Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள்!

மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்.

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடபகுதியில் சீனா ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்காக சீனா பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒரு வடிவமாக  யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிக் கடல்களில் சீனா முதலீட்டுடன் அட்டைப் பண்ணைகள் செயற்படுவதாக எண்ணுகிறோம்.

குறித்த கடற்பகுதிகளில் சீனா நேரடியாக அட்டைப் பண்ணைகளை அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் பல்வேறு தரப்புக்களில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில் சீனா மறைமுகமாக   கொழும்பு நிறுவனங்கள் ஊடாக முதலீடு செய்துவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

வளமான எமது குடாக்கடலின் பல ஏக்கர் பரவைக் கடல் பகுதிகளை முறையற்ற விதத்தில் அட்டைப் பண்ணைகள் அமைத்து வருவதாக அறிகிறோம்.

இயற்கையாகவே மீனினங்கள் இனப்பெருகத்திற்கேற்ற கண்ட மேடை பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட எமது குடாக்கடல் இயற்கையாகவே இறால் உற்பத்தி பெருகும் இடங்களாகவும் காணப்படுகிறது.

இந்த பிரதேசங்களில் அட்டைப் பண்ணைகளை அமைத்து கடல் நீரோட்டங்களை தடுத்து எமது கடலை நாசப்படுத்தும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

சீனாவின் இத்தகைய செயற்பாட்டினால் மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மிக்க கடல் உணவைப் பெற முடியாத சமூகமாக எம்மை அழிப்பதற்கு சீனா முயல்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அதன் ஆரம்ப புள்ளியாக பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சிப் பகுதியில்  சீன முதலீட்டு பிண்ணனியில்  பண முதலைகளினால் ஆரம்பிக்கப்பட்ட பண்ணையால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் அழியும் நிலையில் உள்ளது.

அதுமட்டுமல்லாது  குறித்த பகுதிகளில் பணத்தை வாரி வழங்கி முறையற்ற அட் டை  ப்பண்ணைகளை நிலை நிறுத்துவதற்காக போராட்டங்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை இடம் பெற்று வருகிறது.

இவ்வாறான போராட்டக்காரர்களால் மீனவ சமூகம் இரண்டாகப் பிளவுபட்டு ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் நிலையை சீனா உருவாக்கி தனது இருப்பை தக்க வைக்க முயல்கிறது.

30 வருட யுத்தத்தின் பின்னர் முழுமையாக பொருளாதார ரீதியாக கட்டி எழுப்பப்படாத வடபகுதி மீண்டும் சீனாவின் அபிவிருத்தி என்ற யுத்தத்தினால் அழிவடையும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

மேலும்  சீனா அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வருகை தந்து  வழங்கப்பட இருந்த 4.3 மில்லியன் ரூபாவை ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தோம்.

இந்நிலையில் கொழும்பில் இருக்கும் சீனாத் தூதரகம் தந்திரமான முறையில்  பல்கலைக்கழ துணைவேந்தர் சற்குணராஜாவை கொழும்புக்கு அழைத்து  நிதியை வழங்கியமை நாகரிகமற்ற செயற்பாடாக பார்க்கிறோம்.

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள்  பல்கலைக்கழக மாணவர்கள் என பல ஆயிரம் பேர் இன்றும் பொருளாதார ரீதியாக    கட்டியெழுப்புவதற்கு  சீனா உதவி செய்யவில்லை.

சீனா தற்போது உதவி என்ற போர்வையில்  வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குள்  ஊடுருவுவது ஏதோ ஒரு சதித் திட்டத்தை தனக்கு சாதகமாக நிகழ்த்துவதற்கு  முன்னகர் வதாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகிய நாங்கள் பார்க்கிறோம்.

எமது கடல் எமக்குச் சொந்தமான நிலையில் அட்டைப் பண்ணை என்ற போர்வையில் மீனவ மக்களையும் எமது கடலையும் சீனா கையகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே தமிழ் மக்களை பொருளாதார நீதியில் அழிப்பதற்காக ஆயுதம் இல்லாத யுத்தத்தை சீனா மேற்கொள்ளுமாயின் மீனவ  மக்களுடன் சேர்ந்து   எமது கடல் வளத்தை  பாதுகாக்க போராடத் தயங்க மாட்டோம் என கூறிக் கொள்ள விரும்புகிறோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1303302

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு பக்கம், சீனா ஒரு பக்கம் என தமிழ் மக்களை உருப்பட விட மாட்டார்கள் போல.

சிங்கள அரசு கையை காட்டி விட்டு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

உத ஹிந்தியாவிடமும் சொல்லுங்கோ. புண்ணியமாப் போம். 

சீனன் எங்களை அழித்தவனல்ல. கிந்தியாதான் எங்களை அழித்தது. 

யாழ் பல்கலை ஹிந்தியாவின் கூடாரமாக மாறி வருகிறதோ....☹️

😏

இப்படிக் கடிதமும் எழுதி ஆர்ப்பாட்டமும் செய்தால் சீனா பயந்து திட்டத்தைக் கைவிடாது. இலங்கை அரசங்கமும் சீனவுடன் தமிழர்களது முரன்பாட்டை ஆதரிக்கும். மாறாக இத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்களை ஆராய்ந்து அதனை ஈடு செய்வதற்கான மாற்று வழிகளைச் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்வதும் சீனாவின் உதவிகளை வரவேற்பதுமே புத்திசாலித்தனம்.

6 hours ago, தமிழ் சிறி said:

சீனாவின் இத்தகைய செயற்பாட்டினால் மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மிக்க கடல் உணவைப் பெற முடியாத சமூகமாக எம்மை அழிப்பதற்கு சீனா முயல்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

கடிதத்தை வாசித்தால் அது எழுதப்பட்டதன் நோக்கம் புரியும்.

சட்ட விரோதமான முறையில் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டால் அதனை தமிழ்த் தலைவர்களிடமே முறையிட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இப்படிக் கடிதமும் எழுதி ஆர்ப்பாட்டமும் செய்தால் சீனா பயந்து திட்டத்தைக் கைவிடாது. இலங்கை அரசங்கமும் சீனவுடன் தமிழர்களது முரன்பாட்டை ஆதரிக்கும். மாறாக இத் திட்டத்தால் ஏற்படும் பாதகங்களை ஆராய்ந்து அதனை ஈடு செய்வதற்கான மாற்று வழிகளைச் சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்வதும் சீனாவின் உதவிகளை வரவேற்பதுமே புத்திசாலித்தனம்.

முதலில் அங்கிருப்பவர்களுக்கு புரியணுமே .

  • கருத்துக்கள உறவுகள்

கதை வசனம் மற்றும் புரியாணி குவாட்டர் தவிர விசேட கவனிப்பு எல்லாம் தமிழர் விரோத தேசம் இந்தியா எனப்போட்டிருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

முதலில் அங்கிருப்பவர்களுக்கு புரியணுமே .

புரியிறதுக்கு  முதல் அங்கை இருக்கிற மூத்த பூத்த தமிழ் அரசியல்வாதிகள் அனுமதிக்கணுமே?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

சீனா அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வருகை தந்து  வழங்கப்பட இருந்த 4.3 மில்லியன் ரூபாவை ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தோம்.

 

11 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில் கொழும்பில் இருக்கும் சீனாத் தூதரகம் தந்திரமான முறையில்  பல்கலைக்கழ துணைவேந்தர் சற்குணராஜாவை கொழும்புக்கு அழைத்து  நிதியை வழங்கியமை நாகரிகமற்ற செயற்பாடாக பார்க்கிறோம்.

  இப்படியான ஒரு கைபொம்மையை வைத்துக்கொண்டு, நீங்கள் போராடுவது பயனற்றது. இதையெல்லாம் முன்பறிந்தே கோத்தா இவரை துணைவேந்தராக நியமித்தார்!

4 hours ago, இணையவன் said:

சட்ட விரோதமான முறையில் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டால் அதனை தமிழ்த் தலைவர்களிடமே முறையிட வேண்டும். 

  தமிழ்த் தலைமைகளா? அப்படி யாராவது உண்டா? இருந்தால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மாணவர்களுக்கு முதல் அவர்களல்லவா இவற்றை கவனித்திருக்க வேண்டியவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகம் , யாழ் ஹிந்துப் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும்..

🤨

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைகழகம் சென்றோமா,படிச்சமா என்று இருப்பது சிறந்தது,  இந்த காந்தீய,மாவோ சிந்தனைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாணவர்கள் பழகி கொள்ள வேண்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.