Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆறு பில்லியன் டொலர் நட்டஈட்டை கோரும் இலங்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடற்பரப்பில் 2021 ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதியன்று,எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானது.

இவ்வாறு தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

சட்ட ரீதியான நடவடிக்கை

ஆறு பில்லியன் டொலர் நட்டஈட்டை கோரும் இலங்கை! | Srilanka Demands 6 Billion Dollars In Compensation

இதற்கமைய சட்ட ரீதியான நடவடிக்கையை இம்மாதம் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.  

இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக 6 பில்லியன் டொலருக்கும் அதிகமான நட்டஈட்டைப் பெறுவதற்கு சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை இலங்கையின் கொழும்பு துறைமுகத்தின் கடல் பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்ததினால் இலங்கையின் கடல் வளத்திற்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/srilanka-demands-6-billion-dollars-in-compensation-1675720425

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீலக்கல்  ரத்தினம் போல் இதுவும் ஒரு புளுடா அதென்ன ஆறு பில்லியன் டொலர் கேட்பது  55 பில்லியன் கேட்பதுதானே ?😀😀😀

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

நீலக்கல்  ரத்தினம் போல் இதுவும் ஒரு புளுடா அதென்ன ஆறு பில்லியன் டொலர் கேட்பது  55 பில்லியன் கேட்பதுதானே ?😀😀😀

பெற்ற கடனை அடைப்பதற்க்கு ஒரு கதவும் திறக்கவில்லை, வேறு வழி தேடி கண்டுபிடித்துள்ளார்கள். நீங்கள் சொன்னமாதிரி 55 பில்லியன் கேட்டால் யாரும் இலகுவாக கண்டுபிடித்துவிடுவார்கள் கடன் அடைப்பதற்குத்தான் கேட்க்கிறார்கள் என்று. இலங்கை பெற்ற கடன் எவ்வளவு என்பது உலகறிந்த விஷயமாச்சே! இப்படிக்கேட்டால் தட்டிக்கழிக்க மாட்டார்கள், கவுரவமான வழியுங்கூட. இவர்களே போர்க்காலத்தில் கடல் வளத்தை எவ்வளவுதூரம் அழித்து மாசு படுத்தினார்கள் அதைப்பற்றி யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற துணிவு.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

நீலக்கல்  ரத்தினம் போல் இதுவும் ஒரு புளுடா அதென்ன ஆறு பில்லியன் டொலர் கேட்பது  55 பில்லியன் கேட்பதுதானே ?😀😀😀

 

15 minutes ago, satan said:

பெற்ற கடனை அடைப்பதற்க்கு ஒரு கதவும் திறக்கவில்லை, வேறு வழி தேடி கண்டுபிடித்துள்ளார்கள். நீங்கள் சொன்னமாதிரி 55 பில்லியன் கேட்டால் யாரும் இலகுவாக கண்டுபிடித்துவிடுவார்கள் கடன் அடைப்பதற்குத்தான் கேட்க்கிறார்கள் என்று. இலங்கை பெற்ற கடன் எவ்வளவு என்பது உலகறிந்த விஷயமாச்சே! இப்படிக்கேட்டால் தட்டிக்கழிக்க மாட்டார்கள், கவுரவமான வழியுங்கூட. இவர்களே போர்க்காலத்தில் கடல் வளத்தை எவ்வளவுதூரம் அழித்து மாசு படுத்தினார்கள் அதைப்பற்றி யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற துணிவு.

ஶ்ரீலங்காவில் ஏற்படும் அழிவுகள் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்துதான்….
இது வரை அது… காப்பாற்றப் பட்டுக் கொண்டு வந்துள்ளது.
சொந்த நாட்டு மக்கள் மேல் நடத்திய போரையும்,  இயற்கை அழிவு கொடுத்த சுனாமியையும் சாட்டி பெற்ற பணம் பல பில்லியன் டொலர்கள்.

தமிழனுக்கு வந்த அழிவை வைத்து… வயிறு வளர்த்த நாடுதான் ஶ்ரீலங்கா.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

 

ஶ்ரீலங்காவில் ஏற்படும் அழிவுகள் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்துதான்….
இது வரை அது… காப்பாற்றப் பட்டுக் கொண்டு வந்துள்ளது.
சொந்த நாட்டு மக்கள் மேல் நடத்திய போரையும்,  இயற்கை அழிவு கொடுத்த சுனாமியையும் சாட்டி பெற்ற பணம் பல பில்லியன் டொலர்கள்.

தமிழனுக்கு வந்த அழிவை வைத்து… வயிறு வளர்த்த நாடுதான் ஶ்ரீலங்கா.

நாட்டில் ஏதாவது ஒரு அழிவு வராதா காசு பாக்க? என்று ஏங்கும் சிங்கள அரசு! தமிழனை அழிக்க உதவிய சர்வதேசம் பிறகு காயப்பட்ட அவனுக்கு மருந்துபோட கொடுத்த பணத்தையும் சுருட்டியது, இழப்பின் விளிம்பில் இருந்தவனிடமிருந்தும் பிடுங்கியது, இப்போ செய்வதறியாமல் திகைக்கிறது. பழைய அழிவுகளை தோண்டி எடுத்து காசு பாக்க முயற்சிக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஓசியில் தின்ன வெறென்ன வழி உள்ளது என சிங்கள அரசு ஆராய்கிறது போல.  தமிழரிடம் களவெடுத்து உண்ண முடியாது. கடனும் கையை கடிக்கிறது. இப்போ கடைசி ஆயுதம். யாரிடமாவது வழக்கை போட்டு காசை பெறலாம்  என்று களத்தில் இறங்கி உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

ஶ்ரீலங்காவில் ஏற்படும் அழிவுகள் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்துதான்….
இது வரை அது… காப்பாற்றப் பட்டுக் கொண்டு வந்துள்ளது.
சொந்த நாட்டு மக்கள் மேல் நடத்திய போரையும்,  இயற்கை அழிவு கொடுத்த சுனாமியையும் சாட்டி பெற்ற பணம் பல பில்லியன் டொலர்கள்.

தமிழனுக்கு வந்த அழிவை வைத்து… வயிறு வளர்த்த நாடுதான் ஶ்ரீலங்கா.

இது பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கை சீக்கிரம் முடியுங்க கனம் கோட்டார் அவர்களே...சுதந்திர தினத்துக்கு விருந்தினராவந்த பங்களா தேச அமைச்சர் முகத்திலடித்தாற்போல கடன்காசையும் கேட்டு..கடைசித்தவணை செப்ரெம்மாதம்தான் என்றூ சொல்லியும்போட்டு நாட்டுக்கு போட்டார்.... வெறூம் 200 மில்லியன் கடனுக்கே இந்த நாறல் என்றால் ..மிச்சக்கடனுகளுக்கு என்னபாடு படுகினமோ தெரியாது,,,வெட்கம் கெட்டதுகள்..

  • கருத்துக்கள உறவுகள்

இது நியாயமான கோரிக்கை தான். இதனால் ஏற்பட்ட பாதிப்பு எவ்வளவு  மக்களையும் (மீனவர்கள்) சுற்றுச்சூழலையும் இறுதியில் பொருளாதார ரீதியில் நாட்டையும் பாதித்தது என்பது தெரிந்ததே. 

இதில் நாம் (தமிழர்கள்) சந்தோசப்பட வேண்டிய விடயம் சீனாவுடன் சிங்களத்தின் முறுகல்?

  • கருத்துக்கள உறவுகள்

வீரம், மானம், ரோஷத்தால்தான் தமிழனுக்கு இவ்வளவு நெருக்கடிகள்........அவர்களுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை.......அதை இதை சொல்லி காலத்தை இழுத்தடித்துக் கொண்டு போனால் கடன்களும், இன்ன பிற பிரச்சனைகளும் நீர்த்துப் போய்விடும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் இனம்.......!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.