Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பின், சில எம்.பிக்கள்... ரணிலுக்கு, ஆதரவு வழங்க தீர்மானம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்?

கூட்டமைப்பின், சில எம்.பிக்கள்... ரணிலுக்கு, ஆதரவு வழங்க தீர்மானம்?

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போதே கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ, கோவிந்தன் கருணாகரம் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களது அரசியல் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தினை வலியுறுத்தியாக கூறப்படுகின்றது.

அத்துடன், செல்வம் அடைக்கலநாதன், டலஸ் அழகப்பெருவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இறுதியில் பொது இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என கூறப்படுகின்றது.

பெரும்பாலும் வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனாலும் இறுதி நேரத்திலேயே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் போது இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்படுமாக இருந்தால், கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிக்க கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://athavannews.com/2022/1291606

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

தங்களது அரசியல் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தினை வலியுறுத்தியாக கூறப்படுகின்றது.

இவர்களை எப்படி வைதாலும் தகும். பரதேசிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரஞ்சித் said:

இவர்களை எப்படி வைதாலும் தகும். பரதேசிகள்.

நீங்கள் சொல்வது உண்மை என்றாலும்.... 
கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களை... கட்சியின்  தலைமை 
எப்படி நடத்தியது என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை பாராளுமன்றத்தில் பேசக்  கூட அனுமதிப்பதில்லை.
அந்தளவுக்கு... அராஜக போக்குடன், இருவர் தான்தோன்றித்தனமாக..
சர்வாதிகார போக்குடன் நடக்கின்றவர்களை உங்களுக்கும்  தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்வது உண்மை என்றாலும்.... 
கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களை... கட்சியின்  தலைமை 
எப்படி நடத்தியது என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை பாராளுமன்றத்தில் பேசக்  கூட அனுமதிப்பதில்லை.
அந்தளவுக்கு... அராஜக போக்குடன், இருவர் தான்தோன்றித்தனமாக..
சர்வாதிகார போக்குடன் நடக்கின்றவர்களை உங்களுக்கும்  தெரியும்.

டக்கிளஸோ பிள்ளையானோ இப்படி முடிவெடுத்தால் தவறில்லை. ஆனால் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு, பின்னர் தமது "அரசியல் எதிர்காலம்" என்று விலைபோகும் இவர்களை என்னவென்பது?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்வது உண்மை என்றாலும்.... 
கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களை... கட்சியின்  தலைமை 
எப்படி நடத்தியது என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை பாராளுமன்றத்தில் பேசக்  கூட அனுமதிப்பதில்லை.
அந்தளவுக்கு... அராஜக போக்குடன், இருவர் தான்தோன்றித்தனமாக..
சர்வாதிகார போக்குடன் நடக்கின்றவர்களை உங்களுக்கும்  தெரியும்.

இவர்களது அரசியலால் மக்களது எதிர்காலம் பாழாவதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள். ரணில் ஆடிய நரியாட்டம் ஆட்டமும் ஒரு கரணியமென்பதையும், யே.ஆர் போன்றவர்களின் வாரிசுகளால் தமிழினத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதும் இந்தக் கூட்டமைப்பு வியாதிகளுக்குத் தெரியாதா? இவர்கள் சொல்கிறார்கள் சம்-சும் சொல்லாமலே செய்யும் பெரியோர். ரணிலோடு சிங்கக்கொடியை ஆட்டியவராச்சே !

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்வது உண்மை என்றாலும்.... 
கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களை... கட்சியின்  தலைமை 
எப்படி நடத்தியது என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை பாராளுமன்றத்தில் பேசக்  கூட அனுமதிப்பதில்லை.
அந்தளவுக்கு... அராஜக போக்குடன், இருவர் தான்தோன்றித்தனமாக..
சர்வாதிகார போக்குடன் நடக்கின்றவர்களை உங்களுக்கும்  தெரியும்.

சிறியர், 

இது அவர்களது தனிப்பட்ட பிரச்சனை இல்லை.. தமிழர்களின் பிரச்சனை. இந்த நேரத்தில் தனித்துச் செயற்பட முடியாது. 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

77லிருந்து பல முறை அமைச்சர் பதவிகள்,6 முறை பிரதமர் பதவி. தமிழர்களை சகுனி வேடம் போட்டு சூறையாடிய ஜென்மம். விடுதலைப்போராட்டத்தை பிளவுபடுத்தி சாதுர்யமாக அழிக்க உதவிய வேடதாரி.இன்று கூட சிங்கள மக்களே புதிய அரசியல் முகங்கள் வேண்டும் என போராட்டம் செய்யும் வேளையில்..........

எமது சுகபோக  அரசியல்வாழ்வு வாழும் பன்னாடைகள் இன்னும் பழைய குண்டு சட்டிக்குள் பணியாரம் சுட்டுக்கொண்டிருக்குதுகள்.....ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த ஜென்மத்து சாபங்கள்.😡

  • கருத்துக்கள உறவுகள்

நெட்டையரை நம்பினாலும், கட்டையரை நம்பக்கூடாது...... டல்லஸ் கட்டையராம்..... என்று கொழும்பிலை ஒருத்தர்...பீதியை கிளப்பிறாரு.... 🫣

ரணில் தான் வெல்லுவார் எண்டார் மனோ கணேசர்.... இண்டைக்கு அவரது கட்சி டல்லஸ் ஆதரவாம்....

ஒண்டும் புரியவில்லை.

விடிஞ்சா தெரிஞ்சு போயிடும்....  ரணில் ஆண்டானென்ன, டல்லஸ் ஆண்டானென்ன, நமக்கொரு கவலையி்ல்ல.... அட டொலர் கொட்டாதெண்டு சொல்ல வந்தேன்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nochchi said:

இவர்களது அரசியலால் மக்களது எதிர்காலம் பாழாவதை ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்

மக்களின் வாக்குகளால் பதவிபெற்றதும் மக்களை சிந்திப்பவர் யாருமுண்டோ? அப்படி யாரும் முனைந்தாலும் சேறடித்து அவர்களை துரத்தி விடுவார்கள்!

10 hours ago, குமாரசாமி said:

. தமிழர்களை சகுனி வேடம் போட்டு சூறையாடிய ஜென்மம். விடுதலைப்போராட்டத்தை பிளவுபடுத்தி சாதுர்யமாக அழிக்க உதவிய வேடதாரி

 இவர்கள்  தங்களை விடுவிப்பார்கள் என்று நம்ம உறவுகள் சிறைகளில் காத்திருக்க, தம் உறவுகளுக்கு விடுதலை வேண்டித்தருவார்கள் என்கிற நம்பிக்கையில் மக்கள்  வாக்களித்து  இவர்களை  அனுப்பிவைக்க, அவைகளை எல்லாம் மறந்துவிட்டு, புறந்தள்ளிவிட்டு இந்த மாமனிதனை காப்பாற்ற நீதிமன்றம் அலைந்து, எதிர்கட்சி கதிரையை இழந்ததுதான் மிச்சம்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

இவர்கள்  தங்களை விடுவிப்பார்கள் என்று நம்ம உறவுகள் சிறைகளில் காத்திருக்க, தம் உறவுகளுக்கு விடுதலை வேண்டித்தருவார்கள் என்கிற நம்பிக்கையில் மக்கள்  வாக்களித்து  இவர்களை  அனுப்பிவைக்க, அவைகளை எல்லாம் மறந்துவிட்டு, புறந்தள்ளிவிட்டு இந்த மாமனிதனை காப்பாற்ற நீதிமன்றம் அலைந்து, எதிர்கட்சி கதிரையை இழந்ததுதான் மிச்சம்! 

அட…. சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோன  விசயத்திலை,
ரணிலை பழி வாங்கவா, ராஜ பக்சவின் மொட்டு கட்சி ஆளான டலஸுக்கு,
பிள்ளையான், வியாழேந்திரனுடன்….. சேர்ந்து 
கூட்டமைப்பும்  ஆதரவு கொடுக்கிறார்கள்.

கூட்டமைப்பு…. தங்களது, பழைய பகைக்கு… ரணிலுக்கு கணக்கு தீர்க்கிறார்கள்.
சுமந்திரன் இதுக்குள்… மும்முரமாக நிற்கும் போதே, யோசித்தனான்.

சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பறி போன வெறி…. இங்கு வேலை செய்யுது.

ஆக மொத்தத்தில்… இனம் சார்ந்து முடிவு எடுக்க, இவர்கள் தயார் இல்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பறி போன வெறி…. இங்கு வேலை செய்யுது.

 அதுவல்ல சிறியர் காரணம். அவர்கள் எதிர்பார்ப்பு வேறாக இருக்கலாம்! லட்ஷியம் இல்லாத மனிதர்கள், அவ்வப்போது முடிவை மாற்றுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

கூட்டமைப்பின் சில எம்.பிக்கள்... ரணிலுக்கு ஆதரவு – முக்கிய தகவலை வெளியிட்ட... அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழுவொன்று நேற்றிரவு வஜிர அபேவர்தனவின் வீட்டுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசிப்பதற்காகவே கூட்டமைப்பின் 6 உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிவித்திருந்தது.

https://athavannews.com/2022/1291709

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.