Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Justin said:

அழகிய நகரம் திட்டத்தின் கீழ் ஆரிய குளப் பகுதி மீளமைப்பு, புல்லுக் குளத்தை அண்டிய பகுதி, நாயன்மார்க்கட்டுப் பகுதியில் சில வேலைகள் என பல திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டன. ஆரிய குளம், புல்லுக் குளம் பூர்த்தி, நாயன்மார்க்கட்டு ஏரியா பற்றித் தெரியவில்லை.

இதுக்கேன் குறை நினைக்கிறேன்? 😂 நாம் மணியைப் பற்றிப் பேசும் போதே நீங்களும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிப் போங்கோவன் குறை நினைக்காமல்? ஏன் தேர்தல் வென்ற உடனேயே பொன்னம்பலத்தார் மணியை வெட்டினவராம்?

அதன் பின்பு நடந்த சம்பவங்கள் அவர்களது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக இருக்கு 

முதலாவது

முண்ணணி யாழ் மாநகரத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்க ஆயத்தப்படுத்தும்போது சுமந்திரன் மணி யாழ் நகர எல்லைக்குள் வசிப்பவர் இல்லை என வழ்க்குப்போட்டு அதைத் தடுத்தார் அதன் பின்பு மணி முண்ணணியை விட்டு வெளிவரும்போது அந்த வழக்கிலிருந்து விடுபட்டு மணிக்கு வழிவிட்டார். இது சரியான ஆதாரம் இல்லை எனிலும் 

கடந்த திலீபன் நினைவுநாளில் மறுகம்புலவு பிரபாகரனுடனும் துளசியுடனும் சேர்ந்து செய்த அடாவடி அவர் யார் கைப்பொம்மை என அடையாளம் காட்டிவிட்டது.

தவிர மணி அப்படி ஒன்றும் பெரிய அபிவிருத்திகளை யாழ் நகரில் மேற்கொள்ளவில்லை ஆரியகுளம் திருத்தினது தியாகி அறக்கட்டளைக்  காசில் நாயன்மார்கட்டுக்குளம் மாநகர எல்லைக்குள் இல்லை டொன்பொஸ்கோ பாடசாலைக்கு முன்னாலை உள்ள பிள்ளையார் கோவில் குளம் திருத்தினது அங்கயன் இராமநாதன் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான அபிவிருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கிய காசில் யாழில் இதுபற்றி ஒரு உறவு அந்தத் தடுப்புச் சுவரில் எல் ஜி பி ரி நிறத்தில் வர்ணம் தீட்டியதாகக் கருத்து எழுதியது நினைவிருக்கலாம்.

நல்லூர் திருவிழாக்க் காலங்களில் கடைகள் போட்டு ஏலத்தில் வாடகை வசூலிப்பதில் கோடிக்கணக்கான பணம் புரளும் அந்தக் காசு என்னவானது. யாழ் கோட்டைப் பகுதி வன்முறக்கும்பலின் உறைவிடமாகத் திகழ்கிறது என என்னால் ஒரு காணொளி வெளியிடப்பட்டது அதன் பின்பு ஓரிரு பத்தைகளை வெட்டிப் படம் போட்டதுடன் சரி முன்னேற்றம் இல்லை 

சிறிலங்காவின் உள்ளூராட்சி அமைச்சினால் ஒவ்வொரு மாநகர சபைக்கும் மராமத்துக்கான பண ஒதுக்கல்கள் போக அபிவிருத்திக்கான பணம் ஒதுக்குவது வழக்கம் அவை எங்கே போனது  அமைச்சு பணம் ஒதுக்காதுவிட்டால் ஏன் போராடிப்பெற முயற்சிக்கவில்லை. எந்த வேளையும் தியாகேந்திரன் போன்றோர் பணம் தருவார்களா?

அங்கு வாழும் மக்கள் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ சிறீ லங்கா அரசாங்கத்தின் அரசியல் அமைப்புச் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே வாழவேண்டும் எமக்கான நாடு பிளவுபடும் மட்டும் ஆக வடக்குக் கிழக்கில் வாழும் மக்களுக்கான அபிவுருத்திக்கான பண ஒகுக்கீடுகளை பெற்றுப் பயனடையலாம் என்பதை அரசியல் அமைப்பு உத்தரவாதமளிக்கிறது.

ஆக
எமக்கான அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகளை சரியான விதத்தில் வாதாடிப் பெறமுடியாது தியாகியிடமும் புலம்பெயர்ந்தோரிடமும் கையேந்துவதற்காக யாழ் மாநகர சபைக்குள் வாழும் மக்கள் வாக்களிக்கவில்லை.

  • Replies 73
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Elugnajiru said:

நாயன்மார்கட்டுக்குளம் மாநகர எல்லைக்குள் இல்லை

தரவு தவறு. நாயன்மார்கட்டுக்குழம் மாநகரசபை எல்லைக்குள்ளேயே உள்ளது. மாநகரசபையின் 9ம் வட்டாரம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

தரவு தவறு. நாயன்மார்கட்டுக்குழம் மாநகரசபை எல்லைக்குள்ளேயே உள்ளது. மாநகரசபையின் 9ம் வட்டாரம். 

தவறுக்கு வருந்துகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புலவர் said:

சுமத்திரனையும் கஜேந்திரகுமாரையும் ஓரெ வண்டியில் பூட்ட முடியாது.

ஓம். ஒருவர் கிழக்க இழுத்தால் மற்றவர் மேற்கை இழுப்பார், வண்டில் குப்பிற கிடக்கும்.

22 minutes ago, island said:

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வினைதிறனான தலைமையை வழங்க தவறிய குற்றச்சாட்டில் உண்மை உண்டு.  பொறுப்புள்ள,  வயதில் மூத்த தலைவராக சம்பந்தர் இதை செய்வதில் படு தோல்வியடைந்தார் என்றே கூற வேண்டும். ஆனால் இதற்கான முழுக்குற்றாச்சடையும் அவர்கள் மீது மட்டும் போட முடியாது. பொதுவாக தமிழராகிய எம்மிடம் இருக்கும் ஒற்றுமையின்மை என்ற பலவீனம் அவர்களுடமும் இருந்தது. யுத்தம் முடிந்த கையோடு புலம் பெயர் தமிழ் அமைப்புகள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து தம்முள் சண்டையிட்டு கொண்டது போலான நிகழ்வுதான் அது. இன்றும் அது தொடர்கிறது. 

 கஜேந்திரகுமாரால்  அவரின் மூன்று தலைமுறை அரசியல் பாரம்பரியத்தைக்கொண்டு அதனைச் சிறப்பாக செய்திருக்க முடியும். ஆனால் படு மோசமான காழ்புணர்வு அரசியலையே அவர் தொடந்தும் செய்துவருகிறார்.  

 தற்போதைய நிலைக்கு அனைத்து  தமிழ்கட்சிகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எல்லாம் கூட்டுப்பொறுப்பை ஏற்க வேண்டும். அந்த கூட்டுப்பொறுப்பை ஏற்க தயாரில்லாத மோசமான அரசியல் தான் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவே தமது  குற்றங்களை மறைக்க  ஆளையாள் குற்றம் சாட்டும் இந்த நிலை.  

எல்லோரும் தான் விசுவாசம் வைத்திருக்கும் தலைவரக்ளை, அமைப்புகளை, கட்சிகளை மட்டும் காப்பாற்றும்,  முண்டு கொடுக்கும் அரசியலே தற்போதைய தமிழ் அரசியல். அதுவே இங்கு யாழ் களத்திலும் பிரதிபலிக்கிறது. 

ஏனென்றால் இரண்டுமே குதிரைகள் அல்ல ஒரே குணத்தை கொண்ட கழுதைகள். 

நிதர்சனம். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Elugnajiru said:

தவறுக்கு வருந்துகிறேன்

ஆனால் அதுகூட யாழ் மாநகரசபையின் நிதியிலிருந்து திருத்தவில்லை என அறிந்தேன்

மணி இப்போது யாழ்ப்பாணம் த்ருநெல்வேலி விவசாயப்பண்ணைக்கு அருகில் மிகப்பெரிய கிணறுடன் காணப்படும் காணியில் கிரிகெட் ஸ்ரேடியம் கட்டவேணும் புலம்பெயர் உறவுகள் உதவி தேவை என ஒரு அறிக்கை விட்டார் ஆனால் யாழ் நகருக்கு இப்போ ஸ்ரேடியம் தேவையில்லை 

யாழ் மாநகரசபைக்கான மராமத்துப்பணிகளைக் கவனிக்கவும் எதிர்காலத் தேவைகளுக்கான தொழிநுட்பங்களுடனான ஒரு டிப்போ ஆனால் மணியுடன் ஒன்றாகத் திரியும் இளசுகள் அனைவரும் சின்ன வயதிலிருந்து அவருடன் கிரிக்கெட் விளையாடிய கொஸ்டிகள் அந்தாளுக்கு ஏத்திக் கொடுக்கிறதே அவர்கள்தான்

  • கருத்துக்கள உறவுகள்

எனது கணிப்பில் விக்கி விடயத்தில் சும் நடந்ததற்கும் மணி விடயத்தில் கஜே1 நடந்தமைக்கும் ஒரு வித்தியாசமுமில்லை

இரெண்டுக்கும் காரணம் எம்மை மீறி விடுவார் என்ற பயம்தான்.

இதை நாம் ஏற்க மறுத்தால் - கட்சி பாசம், தனி மனித பாசம் கண்ணை மறைக்கிறது என்பதுதான் அர்த்தம்.

(இதனால் விக்கி, மணி திறம் எண்டு இல்லை).

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Elugnajiru said:

அதன் பின்பு நடந்த சம்பவங்கள் அவர்களது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக இருக்கு 

முதலாவது

முண்ணணி யாழ் மாநகரத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பதவியேற்க ஆயத்தப்படுத்தும்போது சுமந்திரன் மணி யாழ் நகர எல்லைக்குள் வசிப்பவர் இல்லை என வழ்க்குப்போட்டு அதைத் தடுத்தார் அதன் பின்பு மணி முண்ணணியை விட்டு வெளிவரும்போது அந்த வழக்கிலிருந்து விடுபட்டு மணிக்கு வழிவிட்டார். இது சரியான ஆதாரம் இல்லை எனிலும் 

கடந்த திலீபன் நினைவுநாளில் மறுகம்புலவு பிரபாகரனுடனும் துளசியுடனும் சேர்ந்து செய்த அடாவடி அவர் யார் கைப்பொம்மை என அடையாளம் காட்டிவிட்டது.

தவிர மணி அப்படி ஒன்றும் பெரிய அபிவிருத்திகளை யாழ் நகரில் மேற்கொள்ளவில்லை ஆரியகுளம் திருத்தினது தியாகி அறக்கட்டளைக்  காசில் நாயன்மார்கட்டுக்குளம் மாநகர எல்லைக்குள் இல்லை டொன்பொஸ்கோ பாடசாலைக்கு முன்னாலை உள்ள பிள்ளையார் கோவில் குளம் திருத்தினது அங்கயன் இராமநாதன் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான அபிவிருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கிய காசில் யாழில் இதுபற்றி ஒரு உறவு அந்தத் தடுப்புச் சுவரில் எல் ஜி பி ரி நிறத்தில் வர்ணம் தீட்டியதாகக் கருத்து எழுதியது நினைவிருக்கலாம்.

நல்லூர் திருவிழாக்க் காலங்களில் கடைகள் போட்டு ஏலத்தில் வாடகை வசூலிப்பதில் கோடிக்கணக்கான பணம் புரளும் அந்தக் காசு என்னவானது. யாழ் கோட்டைப் பகுதி வன்முறக்கும்பலின் உறைவிடமாகத் திகழ்கிறது என என்னால் ஒரு காணொளி வெளியிடப்பட்டது அதன் பின்பு ஓரிரு பத்தைகளை வெட்டிப் படம் போட்டதுடன் சரி முன்னேற்றம் இல்லை 

சிறிலங்காவின் உள்ளூராட்சி அமைச்சினால் ஒவ்வொரு மாநகர சபைக்கும் மராமத்துக்கான பண ஒதுக்கல்கள் போக அபிவிருத்திக்கான பணம் ஒதுக்குவது வழக்கம் அவை எங்கே போனது  அமைச்சு பணம் ஒதுக்காதுவிட்டால் ஏன் போராடிப்பெற முயற்சிக்கவில்லை. எந்த வேளையும் தியாகேந்திரன் போன்றோர் பணம் தருவார்களா?

அங்கு வாழும் மக்கள் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ சிறீ லங்கா அரசாங்கத்தின் அரசியல் அமைப்புச் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே வாழவேண்டும் எமக்கான நாடு பிளவுபடும் மட்டும் ஆக வடக்குக் கிழக்கில் வாழும் மக்களுக்கான அபிவுருத்திக்கான பண ஒகுக்கீடுகளை பெற்றுப் பயனடையலாம் என்பதை அரசியல் அமைப்பு உத்தரவாதமளிக்கிறது.

ஆக
எமக்கான அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகளை சரியான விதத்தில் வாதாடிப் பெறமுடியாது தியாகியிடமும் புலம்பெயர்ந்தோரிடமும் கையேந்துவதற்காக யாழ் மாநகர சபைக்குள் வாழும் மக்கள் வாக்களிக்கவில்லை.

எழுஞாயிறு, ஆக உங்களிடமும் பாபநாசப் படக்கதையை விட வேறு காரணங்கள் மணியை ஏன் நீக்கினார்கள் என்ற கேள்விக்கு இல்லை!😂

உங்கள் பாபநாச லொஜிக்கின் அபத்தத்தைச் சுட்டிக் காட்ட மட்டும் இதே பாபநாசப் படக்கதையை கொஞ்சம் மாற்றி போட அனுமதி தாருங்கள்: "புலிகளை அமெரிக்கா  90 களில் பயங்கரவாத வெளிநாட்டு அமைப்பாகத் தடை செய்தது, அதன் பின்னர் 2008 வரை பல்வேறு மேற்கின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் அமைப்புகள் செய்த சில செயல்களைப் புலிகளும் செய்தனர். எனவே அமெரிக்கா புலிகளை 90 இல் தடை செய்ய நல்ல காரணம் இருந்திருக்கிறது". இப்படி யாராவது சொன்னால், உங்கள் துலங்கல் எப்படி இருக்கும்? இதே துலங்கல் தான் என்னுடையதும் உங்கள் பாபநாசப் படப் பாணிக் கதைக்கு.

இலங்கை போன்ற ஒரு ஊழல் வழியும் நாட்டில், எல்லா வழிகளில் வரும் வருமானத்தையும் ஏற்றுக் கொண்டு மக்களுக்கு சில பணிகளையாவது செய்யாமல், சி,வி ஐயா மாதிரி "சும் தடுக்கிறார், ஆளுனர் கெடுக்கிறார்" என்று மூக்கால் அழுத படி இருந்ததையா நீங்கள் சீரிய பணியாகப் பார்க்கிறீர்கள்? நன்கொடையை ஏற்றுக் கொண்டு அதைத் திட்டங்களாக மாற்றாமல், இது மத்திய அரசு செய்ய வேண்டியதென்று வாதாடிக் கொண்டிருந்தால் ஆரிய குளம் பார்த்தீனியக் குளமாகவே இருந்திருக்கும்.

இப்படிச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியமை தான் மணியின் வெற்றி.   

1 hour ago, புலவர் said:

1.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யாமல்வைத்திருந்தமை
2.அதன் கூலம் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் அதன் ஆதிக்கத்தில்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை வழிநடத்தியமை.
3.போர்க்குற்றவாளியான சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளித்து அவரைப்புனிதராக்கியமை.
4.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற பேரில் தும்புக்கட்டையை நிறுத்தினாலும் வெல்லும் என்று கூறிமமதையில் மற்றைய கட்சிகளை ஓரங்கட்டியமை.
5. தமிழ்த்தேசியக் கூட்டமைhப்புக்குள் புலிகளால் உள்வாங்கப்பட்டலர்களை வெளியேற்றி புலிகளால் ஓரங்கட்டப்பட்டிருந்த புளொட்>ஆனந்தசங்கரி போன்றோரை உள்வாங்கியமை.
6.2010 இற்குப்பின் கட்சியில் சேர்ந்த சுமத்திரனுக்கு முடிவெடுக்கும் ஏகபோக உரிமையை வழங்கியமை.
7. கட்சிக்காக நீண்'ட காலம் உழைத்தவர்களை ஒதுக்கி பேரினவாதக்கட்சிகளுடன் இணைந்திருந்த சாணக்கியன்.மற்றும் சிறலங்காவின் பிரதிநிதியாக இருந்த அம்பிகா சற்குணநாதன் போன்றோரை உள்வாங்கியமை.
8.வடமாகாணசபை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சருக்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்சுமத்திரன் சார்பு உறுப்பினர்களால் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சிகுள் பிளவுகள் ஏற்படுத்தி பலரை வெளியேற வைத்தமை.
9.யாழ்மாநகரசபைக்குள்ளும் ஆர்னோல்ட் முதல் மணிவண்ணன் வரை பல குழப்பங்கள் உருவாக்கியமை.
10.நல்லாட்சி இவர்களால் வர்ணிக்கப்பட்டு நடந்த ஆட்சியில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும் வரலாற்றில் முதற்தடவையாக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுடன் இருபெரும் மதசியக்கட்சிகள் இணைந்து நடத்திய ஆட்சியில் தீர்வு தொடர்பாக எதுவும் செய்யாமலலும் இலங்கை அரசை அழுத்திக்கொண்டிருந்த ஐநா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் பெற்றுக்கொடுத்தல்.
11.அதன்பின்ரான ரணில் அரசின் வரவுசெலவுத்திட்டங்களுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி தமிழர்களின் காணி விடுவிப:ப >கைதிகள் விடுதலை போண்ற விடயங்களை க்கூட வலியுறத்தாது வாளாவிருந்தமை.
12.ரணிலின் மீதான நம்பிக்கையில்லாத்தீர்மானத்தின் போதும் எதுவித பேரம்பேசல்களும் இன்றி ரணிலுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கியமை.
13.13 போதும் என்று இந்தியஅரசின்திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கியமை.
14.மகிந்த பூச்சாண்டியைக்காட்டி எந்த ரணிலுக்கு ஆதரவு வழங்கினார்களோ இன்று அந்த ரணிலும் மகிந்தவும் ஒன்று சேர்ந்திருக்கும் நிலையில் இன்னமும் ரணில் மீது நம்பிக்கை வைத்திருப்பது.
15. சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட ரணில் ஜனாதிபதியாவதற்கு திருட்டுத்தனமாக வாக்களித்தமை.
16.மீண்டும் பேச்சு வார்ததை என்று தொடங்கியிருக்கும் நிலையில்  மற்றைய கட்சிகளுக்குத் தெரியாமல்  பினகதவால் ஜனாதிபதியைச் சந்திச்சமை.
17.இலங்கை கபாருளாதாரத்தில் சிக்கித் தவிக்கின்ற நிலையில் சுphவின் ஆதிக்கம் இஙை;கையில் வலுவாகி வருகின்ற சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கின்ற சாதகமான பூகோள அரசியலை சாதகமாகப் பயன்படுத்தி சர்வதேசத்து நெருக்கn டகொடுக்காமல் சிங்களத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றமை;.18. சம்பந்தர் செயற்பட முடியாத நிலையில் இன்னொருவருக்கு அந்த வாயப்பை விட்டுக்கொடுக்காமலும் பாராளுமனறத்தில் திருகோணமலையின் மக்களின் குரலாக பேசுவதற்கு யாருமே இல்லாமல் வைத்திருத்தல்.
.18. மீண்டும் இந்தியாவை மட்டுமே நம்பியிருத்தல்.
19.பிரிந்து கிடக்கும் கட்சிகளை ஒன்றிணைக்காமல் மேலும பிளவுகள் உண்டாகும் வித்ததில் வருகின்ற ஊள்ளாட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனியாகப் போட்டியிடும் என்று கட்சியின் அனுமதியில்லாமல் செய்திகளை வெளியிடல்.
20./ தமிழரசுக்கட்சிக்குள்ளே பல பிரிவுகளை உண்டாக்கி உட்கட்சிஜனநாயகமற்ற நிலையில் குழப்பங்களை உருவாக்குதல்.
இன்னும்பல விடயங்கள் இருக்கின்றன.

இந்தப் பட்டியலில் உள்ளவையெல்லாம் உங்கள் கருத்துப்படி "துரோகங்கள்" என்று வருமாக இருந்தால், கஜே குழு ஏனைய கட்சிகளுடன் பேச்சு வார்த்தைக்குக் கூடப் போகாமல் இருப்பதும் கூட துரோகமில்லையா? அல்லது அது "ராசதந்திரமா" அல்லது "நமக்குப் பிடித்தவன் செய்தால் வுட்றா வுட்றா!" விதிமுறையா? 😂

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் நாளை அவரின் அரசியல் ஆசானின் ஊரில் (காரைநகர்)  ஒரு விழாவில் கலந்து கொள்ளுகின்றார்.

தனது நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்லும் சந்தர்ப்பம் இருக்கின்றது

எத்தனை பேர் வந்து எத்தனை கருத்தை வைத்தாலும் அவருடைய அரசியல் வாழ்க்கை அவரின் கைகளில் தான் இருக்கின்றது. அவரே தனது முடிவை எடுக்கட்டும்.

கஜே குழு எடுத்த முடிவு தவறானது
மணி எடுத்த முடிவு டக்ளஸ் கூட்டணியும் தவறானது. 

ஆனாலும்  வணிவண்ணன் என்ற ஆளுமை தமிழருக்கு இலங்கையில் மிகவும் அவசியம்.

காலம் தான் பதில் சொல்லும் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர சபைக்கான மேயர் தேர்வு இனி நடக்காது!

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று (31) இரவு முதல் ராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் யாழ் மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது.

அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அங்கும் பதில் கிடைக்கவில்லை என்றார்.
 

http://www.samakalam.com/யாழ்-மாநகர-சபைக்கான-மேயர/

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இரெண்டுக்கும் காரணம் எம்மை மீறி விடுவார் என்ற பயம்தான்.

இப்ப கூட, தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடும் என்று சுமந்திரன் தனித்து முடிவெடுத்ததே; எங்கே விக்கினேஸ்வரனை கூட்டணியில் இணைத்து விடுவார்களோ என்கிற பயந்தான். அவருக்கு இணைந்து வேலை செய்யவுந்தெரியாது, திறமையானவர்களை இணைத்து செல்லவும் முடியாது. எங்கே தன் திறமைக்கு அவர்  (இருந்தாற்தானே) சவாலாக வந்து தன் எஜமானர்களை அவர்கள் செய்யும் தவறுகளை வெளிக்கொணர்ந்து தட்டிக்கேட்டு விடுவாரென்கிற அந்தப்பயம் வெறுப்பாக கொட்டுகிறார் விக்கினேஸ்வரன்மீது. தான் தானாம் விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்தவராம், அவர் தன் முதுகின்மேல் குத்தி விட்டாராம் என்று புலம்பித்திருந்தார். என்னடா சங்கதியென்றால்? இலங்கையில் தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை என்று சொன்னதே அந்தக்குத்து. பின்னர் பாத்தால்; அவரை அரசியலுக்கு கொண்டுவந்த மாவையரின் நெஞ்சிலே குத்திவிடடார் இவர். அண்ணே! நீங்கள் தான் முதலமைச்சருக்கு தகுதியானவர், அதை விக்கினேஸ்வரன் தட்டிப்பறித்து விட்டார் என்று மாவையருக்கு கொம்பு சீவி முட்ட வைத்து வேடிக்கை பாக்க காத்திருந்தார். தன்வினை தன்னையே சுட்டுக் கொண்டது. இப்போ, விக்கியரோ மாவையின் தலைமையில் செயற்பட தான் தயார் என்று அறிவித்து விட்டார். இனி யாரை இழுத்து விக்கியரை வெட்டி விடப்போகிறார்? சாணக்ஸ் கொஞ்சம் துள்ளுறார், ரொம்ப துள்ளினால் அவரும் தள்ளி வைக்கப்படுவார். இடையனால மடையன் நான் கெட்டேன் என்று புலம்ப நேரிடும். எங்கேயும் அரைகுறையள், கொள்ளையடிக்கிறதுகள் தான் திறமையானவர் என (நான்தான் செய்தேன் நான் சொல்லித்தான் இதெல்லாம் நடந்தது).    தம்பட்டம் அடிப்பதும்,  மற்றவர்களை தள்ளி விழுத்திறதும். காரணம் தான் மக்களை முட்டாளாக்குவதை  காட்டிக்கொடுத்து விடுவார்கள் என்கிற பயம்!                          

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

எனது கணிப்பில் விக்கி விடயத்தில் சும் நடந்ததற்கும் மணி விடயத்தில் கஜே1 நடந்தமைக்கும் ஒரு வித்தியாசமுமில்லை

இரெண்டுக்கும் காரணம் எம்மை மீறி விடுவார் என்ற பயம்தான்.

இதை நாம் ஏற்க மறுத்தால் - கட்சி பாசம், தனி மனித பாசம் கண்ணை மறைக்கிறது என்பதுதான் அர்த்தம்.

(இதனால் விக்கி, மணி திறம் எண்டு இல்லை).

 

14 hours ago, Justin said:

எழுஞாயிறு, ஆக உங்களிடமும் பாபநாசப் படக்கதையை விட வேறு காரணங்கள் மணியை ஏன் நீக்கினார்கள் என்ற கேள்விக்கு இல்லை!😂

உங்கள் பாபநாச லொஜிக்கின் அபத்தத்தைச் சுட்டிக் காட்ட மட்டும் இதே பாபநாசப் படக்கதையை கொஞ்சம் மாற்றி போட அனுமதி தாருங்கள்: "புலிகளை அமெரிக்கா  90 களில் பயங்கரவாத வெளிநாட்டு அமைப்பாகத் தடை செய்தது, அதன் பின்னர் 2008 வரை பல்வேறு மேற்கின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் அமைப்புகள் செய்த சில செயல்களைப் புலிகளும் செய்தனர். எனவே அமெரிக்கா புலிகளை 90 இல் தடை செய்ய நல்ல காரணம் இருந்திருக்கிறது". இப்படி யாராவது சொன்னால், உங்கள் துலங்கல் எப்படி இருக்கும்? இதே துலங்கல் தான் என்னுடையதும் உங்கள் பாபநாசப் படப் பாணிக் கதைக்கு.

இலங்கை போன்ற ஒரு ஊழல் வழியும் நாட்டில், எல்லா வழிகளில் வரும் வருமானத்தையும் ஏற்றுக் கொண்டு மக்களுக்கு சில பணிகளையாவது செய்யாமல், சி,வி ஐயா மாதிரி "சும் தடுக்கிறார், ஆளுனர் கெடுக்கிறார்" என்று மூக்கால் அழுத படி இருந்ததையா நீங்கள் சீரிய பணியாகப் பார்க்கிறீர்கள்? நன்கொடையை ஏற்றுக் கொண்டு அதைத் திட்டங்களாக மாற்றாமல், இது மத்திய அரசு செய்ய வேண்டியதென்று வாதாடிக் கொண்டிருந்தால் ஆரிய குளம் பார்த்தீனியக் குளமாகவே இருந்திருக்கும்.

இப்படிச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியமை தான் மணியின் வெற்றி.   

இந்தப் பட்டியலில் உள்ளவையெல்லாம் உங்கள் கருத்துப்படி "துரோகங்கள்" என்று வருமாக இருந்தால், கஜே குழு ஏனைய கட்சிகளுடன் பேச்சு வார்த்தைக்குக் கூடப் போகாமல் இருப்பதும் கூட துரோகமில்லையா? அல்லது அது "ராசதந்திரமா" அல்லது "நமக்குப் பிடித்தவன் செய்தால் வுட்றா வுட்றா!" விதிமுறையா? 😂

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது யாழ்பல்கலைக்கழகத்திற்கு பேச்சு வார்த்தைக்குப் போனார்களே அப்போது விக்கி>சுமத்திரன்>மாவை>சுரே}; சிவாஜிலிங்கம் எல்பகாரும் ஒரே அணியாகச் சேர்ந்து கொண்டு தமிழ்த்தேசிய முண்ணணியின் கருத்துக்களைப் புறந்தள்ளினார்களே.அப்போதே அபிவிருத்தி முக்கியம் என்று மணி அவர்கள் பக்கம் சார்ந்திருக்கலாமூ. ஒரு தேர்தலுக்கு காத்திருந்து அதில் தோல்வியடைந்து தேசியப்பட்டியல் மூலமும் பதவிக்கு வராத கடுப்பில் தலைமையின் முடிவுகளுக்கு கட்டப்பட மறுத்தார். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புலவர் said:

 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது யாழ்பல்கலைக்கழகத்திற்கு பேச்சு வார்த்தைக்குப் போனார்களே அப்போது விக்கி>சுமத்திரன்>மாவை>சுரே}; சிவாஜிலிங்கம் எல்பகாரும் ஒரே அணியாகச் சேர்ந்து கொண்டு தமிழ்த்தேசிய முண்ணணியின் கருத்துக்களைப் புறந்தள்ளினார்களே.அப்போதே அபிவிருத்தி முக்கியம் என்று மணி அவர்கள் பக்கம் சார்ந்திருக்கலாமூ. ஒரு தேர்தலுக்கு காத்திருந்து அதில் தோல்வியடைந்து தேசியப்பட்டியல் மூலமும் பதவிக்கு வராத கடுப்பில் தலைமையின் முடிவுகளுக்கு கட்டப்பட மறுத்தார். 

இப்போது கொஞ்சம் விபரம் வெளிவருகிறது:  கட்சியில் மூன்றாம் நிலை வாக்குப் பெற்றவர், தேசியப் பட்டியலுக்கு உரிமை கோரக் கூடாது என்பதற்காக மணியை விலக்கினர் என்கிறீர்கள்?. ஏனெனில், மணி தேசியப் பட்டியல் தரவில்லை என்று வெளியே முறையிட்டு விலகவில்லை. சுகாசை சம்மதிக்க வைத்தமை போல, மணியை சம்மதிக்க வைக்க இயலாமையால் ஒரு துல்லியமான காரணம் சொல்லாமல் வெட்டி விட்ட்டனர். விலக்கிய பிறகு தலைமைக்குக் கட்டுப்பட அவரென்ன லூசா?😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இப்போது கொஞ்சம் விபரம் வெளிவருகிறது:  கட்சியில் மூன்றாம் நிலை வாக்குப் பெற்றவர், தேசியப் பட்டியலுக்கு உரிமை கோரக் கூடாது என்பதற்காக மணியை விலக்கினர் என்கிறீர்கள்?. ஏனெனில், மணி தேசியப் பட்டியல் தரவில்லை என்று வெளியே முறையிட்டு விலகவில்லை. சுகாசை சம்மதிக்க வைத்தமை போல, மணியை சம்மதிக்க வைக்க இயலாமையால் ஒரு துல்லியமான காரணம் சொல்லாமல் வெட்டி விட்ட்டனர். விலக்கிய பிறகு தலைமைக்குக் கட்டுப்பட அவரென்ன லூசா?😂

இப்பவும் மணி தான் தமிழ்க்காங்கிரஸ் உறுப்பினர் என்றதான் கோர்ட்டில் சொல்லியிரக்கிறார.2வது அதிக வாக்கைப் பெற்ற கட்சியின் செயலாளருக்கு கொடுக்காமல் 3வது வாக்கைப் பெற்ற உறுப்பினர் தனக்குப்பதவி வேணும் என்று கேட்பது என்ன நியாயம். அப்படிக் கொடுத்தால் மக்கள் திர்ப்புக்கு என்ன மரியாதை?யார் அவரை மாநகர சபைக்கு போகத்தகுதியில்லை என்று வழக்குப் போட்டுத்தடுத்தாரோ அவரின் தயவில் மேயராகியது  மன்னணியை உடைக்கவேண்டும் என்ற சுமத்தினின் திட்டத்திற்கு துணை போன ஒருவரை கட்சிக்குள் வைத்திருப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதா?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புலவர் said:

இப்பவும் மணி தான் தமிழ்க்காங்கிரஸ் உறுப்பினர் என்றதான் கோர்ட்டில் சொல்லியிரக்கிறார.2வது அதிக வாக்கைப் பெற்ற கட்சியின் செயலாளருக்கு கொடுக்காமல் 3வது வாக்கைப் பெற்ற உறுப்பினர் தனக்குப்பதவி வேணும் என்று கேட்பது என்ன நியாயம். அப்படிக் கொடுத்தால் மக்கள் திர்ப்புக்கு என்ன மரியாதை?யார் அவரை மாநகர சபைக்கு போகத்தகுதியில்லை என்று வழக்குப் போட்டுத்தடுத்தாரோ அவரின் தயவில் மேயராகியது  மன்னணியை உடைக்கவேண்டும் என்ற சுமத்தினின் திட்டத்திற்கு துணை போன ஒருவரை கட்சிக்குள் வைத்திருப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதா?

புலவர், இங்கே பதில் தேடப் படும் கேள்வி புரியாமல் எழுதுகிறீர்களா அல்லது மணியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று காட்ட வாசிப்போரை முட்டாள்களாகக் கருதி எழுதுகிறீர்களா?

அந்த வழக்கு நீக்கப் பட்ட பிறகு
மணி யார் தயவிலோ மேயரானது நீக்கப் பட்ட பிறகு

நீங்கள், சாத்ஸ், எழுஞாயிறு மூவரும் சொல்லும் "நீக்கும்" காரணங்கள் எல்லாமே நீக்கப் பட்ட பிறகு நடந்தவை. Chronologically, பின்னர் நடந்தது எப்படி முன்னர் நடந்த ஒன்றுக்கு காரணமாகும்? எந்தப் பிரபஞ்சத்தில் இது சாத்தியம்?🤣

கஜேந்திரனுக்குப் பதவி கொடுப்பதற்காகவும், எதிர்காலத்தில் மணி பொன்னம்பலத்தை மிஞ்சி விடுவார் என்ற அச்சத்திலும் அவரை நீக்கியிருக்கிறார்கள். இதன் பிறகு மணி செய்பவை பற்றி முறையிட யாருக்கு அதிகாரம் இருக்கிறது முன்னணியில்? இலகுவாக யோசிக்க மாட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

புலவர், இங்கே பதில் தேடப் படும் கேள்வி புரியாமல் எழுதுகிறீர்களா அல்லது மணியே எல்லாவற்றுக்கும் காரணம் என்று காட்ட வாசிப்போரை முட்டாள்களாகக் கருதி எழுதுகிறீர்களா?

அந்த வழக்கு நீக்கப் பட்ட பிறகு
மணி யார் தயவிலோ மேயரானது நீக்கப் பட்ட பிறகு

நீங்கள், சாத்ஸ், எழுஞாயிறு மூவரும் சொல்லும் "நீக்கும்" காரணங்கள் எல்லாமே நீக்கப் பட்ட பிறகு நடந்தவை. Chronologically, பின்னர் நடந்தது எப்படி முன்னர் நடந்த ஒன்றுக்கு காரணமாகும்? எந்தப் பிரபஞ்சத்தில் இது சாத்தியம்?🤣

கஜேந்திரனுக்குப் பதவி கொடுப்பதற்காகவும், எதிர்காலத்தில் மணி பொன்னம்பலத்தை மிஞ்சி விடுவார் என்ற அச்சத்திலும் அவரை நீக்கியிருக்கிறார்கள். இதன் பிறகு மணி செய்பவை பற்றி முறையிட யாருக்கு அதிகாரம் இருக்கிறது முன்னணியில்? இலகுவாக யோசிக்க மாட்டீர்களா?

மணிபொன்னம்பலத்தை மிஞ்சிவிடுவார் என்பது ஓவர் கற்பனை.அவ்வளவு  செல்வாக்கான மணி டக்ளஸ் சுமத்திரனோடும் கைகோர்க்கக்கூடிய அனுசரித்து இறங்கிகிப் போகக்கூடிய மணி எதற்கும் தயங்க வேண்டியதில்லை. தனிக்கட்சி துவங்கலாம் கூட்டணி அமைக்கலாம். சிறிலங்காவின் விகிதாரசார தேர்தல முறையின்படி அலசியலில் செல்வாக்குச் செலுத்தலாம். அதன்மூலம் கஜன்களை அரசியல் அரங்கிலிருந்த அகற்றலாம். முயன்று பார்க்கலாம்.யாரும்தடையில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புலவர் said:

மணிபொன்னம்பலத்தை மிஞ்சிவிடுவார் என்பது ஓவர் கற்பனை.அவ்வளவு  செல்வாக்கான மணி டக்ளஸ் சுமத்திரனோடும் கைகோர்க்கக்கூடிய அனுசரித்து இறங்கிகிப் போகக்கூடிய மணி எதற்கும் தயங்க வேண்டியதில்லை. தனிக்கட்சி துவங்கலாம் கூட்டணி அமைக்கலாம். சிறிலங்காவின் விகிதாரசார தேர்தல முறையின்படி அலசியலில் செல்வாக்குச் செலுத்தலாம். அதன்மூலம் கஜன்களை அரசியல் அரங்கிலிருந்த அகற்றலாம். முயன்று பார்க்கலாம்.யாரும்தடையில்லை. 

இது கற்பனையென்றால், ஏன் அகற்றினார்களாம்? அச்சம்  தவிர வேறென்ன காரணம்?

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுபியும். அதற்கு மணிபதலளிக்காததால் விலக்கப்பட்டதாக அறிவித்தார்கள். அனால் மணி இன்னமும் விலகவில்லை. தான் இன்னமும் தமிழ்த்தேசிய முன்னணி எ;நற சொல்லிக் கொண்ருக்கிறார். அதற்கு அலுவலகமும் திறந்து வைத்ததாக கேள்வி அந்தப் பெயரில்  அவர் தொடந்ந்து செயற்படலாமே.அவர்கட்சிதமிழ்த்தேசிய முன்னணி என்று சொல்லுவார். தான் தமிழ்க்காங்கிசின் உறுப்பினர் என்றும் சொல்லுவார். டக்ளசோடு; சுமத்திரனோடும் கூட்டு வைப்பார். இது என்ன வகையான அரசியல்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

அவரின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுபியும். அதற்கு மணிபதலளிக்காததால் விலக்கப்பட்டதாக அறிவித்தார்கள். அனால் மணி இன்னமும் விலகவில்லை. தான் இன்னமும் தமிழ்த்தேசிய முன்னணி எ;நற சொல்லிக் கொண்ருக்கிறார். அதற்கு அலுவலகமும் திறந்து வைத்ததாக கேள்வி அந்தப் பெயரில்  அவர் தொடந்ந்து செயற்படலாமே.அவர்கட்சிதமிழ்த்தேசிய முன்னணி என்று சொல்லுவார். தான் தமிழ்க்காங்கிசின் உறுப்பினர் என்றும் சொல்லுவார். டக்ளசோடு; சுமத்திரனோடும் கூட்டு வைப்பார். இது என்ன வகையான அரசியல்?

என்ன நடவடிக்கைகள் பற்றி விளக்கம் கேட்டார்களாம்? இது விலக்கிய பிறகு நடந்தவையா அல்லது முன்னர் நடந்ததா?

விலக்கிய பிறகு மணி செய்வதைப் பற்றி முறைப்படுவதைக் கைவிடுங்கள். அவர் கோபத்தில் செய்தாலும், தனது அரசியல் எதிர்காலத்திற்காக முனைப்போடு செய்தாலும் விளங்கிக் கொள்ளக் கூடியவை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் பிரச்சனை தீர்வு எட்டப்படமால். இழுத்தடிச்சிட்டே போவதற்குகான  காரணங்களில் மிக முக்கியமானது     அனைத்து தமிழ் கட்சிகளும் செய்யும் தவறு........அதாவது 1...இளம் தலைவர்களை தெரிவுசெய்யப்பட்டு.  பயிற்சி அளித்து வளர்த்து எடுக்க விரும்புவதில்லை

2...கட்சியில்.  உள்ள திறமைசாலிகளை வளர விடுவதில்லை....மட்டம்தட்டி   அடக்கி வைத்திருப்பது   அல்லது கட்சியை விட்டு விலக்குவது   

3...திறமை இல்லாதவர்களுக்கு ....அடக்கி நடப்பவர்களுக்க...பதவியை வழங்குவது.   அதன் மூலம் கட்சியிலுள்ள திறமைசாலிகளை...அவமானப்படுத்துகிறது 

4....எந்த ஒரு விடயம் செய்தாலும்....எமக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும்....அல்லது எத்தனை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். என்று கணக்கு பார்ப்பார்கள் ஓழிய  ...தமிழர்கள் பிரச்சனை தீருமா.  ?  தீர்வதற்க்கு நாங்கள் என்ன செய்யலாம்.?..இதுவரை என்ன செய்தோம்   ?என்பதற்கு உறுதியான பதில்கள் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

கஜேந்திரனுக்குப் பதவி கொடுப்பதற்காகவும், எதிர்காலத்தில் மணி பொன்னம்பலத்தை மிஞ்சி விடுவார் என்ற அச்சத்திலும் அவரை நீக்கியிருக்கிறார்கள்.

ஏன் தேர்தல் வென்ற உடனேயே பொன்னம்பலத்தார் மணியை வெட்டினவராம்?

இதை நீக்கக் காரணமாக கஜே குழு சொன்னதாக எனக்கு நினைவில்லை! இது நீக்கப் பட்ட பிறகா அல்லது முன்னரா?

நீங்கள் தேடிப்பாத்து காரணம் வேறிருந்தால் அறியத்தாருங்கள்!

உறவே, எனக்கு உண்மைக் காரணம் தெரிந்தால் நான் ஏன் எழுஞாயிறிடம் கேட்கிறேன்? உங்கள் கதை பாபநாசம் திரை வசனம் போலல்லவா இருக்குது?

யஸ்ரின் சார்! எதுக்கு இவ்வளவு சுத்து? மேலே இருக்கு பதில்.  நாங்கள் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணினோம்? எங்களுக்கு தெரிஞ்சதைத்தானே சொன்னோம். பாபாநாச கதையென்று எங்களை போட்டு சுத்து சுத்து என்று சுத்தினீங்களே? அறியத்தாருங்கள்! என்று கேட்டேன் தெரிஞ்சு வைச்சுக்கொண்டே ஒண்டும் தெரியாதமாதிரி குடைஞ்செடுத்தீங்களே,  இதை முதலிலேயே சொல்லியிருக்கக்கூடாதா? இத்தனை பக்கங்கள் ஓடியிருக்காதே இந்தக் கதை. நாங்கள் இங்கு கஜே சரியானவர் என்று சத்தியம் செய்யவில்லை. மணியின் செயற்திறன், அவசரம், அவர் சேர்ந்த கூட்டு பற்றியே கருத்தாடினோம். வீணாய் எங்கள்மேல் பழியைப்போட்டு இப்படி வதைத்து போட்டீர்களே! சரி.... இப்போ பாபநாச கதையைச் சொல்லுங்கள் அதையாவது கேட்போம்! 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

ஏன் தேர்தல் வென்ற உடனேயே பொன்னம்பலத்தார் மணியை வெட்டினவராம்?

இதை நீக்கக் காரணமாக கஜே குழு சொன்னதாக எனக்கு நினைவில்லை! இது நீக்கப் பட்ட பிறகா அல்லது முன்னரா?

நீங்கள் தேடிப்பாத்து காரணம் வேறிருந்தால் அறியத்தாருங்கள்!

உறவே, எனக்கு உண்மைக் காரணம் தெரிந்தால் நான் ஏன் எழுஞாயிறிடம் கேட்கிறேன்? உங்கள் கதை பாபநாசம் திரை வசனம் போலல்லவா இருக்குது?

யஸ்ரின் சார்! எதுக்கு இவ்வளவு சுத்து? மேலே இருக்கு பதில்.  நாங்கள் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணினோம்? எங்களுக்கு தெரிஞ்சதைத்தானே சொன்னோம். பாபாநாச கதையென்று எங்களை போட்டு சுத்து சுத்து என்று சுத்தினீங்களே? அறியத்தாருங்கள்! என்று கேட்டேன் தெரிஞ்சு வைச்சுக்கொண்டே ஒண்டும் தெரியாதமாதிரி குடைஞ்செடுத்தீங்களே,  இதை முதலிலேயே சொல்லியிருக்கக்கூடாதா? இத்தனை பக்கங்கள் ஓடியிருக்காதே இந்தக் கதை. நாங்கள் இங்கு கஜே சரியானவர் என்று சத்தியம் செய்யவில்லை. மணியின் செயற்திறன், அவசரம், அவர் சேர்ந்த கூட்டு பற்றியே கருத்தாடினோம். வீணாய் எங்கள்மேல் பழியைப்போட்டு இப்படி வதைத்து போட்டீர்களே! சரி.... இப்போ பாபநாச கதையைச் சொல்லுங்கள் அதையாவது கேட்போம்! 

 

 

 

கமல்ஹாசனின் பாபநாசம் (அல்லது அதன் மலையாளப் பதிப்பு) பார்க்காமலா தலையைச் சொறிந்து கொண்டிருந்தீர்கள்?😂
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

இப்போ பாபநாச கதையைச் சொல்லுங்கள் அதையாவது கேட்போம்! 

பாபநாசம் சிவன் என்று கேள்வி பட்டுள்ளீர்களா (பள்ளியில் கர்னாடக சங்கீதத்தை - கடனே என படித்தோருக்கு தெரியும்). 

அவர் வேறு யாரும் அல்லவாம். பாபநாசம் வழக்கை துப்பு துலக்கிய C1 என்ற சங்கேத சொல்லுக்குரிய உளவாளியாம்🤣.

- உடான்ஸ் சாமியார்- 

1 hour ago, Justin said:

கமல்ஹாசனின் பாபநாசம் (அல்லது அதன் மலையாளப் பதிப்பு) பார்க்காமலா தலையைச் சொறிந்து கொண்டிருந்தீர்கள்?😂
 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

கமல்ஹாசனின் பாபநாசம் (அல்லது அதன் மலையாளப் பதிப்பு) பார்க்காமலா தலையைச் சொறிந்து கொண்டிருந்தீர்கள்?😂
 

விடையை  தெரிந்து வைத்துக்கொண்டே  தொடர் கேள்வியால் எங்களை சுற்றி சுற்றி சொறிய வைத்துவிட்டீர்களே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.