.

மேலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளமை தொடர்பில் அந்நாட்டு வெளிவிவகாரப்பேச்சாளர் சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்திருக்கும் உயர்ஸ்தானிகராலயம், முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/131553

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்  அமைப்பும், ஜனநாயம் என்பதும் சிங்கள பௌத்த அரசு;

 ஹிந்திகயாவின் வெளிப்படையான பச்சை கோடி எஞ்சி இருக்கும் தமிழர்களை சிங்கள மயப்பட துதலும், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்வதத்திற்கும்.

எது நடந்தாலும், தமிழ் அரசியல் வாதிகள் இதை மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் வேதம் ஓதுது. மகிந்த.. கோத்தா போன்ற கொடியவர்களை வாழ்த்தியும் வரவேற்றும் வந்த நாடும்.. இதே. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருக்கின்றது.

சிறிலங்காவில் அரசியல் தீர்வு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழர் பிரச்சினை என்று வரும் கோது அது அரசியல் பிரச்சினையாகத் தெரியவில்லை. அது ஒரு சிறிய உள்நாட்டுப்பிரச்சினை. ஆனால் சிங்களவர்களுக்கு என்று வரும்போது அதற்கு அரசியல்தீர்வு என்று இந்தியா ஏற்றுக்கொளளுகிறது. 69 இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரை துரத்தி விட்டு (கோத்தா துரத்தப்படவேண்டியவர்தான்)(உண்மையில் கோத்தாவின் விருப்பை ரணில் நிறைவேற்றுகிறார்.  அதற்கு கோத்தாவின் கட்சியே ஆதரவு கொடுக்கிறது.உ வெறும்25000 வாகக்குகளை மட்டுமே பெற்று மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஜனாதிபதியாக வருவது எவ்வகை ஜனநாயகம்?

  • கருத்துக்கள உறவுகள்

மஹா ஜனங்களே

திரும்பவும் ஒருமுறை எங்களுக்கு ஆப்பு வைப்பதற்கு இந்தியா ஆயத்தம். 

நாங்கள் என்ன செய்யப்போகிறோம்?

☹️

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

மஹா ஜனங்களே

திரும்பவும் ஒருமுறை எங்களுக்கு ஆப்பு வைப்பதற்கு இந்தியா ஆயத்தம். 

நாங்கள் என்ன செய்யப்போகிறோம்?

☹️

 

இலங்கையை ஒரு கொதிநிலையில் வைத்திருக்கவே இந்தியாவுக்கு விருப்பம்.

ஆனபடியால் தமிழர்களின் பிரச்சனையை எந்தக் காலத்திலும் தீர்க்கவிடாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

அதுமாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கின்றது.

நீங்கள் இப்படித்தான் அறிக்கை விட வேணும் இது தான் சகல உயர்ஸ்தானிய கற்கை நெறியாளர்களுக்கும் சொல்லி கொடுத்த விதம்....

இன்னுமோர் அதிகாரி இருப்பாரே பாதுக்காப்பு செயல்பாடுகளை ரோ உளவுப்பிரிவுடன் சேர்ந்து செய்ய அவர் தான் இதில் அதிகம் அக்கறை எடுத்திருப்பார்...
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இலங்கையில் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு அமைய மிக விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கப்பெற இந்தியா ஆதரவு

உங்கடை ஆதரவைத்தான் 30,40 வருசமாய் கண்டு களிக்கிறமே 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.