Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து - தமிழர்கள் இருவர் பரிதாபமாக பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் எவ்வளவுதான் பாதுகாப்பாக ,  அவதானமாக சென்றாலும் மற்றவர்கள்  விடும்  கவனயீனப் பிழையால் வாழ்க்கையே அழிந்து விடுகின்றது.

ஆழ்ந்த அஞ்சலிகள்.
உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கண நேரத்தில் நிகழ்ந்து விடட அந்த விபத்தில் இறந்தவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவிக்கிறேன். இனி வருங்காலம் சோகங்களையும் துயரத்தையும் அனுபவிக்க போகும் அந்த குடும்பத்துக்காக கடின உழைப்பாளி யாகிய  தந்தையையும் ,தங்கையையும் எண்ணிக் கவலைப்படுகிறேன். எதையும் தாங்கும் மனதை இறைவன்   அவர்களுக்கு கொடுக்க என் பிரார்த்னைகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்
மார்க்கம் விபத்தில் இறந்த பிள்ளைகளின் தாயார் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் தவறான செய்தியை பரப்பாதீர்கள் நன்றி ”

முகநுhலில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sabesh said:

சட்டப்படி பாரவூர்தி மீது தான் தவறு ஆனால் இவர்களும் பொறுமையாகவும் கவனமாகவும் வாகனத்தை செலுத்தியிருந்தால் 100% தவிர்த்து இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

 

 

100% சரியான கணிப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாட்டும்.  குடும்பத்து உறவினர் தகவலின்படி அந்த தாயாரும் இறைவனடி சேர்ந்துள்ளதாக அறிகிறேன். இந்த விபத்தில் இன்னும் ஒரு சிங்கள குடும்பஸ்தர் சிறு காயங்களோடு மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அவர் இன்னும் ஒரு வாகனத்தில் பயணித்தவர். 😥🙏💐

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் இத் துயரச் செய்தியை அறிந்ததிலிருந்து மனம் மிகவும் வேதனையாக உள்ளது. என்ன சொல்லி குடும்ப உறப்பினர்களைத் தேற்றுவது  வாழ்நாள் முழுவதும் வலியுடன் வாழ்வதே விதியாகிப் போனபின் இறைவன்தான் அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்க வேண்டும். இன்றைய நாட்களில் வாலிபப் பிள்ளைகள் (எனது பிள்ளைகள் உட்பட) வாகனம் ஓட்டும் பொழுது கவனச் சிதறலுடன்தான் ஓட்டுகிறார்கள். நான் வாகனத்துள் இருந்தால் பலமுறை எச்சரித்தபடிதான் இருப்பேன். இளம் கன்று பயமறியாது. இந்த விபத்தில் பாரவூர்தி ஓட்டினரின் பிழைதான். என்றாலும் பிள்ளைகள் ஒருகணம் இருபுறமும் கவனித்து எடுத்திருந்தால் என்று என் மனம் ஏக்கத்துடன் நினைக்கிறது. இனி என்ன சொல்லி என்ன? அந்த இளம் குருத்துக்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்!.நாம் எவ்வளவு கவனமாக  இருந்தாலும் மற்றவர்கள் வடும் பிழையாலும் இப்படிப்பட்ட விபத்துக்கள் ஏற்படுவதுண்டு. பாரஊர்தி ஓட்டுனர் சிவப்பி ல் நிற்காது வந்துள்ளார். யாரை நொந்து என்ன பயன் இரண்டு இளங்குருத்துகள் இளமையில் கருகி விட்டன. எப்படி ஆறதல் சொல்வது/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/10/2022 at 13:09, Sasi_varnam said:

கண்ணீர் அஞ்சலிகள். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாட்டும்.  குடும்பத்து உறவினர் தகவலின்படி அந்த தாயாரும் இறைவனடி சேர்ந்துள்ளதாக அறிகிறேன். இந்த விபத்தில் இன்னும் ஒரு சிங்கள குடும்பஸ்தர் சிறு காயங்களோடு மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அவர் இன்னும் ஒரு வாகனத்தில் பயணித்தவர். 😥🙏💐

முன்னர் நான் எழுதிய கருத்தில் ஒரு திருத்தம்... அந்த தாயார் நான் கேள்விப்பட்டதை போல இறக்கவில்லை. தவறாக அப்படியான கருத்து உலாவியுள்ளது. இன்னுமே அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பகுதியில் தான் இருக்கிறாராம். 
மன்னிக்க!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

முன்னர் நான் எழுதிய கருத்தில் ஒரு திருத்தம்... அந்த தாயார் நான் கேள்விப்பட்டதை போல இறக்கவில்லை. தவறாக அப்படியான கருத்து உலாவியுள்ளது. இன்னுமே அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பகுதியில் தான் இருக்கிறாராம். 
மன்னிக்க!!

கடந்த வாரம் ஒரு வார விடுமுறையில் ரொரோண்டோவில் இருந்தேன். விபத்து நடந்த இடந்தை கடந்து சென்றேன். பூக்கொத்து வைக்கப்பட்டிருந்தன. தாயார் வைத்தியசாலையில் தான். ஆனாலும் இரு பிள்ளைகளை ஒரே நேரத்தில் இழந்த வேதனையுடன் வாழ வேண்டிய நிலையில் தானே இருப்பார் என்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.