Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அறிஞர்.. நெல்லை கண்ணன், காலமானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

தமிழ் அறிஞர்.. நெல்லை கண்ணன், காலமானார்!

பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று(18) காலமானார்.

தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார்.

காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார்.

குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன்.

இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார்.

77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று காலமானார்.

அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

https://athavannews.com/2022/1295247

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிறப்பான மேடைப் பேச்சாளர்........காமராஜரின் பக்தர்.......அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.......!

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை கண்ணன் மரணம்: இலக்கியம், அரசியல் உலகில் 50 வருட பயணம்

18 ஆகஸ்ட் 2022, 08:39 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

நெல்லை கண்ணன்

பட மூலாதாரம்,TWITTER

பேச்சாளரும், காங்கிரஸ் பிரமுகருமான நெல்லை கண்ணன் காலமானார்.

பெயரின் முன்னொட்டு காட்டுவதைப் போல, தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் ந.சு.சுப்பையாப் பிள்ளை, முத்து லக்குமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் நெல்லைக் கண்ணன்.

காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டுவந்த இவர், காமராஜர் போன்ற தலைவர்களோடு பழகியவர். பழந்தமிழ் இலக்கியங்களில் அறிமுகமும், அறிவும் உள்ள நெல்லைக் கண்ணன் தனது ஆற்றொழுக்கான தமிழ்ப் பேச்சால் பலர் உள்ளங்களைக் கவர்ந்தவர். அதே நேரம், அரசியல் தொடர்பாகப் பேசும்போது சர்ச்சையாகவும் பேசக்கூடியவர். தமது சர்ச்சைப் பேச்சுகளால் வெவ்வேறு காலகட்டங்களில் முரண்பட்ட அரசியல் முகாம்கள் பலவற்றைப் பகைத்துக் கொண்டவர்.

சமீபத்தில் ஏற்பட்ட அப்படி ஒரு சர்ச்சையில், 2020 ஜனவரியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமித் ஷா ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்துப் பேசியதாகக் கூறி தமிழ்நாடு அரசால் கைது செய்யப்பட்டார்.

 

கடந்த காலங்களில் திமுக தலைவர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டுவோர் உண்டு.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள், விழா மேடையிலேயே, என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன்.

'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

"நெல்லை கண்ணன் 1970இல் அறிமுகம். மாணவர் காங்கிரஸ், ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்ட அரசியல் என இவரோடு காமராஜர் காலத்தில் பயணித்ததுண்டு. சென்னை சட்டக்கல்லூரி பிராட்வே எம்யூசி விடுதியில் எனது அறைக்கு வருவார். 1979 முதல் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ஆழ்ந்த இரங்கல்," என்று திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1970களில் தொடங்கி தமிழ் மேடைகளில் நெல்லை கண்ணனின் குரல் ஒலித்தது வந்தது. பாற்கடல் போல் தமிழ் மொழியில் புலமை பெற்றிருந்தார், அவரை பலர் 'தமிழ்க்கடல்' என்று அழைத்து வந்தனர். தமிழ் மீது தீராத பற்று கொண்டவர். அவர் வீடு முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருக்கும்.

தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்த அவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். 75 வயதை நெருங்கும் நிலையிலும் பேச்சாற்றலும் நினைவாற்றலும் இவரது பேச்சில் இலக்கிய நயமும் சிறப்பாக இருந்தது.

முக்கிய அரசியல் தலைவர்களுடன் நட்பு

இலக்கியவாதியும், பிரபல பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் அவார். தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள், ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நட்பாக இருந்தவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி.தங்கபாலு ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டவர். 1992 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

நெல்லை கண்ணன்

நெல்லையில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் இருந்த நெல்லை கண்ணன், 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட போது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டார்.

2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், நெல்லை கண்ணன் அதிமுகவில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. ஓர் ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். அரசியலில் மிகப் பெரிய பதவிக்கு அவரால் வர முடியவில்லை.

மோதியை விமர்சித்த நெல்லை கண்ணன்

இந்தியக் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக நெல்லை மேலப்பாளையத்தில், நடைபெற்ற மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இழிவாக பேசியதாகவும், இஸ்லாமியர்களிடம் வன்மத்தை தூண்டியதாகவும் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, நெல்லை காவல்துறையினரால் 2020 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று இரவில் பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். பின்னர் திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், நெல்லை கண்ணனை 14 நாட்கள் வரை நீதிமன்றக் காவலில் வைத்திருந்தது.

"79 வயது கிழவன் நொந்து போய் உள்ளேன்" என ஸ்டாலினுக்குபேஸ்புக் பக்கத்தில் பதிவு

 

நெல்லை கண்ணன்

பட மூலாதாரம்,FACEBOOK

 

படக்குறிப்பு,

நிகழ்ச்சி ஒன்றில் மு.க.ஸ்டாலின், தொல். திருமாவளவன், வைகோ உள்ளிட்டோருடன் நெல்லை கண்ணன்.

கடந்த மே மாதம் நெல்லை கண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில், '79 வயதுக் கிழவன் நொந்து போய் உள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை' என பதிவிட்டிருந்தார். அது அரசியல் வட்டாரத்தில் பலராலும் பேசும் பொருளாக மாறியது.

அவர் பேஸ்புக் பதிவில், 'வேறு வழியில்லை எழுத வேண்டியிருக்கிறது. மிகச் சிறப்பான முதல்வர் என உலகம் போற்றுகிறது. அதனை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

விருது வழங்கும் விழாவில் என்னை தானே பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்து என்னிடம் காட்டிய தாயுள்ளத்தை உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன். அன்று என் கரங்களைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, 'இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது' என்றார். இனி நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார். இன்று ஒரு கடிதத்திற்கும் கூட விடை இல்லை. நேரில் பேச அனுமதிக்கவில்லை.

79 வயது கிழவன் நொந்து போய் உள்ளேன். யாராவது சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை. அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்க மறுக்கிறார். இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகிறேன். மரணம் தானே உறுதி' என்று குறிப்பிட்டிருந்தார். 

https://www.bbc.com/tamil/india-62589103

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறந்த பேச்சாளர். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கைது செய்து சிறையிலிருந்து மீண்ட பின்பு இவரின் பேச்சுக்கள் எவையும் கேட்க முடியவில்லை.

சிறையில் வைத்து ஏதோ செய்துவிட்டார்களோ?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல். சிறந்ததொரு பேச்சாளர். 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/18/2022 at 07:11, ஈழப்பிரியன் said:

அண்மையில் கைது செய்து சிறையிலிருந்து மீண்ட பின்பு இவரின் பேச்சுக்கள் எவையும் கேட்க முடியவில்லை.

சிறையில் வைத்து ஏதோ செய்துவிட்டார்களோ?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

அதன் பிறகும் பேசினார். கடைசிக் கூட்டம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தது.

காங்கிரஸ்காரர் என்பதால் ராஜீவ் காந்தி மரண நிமித்தம் புலிகளை எதிர்த்தார். என்றாலும் கால ஓட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு தமிழ் தேசியவாதியாகவே மறைந்தார். கடைசி மூன்று ஆண்டுகளில் அவர் பிஜேபி காரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100075227957359/videos/741857923742200  👈

தமிழ் அறிஞர்... நெல்லை கண்ணனின், இறுதியுரை!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.