Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“எனது மகன் எனக்கு வேண்டாம்" என கடிதம் எழுதி மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“எனது மகன் எனக்கு வேண்டாம்" என கடிதம் எழுதி மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

By VISHNU

11 OCT, 2022 | 01:13 PM
image

"எனது மகன் எனக்கு வேண்டாம்" என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி " எனது மகன் எனக்கு வேண்டாம்" என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி, தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். 

அதனை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கு அமைய சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

https://www.virakesari.lk/article/137423

  • கருத்துக்கள உறவுகள்

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி , தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார்.

அதனை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கு அமைய சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

https://athavannews.com/2022/1304133

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான விடயம். எமது சமூகம் எங்கு வந்து நிற்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் வடக்கு கிழக்கில் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

மிகவும் கவலையான விடயம். எமது சமூகம் எங்கு வந்து நிற்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையம் வடக்கு கிழக்கில் உள்ளதா?

நான் அறிந்த மட்டில், பூநகரியில் Fr. Vincent Patrick OMI அவர்கள் அவ்வாறான புனர்வாழ்வு நிலையம் ஒன்றை நடாத்துகின்றார். போதிய ஆளணியோ, நிதி வசதியோ இல்லை. ஏராளமான இளையவர்களை கொண்டுவருகிறார்களாம். ஆனால் நிதி, இடவசதி இன்மையால் அவர்களை உள்வாங்க முடியவில்லை என அறிந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

எனது மகன் எனக்கு வேண்டாம்" என கடிதம் எழுதி மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

இது தான் சாட்டு என்று பிக்குவாக்கப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நான் அறிந்த மட்டில், பூநகரியில் Fr. Vincent Patrick OMI அவர்கள் அவ்வாறான புனர்வாழ்வு நிலையம் ஒன்றை நடாத்துகின்றார். போதிய ஆளணியோ, நிதி வசதியோ இல்லை. ஏராளமான இளையவர்களை கொண்டுவருகிறார்களாம். ஆனால் நிதி, இடவசதி இன்மையால் அவர்களை உள்வாங்க முடியவில்லை என அறிந்தேன். 

நன்றிகள்  kapithan.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும்… போதைக்கு அடிமையான பிள்ளைகளை, வைத்திய சாலையில் சேர்த்தார்கள்.
இப்போ… பிள்ளையே வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து
பொலிசிடம் ஒப்படைக்கும் நிலை வந்துள்ளதை பார்க்கும் போது…
நிலைமை கை மீறி போய் விட்டதாகவே தோன்றுகின்றது.

ஶ்ரீலங்கா அரச படையில்… மூன்றில் இரண்டு பங்கினர் வடக்கு கிழக்கில் உள்ளார்கள்.
நான்கு தமிழனுக்கு… ஒரு அரசபடை காவல் காக்க,
போதை மருந்தும், வாள் வெட்டுக் கோஷ்டியும் சுலபமாக ஊடுருவுகின்றது என்றால்..
அரச உதவி இல்லாமல் இது சாத்தியமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

ஶ்ரீலங்கா அரச படையில்… மூன்றில் இரண்டு பங்கினர் வடக்கு கிழக்கில் உள்ளார்கள்.
நான்கு தமிழனுக்கு… ஒரு அரசபடை காவல் காக்க,

 

7 hours ago, தமிழ் சிறி said:

போதை மருந்தும், வாள் வெட்டுக் கோஷ்டியும்

 

12 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால்,

இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்து, செயற்படுத்துவதற்காக நிலை கொண்டுள்ளார்கள். அதன் ஏவற் படை அதை சீரமைக்க போகுதாமில்லே. என்னத்தை சொல்ல? கண்டதெல்லாம் பாடம் எடுக்கவும், சீரமைக்கவும் வேண்டிய நிலைக்கு நம்ம இனம் வந்து நிக்குது. திட்டமிட்டே அடித்து நொறுக்கப்பட்டோம். பிரதேசவாதம் பேசி விடுதலையை உடைத்தவர்கள், வடக்கு கிழக்கு இணைய மறுப்பவர்கள், சீர்திருத்த பிரதேசவாதம் வேண்டாமாம். எங்களுக்கு இருக்கிற தாடியர் போதும் சீரழிக்க, இதில இவர் வேற வரபோறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 

 

இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளித்து, செயற்படுத்துவதற்காக நிலை கொண்டுள்ளார்கள். அதன் ஏவற் படை அதை சீரமைக்க போகுதாமில்லே. என்னத்தை சொல்ல? கண்டதெல்லாம் பாடம் எடுக்கவும், சீரமைக்கவும் வேண்டிய நிலைக்கு நம்ம இனம் வந்து நிக்குது. திட்டமிட்டே அடித்து நொறுக்கப்பட்டோம். பிரதேசவாதம் பேசி விடுதலையை உடைத்தவர்கள், வடக்கு கிழக்கு இணைய மறுப்பவர்கள், சீர்திருத்த பிரதேசவாதம் வேண்டாமாம். எங்களுக்கு இருக்கிற தாடியர் போதும் சீரழிக்க, இதில இவர் வேற வரபோறாராம்.

எப்படியெல்லாம் கருத்து சொல்ல வேண்டியிருக்கு. சும்மா சண்டைக்கே வாள் வெட்டு விழுது இதுல இவங்கள அரசாங்கம் எல்லாவற்றையும் வளர்த்து விடுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

கைதான தனது மகனை திருத்தி தருமாறு தாய் பொலிஸாரிடம் மன்றாட்டம்!

யாழ்.தாவடி பகுதியில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை திருத்தி தருமாறு குறித்த இளைஞனின் தாயார் பொலிஸாரிடம் மன்றாட்டமாக கோரியுள்ளார்.

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலானாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹேரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞனின் தாயார் இவரை திருத்தி தருமாறு பொலிசாரிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

28 வயதான குறித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளுடன் நீண்ட காலமாக தொடர்பை பேணி வந்துள்ளதோடு இதனை பிரதான தொழிலாக கொண்டு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைக்கு அடிமையான 15 வயதான தனது மகனை ” எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவர் ஒப்படைத்து இருந்தார்.

குறித்த சிறுவனை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் சிறுவனை அச்சுவேலியில் உள்ள நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1304483

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எப்படியெல்லாம் கருத்து சொல்ல வேண்டியிருக்கு. சும்மா சண்டைக்கே வாள் வெட்டு விழுது இதுல இவங்கள அரசாங்கம் எல்லாவற்றையும் வளர்த்து விடுதாம்.

புலிகள் இருந்த காலத்தில் இதுவெல்லாம் நடந்ததுவோ? புலிகளை அழித்து மக்களை காப்பாற்ற வந்த காவற்படை சுற்றியிருக்குது, புலிகள் சர்வாதிகாரிகள்  என்று விட்டுவந்த ஒட்டுப்படை கூட இருக்கு, இவைகளை தாண்டி  இது எங்கிருந்து வந்தது? அதுவும் பாடசாலைக்கு! இதுகளை தடுக்க முடியாதவிடத்து ஏன் இந்த கூலிப் படைகள் எங்கள் நிலங்களை அடைத்துக்கொண்டு நிலைகொண்டிருக்குது? இதுகளை வளர்த்து விட்டு தங்கள் சூறையாடலை நடத்துவதற்கே! அபிமானிகளுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும், அதுக்காக உண்மை இல்லையென்றாகி விடுமா என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

புலிகள் இருந்த காலத்தில் இதுவெல்லாம் நடந்ததுவோ? புலிகளை அழித்து மக்களை காப்பாற்ற வந்த காவற்படை சுற்றியிருக்குது, புலிகள் சர்வாதிகாரிகள்  என்று விட்டுவந்த ஒட்டுப்படை கூட இருக்கு, இவைகளை தாண்டி  இது எங்கிருந்து வந்தது? அதுவும் பாடசாலைக்கு! இதுகளை தடுக்க முடியாதவிடத்து ஏன் இந்த கூலிப் படைகள் எங்கள் நிலங்களை அடைத்துக்கொண்டு நிலைகொண்டிருக்குது? இதுகளை வளர்த்து விட்டு தங்கள் சூறையாடலை நடத்துவதற்கே! அபிமானிகளுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும், அதுக்காக உண்மை இல்லையென்றாகி விடுமா என்ன? 

சிங்கள பகுதிகளை விட தற்போது வடகிழக்கு சீர் கெட்டு போயுள்ளது நாம இன்னும் நமது பிழைகளை மறைத்துக்கொண்டே வாழ்வோமாக இருந்தால் இதை விட இன்னும் அதிகரிக்கும் பிரச்சினைகள் 

உதாரணமாக ஊரில் உள்ள உங்கள் குடும்ப உறவு இள வயதினருக்கு அறிவுரை சொல்லி பாருங்க சிலர் ஏற்றுக்கொள்ளவார்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் சிலர் ஏற்றுக்கொள்வது போல நடிப்பார்கள். 

புலிகள் காலத்தில் நடக்கவில்லை காரணம் தண்டனை.  இப்போ சட்டம் பணத்திற்காக வளைகிறது குற்றம் நடந்து கொண்டுதான் இருக்கும் 🤗

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம் இற்கு போக மோட்டார் சைக்கிள் தா என அடம் பிடிக்கும் இளையவர்கள் கூட்டம் 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்கள பகுதிகளை விட தற்போது வடகிழக்கு சீர் கெட்டு போயுள்ளது நாம இன்னும் நமது பிழைகளை மறைத்துக்கொண்டே வாழ்வோமாக இருந்தால் இதை விட இன்னும் அதிகரிக்கும் பிரச்சினைகள் 

உதாரணமாக ஊரில் உள்ள உங்கள் குடும்ப உறவு இள வயதினருக்கு அறிவுரை சொல்லி பாருங்க சிலர் ஏற்றுக்கொள்ளவார்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் சிலர் ஏற்றுக்கொள்வது போல நடிப்பார்கள். 

புலிகள் காலத்தில் நடக்கவில்லை காரணம் தண்டனை.  இப்போ சட்டம் பணத்திற்காக வளைகிறது குற்றம் நடந்து கொண்டுதான் இருக்கும் 🤗

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்கள பகுதிகளை விட தற்போது வடகிழக்கு சீர் கெட்டு போயுள்ளது நாம இன்னும் நமது பிழைகளை மறைத்துக்கொண்டே வாழ்வோமாக இருந்தால் இதை விட இன்னும் அதிகரிக்கும் பிரச்சினைகள் 

 

புலிகள் காலத்தில் நடக்கவில்லை காரணம் தண்டனை.  இப்போ சட்டம் பணத்திற்காக வளைகிறது குற்றம் நடந்து கொண்டுதான் இருக்கும் 🤗

இதை நான் சொன்னால் கேள்வி கேட்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

இதை நான் சொன்னால் கேள்வி கேட்பீர்கள்.

சிங்களவர்தான் வீடு வாசல் வந்து நீ அப்படி செய் இப்படி செய் என்று பழக்கியவர்கள் என சொல்வீர்கள்🤭

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்களவர்தான் வீடு வாசல் வந்து நீ அப்படி செய் இப்படி செய் என்று பழக்கியவர்கள் என சொல்வீர்கள்🤭

 

On 13/10/2022 at 09:55, satan said:

புலிகள் இருந்த காலத்தில் இதுவெல்லாம் நடந்ததுவோ? புலிகளை அழித்து மக்களை காப்பாற்ற வந்த காவற்படை சுற்றியிருக்குது, புலிகள் சர்வாதிகாரிகள்  என்று விட்டுவந்த ஒட்டுப்படை கூட இருக்கு, இவைகளை தாண்டி  இது எங்கிருந்து வந்தது? அதுவும் பாடசாலைக்கு! இதுகளை தடுக்க முடியாதவிடத்து ஏன் இந்த கூலிப் படைகள் எங்கள் நிலங்களை அடைத்துக்கொண்டு நிலைகொண்டிருக்குது? இதுகளை வளர்த்து விட்டு தங்கள் சூறையாடலை நடத்துவதற்கே! அபிமானிகளுக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும், அதுக்காக உண்மை இல்லையென்றாகி விடுமா என்ன? 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.