Jump to content

கனேடிய தேர்தல்களில் சீனா தலையீடு : ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தேர்தல்களில் சீனா தலையீடு : ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு

By DIGITAL DESK 3

08 NOV, 2022 | 12:58 PM
image

கனேடிய தேர்தல்களில் தலையீடு செய்வதற்கு சீனா முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருரோனா குற்றம் சுமத்தியுள்ளார்.

கனேடிய நிறுவனங்களை இலக்கு வைத்து, ஜனநாயகத்துடன் ஆக்ரோஷாமான விளையாட்டு நடத்துவதாக பிரதமர் ட்ரூடோ விமர்சித்துள்ளார்.

கனடாவில் அண்மைக்கால தேர்தல்களில் சீனாவின் ஆதரவு பெற்ற வலையமைப்பு ஒன்றை கனேடிய புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளதாக செய்தி வெளியானதையடுத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இவ்வாறு கூறியுள்ளார். 

2019 ஆம் ஆண்டு கனடாவின் சமஷ்டி தேர்தல்களில் குறைந்தபட்சம் 11 பேர் சீனாவின் ஆதரவைப் பெற்றிருந்தனர் என ஜஸ்டின் ட்ரூடோவிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.

பல வேட்பாளர்களுக்கு சீனா பணம் வழங்கியதகாவும், சில வேட்பாளர்களின் பிரச்சார ஆலோசகர்களாக சீனர்கள் செயற்பட்டதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒன்டாரியோவை தளமாகக் கொண்ட மாகாண சட்டசபை உறுப்பினர் ஒருவருககு ஊடாக 250,000 கனேடிய டொலர் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொரண்டோவிலுள்ள சீனத் தூதரகத்திலிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், கொள்கைளில் செல்வாக்கு செலுத்துவதற்காக, பதவியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களின் தமது செயற்பாட்டாளர்களை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/139427

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்....ம்...நல்ல முசுப்பாத்திதான்.
அங்காலை ரஷ்ய தலையீடு
இஞ்சாலை சீன தலையீடு
அசத்துறீங்க....போங்க 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

கனடா அந்த அளவுக்கு வீக்காப் போச்சு  🤣

கனடா இல். சீனா மக்களுக்கும்...பிலிப்பைன்ஸ் மக்களுக்கும்...இல்லையென்றால்   கனடா மக்கள் இல்லாத நாடு ஆகிவிடும்   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

கனடா அந்த அளவுக்கு வீக்காப் போச்சு  🤣

எந்த விசயத்திலை வீக் எண்டு சொல்லிப்போட்டு சிரிக்க வேணும் 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ம்....ம்...நல்ல முசுப்பாத்திதான்.
அங்காலை ரஷ்ய தலையீடு
இஞ்சாலை சீன தலையீடு
அசத்துறீங்க....போங்க 🤣

இவர் சொல்வது சரிதான்.

நான் கனடாவில் இருந்த போது விளங்கிக்கொண்டது இது.

மார்கம் பகுதியில் சீனர் வெற்றி. தோற்ற தமிழர் இடையே வித்தியாசம் சுமார் இருபத்தொன்பது வாக்குக்கள்.

போட்டியிட்டவர் ஒரே ஒரு சீனர். போட்டியிட்ட தமிழர்கள் நால்வர். ஆக ஆறாயிரத்து சொச்ச தமிழர் வாக்குகளை பிரிக்க வைத்து, இரண்டாயிரத்து சொச்ச வாக்குகளுடன் சீனர் வென்று விட்டார்.

இதில் போட்டியிட்டதமிழர்களில் இருவர் தமிழே ஒழுங்கா கதைக்க முடியாதவர்கள்.

இவர்களை போட்டியிட வைத்தவர்கள் யார், பணம் கொடுத்தது யார் என்ற கேள்விக்கே கனடிய பிரதமர் பதில் அளித்துள்ளார்.

அதே வேளை தமிழர் மத்தியில், இனிமேல் வெல்லக்கூடிய தகுதி உள்ள ஒருவரை மட்டுமே ஒரு தொகுதியில் நிற்க வைத்து அவருக்கு மட்டுமே வாக்களிக்க கோர வேண்டும் என்ற படிப்பினை உருவாகி உள்ளது.

Edited by Nathamuni
  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
8 minutes ago, Nathamuni said:

அதே வேளை தமிழர் மத்தியில், இனிமேல் வெல்லக்கூடிய தகுதி உள்ள ஒருவரை மட்டுமே ஒரு தொகுதியில் நிற்க வைத்து அவருக்கு மட்டுமே வாக்களிக்க கோர வேண்டும் என்ற படிப்பினை உருவாகி உள்ளது.

தமிழனிடம் ஒற்றுமையா? தமிழனுக்கு குதிரைக்கொம்பானது அது!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இவர் சொல்வது சரிதான்.

 

நான் கனடாவில் இருந்த போது விளங்கிக்கொண்டது இது.

மார்கம் பகுதியில் சீனர் வெற்றி. தோற்ற தமிழர் இடையே வித்தியாசம் சுமார் இருபத்தொன்பது வாக்குக்கள்.

போட்டியிட்டவர் ஒரே ஒரு சீனர். போட்டியிட்ட தமிழர்கள் நால்வர். ஆக ஆறாயிரத்து சொச்ச தமிழர் வாக்குகளை பிரிக்க வைத்து, இரண்டாயிரத்து சொச்ச வாக்குகளுடன் சீனர் வென்று விட்டார்.

இதில் போட்டியிட்டதமிழர்களில் இருவர் தமிழே ஒழுங்கா கதைக்க முடியாதவர்கள்.

இவர்களை போட்டியிட வைத்தவர்கள் யார், பணம் கொடுத்தது யார் என்ற கேள்விக்கே கனடிய பிரதமர் பதில் அளித்துள்ளார்.

அதே வேளை தமிழர் மத்தியில், இனிமேல் வெல்லக்கூடிய தகுதி உள்ள ஒருவரை மட்டுமே ஒரு தொகுதியில் நிற்க வைத்து அவருக்கு மட்டுமே வாக்களிக்க கோர வேண்டும் என்ற படிப்பினை உருவாகி உள்ளது.

இதைத்தான் நான் அப்பவே கேட்டனான்..இது சீன விளையாட்டுத்தான்🤣...நம்மவரும் சேர்ந்துதான்...போனமுறை பின்லாடான் காரன் விளையாடி..ஒரு சீற்றும் இல்லாமல் போனது..நம்மவருக்கு கொத்துரொட்டிக்கு காசு வந்தால் சரி என்றமாதிரித்தான் அப்ப இருந்தது...இந்த வாட்டாரத்தில்நீண்டகாலம் வசிப்பதினால்...இந்த தேர்தலை வாக்களிக்காமல் தவிர்க்க நினைத்தேன்.எல்லோரும்..ஒன்றாயிட்டினாமம் என்றவுடன் வோட்டுப் போடப்போனேன்..அங்கு பார்த்தால் கல்விச்சபையில் குளறுபடி ....வெற்றியடைவார் என்பவருக்குப் போட்டேன்..குறைந்த வாக்கால் தோல்வி..பகிடி என்னவென்றால்...தேர்தல் அண்மிக்கும்வரை ஏனைய தமிழ் வேட்பாளர்கள்  தங்களை வெளிப்படுத்தவில்லை..😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இவர் சொல்வது சரிதான்

நீங்கள் சொன்ன மார்கம் பகுதியில் நடந்த சீன ஆதிகத்தை கொண்டுவரும் முயற்சி மாதிரி அவுஸ்ரேலியாவிலும் சீனா அங்குள்ள அரசியல்வாதிகளையும் பெரிய நிறுவனங்களையும் தனது கட்டுபாட்டில் கொண்டுவர முயற்சிகளை செய்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்பார்த்ததைக் கை செய்யும். 

மேற்கு செய்ததைப் பார்த்தபின்னர்,  கிழக்கு அதைச் செய்கிறது. 

அம்புட்டுதே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவை பொறுத்தவரை

அங்கே தனித்தனி தேசியங்களாகவே தம்மை பாதுகாத்தபடி ஒவ்வொரு இனமும் தேசியமும் நகர்கின்றன

ஒரு காலத்தில் பல தேசியங்களின் ஒன்றியமாகத்தான் கனடா மாறும் மாறணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

கனடாவை பொறுத்தவரை

அங்கே தனித்தனி தேசியங்களாகவே தம்மை பாதுகாத்தபடி ஒவ்வொரு இனமும் தேசியமும் நகர்கின்றன

ஒரு காலத்தில் பல தேசியங்களின் ஒன்றியமாகத்தான் கனடா மாறும் மாறணும் 

இது சாத்தயமாவதற்கு, மத்திய அரசின் நடுநிலைமையே காரணம்.

போனமாசம் தீபாவளிக்கு, இந்தியர்களை அதிகம் கொண்ட பிராம்டன்பகுதியில் பட்டாசு வெடிகள் காரணமாக புகை சூழலை மாசுபடுத்தும், கவனமா இருங்கள் என்று அரச சூழலியல் திணைக்களம் சொல்ல, அது சரி இந்த அறிவிப்பு ஏன் கனடா தினத்திலோ, கடந்தாண்டு பாண்ட் பயர் தினத்திலோ மிக அதிக பட்டாசு வெடிக்கும் நிலையில் வரவில்லை என்று எதிர்ப்பு கிளம்ப, உடனடியாக மன்னிப்பை கோரியது சம்பந்தப்பட்ட திணைக்களம்.

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்வியறிவுள்ள, பல்வேறு தொடர்புகளுள், ஆழுமையுள்ளசுமந்திரனும் சாணக்கியனும் TNA க்குத் தலைமை தாங்கி  வழிநடாத்த வேண்டும்,...👍 ஏனப்பா,.. ஒரு குசும்புக்கு எழுதினாலும் விசுகர் தடியோடதான் நிக்கிறார் கண்டியளோ,..🤣
    • புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
    • நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம்.  இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    
    • 👆 Thank God, I have not been so ruthless as the guy above in dealing with relatives. I seem to be fair enough 👇    
    • கொழும்பில் போட்டியிடும் தமிழரசு கட்சி..! பங்காளி கட்சிகளுக்கு கால அவகாசம் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமானது பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.  இதற்கமைய, ரெலோ மற்றும் ப்ளொட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மூன்று நாட்களுக்குள் தமது முடிவு எட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி போட்டியிடுவதாகவும் இதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு ஒரு குழுவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அடுத்த கூட்டம்  அதேவேளை, குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கடிதம் ஒன்றை முன்வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்போது, கிட்டத்தட்ட 2018ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இடம்பெற்றிருக்க கூடிய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் கோர வேண்டுமே தவிர தற்போது நடந்த விடயங்கள் தொர்பில் மாத்திரம் விளக்கம் கோரப்பட கூடாது எனவும் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மத்தியக்குழு கூட்டமானது, பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ளது.  அதேவேளை, கூட்டத்திற்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், "தமழிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூடி ஆராய்ந்தோம். ஜனாதிபதி தேர்தலில் கட்சி எடுத்த 3 தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அதிலே அப்படியாக கட்சியின் முடிவை மீறி செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என முடிவு எடுக்கப்பட்டது. அரியநேத்திரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தாலும், முதலாம் திகதி எடுத்த தீர்மானத்தில் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று கோரியிருந்தோம். அதற்கு அவருடைய விளக்க கடிதத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கவில்லை. அது காலம் கடந்து கிடைத்தாலும் வாசித்து காட்டப்பட்டது. ஆகவே அது சம்மந்தமாக கேட்டு விட்டு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். முக்கிய விடயமாக ஆராயப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் விசேட அறிவிப்பை மனவுவந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளோம். அதாவது தமிழ் தேசிய பரப்பில் இருக்கிற கட்சிகள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிப் போன கட்சிகள் திரும்பவும் எங்களுடன் சேர்ந்து தேர்தலை முகங்கொடுங்க விரும்பினால் வரமுடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றவர்கள் வருகிற தேர்தல் சவால் மிக்க தேர்தலாக இருப்பதால் இணங்கி வந்து இந்த தேர்தலில் போட்டியிட முடியும். தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலும் தான் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டோம். அந்த விதமாக இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தீர்மானித்துள்ளோம். அப்படியாக அந்த அழைப்பை ஏற்று வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்ப்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுப்போம். அப்படி அவர்கள் வராவிட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும். திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அங்கே ஒரு தமிழ் உறுப்பினர் மட்டும் தான் தெரிவு செய்யப்படும் நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்த மாவட்ட கிளைகளுடன் பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என தீர்மானித்துள்ளோம். அதற்கு மேலதிகமாக இம்முறை வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள கொழும்பு உட்பட தமிழர்கள் வாழும் ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிட பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. விடுக்கப்பட்டுள்ள அழைப்பு  எதிர்வரும் 4 ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல செய்தல் ஆரம்பிக்கவுள்ளதால் பிரிந்து சென்றவர்கள் மீள வருவது தொடர்பாக மிக விரைவாக அவர்களது பதிலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் வந்து இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கு வெளியே வேறு கட்சிகள் வந்தால் அதனை பரிசீலிக்கலாம். ஏனெனில் எங்களது கட்சியில் இருந்து பிரிந்து போனவர்களது கட்சியும் மேலும் பிரிந்து இருக்கின்றது. அவர்களை உள்வாங்கும் போது சில ஆட்சேபனைகள் இருக்கும். அது பற்றி பேசியே முடிவு எடுப்போம். ஆனால் தீர்மானமாக அழைப்பு விடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை வாருங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று புன்முறுவலோடு அவர்களை அழைக்கின்றோம். புதியவர்களை தேர்தலில் உள்வாங்குவது, இளைஞர்களை உள்வாங்குவது தொடர்பிலும் நீண்ட நேரம் பேசினோம். அதனை சரியாக நாம் அணுகுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களிடத்தில் இது தொடர்பான பாரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விசேடமாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிக்கு பிற்பாடு அத்தகைய எண்ணப்பாடு எங்களது பிரதேசங்களிலும் உயர்ந்துள்ளது. அது நல்ல விடயம். இளைஞர்கள், ஆளுமையுள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என அவர்களுக்கான பிரதிநித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கான நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இறுதி முடிவுகளை எடுக்கும். ஆனால் மாவட்ட ரீதியாக கலந்து ஆலோசித்து தான் அந்த முடிவுகள் எடுக்கபடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் எம்முடன் பேசியுள்ளார்கள். தம்முடன் இணையுமாறு அவர்கள் அழைப்பு எதனையும் விடவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ் கட்சி. இது வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக வேறு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட போது தேர்தலுக்கு முகம் கொடுத்தது இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், அதன் சின்னத்திலுமே தான். அதே முறையில் நாங்கள் இந்த தேர்தலையும் சந்திப்பதற்கு பிரதான கட்சி என்ற வகையில் நாங்கள் அவர்களுக்கும் அழைப்பு விடுகின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.  https://tamilwin.com/article/ilankai-tamil-arasu-katchi-meeting-in-colombo-1727533785?itm_source=parsely-detail
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.